Skip to content

ஸூரா ஸூரத்துல் அஃராஃப் - Page: 6

Al-A'raf

(al-ʾAʿrāf)

௫௧

الَّذِيْنَ اتَّخَذُوْا دِيْنَهُمْ لَهْوًا وَّلَعِبًا وَّغَرَّتْهُمُ الْحَيٰوةُ الدُّنْيَاۚ فَالْيَوْمَ نَنْسٰىهُمْ كَمَا نَسُوْا لِقَاۤءَ يَوْمِهِمْ هٰذَاۙ وَمَا كَانُوْا بِاٰيٰتِنَا يَجْحَدُوْنَ ٥١

alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
ittakhadhū
ٱتَّخَذُوا۟
எடுத்துக் கொண்டனர்
dīnahum
دِينَهُمْ
தங்கள் மார்க்கத்தை
lahwan
لَهْوًا
கேளிக்கையாக
walaʿiban
وَلَعِبًا
இன்னும் விளையாட்டாக
wagharrathumu
وَغَرَّتْهُمُ
இன்னும் மயக்கியது/அவர்களை
l-ḥayatu
ٱلْحَيَوٰةُ
வாழ்க்கை
l-dun'yā
ٱلدُّنْيَاۚ
உலகம்
fal-yawma
فَٱلْيَوْمَ
இன்று
nansāhum
نَنسَىٰهُمْ
மறப்போம்/அவர்களை
kamā nasū
كَمَا نَسُوا۟
அவர்கள் மறந்ததினால்
liqāa
لِقَآءَ
சந்திப்பை
yawmihim hādhā
يَوْمِهِمْ هَٰذَا
அவர்களுடைய இந்நாளின்
wamā kānū
وَمَا كَانُوا۟
இன்னும் அவர்கள் இருந்த காரணத்தால்
biāyātinā
بِـَٔايَٰتِنَا
நம் வசனங்களை
yajḥadūna
يَجْحَدُونَ
மறுப்பார்கள்
இவர்களை இவ்வுலக வாழ்க்கை மயக்கிவிட்டதனால் தங்களுடைய மார்க்கத்தை வேடிக்கையாகவும் விளையாட்டாகவும் எடுத்துக் கொண்டிருந்தனர். அவர்கள் நம் வசனங்களை நிராகரித்து இந்நாளில் (நம்மைச்) சந்திப்பதையும் மறந்தவாறே நாமும் இன்றைய தினம் அவர்களை மறந்துவிடுவோம். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௫௧)
Tafseer
௫௨

وَلَقَدْ جِئْنٰهُمْ بِكِتٰبٍ فَصَّلْنٰهُ عَلٰى عِلْمٍ هُدًى وَّرَحْمَةً لِّقَوْمٍ يُّؤْمِنُوْنَ ٥٢

walaqad ji'nāhum
وَلَقَدْ جِئْنَٰهُم
திட்டவட்டமாக/வந்தோம்/அவர்களிடம்
bikitābin
بِكِتَٰبٍ
ஒரு வேதத்தைக் கொண்டு
faṣṣalnāhu
فَصَّلْنَٰهُ
விவரித்தோம்/அதை
ʿalā ʿil'min
عَلَىٰ عِلْمٍ
அறிந்து
hudan
هُدًى
நேர்வழியாக
waraḥmatan
وَرَحْمَةً
இன்னும் கருணையாக
liqawmin
لِّقَوْمٍ
மக்களுக்கு
yu'minūna
يُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்கிறார்கள்
நிச்சயமாக நாம் அவர்களுக்கு ஒரு வேதத்தைக் கொடுத்திருந்தோம். அதில் ஒவ்வொன்றையும் ஞான முறையில் விவரித்திருக்கின்றோம். (அன்றி அது) நம்பிக்கை கொண்ட மக்களுக்கு நேரான வழியாகவும் அருளாகவும் இருக்கின்றது. ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௫௨)
Tafseer
௫௩

هَلْ يَنْظُرُوْنَ اِلَّا تَأْوِيْلَهٗۗ يَوْمَ يَأْتِيْ تَأْوِيْلُهٗ يَقُوْلُ الَّذِيْنَ نَسُوْهُ مِنْ قَبْلُ قَدْ جَاۤءَتْ رُسُلُ رَبِّنَا بِالْحَقِّۚ فَهَلْ لَّنَا مِنْ شُفَعَاۤءَ فَيَشْفَعُوْا لَنَآ اَوْ نُرَدُّ فَنَعْمَلَ غَيْرَ الَّذِيْ كُنَّا نَعْمَلُۗ قَدْ خَسِرُوْٓا اَنْفُسَهُمْ وَضَلَّ عَنْهُمْ مَّا كَانُوْا يَفْتَرُوْنَ ࣖ ٥٣

