Skip to content

ஸூரா ஸூரத்துல் அஃராஃப் - Page: 13

Al-A'raf

(al-ʾAʿrāf)

௧௨௧

قَالُوْٓا اٰمَنَّا بِرَبِّ الْعٰلَمِيْنَۙ ١٢١

qālū
قَالُوٓا۟
கூறினார்கள்
āmannā
ءَامَنَّا
நம்பிக்கை கொண்டோம்
birabbi
بِرَبِّ
இறைவனை
l-ʿālamīna
ٱلْعَٰلَمِينَ
அகிலத்தார்களின்
"அகிலத்தார் அனைவரின் இறைவனாகிய அல்லாஹ்வையே நாங்கள் ஈமான் (நம்பிக்கை) கொண்டு விட்டோம்" என்று கூறினார்கள். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௧௨௧)
Tafseer
௧௨௨

رَبِّ مُوْسٰى وَهٰرُوْنَ ١٢٢

rabbi
رَبِّ
இறைவனான
mūsā
مُوسَىٰ
மூஸா
wahārūna
وَهَٰرُونَ
இன்னும் ஹாரூனுடைய
மூஸா, ஹாரூனுடைய இறைவனை நாங்களும் நம்பிக்கை கொண்டோம்" என்று கூறினார்கள். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௧௨௨)
Tafseer
௧௨௩

قَالَ فِرْعَوْنُ اٰمَنْتُمْ بِهٖ قَبْلَ اَنْ اٰذَنَ لَكُمْۚ اِنَّ هٰذَا لَمَكْرٌ مَّكَرْتُمُوْهُ فِى الْمَدِيْنَةِ لِتُخْرِجُوْا مِنْهَآ اَهْلَهَاۚ فَسَوْفَ تَعْلَمُوْنَ ١٢٣

qāla
قَالَ
கூறினான்.
fir'ʿawnu
فِرْعَوْنُ
ஃபிர்அவ்ன்
āmantum
ءَامَنتُم
நம்பிக்கை கொண்டீர்கள்
bihi
بِهِۦ
அவரை
qabla
قَبْلَ
முன்னர்
an ādhana
أَنْ ءَاذَنَ
நான் அனுமதியளிப்பதற்கு
lakum
لَكُمْۖ
உங்களுக்கு
inna
إِنَّ
நிச்சயமாக
hādhā
هَٰذَا
இது
lamakrun
لَمَكْرٌ
சூழ்ச்சிதான்
makartumūhu
مَّكَرْتُمُوهُ
சூழ்ச்சிசெய்தீர்கள்/அதை
fī l-madīnati
فِى ٱلْمَدِينَةِ
நகரத்தில்
litukh'rijū
لِتُخْرِجُوا۟
நீங்கள் வெளியேற்றுவதற்காக
min'hā
مِنْهَآ
அதிலிருந்து
ahlahā
أَهْلَهَاۖ
அதில் வசிப்போரை
fasawfa taʿlamūna
فَسَوْفَ تَعْلَمُونَ
அறிவீர்கள்
அதற்கு ஃபிர்அவ்ன் (அவர்களை நோக்கி) "உங்களுக்கு நான் அனுமதியளிப்பதற்கு முன்னதாகவே நீங்கள் அவரை நம்பிக்கை கொண்டு விட்டீர்கள். நிச்சயமாக இந்நகரவாசிகளை அதிலிருந்து வெளியேற்றுவதற்காக (மூஸாவுடன் கலந்து) நீங்கள் செய்த சதியாகும் இது. (இச்சதியின் பலனை) அதிசீக்கிரத்தில் நீங்கள் தெரிந்து கொள்வீர்கள். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௧௨௩)
Tafseer
௧௨௪

لَاُقَطِّعَنَّ اَيْدِيَكُمْ وَاَرْجُلَكُمْ مِّنْ خِلَافٍ ثُمَّ لَاُصَلِّبَنَّكُمْ اَجْمَعِيْنَ ١٢٤

la-uqaṭṭiʿanna
لَأُقَطِّعَنَّ
நிச்சயமாக வெட்டுவேன்
aydiyakum
أَيْدِيَكُمْ
உங்கள் கைகளை
wa-arjulakum
وَأَرْجُلَكُم
இன்னும் உங்கள் கால்களை
min khilāfin
مِّنْ خِلَٰفٍ
மாறாக
thumma
ثُمَّ
பிறகு
la-uṣallibannakum
لَأُصَلِّبَنَّكُمْ
நிச்சயமாக கழுமரத்தில் அறைவேன்/உங்களை
ajmaʿīna
أَجْمَعِينَ
அனைவரையும்
நிச்சயமாக நான் உங்களுடைய மாறு கை, மாறு கால்களை வெட்டி உங்கள் அனைவரையும் சிலுவையில் அறைந்துவிடுவேன்" என்று கூறினான். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௧௨௪)
Tafseer
௧௨௫

