Skip to content

ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் - Page: 9

Ali 'Imran

(ʾĀl ʿImrān)

௮௧

وَاِذْ اَخَذَ اللّٰهُ مِيْثَاقَ النَّبِيّٖنَ لَمَآ اٰتَيْتُكُمْ مِّنْ كِتٰبٍ وَّحِكْمَةٍ ثُمَّ جَاۤءَكُمْ رَسُوْلٌ مُّصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهٖ وَلَتَنْصُرُنَّهٗ ۗ قَالَ ءَاَقْرَرْتُمْ وَاَخَذْتُمْ عَلٰى ذٰلِكُمْ اِصْرِيْ ۗ قَالُوْٓا اَقْرَرْنَا ۗ قَالَ فَاشْهَدُوْا وَاَنَا۠ مَعَكُمْ مِّنَ الشّٰهِدِيْنَ ٨١

wa-idh akhadha
وَإِذْ أَخَذَ
வாங்கிய சமயம்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
mīthāqa
مِيثَٰقَ
வாக்குறுதியை
l-nabiyīna
ٱلنَّبِيِّۦنَ
நபிமார்களின்
lamā ātaytukum
لَمَآ ءَاتَيْتُكُم
உங்களுக்குக் கொடுத்தபோதெல்லாம்
min kitābin
مِّن كِتَٰبٍ
வேதத்தை
waḥik'matin thumma
وَحِكْمَةٍ ثُمَّ
இன்னும் ஞானம்/பிறகு
jāakum
جَآءَكُمْ
உங்களிடம் வந்தார்
rasūlun
رَسُولٌ
ஒரு தூதர்
muṣaddiqun
مُّصَدِّقٌ
உண்மைப்படுத்துபவர்
limā maʿakum
لِّمَا مَعَكُمْ
உங்களுடனுள்ளதை
latu'minunna bihi
لَتُؤْمِنُنَّ بِهِۦ
நிச்சயமாகஅவரை நீங்கள் நம்பிக்கை கொள்ளவேண்டும்
walatanṣurunnahu
وَلَتَنصُرُنَّهُۥۚ
இன்னும் நிச்சயமாக நீங்கள் அவருக்கு உதவவேண்டும்
qāla
قَالَ
கூறினான்
a-aqrartum
ءَأَقْرَرْتُمْ
ஏற்றீர்களா?
wa-akhadhtum
وَأَخَذْتُمْ
இன்னும் ஏற்றீர்களா?
ʿalā dhālikum
عَلَىٰ ذَٰلِكُمْ
மீது/இது
iṣ'rī
إِصْرِىۖ
என்உடன்படிக்கையை
qālū
قَالُوٓا۟
கூறினார்கள்
aqrarnā
أَقْرَرْنَاۚ
ஒப்புக்கொண்டோம்
qāla
قَالَ
கூறினான்
fa-ish'hadū
فَٱشْهَدُوا۟
சாட்சி பகருங்கள்
wa-anā
وَأَنَا۠
இன்னும் நான்
maʿakum
مَعَكُم
உங்களுடன்
mina l-shāhidīna
مِّنَ ٱلشَّٰهِدِينَ
சாட்சியாளர்களில்
நபிமார்களிடம் அல்லாஹ் வாக்குறுதி வாங்கிய சமயத்தில் (அவர்களை நோக்கி) "வேதத்தையும், ஞானத்தையும் நான் உங்களுக்குக் கொடுத்திருக்கின்றேன். இதற்குப் பின்னர் உங்களிடம் உள்ளதை உண்மைப்படுத்தும் ஒரு தூதர் உங்களிடம் வந்தால் அவரை நீங்கள் உண்மையாக நம்பிக்கை கொண்டு நிச்சயமாக அவருக்கு உதவி செய்ய வேண்டும்" (என்று கூறி) "இதனை நீங்கள் உறுதிப்படுத்தினீர்களா? என்னுடைய இக்கட்டளையை எடுத்துக் கொண்டீர்களா?" என்று கேட்டதற்கு, அவர்கள் "நாங்கள் (அதனை) அங்கீகரித்துக் கொண்டோம்" என்றே கூறினார்கள். அப்போது (இறைவன் "இதற்கு) நீங்கள் சாட்சியாயிருங்கள். நானும் உங்களுடன் சாட்சியாக இருக்கின்றேன்" என்று கூறினான். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௮௧)
Tafseer
௮௨