hal yanẓurūna
هَلْ يَنظُرُونَ
எதிர்பார்க்கின்றனரா?
illā
إِلَّا
தவிர
tawīlahu
تَأْوِيلَهُۥۚ
அதன் முடிவை
yawma
يَوْمَ
நாள்
yatī
يَأْتِى
வரும்
tawīluhu
تَأْوِيلُهُۥ
அதன் முடிவு
yaqūlu
يَقُولُ
கூறுவார்(கள்)
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
nasūhu
نَسُوهُ
மறந்தனர்/அதை
min qablu
مِن قَبْلُ
முன்னர்
qad jāat
قَدْ جَآءَتْ
வந்தா(ர்க)ள்
rusulu
رُسُلُ
தூதர்கள்
rabbinā
رَبِّنَا
எங்கள் இறைவனின்
bil-ḥaqi
بِٱلْحَقِّ
உண்மையைக் கொண்டு
fahal lanā
فَهَل لَّنَا
எங்களுக்கு உண்டா?
min shufaʿāa
مِن شُفَعَآءَ
சிபாரிசு செய்பவர்களில்
fayashfaʿū
فَيَشْفَعُوا۟
சிபாரிசு செய்வார்கள்
lanā
لَنَآ
எங்களுக்கு
aw
أَوْ
அல்லது
nuraddu
نُرَدُّ
நாங்கள் திருப்பி அனுப்பப்பட்டால்
fanaʿmala
فَنَعْمَلَ
செய்வோமே
ghayra alladhī
غَيْرَ ٱلَّذِى
அல்லாததை
kunnā naʿmalu
كُنَّا نَعْمَلُۚ
இருந்தோம்/செய்வோம்
qad khasirū
قَدْ خَسِرُوٓا۟
நஷ்டமிழைத்துக் கொண்டனர்
anfusahum
أَنفُسَهُمْ
தங்களுக்கே
waḍalla
وَضَلَّ
இன்னும் மறைந்துவிட்டன
ʿanhum
عَنْهُم
அவர்களை விட்டு
mā kānū
مَّا كَانُوا۟
எவை/இருந்தனர்
yaftarūna
يَفْتَرُونَ
இட்டுக்கட்டுவார்கள்
(மக்காவாசிகளாகிய) இவர்கள் (தங்களுக்கு எச்சரிக்கப்பட்டு வந்த) தண்டனை (நாள்) வருவதையன்றி (வேறெதனையும்) எதிர்பார்க்கின்றனரா? அந்தத் தண்டனை நாள் வந்தபொழுது இதற்கு முன் அதனை (முற்றிலும்) மறந்திருந்த இவர்கள் "நிச்சயமாக எங்கள் இறைவனின் தூதர்கள் (எங்களிடம்) சத்திய (வேத)த்தைக் கொண்டு வந்தனர். (இன்று) எங்களுக்குப் பரிந்து பேசுபவர்கள் எவரும் உண்டா? அவ்வாறாயின் அவர்கள் எங்களுக்குப் பரிந்து பேசவும் அல்லது எங்களை (உலகத்திற்கு)த் திரும்ப அனுப்பப் பட்டால் (முன்னர்) நாங்கள் செய்து கொண்டிருந்தவைகளைத் தவிர்த்து வேறு (நன்மைகளையே) செய்வோம்" என்று கூறுவார்கள். நிச்சயமாக இவர்கள் தங்களுக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டனர். அன்றி இவர்கள் (தங்கள் தெய்வங்களென) பொய்யாகக் கூறிக் கொண்டிருந்தவை அனைத்தும் இவர்களை விட்டு மறைந்து (மாயமாகி) விடும். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௫௩)
Tafseer
௫௪

اِنَّ رَبَّكُمُ اللّٰهُ الَّذِيْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ فِيْ سِتَّةِ اَيَّامٍ ثُمَّ اسْتَوٰى عَلَى الْعَرْشِۗ يُغْشِى الَّيْلَ النَّهَارَ يَطْلُبُهٗ حَثِيْثًاۙ وَّالشَّمْسَ وَالْقَمَرَ وَالنُّجُوْمَ مُسَخَّرٰتٍۢ بِاَمْرِهٖٓ ۙاَلَا لَهُ الْخَلْقُ وَالْاَمْرُۗ تَبٰرَكَ اللّٰهُ رَبُّ الْعٰلَمِيْنَ ٥٤

