Skip to content

ஸூரா ஸூரத்துல் அஃராஃப் - Page: 3

Al-A'raf

(al-ʾAʿrāf)

௨௧

وَقَاسَمَهُمَآ اِنِّيْ لَكُمَا لَمِنَ النّٰصِحِيْنَۙ ٢١

waqāsamahumā
وَقَاسَمَهُمَآ
சத்தியமிட்டான்/அவ்விருவரிடமும்
innī
إِنِّى
நிச்சயமாக நான்
lakumā
لَكُمَا
உங்கள் இருவருக்கும்
lamina l-nāṣiḥīna
لَمِنَ ٱلنَّٰصِحِينَ
நிச்சயமாக நன்மையை நாடுவோரில்
"நிச்சயமாக நான் உங்களுக்கு நன்மையையே கருதுகிறேன்" என்று அவ்விருவரிடமும் சத்தியமும் செய்து, ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௨௧)
Tafseer
௨௨

فَدَلّٰىهُمَا بِغُرُورٍۚ فَلَمَّا ذَاقَا الشَّجَرَةَ بَدَتْ لَهُمَا سَوْاٰتُهُمَا وَطَفِقَا يَخْصِفٰنِ عَلَيْهِمَا مِنْ وَّرَقِ الْجَنَّةِۗ وَنَادٰىهُمَا رَبُّهُمَآ اَلَمْ اَنْهَكُمَا عَنْ تِلْكُمَا الشَّجَرَةِ وَاَقُلْ لَّكُمَآ اِنَّ الشَّيْطٰنَ لَكُمَا عَدُوٌّ مُّبِيْنٌ ٢٢

fadallāhumā
فَدَلَّىٰهُمَا
ஆக, தரம் தாழ்த்தினான்/அவ்விருவரை
bighurūrin
بِغُرُورٍۚ
ஏமாற்றி
falammā dhāqā
فَلَمَّا ذَاقَا
இருவரும் சுவைத்தபோது
l-shajarata badat
ٱلشَّجَرَةَ بَدَتْ
மரத்தை/தெரிந்தன
lahumā
لَهُمَا
அவ்விருவருக்கு
sawātuhumā
سَوْءَٰتُهُمَا
அவ்விருவரின் வெட்கத்தலங்கள்
waṭafiqā
وَطَفِقَا
அவ்விருவரும் முயன்றனர்
yakhṣifāni
يَخْصِفَانِ
அவ்விவரும் மூடிக்கொள்கின்றனர்
ʿalayhimā
عَلَيْهِمَا
தம் இருவர் மீதும்
min waraqi
مِن وَرَقِ
இலைகளினால்
l-janati
ٱلْجَنَّةِۖ
சொர்க்கத்தின்
wanādāhumā
وَنَادَىٰهُمَا
அழைத்தான்/அவ்விருவரை
rabbuhumā
رَبُّهُمَآ
அவ்விருவரின் இறைவன்
alam anhakumā
أَلَمْ أَنْهَكُمَا
நான் தடுக்கவில்லையா?/உங்களிருவரை
ʿan til'kumā l-shajarati
عَن تِلْكُمَا ٱلشَّجَرَةِ
அம்மரத்தை விட்டு
wa-aqul
وَأَقُل
இன்னும் நான்கூறவில்லையா?
lakumā
لَّكُمَآ
உங்களிருவருக்கு
inna
إِنَّ
நிச்சயமாக
l-shayṭāna
ٱلشَّيْطَٰنَ
ஷைத்தான்
lakumā
لَكُمَا
உங்களிருவருக்கு
ʿaduwwun
عَدُوٌّ
எதிரி
mubīnun
مُّبِينٌ
வெளிப்படையான
அவர்களை மயக்கி, (அம்மரத்தின் கனியைப் புசிப்பதற்காக) அதன் பக்கம் அவர்களைச் செல்ல வைத்தான். அவ்விருவரும் அம்மரத்(தின் பழத்)தைச் சுவைக்கவே, அவ்விருவரின் மர்ம உறுப்புகளும் அவர்களுக்குத் தெரிந்து, அச்சோலையின் இலையைக் கொண்டு தங்களை மூடிக்கொள்ள அவர்கள் முயற்சித்தனர். அது சமயம் இறைவன் "அம்மரத்தை விட்டும் நான் உங்களைத் தடுத்திருக்கவில்லையா? நிச்சயமாக ஷைத்தான் உங்களிருவருக்கும் பகிரங்கமான எதிரி என்றும் நான் உங்களுக்குக் கூறவில்லையா?" என்று அவ்விருவரையும் அழைத்துக் கூறினான். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௨௨)
Tafseer
௨௩