قَالُوْٓا اِنَّآ اِلٰى رَبِّنَا مُنْقَلِبُوْنَۙ ١٢٥

qālū innā
قَالُوٓا۟ إِنَّآ
கூறினர்/நிச்சயமாக நாங்கள்
ilā rabbinā
إِلَىٰ رَبِّنَا
எங்கள் இறைவனிடம்
munqalibūna
مُنقَلِبُونَ
திரும்பக்கூடியவர்கள்
அதற்கவர்கள் "(அவ்வாறாயின்) நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவனிடம்தான் திரும்பிச் செல்வோம். (அதைப்பற்றி எங்களுக்குக் கவலை இல்லை)" என்று கூறினார்கள். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௧௨௫)
Tafseer
௧௨௬

وَمَا تَنْقِمُ مِنَّآ اِلَّآ اَنْ اٰمَنَّا بِاٰيٰتِ رَبِّنَا لَمَّا جَاۤءَتْنَا ۗرَبَّنَآ اَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَّتَوَفَّنَا مُسْلِمِيْنَ ࣖ ١٢٦

wamā tanqimu
وَمَا تَنقِمُ
நீ பழிக்கவில்லை
minnā
مِنَّآ
எங்களை
illā
إِلَّآ
தவிர
an āmannā
أَنْ ءَامَنَّا
என்பதற்காக/நம்பிக்கை கொண்டோம்
biāyāti
بِـَٔايَٰتِ
அத்தாட்சிகளை
rabbinā
رَبِّنَا
எங்கள் இறைவனின்
lammā
لَمَّا
போது
jāatnā
جَآءَتْنَاۚ
வந்தன/எங்களிடம்
rabbanā
رَبَّنَآ
எங்கள் இறைவா
afrigh
أَفْرِغْ
இறக்கு
ʿalaynā
عَلَيْنَا
எங்கள் மீது
ṣabran
صَبْرًا
பொறுமையை
watawaffanā
وَتَوَفَّنَا
கைப்பற்று/எங்களை
mus'limīna
مُسْلِمِينَ
முஸ்லிம்களாக
(அன்றி) "எங்களிடம் வந்த இறைவனின் அத்தாட்சிகளை நாங்கள் நம்பிக்கை கொண்டதைத் தவிர வேறு எதற்காகவும் நீ எங்களை பழிவாங்கவில்லை" (என்று ஃபிர்அவ்னிடம் கூறிய பிறகு) "எங்கள் இறைவனே! எங்கள் மீது பொறுமையைச் சொரிவாயாக! (உனக்கு) முற்றிலும் வழிப்பட்டவர்களாக (எங்களை ஆக்கி) எங்களை நீ கைப்பற்றிக் கொள்வாயாக!" (என்று பிரார்த்தித்தார்கள்.) ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௧௨௬)
Tafseer
௧௨௭

وَقَالَ الْمَلَاُ مِنْ قَوْمِ فِرْعَوْنَ اَتَذَرُ مُوْسٰى وَقَوْمَهٗ لِيُفْسِدُوْا فِى الْاَرْضِ وَيَذَرَكَ وَاٰلِهَتَكَۗ قَالَ سَنُقَتِّلُ اَبْنَاۤءَهُمْ وَنَسْتَحْيٖ نِسَاۤءَهُمْۚ وَاِنَّا فَوْقَهُمْ قَاهِرُوْنَ ١٢٧