inna
إِنَّ
நிச்சயமாக
rabbakumu
رَبَّكُمُ
உங்கள் இறைவன்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
alladhī khalaqa
ٱلَّذِى خَلَقَ
எவன் படைத்தான்
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
வானங்களை
wal-arḍa
وَٱلْأَرْضَ
இன்னும் பூமியை
fī sittati ayyāmin
فِى سِتَّةِ أَيَّامٍ
ஆறு நாட்களில்
thumma
ثُمَّ
பிறகு
is'tawā
ٱسْتَوَىٰ
உயர்ந்து விட்டான்
ʿalā l-ʿarshi
عَلَى ٱلْعَرْشِ
அர்ஷின் மீது
yugh'shī
يُغْشِى
மூடுகிறான்
al-layla
ٱلَّيْلَ
இரவால்
l-nahāra
ٱلنَّهَارَ
பகலை
yaṭlubuhu
يَطْلُبُهُۥ
தேடுகிறது/அதை
ḥathīthan
حَثِيثًا
தீவிரமாக
wal-shamsa
وَٱلشَّمْسَ
இன்னும் சூரியனை
wal-qamara
وَٱلْقَمَرَ
இன்னும் சந்திரனை
wal-nujūma
وَٱلنُّجُومَ
இன்னும் நட்சத்திரங்களை
musakharātin
مُسَخَّرَٰتٍۭ
வசப்படுத்தப்பட்டவையாக
bi-amrihi
بِأَمْرِهِۦٓۗ
தனது கட்டளைக் கொண்டு
alā
أَلَا
அறிந்துகொள்ளுங்கள்!
lahu
لَهُ
அவனுக்கே
l-khalqu
ٱلْخَلْقُ
படைத்தல்
wal-amru
وَٱلْأَمْرُۗ
இன்னும் அதிகாரம்
tabāraka
تَبَارَكَ
அருள் வளமிக்கவன்
l-lahu rabbu
ٱللَّهُ رَبُّ
அல்லாஹ்/இறைவன்
l-ʿālamīna
ٱلْعَٰلَمِينَ
அகிலங்களின்
நிச்சயமாக உங்கள் இறைவனாகிய அல்லாஹ்தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்து அர்ஷின் மீது (தன் மகிமைக்குத் தக்கவாறு) உயர்ந்துவிட்டான். அவனே இரவால் பகலை மூடுகிறான்; (பகலால் இரவை மூடுகிறான்.) அது வெகு தீவிரமாகவே அதனைப் பின் தொடர்கிறது. (அவனே) சூரியனையும், சந்திரனையும், நட்சத்திரங்களையும் (படைத்தான். இவை அனைத்தும்) அவனது கட்டளைக்கு உட்பட்டவைகளே. படைப்பினங்களும் (படைத்தலும்) அதன் ஆட்சியும் அவனுக்கு உரியதல்லவா? அனைத்து உலகங்களையும் படைத்து, வளர்த்து, பரிபக்குவப்படுத்தும் அல்லாஹ் மிக்க பாக்கியமுடையவன். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௫௪)
Tafseer
௫௫

اُدْعُوْا رَبَّكُمْ تَضَرُّعًا وَّخُفْيَةً ۗاِنَّهٗ لَا يُحِبُّ الْمُعْتَدِيْنَۚ ٥٥

id'ʿū
ٱدْعُوا۟
அழையுங்கள்
rabbakum
رَبَّكُمْ
உங்கள் இறைவனை
taḍarruʿan
تَضَرُّعًا
தாழ்மையாக
wakhuf'yatan
وَخُفْيَةًۚ
இன்னும் மறைவாக
innahu
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
lā yuḥibbu
لَا يُحِبُّ
நேசிக்க மாட்டான்
l-muʿ'tadīna
ٱلْمُعْتَدِينَ
வரம்பு மீறுபவர்களை
ஆகவே, (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் மிக்க தாழ்மையாகவும் அந்தரங்கமாகவும் (அத்தகைய) உங்கள் இறைவனிடமே (உங்களுக்கு வேண்டியவைகளைக் கோரி) பிரார்த்தியுங்கள். நிச்சயமாக அவன் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை. ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௫௫)
Tafseer
௫௬

وَلَا تُفْسِدُوْا فِى الْاَرْضِ بَعْدَ اِصْلَاحِهَا وَادْعُوْهُ خَوْفًا وَّطَمَعًاۗ اِنَّ رَحْمَتَ اللّٰهِ قَرِيْبٌ مِّنَ الْمُحْسِنِيْنَ ٥٦