قَالَا رَبَّنَا ظَلَمْنَآ اَنْفُسَنَا وَاِنْ لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُوْنَنَّ مِنَ الْخٰسِرِيْنَ ٢٣

qālā
قَالَا
அவ்விருவரும் கூறினர்
rabbanā
رَبَّنَا
எங்கள் இறைவா
ẓalamnā
ظَلَمْنَآ
நாங்கள் தீங்கிழைத்தோம்
anfusanā
أَنفُسَنَا
எங்கள் ஆன்மாக்களுக்கு
wa-in lam taghfir lanā
وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا
நீ மன்னிக்கவில்லையெனில்/எங்களை
watarḥamnā
وَتَرْحَمْنَا
இன்னும் நீ கருணை புரியவில்லையெனில்/எங்களுக்கு
lanakūnanna
لَنَكُونَنَّ
நிச்சயமாக ஆகிவிடுவோம்
mina l-khāsirīna
مِنَ ٱلْخَٰسِرِينَ
நஷ்டவாளிகளில்
(அதற்கு அவர்கள்) "எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம். நீ எங்களை மன்னித்து எங்களுக்கு அருள் புரியாவிட்டால் நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்" என்று (பிரார்த்தித்துக்) கூறினர். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௨௩)
Tafseer
௨௪

قَالَ اهْبِطُوْا بَعْضُكُمْ لِبَعْضٍ عَدُوٌّ ۚوَلَكُمْ فِى الْاَرْضِ مُسْتَقَرٌّ وَّمَتَاعٌ اِلٰى حِيْنٍ ٢٤

qāla
قَالَ
கூறினான்
ih'biṭū
ٱهْبِطُوا۟
இறங்கிவிடுங்கள்
baʿḍukum
بَعْضُكُمْ
உங்களில் சிலர்
libaʿḍin
لِبَعْضٍ
சிலருக்கு
ʿaduwwun
عَدُوٌّۖ
எதிரி
walakum
وَلَكُمْ
உங்களுக்கு
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
பூமியில்
mus'taqarrun
مُسْتَقَرٌّ
தங்குமிடம்
wamatāʿun
وَمَتَٰعٌ
இன்னும் சுகம்
ilā
إِلَىٰ
வரை
ḥīnin
حِينٍ
ஒரு காலம்
(அதற்கு இறைவன் "இதிலிருந்து) நீங்கள் வெளியேறி விடுங்கள். உங்களில் ஒருவர் மற்றவருக்கு எதிரியாகி விடுவீர்கள். பூமியில்தான் உங்களுக்குத் தங்குமிடம் உண்டு. (அதில்) ஒரு காலம் வரை சுகம் அனுபவிக்கலாம்" என்று கூறினான். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௨௪)
Tafseer
௨௫

قَالَ فِيْهَا تَحْيَوْنَ وَفِيْهَا تَمُوْتُوْنَ وَمِنْهَا تُخْرَجُوْنَ ࣖ ٢٥

qāla
قَالَ
கூறினான்
fīhā
فِيهَا
அதில்தான்
taḥyawna
تَحْيَوْنَ
வாழ்வீர்கள்
wafīhā
وَفِيهَا
இன்னும் அதில்தான்
tamūtūna
تَمُوتُونَ
இறப்பீர்கள்
wamin'hā
وَمِنْهَا
இன்னும் அதிலிருந்துதான்
tukh'rajūna
تُخْرَجُونَ
எழுப்பப்படுவீர்கள்
(அன்றி) "அதிலேயே நீங்கள் உயிர் வாழ்வீர்கள்; அதிலேயே நீங்கள் இறப்பீர்கள்; (பின்னர் ஒரு நாளில்) அதிலிருந்தே எழுப்பவும் படுவீர்கள்" என்றும் கூறினான். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௨௫)
Tafseer
௨௬