waqāla
وَقَالَ
கூறினார்(கள்)
l-mala-u
ٱلْمَلَأُ
தலைவர்கள்
min qawmi
مِن قَوْمِ
சமுதாயத்திலிருந்து
fir'ʿawna
فِرْعَوْنَ
ஃபிர்அவ்னுடைய
atadharu mūsā
أَتَذَرُ مُوسَىٰ
நீ விட்டுவிடப்போகிறாயா? / மூஸாவை
waqawmahu
وَقَوْمَهُۥ
இன்னும் அவருடைய சமுதாயத்தை
liyuf'sidū
لِيُفْسِدُوا۟
அவர்கள் விஷமம் செய்வதற்கு
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
பூமியில்
wayadharaka
وَيَذَرَكَ
இன்னும் விட்டுவிடுவதற்கு/உன்னை
waālihataka
وَءَالِهَتَكَۚ
இன்னும் உன் தெய்வங்களை
qāla
قَالَ
கூறினான்
sanuqattilu
سَنُقَتِّلُ
கொன்று குவிப்போம்
abnāahum
أَبْنَآءَهُمْ
ஆண் பிள்ளைகளை அவர்களுடைய
wanastaḥyī
وَنَسْتَحْىِۦ
இன்னும் வாழவிடுவோம்
nisāahum
نِسَآءَهُمْ
அவர்களுடைய பெண் (பிள்ளை)களை
wa-innā
وَإِنَّا
நிச்சயமாக நாம்
fawqahum
فَوْقَهُمْ
அவர்களுக்கு மேல்
qāhirūna
قَٰهِرُونَ
ஆதிக்கம் வகிப்பவர்கள்
அதற்கு ஃபிர்அவ்னுடைய மக்களிலுள்ள தலைவர்கள் (ஃபிர்அவ்னை நோக்கி) "மூஸாவும் அவருடைய மக்களும் பூமியில் விஷமம் செய்து உன்னையும், உனது தெய்வங்களையும் புறக்கணித்து விடும்படி நீ அவர்களை விட்டு வைப்பாயா?" என்று கேட்டார்கள். அதற்கவன் (அல்ல!) அவர்களுடைய ஆண் மக்களை வெட்டிவிட்டு (அவர்களை இழிவுபடுத்துவதற்காக) அவர்களுடைய பெண் மக்களை (மட்டும்) உயிருடன் வாழ விடுவோம். நிச்சயமாக நாம் அவர்கள் மீது ஆதிக்கம் வகித்திருக்கின்றோம். (ஆகவே நாம் விரும்பியவாறெல்லாம் செய்யலாம்)" என்று கூறினான். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௧௨௭)
Tafseer
௧௨௮

قَالَ مُوْسٰى لِقَوْمِهِ اسْتَعِيْنُوْا بِاللّٰهِ وَاصْبِرُوْاۚ اِنَّ الْاَرْضَ لِلّٰهِ ۗيُوْرِثُهَا مَنْ يَّشَاۤءُ مِنْ عِبَادِهٖۗ وَالْعَاقِبَةُ لِلْمُتَّقِيْنَ ١٢٨

qāla
قَالَ
கூறினார்
mūsā
مُوسَىٰ
மூஸா
liqawmihi
لِقَوْمِهِ
தன் சமுதாயத்திற்கு
is'taʿīnū
ٱسْتَعِينُوا۟
உதவி தேடுங்கள்
bil-lahi
بِٱللَّهِ
அல்லாஹ்விடம்
wa-iṣ'birū
وَٱصْبِرُوٓا۟ۖ
இன்னும் பொறுத்திருங்கள்
inna
إِنَّ
நிச்சயமாக
l-arḍa
ٱلْأَرْضَ
பூமி
lillahi
لِلَّهِ
அல்லாஹ்வுக்குரியதே
yūrithuhā
يُورِثُهَا
வாரிசாக்குவான்/அதற்கு
man yashāu
مَن يَشَآءُ
எவரை/நாடுகிறான்
min ʿibādihi
مِنْ عِبَادِهِۦۖ
தன் அடியார்களில்
wal-ʿāqibatu
وَٱلْعَٰقِبَةُ
முடிவு
lil'muttaqīna
لِلْمُتَّقِينَ
அல்லாஹ்வை அஞ்சுகிறவர்களுக்கே
(அதற்கு) மூஸா தன் இனத்தாரை நோக்கி "நீங்கள் அல்லாஹ்விடம் உதவி தேடி (ஃபிர்அவ்னால் உங்களுக்கு ஏற்படும் துன்பங்களை) பொறுமையுடன் சகித்திருங்கள். நிச்சயமாக இந்த பூமி அல்லாஹ்வுக்குரியதே! அதனை அவன் தன் அடியார்களில் தான் விரும்பியவர்களுக்குச் சொந்தமாக்கி விடுவான். (அல்லாஹ்வுக்கு) பயப்படுகிறவர்களே முடிவில் வெற்றி பெறுவார்கள்" என்று கூறினார். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௧௨௮)
Tafseer
௧௨௯