فَمَنْ تَوَلّٰى بَعْدَ ذٰلِكَ فَاُولٰۤىِٕكَ هُمُ الْفٰسِقُوْنَ ٨٢

faman
فَمَن
எவர்
tawallā
تَوَلَّىٰ
விலகினார்
baʿda
بَعْدَ
பின்னர்
dhālika
ذَٰلِكَ
இது
fa-ulāika humu
فَأُو۟لَٰٓئِكَ هُمُ
அவர்கள்தான்
l-fāsiqūna
ٱلْفَٰسِقُونَ
பாவிகள்
இதற்குப் பின்னரும் எவரேனும் புறக்கணித்தால் நிச்சயமாக அவர்கள்தான் பெரும் பாவிகள் ஆவர். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௮௨)
Tafseer
௮௩

اَفَغَيْرَ دِيْنِ اللّٰهِ يَبْغُوْنَ وَلَهٗ ٓ اَسْلَمَ مَنْ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ طَوْعًا وَّكَرْهًا وَّاِلَيْهِ يُرْجَعُوْنَ ٨٣

afaghayra
أَفَغَيْرَ
அல்லாததையா?
dīni
دِينِ
மார்க்கம்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
yabghūna
يَبْغُونَ
விரும்புகிறார்கள்
walahu
وَلَهُۥٓ
அவனுக்கே
aslama
أَسْلَمَ
பணிந்தார்(கள்)
man
مَن
எவர்கள்
fī l-samāwāti
فِى ٱلسَّمَٰوَٰتِ
வானங்களில்
wal-arḍi
وَٱلْأَرْضِ
இன்னும் பூமியில்
ṭawʿan wakarhan
طَوْعًا وَكَرْهًا
விரும்பி/இன்னும் நிர்பந்தம்
wa-ilayhi
وَإِلَيْهِ
இன்னும் அவன் பக்கமே
yur'jaʿūna
يُرْجَعُونَ
திருப்பப்படுவார்கள்
அல்லாஹ்வுடைய மார்க்கத்தையன்றி (வேறு மார்க்கத்தை)யா இவர்கள் விரும்புகின்றார்கள்? வானங்களிலும், பூமியிலும் உள்ளவை அனைத்துமே (அவை) விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அவனுக்குக் கீழ்ப்படிந்தே நடக்கின்றன. அன்றி (அவையனைத்தும்) அவன் பக்கமே திரும்பக் கொண்டு வரப்படும். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௮௩)
Tafseer
௮௪

قُلْ اٰمَنَّا بِاللّٰهِ وَمَآ اُنْزِلَ عَلَيْنَا وَمَآ اُنْزِلَ عَلٰٓى اِبْرٰهِيْمَ وَاِسْمٰعِيْلَ وَاِسْحٰقَ وَيَعْقُوْبَ وَالْاَسْبَاطِ وَمَآ اُوْتِيَ مُوْسٰى وَعِيْسٰى وَالنَّبِيُّوْنَ مِنْ رَّبِّهِمْۖ لَا نُفَرِّقُ بَيْنَ اَحَدٍ مِّنْهُمْۖ وَنَحْنُ لَهٗ مُسْلِمُوْنَ ٨٤