يَا بَنِيْٓ اٰدَمَ قَدْ اَنْزَلْنَا عَلَيْكُمْ لِبَاسًا يُّوَارِيْ سَوْاٰتِكُمْ وَرِيْشًاۗ وَلِبَاسُ التَّقْوٰى ذٰلِكَ خَيْرٌۗ ذٰلِكَ مِنْ اٰيٰتِ اللّٰهِ لَعَلَّهُمْ يَذَّكَّرُوْنَ ٢٦

yābanī
يَٰبَنِىٓ
சந்ததிகளே
ādama
ءَادَمَ
ஆதமின்
qad anzalnā
قَدْ أَنزَلْنَا
திட்டமாக/இறக்கினோம் (படைத்தோம்)
ʿalaykum
عَلَيْكُمْ
உங்கள் மீது (உங்களுக்கு)
libāsan
لِبَاسًا
ஆடையை
yuwārī
يُوَٰرِى
மறைக்கின்ற(து)
sawātikum
سَوْءَٰتِكُمْ
உங்கள் வெட்கத்தலங்களை
warīshan
وَرِيشًاۖ
இன்னும் அலங்காரத்தை
walibāsu
وَلِبَاسُ
ஆடை
l-taqwā
ٱلتَّقْوَىٰ
இறையச்சத்தின்
dhālika
ذَٰلِكَ
அதுதான்
khayrun
خَيْرٌۚ
மிகச் சிறந்தது
dhālika
ذَٰلِكَ
இவை
min āyāti
مِنْ ءَايَٰتِ
அத்தாட்சிகளில்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
laʿallahum yadhakkarūna
لَعَلَّهُمْ يَذَّكَّرُونَ
அவர்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக
ஆதமுடைய மக்களே! உங்களுடைய மானத்தை மறைக்கக் கூடியதும் (உங்களை) அலங்கரிக்கக் கூடியதுமான ஆடைகளை நிச்சயமாக நாம் உங்களுக்கு அருள் புரிந்திருக்கின்றோம். எனினும், (பாவங்களை மறைத்துவிடக் கூடிய) இறை அச்சம் எனும் ஆடைதான் மிக்க மேலானது. இவை அனைத்தும் அல்லாஹ்வுடைய வசனங்களாகும். (இவற்றைக் கொண்டு) அவர்கள் நல்லுணர்ச்சி பெறுவார்களாக! ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௨௬)
Tafseer
௨௭

يٰبَنِيْٓ اٰدَمَ لَا يَفْتِنَنَّكُمُ الشَّيْطٰنُ كَمَآ اَخْرَجَ اَبَوَيْكُمْ مِّنَ الْجَنَّةِ يَنْزِعُ عَنْهُمَا لِبَاسَهُمَا لِيُرِيَهُمَا سَوْاٰتِهِمَا ۗاِنَّهٗ يَرٰىكُمْ هُوَ وَقَبِيْلُهٗ مِنْ حَيْثُ لَا تَرَوْنَهُمْۗ اِنَّا جَعَلْنَا الشَّيٰطِيْنَ اَوْلِيَاۤءَ لِلَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ ٢٧