قَالُوْٓا اُوْذِيْنَا مِنْ قَبْلِ اَنْ تَأْتِيَنَا وَمِنْۢ بَعْدِ مَا جِئْتَنَا ۗقَالَ عَسٰى رَبُّكُمْ اَنْ يُّهْلِكَ عَدُوَّكُمْ وَيَسْتَخْلِفَكُمْ فِى الْاَرْضِ فَيَنْظُرَ كَيْفَ تَعْمَلُوْنَ ࣖ ١٢٩

qālū
قَالُوٓا۟
கூறினர்
ūdhīnā
أُوذِينَا
துன்புறுத்தப்பட்டோம்
min qabli
مِن قَبْلِ
முன்னர்
an tatiyanā
أَن تَأْتِيَنَا
நீர் வருவதற்கு/எங்களிடம்
wamin baʿdi
وَمِنۢ بَعْدِ
இன்னும் பின்னர்
mā ji'tanā
مَا جِئْتَنَاۚ
நீர்வந்தது/எங்களிடம்
qāla
قَالَ
கூறினார்
ʿasā rabbukum
عَسَىٰ رَبُّكُمْ
கூடும்/உங்கள் இறைவன்
an yuh'lika
أَن يُهْلِكَ
அவன் அழித்து
ʿaduwwakum
عَدُوَّكُمْ
எதிரிகளை/உங்கள்
wayastakhlifakum
وَيَسْتَخْلِفَكُمْ
இன்னும் அதிபதிகளாக்க/உங்களை
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
பூமியில்
fayanẓura
فَيَنظُرَ
கவனிப்பான்
kayfa
كَيْفَ
எவ்வாறு
taʿmalūna
تَعْمَلُونَ
செய்கிறீர்கள்
(அதற்கு மூஸாவுடைய மக்கள் அவரை நோக்கி) நீங்கள் நம்மிடம் வருவதற்கு முன்னரும் நாங்கள் துன்புறுத்தப்பட்டோம்; நீங்கள் வந்ததன் பின்னரும் (துன்புறுத்தப்பட்டே வருகின்றோம். நீங்கள் வந்ததால் எங்களுக்கு ஒன்றும் பயனேற்படவில்லை) என்று கூறினார்கள். (அதற்கு மூஸா) "உங்களுடைய இறைவன் உங்களுடைய எதிரிகளை அழித்து (அவர்களுடைய) பூமிக்கு உங்களை அதிபதியாக்கி வைக்கக்கூடும். உங்களுடைய நடத்தை எவ்வாறு இருக்கின்றது என்பதை அவன் கவனித்துக் கொண்டு இருக்கின்றான்" என்று கூறினார். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௧௨௯)
Tafseer
௧௩௦

وَلَقَدْ اَخَذْنَآ اٰلَ فِرْعَوْنَ بِالسِّنِيْنَ وَنَقْصٍ مِّنَ الثَّمَرٰتِ لَعَلَّهُمْ يَذَّكَّرُوْنَ ١٣٠

walaqad
وَلَقَدْ
திட்டவட்டமாக
akhadhnā
أَخَذْنَآ
பிடித்தோம், சோதித்தோம், தண்டித்தோம்,
āla
ءَالَ
குடும்பத்தாரை
fir'ʿawna
فِرْعَوْنَ
ஃபிர்அவ்னுடைய
bil-sinīna
بِٱلسِّنِينَ
பஞ்சங்களாலும்
wanaqṣin
وَنَقْصٍ
இன்னும் குறைத்து
mina l-thamarāti
مِّنَ ٱلثَّمَرَٰتِ
கனிகளை
laʿallahum yadhakkarūna
لَعَلَّهُمْ يَذَّكَّرُونَ
அவர்கள் நல்லறிவு பெறுவதற்காக
பின்னர், ஃபிர்அவ்னுடைய மக்களைப் பஞ்சம் பீடிக்கச் செய்து (அவர்களுடைய விவசாய) பலன்களைக் குறைத்துத் தண்டித்தோம். (இதனால்) அவர்கள் நல்லுணர்ச்சிப் பெற்றிருக்கலாம். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௧௩௦)
Tafseer