qul
قُلْ
கூறுவீராக
āmannā
ءَامَنَّا
நம்பிக்கை கொண்டோம்
bil-lahi
بِٱللَّهِ
அல்லாஹ்வை
wamā unzila
وَمَآ أُنزِلَ
இன்னும் இறக்கப்பட்டதை
ʿalaynā
عَلَيْنَا
எங்கள் மீது
wamā unzila
وَمَآ أُنزِلَ
இன்னும் இறக்கப்பட்டதை
ʿalā
عَلَىٰٓ
மீது
ib'rāhīma
إِبْرَٰهِيمَ
இப்றாஹீம்
wa-is'māʿīla
وَإِسْمَٰعِيلَ
இன்னும் இஸ்மாயீல்
wa-is'ḥāqa
وَإِسْحَٰقَ
இன்னும் இஸ்ஹாக்
wayaʿqūba
وَيَعْقُوبَ
இன்னும் யஃகூப்
wal-asbāṭi
وَٱلْأَسْبَاطِ
இன்னும் சந்ததிகள்
wamā
وَمَآ
இன்னும் எது/
ūtiya
أُوتِىَ
கொடுக்கப்பட்டார்
mūsā waʿīsā
مُوسَىٰ وَعِيسَىٰ
மூஸா/இன்னும் ஈஸா
wal-nabiyūna
وَٱلنَّبِيُّونَ
இன்னும் நபிமார்கள்
min rabbihim
مِن رَّبِّهِمْ
தங்கள் இறைவனிடமிருந்து
lā nufarriqu
لَا نُفَرِّقُ
பிரிக்க மாட்டோம்
bayna aḥadin
بَيْنَ أَحَدٍ
ஒருவருக்கு மத்தியில்
min'hum
مِّنْهُمْ
இவர்களில்
wanaḥnu
وَنَحْنُ
இன்னும் நாங்கள்
lahu
لَهُۥ
அவனுக்கே
mus'limūna
مُسْلِمُونَ
முற்றிலும் பணிந்தவர்கள்
(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "அல்லாஹ்வையும், நம்மீது அருளப்பட்டதையும்; இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் ஆகியவர்கள் மீதும், அவர்கள் சந்ததிகள் மீது அருளப்பட்டவை களையும்; மூஸா, ஈஸா மற்றும் அனைத்து நபிமார்களுக்கு அவர்கள் இறைவனால் அளிக்கப்பட்டவைகளையும் நாங்கள் நம்பிக்கை கொள்கிறோம். இவர்களில் ஒருவரையும் (நபியல்ல என்று) நாம் பிரித்துவிட மாட்டோம். அல்லாஹ் ஒருவனுக்கே நாங்கள் (முற்றிலும்) கீழ்ப்படிந்து நடப்போம் (என்றும் கூறுங்கள்.) ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௮௪)
Tafseer
௮௫

وَمَنْ يَّبْتَغِ غَيْرَ الْاِسْلَامِ دِيْنًا فَلَنْ يُّقْبَلَ مِنْهُۚ وَهُوَ فِى الْاٰخِرَةِ مِنَ الْخٰسِرِيْنَ ٨٥

waman yabtaghi
وَمَن يَبْتَغِ
எவர்/விரும்புவார்
ghayra l-is'lāmi
غَيْرَ ٱلْإِسْلَٰمِ
இஸ்லாமல்லாததை
dīnan
دِينًا
மார்க்கமாக
falan yuq'bala
فَلَن يُقْبَلَ
அறவே அங்கீகரிக்கப்படாது
min'hu
مِنْهُ
அவரிடமிருந்து
wahuwa
وَهُوَ
இன்னும் அவர்
fī l-ākhirati
فِى ٱلْءَاخِرَةِ
மறுமையில்
mina l-khāsirīna
مِنَ ٱلْخَٰسِرِينَ
நஷ்டவாளிகளில்
இஸ்லாமையன்றி (வேறொரு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் நிச்சயமாக அவரிடமிருந்து (அது) அங்கீகரிக்கப்பட மாட்டாது. மறுமையில் அவர் நஷ்டமடைந்தவராகவே இருப்பார். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௮௫)
Tafseer
௮௬