yābanī
يَٰبَنِىٓ
சந்ததிகளே
ādama
ءَادَمَ
ஆதமின்
lā yaftinannakumu
لَا يَفْتِنَنَّكُمُ
ஏமாற்றிவிட வேண்டாம்/உங்களை
l-shayṭānu kamā
ٱلشَّيْطَٰنُ كَمَآ
ஷைத்தான்/போன்று
akhraja
أَخْرَجَ
வெளியேற்றினான்
abawaykum
أَبَوَيْكُم
உங்கள் தாய் தந்தையை
mina l-janati
مِّنَ ٱلْجَنَّةِ
சொர்க்கத்திலிருந்து
yanziʿu
يَنزِعُ
கழட்டுகிறான்
ʿanhumā
عَنْهُمَا
அவ்விருவரை விட்டு
libāsahumā
لِبَاسَهُمَا
அவ்விருவரின் ஆடையை
liyuriyahumā
لِيُرِيَهُمَا
அவன் காண்பிப்பதற்காக/அவ்விருவருக்கு
sawātihimā
سَوْءَٰتِهِمَآۗ
அவ்விருவருடைய வெட்கத்தலங்களை
innahu
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
yarākum
يَرَىٰكُمْ
பார்க்கிறான்/உங்களை
huwa waqabīluhu
هُوَ وَقَبِيلُهُۥ
அவன்/இன்னும் அவனுடைய இனத்தார்
min ḥaythu lā tarawnahum
مِنْ حَيْثُ لَا تَرَوْنَهُمْۗ
நீங்கள் அவர்களைப் பார்க்காதவாறு
innā
إِنَّا
நிச்சயமாக நாம்
jaʿalnā
جَعَلْنَا
ஆக்கினோம்
l-shayāṭīna
ٱلشَّيَٰطِينَ
ஷைத்தான்களை
awliyāa
أَوْلِيَآءَ
நண்பர்களாக
lilladhīna
لِلَّذِينَ
எவர்களுக்கு
lā yu'minūna
لَا يُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
ஆதமுடைய மக்களே! ஷைத்தான் உங்கள் தாய் தந்தையை (அவர்கள் இன்பமுடன் வசித்து வந்த) சோலையிலிருந்து வெளியேற்றி (துன்பத்திற்குள்ளாக்கி)யது போல உங்களையும் துன்பத்திற்குள்ளாக்கி விட வேண்டாம். அவர்களுடைய மானத்தை அவர்களுக்குக் காண்பிப்பதற்காக அவன் அவர்களுடைய ஆடையைக் களைந்து விட்டான். நிச்சயமாக அவனும் அவனுடைய இனத்தாரும் நீங்கள் அவர்களைக் காணமுடியாதவாறு (மறைவாக இருந்துகொண்டு) உங்களை (வழி கெடுக்க சமயம்) பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள். நிச்சயமாக நம்பிக்கை கொள்ளாதவர்களுக்குத்தான் அந்த ஷைத்தான்களை நாம் நண்பர்களாக்கி இருக்கிறோம். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௨௭)
Tafseer
௨௮

وَاِذَا فَعَلُوْا فَاحِشَةً قَالُوْا وَجَدْنَا عَلَيْهَآ اٰبَاۤءَنَا وَاللّٰهُ اَمَرَنَا بِهَاۗ قُلْ اِنَّ اللّٰهَ لَا يَأْمُرُ بِالْفَحْشَاۤءِۗ اَتَقُوْلُوْنَ عَلَى اللّٰهِ مَا لَا تَعْلَمُوْنَ ٢٨

wa-idhā faʿalū
وَإِذَا فَعَلُوا۟
அவர்கள் செய்தால்
fāḥishatan
فَٰحِشَةً
ஒரு மானக்கேடானதை
qālū
قَالُوا۟
கூறுகின்றனர்
wajadnā
وَجَدْنَا
கண்டோம்
ʿalayhā
عَلَيْهَآ
இதன் மீது
ābāanā
ءَابَآءَنَا
எங்கள் மூதாதைகளை
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்வும்
amaranā
أَمَرَنَا
ஏவினான்/எங்களுக்கு
bihā qul
بِهَاۗ قُلْ
இதை/கூறுவீராக
inna l-laha
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
lā yamuru
لَا يَأْمُرُ
ஏவ மாட்டான்
bil-faḥshāi
بِٱلْفَحْشَآءِۖ
மானக்கேடானதை
ataqūlūna
أَتَقُولُونَ
கூறுகிறீர்களா?
ʿalā l-lahi
عَلَى ٱللَّهِ
அல்லாஹ்வின் மீது
مَا
எவற்றை
lā taʿlamūna
لَا تَعْلَمُونَ
அறியமாட்டீர்கள்
(நம்பிக்கை கொள்ளாத) அவர்கள் யாதொரு மானக்கேடான காரியத்தைச் செய்(யும்போது, அதனைக் கண்ட எவரும் அவர்களைக் கண்டித்)தால், அவர்கள் "எங்கள் முன்னோர்களும் இவ்வாறு செய்யவே நாங்கள் கண்டோம். அன்றி இவ்வாறு (செய்யும்படியாகவே) அல்லாஹ்வும் எங்களுக்குக் கட்டளை யிட்டிருக்கின்றான்" என்று கூறுகின்றனர். (அதற்கு நபியே! அவர்களை நோக்கி) "நிச்சயமாக அல்லாஹ் மானக்கேடான காரியங்களைச் செய்யும்படி ஏவவே மாட்டான். அல்லாஹ்வின் மீது நீங்கள் அறியாதவற்றை(ப் பொய்யாக)க் கூறலாமா?" என்று கூறுங்கள். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௨௮)
Tafseer
௨௯

