Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௧௨௭

Qur'an Surah Al-A'raf Verse 127

ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௧௨௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَقَالَ الْمَلَاُ مِنْ قَوْمِ فِرْعَوْنَ اَتَذَرُ مُوْسٰى وَقَوْمَهٗ لِيُفْسِدُوْا فِى الْاَرْضِ وَيَذَرَكَ وَاٰلِهَتَكَۗ قَالَ سَنُقَتِّلُ اَبْنَاۤءَهُمْ وَنَسْتَحْيٖ نِسَاۤءَهُمْۚ وَاِنَّا فَوْقَهُمْ قَاهِرُوْنَ (الأعراف : ٧)

waqāla
وَقَالَ
And said
கூறினார்(கள்)
l-mala-u
ٱلْمَلَأُ
the chiefs
தலைவர்கள்
min qawmi
مِن قَوْمِ
of (the) people
சமுதாயத்திலிருந்து
fir'ʿawna
فِرْعَوْنَ
(of) Firaun
ஃபிர்அவ்னுடைய
atadharu mūsā
أَتَذَرُ مُوسَىٰ
"Will you leave Musa
நீ விட்டுவிடப்போகிறாயா? / மூஸாவை
waqawmahu
وَقَوْمَهُۥ
and his people
இன்னும் அவருடைய சமுதாயத்தை
liyuf'sidū
لِيُفْسِدُوا۟
so that they cause corruption
அவர்கள் விஷமம் செய்வதற்கு
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
in the earth
பூமியில்
wayadharaka
وَيَذَرَكَ
and forsake you
இன்னும் விட்டுவிடுவதற்கு/உன்னை
waālihataka
وَءَالِهَتَكَۚ
and your gods?"
இன்னும் உன் தெய்வங்களை
qāla
قَالَ
He said
கூறினான்
sanuqattilu
سَنُقَتِّلُ
"We will kill
கொன்று குவிப்போம்
abnāahum
أَبْنَآءَهُمْ
their sons
ஆண் பிள்ளைகளை அவர்களுடைய
wanastaḥyī
وَنَسْتَحْىِۦ
and we will let live
இன்னும் வாழவிடுவோம்
nisāahum
نِسَآءَهُمْ
their women
அவர்களுடைய பெண் (பிள்ளை)களை
wa-innā
وَإِنَّا
and indeed we
நிச்சயமாக நாம்
fawqahum
فَوْقَهُمْ
over them
அவர்களுக்கு மேல்
qāhirūna
قَٰهِرُونَ
(are) subjugators"
ஆதிக்கம் வகிப்பவர்கள்

Transliteration:

Wa qaalal mala-u min qawmi Fir'awna atazaru Moosaa wa qawmahoo liyufsidoo fil ardi wa yazaraka wa aalihatak; qaala sanuqattilu abnaaa 'ahum wa nastahyee nisaaa'ahum wa innaa fawqahum qaahiroon (QS. al-ʾAʿrāf:127)

English Sahih International:

And the eminent among the people of Pharaoh said, "Will you leave Moses and his people to cause corruption in the land and abandon you and your gods?" [Pharaoh] said, "We will kill their sons and keep their women alive; and indeed, we are subjugators over them." (QS. Al-A'raf, Ayah ௧௨௭)

Abdul Hameed Baqavi:

அதற்கு ஃபிர்அவ்னுடைய மக்களிலுள்ள தலைவர்கள் (ஃபிர்அவ்னை நோக்கி) "மூஸாவும் அவருடைய மக்களும் பூமியில் விஷமம் செய்து உன்னையும், உனது தெய்வங்களையும் புறக்கணித்து விடும்படி நீ அவர்களை விட்டு வைப்பாயா?" என்று கேட்டார்கள். அதற்கவன் (அல்ல!) அவர்களுடைய ஆண் மக்களை வெட்டிவிட்டு (அவர்களை இழிவுபடுத்துவதற்காக) அவர்களுடைய பெண் மக்களை (மட்டும்) உயிருடன் வாழ விடுவோம். நிச்சயமாக நாம் அவர்கள் மீது ஆதிக்கம் வகித்திருக்கின்றோம். (ஆகவே நாம் விரும்பியவாறெல்லாம் செய்யலாம்)" என்று கூறினான். (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௧௨௭)

Jan Trust Foundation

அதற்கு, ஃபிர்அவ்னின் சமூகத் தலைவர்கள் (அவனை நோக்கி) “மூஸாவும் அவருடைய சமூகத்தாரும் பூமியில் குழப்பம் உண்டாக்கி, உம்மையும் உம் தெய்வங்களையும் புறக்கணித்து விடும்படி நீர் அவர்களை விட்டு வைப்பீரா?” என்று கேட்டார்கள். அதற்கு அவன், “(அவ்வாறன்று!) நாம் அவர்களுடைய ஆண் மக்களை வெட்டிக் கொன்றுவிட்டு, (அவர்களைச் சிறுமைப் படுத்துவதற்காக) அவர்களுடைய பெண் மக்களை மட்டும் உயிருடன் வாழவிடுவோம் - நிச்சயமாக நாம் அவர்கள் மீது பூரண ஆதிக்கம் பெற்றுள்ளோம்” என்று கூறினான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஃபிர்அவ்னுடைய சமுதாயத்திலிருந்து தலைவர்கள் “மூஸாவையும் அவருடைய சமுதாயத்தையும் -அவர்கள் பூமியில் விஷமம் செய்வதற்கும் உன்னையும், உன் தெய்வங்களையும் அவர் (புறக்கணித்து) விட்டுவிடுவதற்கும்- நீ விட்டு விடப்போகிறாயா?” என்று கூறினார்கள். (அல்ல!) அவர்களுடைய ஆண் பிள்ளைகளைக் கொன்று குவிப்போம். அவர்களுடைய பெண் (பிள்ளை)களை வாழவிடுவோம். நிச்சயமாக நாம் அவர்களுக்கு மேல் (என்றும்) ஆதிக்கம் வகிப்பவர்கள்” என்று (ஃபிர்அவ்ன்) கூறினான்.