كَيْفَ يَهْدِى اللّٰهُ قَوْمًا كَفَرُوْا بَعْدَ اِيْمَانِهِمْ وَشَهِدُوْٓا اَنَّ الرَّسُوْلَ حَقٌّ وَّجَاۤءَهُمُ الْبَيِّنٰتُ ۗ وَاللّٰهُ لَا يَهْدِى الْقَوْمَ الظّٰلِمِيْنَ ٨٦

kayfa
كَيْفَ
எவ்வாறு
yahdī
يَهْدِى
நேர்வழி செலுத்துவான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
qawman
قَوْمًا
ஒரு கூட்டத்தை
kafarū
كَفَرُوا۟
நிராகரித்தார்கள்
baʿda
بَعْدَ
பின்னர்
īmānihim
إِيمَٰنِهِمْ
தாங்கள் நம்பிக்கை கொண்டதற்கு
washahidū
وَشَهِدُوٓا۟
இன்னும் சாட்சி கூறினர்
anna l-rasūla
أَنَّ ٱلرَّسُولَ
நிச்சயமாக தூதர்
ḥaqqun
حَقٌّ
உண்மையானவர்
wajāahumu
وَجَآءَهُمُ
இன்னும் அவர்களிடம் வந்தது
l-bayinātu
ٱلْبَيِّنَٰتُۚ
தெளிவான சான்றுகள்
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
lā yahdī
لَا يَهْدِى
நேர்வழி செலுத்த மாட்டான்
l-qawma
ٱلْقَوْمَ
மக்களை
l-ẓālimīna
ٱلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்கள்
அல்லாஹ் எவ்வாறு ஒரு சமூகத்தினரை நேரான வழியில் செலுத்துவான். அவர்களோ, தங்களிடம் வந்த பல அத்தாட்சிகளின் மூலம் நிச்சயமாக (அல்லாஹ்வுடைய) தூதர் உண்மையானவர் என சாட்சியம் கூறி நம்பிக்கை கொண்டதன் பின்னரும் (அத்தூதரை) நிராகரிக்கின்றனர். அல்லாஹ் (இத்தகைய) அநியாயக்கார சமூகத்தினரை நேரான வழியில் செலுத்துவதில்லை. ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௮௬)
Tafseer
௮௭

اُولٰۤىِٕكَ جَزَاۤؤُهُمْ اَنَّ عَلَيْهِمْ لَعْنَةَ اللّٰهِ وَالْمَلٰۤىِٕكَةِ وَالنَّاسِ اَجْمَعِيْنَۙ ٨٧

ulāika
أُو۟لَٰٓئِكَ
இவர்கள்
jazāuhum
جَزَآؤُهُمْ
இவர்களுடைய கூலி
anna
أَنَّ
நிச்சயமாக
ʿalayhim
عَلَيْهِمْ
இவர்கள் மீது
laʿnata l-lahi
لَعْنَةَ ٱللَّهِ
அல்லாஹ்வின் சாபம்
wal-malāikati
وَٱلْمَلَٰٓئِكَةِ
இன்னும் வானவர்கள்
wal-nāsi
وَٱلنَّاسِ
இன்னும் மக்கள்
ajmaʿīna
أَجْمَعِينَ
அனைவர்
இத்தகையவர்களுக்கு (அவர்கள் செயலுக்குத் தக்க) பிரதிபலனாவது: இவர்கள் மீது நிச்சயமாக அல்லாஹ், மலக்குகள், மனிதர்கள் அனைவருடைய சாபம்தான் உள்ளது. ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௮௭)
Tafseer
௮௮