قُلْ اَمَرَ رَبِّيْ بِالْقِسْطِۗ وَاَقِيْمُوْا وُجُوْهَكُمْ عِنْدَ كُلِّ مَسْجِدٍ وَّادْعُوْهُ مُخْلِصِيْنَ لَهُ الدِّيْنَ ەۗ كَمَا بَدَاَكُمْ تَعُوْدُوْنَۗ ٢٩

qul
قُلْ
கூறுவீராக
amara
أَمَرَ
ஏவினான்
rabbī
رَبِّى
என் இறைவன்
bil-qis'ṭi
بِٱلْقِسْطِۖ
நீதத்தை
wa-aqīmū
وَأَقِيمُوا۟
இன்னும் நிலைநிறுத்துங்கள்
wujūhakum
وُجُوهَكُمْ
உங்கள் முகங்களை
ʿinda kulli
عِندَ كُلِّ
இடம்/எல்லாம்
masjidin
مَسْجِدٍ
மஸ்ஜிது
wa-id'ʿūhu
وَٱدْعُوهُ
அழையுங்கள்/அவனை
mukh'liṣīna lahu
مُخْلِصِينَ لَهُ
தூய்மைப்படுத்தியவர்களாக/அவனுக்கு
l-dīna
ٱلدِّينَۚ
வழிபடுவதை
kamā bada-akum
كَمَا بَدَأَكُمْ
போன்று/ஆரம்பமாக படைத்தான்/உங்களை
taʿūdūna
تَعُودُونَ
திரும்புவீர்கள்
அன்றி, "என் இறைவன் நீதத்தையே கட்டளை யிட்டிருக்கின்றான். ஒவ்வொரு தொழுகையின்போதும் (மனதில்) அவனையே நீங்கள் முன்னோக்கித் தொழுங்கள். நீங்கள் அவனுக்கே முற்றிலும் வழிப்பட்டு, கலப்பற்ற மனதோடு அவனிடமே நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். அவன் உங்களை (இல்லாமையில் இருந்து) வெளியாக்கியது போல (இறந்த பின்னரும் உயிர்ப்பிக்கப்பட்டு அவனிடமே) நீங்கள் மீளுவீர்கள்" என்றும் கூறுங்கள். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௨௯)
Tafseer
௩௦

فَرِيْقًا هَدٰى وَفَرِيْقًا حَقَّ عَلَيْهِمُ الضَّلٰلَةُ ۗاِنَّهُمُ اتَّخَذُوا الشَّيٰطِيْنَ اَوْلِيَاۤءَ مِنْ دُوْنِ اللّٰهِ وَيَحْسَبُوْنَ اَنَّهُمْ مُّهْتَدُوْنَ ٣٠

farīqan
فَرِيقًا
ஒரு பிரிவை
hadā
هَدَىٰ
நேர்வழிப்படுத்தினான்
wafarīqan
وَفَرِيقًا
இன்னும் ஒரு பிரிவு
ḥaqqa
حَقَّ
உறுதியாகி விட்டது
ʿalayhimu
عَلَيْهِمُ
அதன் மீது
l-ḍalālatu
ٱلضَّلَٰلَةُۗ
வழிகேடு
innahumu
إِنَّهُمُ
நிச்சயமாக அவர்கள்
ittakhadhū
ٱتَّخَذُوا۟
எடுத்துக் கொண்டனர்
l-shayāṭīna
ٱلشَّيَٰطِينَ
ஷைத்தான்களை
awliyāa
أَوْلِيَآءَ
தோழர்களாக
min dūni l-lahi
مِن دُونِ ٱللَّهِ
அல்லாஹ்வையன்றி
wayaḥsabūna
وَيَحْسَبُونَ
இன்னும் எண்ணுகின்றனர்
annahum
أَنَّهُم
நிச்சயமாக தாங்கள்
muh'tadūna
مُّهْتَدُونَ
நேர்வழி பெற்றவர்கள்
(உங்களில்) சிலரை அவன் நேரான வழியில் செலுத்தியிருக்க மற்றோர் மீது வழிகேடே விதிக்கப்பட்டதன் காரணம், நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையன்றி ஷைத்தான்களையே தங்கள் தோழர்களாக எடுத்துக் கொண்டதுடன் தாங்கள் நிச்சயமாக நேரான வழியில் இருப்பதாகவும் எண்ணிக் கொண்டதுதான். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௩௦)
Tafseer