خٰلِدِيْنَ فِيْهَا ۚ لَا يُخَفَّفُ عَنْهُمُ الْعَذَابُ وَلَا هُمْ يُنْظَرُوْنَۙ ٨٨

khālidīna
خَٰلِدِينَ
நிரந்தரமானவர்கள்
fīhā
فِيهَا
அதில்
lā yukhaffafu
لَا يُخَفَّفُ
இலேசாக்கப்படாது
ʿanhumu
عَنْهُمُ
அவர்களை விட்டு
l-ʿadhābu
ٱلْعَذَابُ
வேதனை
walā hum yunẓarūna
وَلَا هُمْ يُنظَرُونَ
இன்னும் அவர்கள் தவனை அளிக்கப்படமாட்டார்கள்
இ(ச்சாபத்)திலேயே அவர்கள் என்றென்றும் தங்கி விடுவார்கள். அவர்களுடைய வேதனை இலேசாக்கப்படவும் மாட்டாது. அவர்களுக்கு ஓய்வு கொடுக்கப்படவும் மாட்டாது. ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௮௮)
Tafseer
௮௯

اِلَّا الَّذِيْنَ تَابُوْا مِنْۢ بَعْدِ ذٰلِكَ وَاَصْلَحُوْاۗ فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ ٨٩

illā alladhīna
إِلَّا ٱلَّذِينَ
தவிர/எவர்கள்
tābū
تَابُوا۟
திரும்பினார்கள்; மன்னிப்புக் கோரினார்கள்
min baʿdi dhālika
مِنۢ بَعْدِ ذَٰلِكَ
அதற்கு பின்னர்
wa-aṣlaḥū
وَأَصْلَحُوا۟
இன்னும் சீர்திருத்தினார்கள்
fa-inna l-laha
فَإِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
ghafūrun
غَفُورٌ
மகா மன்னிப்பாளன்
raḥīmun
رَّحِيمٌ
மகா கருணையாளன்
எனினும், இதற்குப் பின்னரும் எவரேனும் வருத்தப்பட்டு (பாவங்களில் இருந்து) விலகி நற்செயல்களைச் செய்தால் (அல்லாஹ் அவர்களை மன்னித்து விடுவான்.) ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவனும், நிகரற்ற அன்புடையவனுமாக இருக்கின்றான். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௮௯)
Tafseer
௯௦

اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا بَعْدَ اِيْمَانِهِمْ ثُمَّ ازْدَادُوْا كُفْرًا لَّنْ تُقْبَلَ تَوْبَتُهُمْ ۚ وَاُولٰۤىِٕكَ هُمُ الضَّاۤلُّوْنَ ٩٠

inna
إِنَّ
நிச்சயமாக
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
kafarū
كَفَرُوا۟
நிராகரித்தார்கள்
baʿda
بَعْدَ
பின்னர்
īmānihim
إِيمَٰنِهِمْ
தாங்கள் நம்பிக்கை கொண்டதற்கு
thumma
ثُمَّ
பிறகு
iz'dādū
ٱزْدَادُوا۟
அதிகப்படுத்தினார்கள்
kuf'ran
كُفْرًا
நிராகரிப்பை
lan tuq'bala
لَّن تُقْبَلَ
அறவே அங்கீகரிக்கப்படாது
tawbatuhum
تَوْبَتُهُمْ
அவர்களுடைய மன்னிப்புக் கோருதல்
wa-ulāika humu
وَأُو۟لَٰٓئِكَ هُمُ
இன்னும் அவர்கள்தான்
l-ḍālūna
ٱلضَّآلُّونَ
வழிகெட்டவர்கள்
ஆயினும், எவர்கள் நம்பிக்கை கொண்டதன் பின்னர் நிராகரித்துவிட்டு மென்மேலும் அந்நிராகரிப்பையே அதிகப்படுத்து கின்றார்களோ, அவர்களுடைய மன்னிப்புக் கோருதல் நிச்சயமாக அங்கீகரிக்கப்பட மாட்டாது. இவர்கள்தான் (முற்றிலும்) வழி கெட்டவர்கள். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௯௦)
Tafseer