walā tuf'sidū
وَلَا تُفْسِدُوا۟
கலகம் செய்யாதீர்கள்
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
பூமியில்
baʿda
بَعْدَ
பின்னர்
iṣ'lāḥihā
إِصْلَٰحِهَا
அது சீர்திருத்தப்பட்ட
wa-id'ʿūhu
وَٱدْعُوهُ
அழையுங்கள்/அவனை
khawfan
خَوْفًا
பயத்துடன்
waṭamaʿan
وَطَمَعًاۚ
இன்னும் ஆசையுடன்
inna raḥmata
إِنَّ رَحْمَتَ
நிச்சயமாக கருணை
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
qarībun
قَرِيبٌ
சமீபமானது
mina l-muḥ'sinīna
مِّنَ ٱلْمُحْسِنِينَ
நல்லறம் புரிவோருக்கு
(மனிதர்களே! சமாதானமும் அமைதியும் ஏற்பட்டு) நாடு சீர்திருந்திய பின்னர் அதில் விஷமம் செய்து கொண்டலையாதீர்கள். (இறைவனுடைய தண்டனைக்கு) பயந்தும், (அவனுடைய சன்மானத்தை) விரும்பியும் அவனிடம் பிரார்த்தனை செய்து கொண்டிருங்கள். நிச்சயமாக அல்லாஹ்வுடைய அருள், நன்மை செய்யும் அழகிய குணமுடையவர்களுக்கு மிக சமீபத்திலிருக்கிறது. ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௫௬)
Tafseer
௫௭

وَهُوَ الَّذِيْ يُرْسِلُ الرِّيٰحَ بُشْرًاۢ بَيْنَ يَدَيْ رَحْمَتِهٖۗ حَتّٰٓى اِذَآ اَقَلَّتْ سَحَابًا ثِقَالًا سُقْنٰهُ لِبَلَدٍ مَّيِّتٍ فَاَنْزَلْنَا بِهِ الْمَاۤءَ فَاَخْرَجْنَا بِهٖ مِنْ كُلِّ الثَّمَرٰتِۗ كَذٰلِكَ نُخْرِجُ الْمَوْتٰى لَعَلَّكُمْ تَذَكَّرُوْنَ ٥٧

wahuwa
وَهُوَ
அவன்
alladhī
ٱلَّذِى
எவன்
yur'silu
يُرْسِلُ
அனுப்புகிறான்
l-riyāḥa
ٱلرِّيَٰحَ
காற்றுகளை
bush'ran
بُشْرًۢا
நற்செய்தியாக
bayna yaday
بَيْنَ يَدَىْ
முன்னர்
raḥmatihi
رَحْمَتِهِۦۖ
தனது கருணைக்கு
ḥattā
حَتَّىٰٓ
இறுதியாக
idhā aqallat
إِذَآ أَقَلَّتْ
அது சுமந்தால்
saḥāban
سَحَابًا
மேகத்தை
thiqālan
ثِقَالًا
கன(மான)
suq'nāhu
سُقْنَٰهُ
ஓட்டுகிறோம்/அதை
libaladin
لِبَلَدٍ
பூமியின் பக்கம்
mayyitin
مَّيِّتٍ
இறந்தது
fa-anzalnā
فَأَنزَلْنَا
இன்னும் இறக்குகிறோம்
bihi
بِهِ
அதிலிருந்து
l-māa
ٱلْمَآءَ
மழையை
fa-akhrajnā
فَأَخْرَجْنَا
இன்னும் வெளியாக்குகிறோம்
bihi
بِهِۦ
அதன் மூலம்
min
مِن
இருந்து
kulli
كُلِّ
எல்லாம்
l-thamarāti
ٱلثَّمَرَٰتِۚ
கனிகள்
kadhālika
كَذَٰلِكَ
இவ்வாறே
nukh'riju
نُخْرِجُ
வெளியாக்குவோம்
l-mawtā
ٱلْمَوْتَىٰ
மரணித்தவர்களை
laʿallakum tadhakkarūna
لَعَلَّكُمْ تَذَكَّرُونَ
நீங்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக
அவன்தான் அவனுடைய அருள்மழைக்கு (முன்னர்) நற்செய்தியாக குளிர்ந்த காற்றை அனுப்பி வைக்கின்றான். அது (கருக்கொண்டு) கனத்த மேகங்களைச் சுமந்த பின்னர் அதனை நாம் (வரண்டு) இறந்த பூமியின் பக்கம் ஓட்டிச் சென்று அதிலிருந்து மழை பெய்யச் செய்கின்றோம். பின்னர் அதைக் கொண்டு எல்லா வகைக் கனிகளையும் வெளியாக்குகின்றோம். இவ்வாறே மரணித்தவர்களையும் (அவர்களின் சமாதிகளிலிருந்து) வெளியாக்குவோம். (இதனை அறிந்து) நீங்கள் நல்லுணர்ச்சி பெறுவீர்களாக! ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௫௭)
Tafseer
௫௮

وَالْبَلَدُ الطَّيِّبُ يَخْرُجُ نَبَاتُهٗ بِاِذْنِ رَبِّهٖۚ وَالَّذِيْ خَبُثَ لَا يَخْرُجُ اِلَّا نَكِدًاۗ كَذٰلِكَ نُصَرِّفُ الْاٰيٰتِ لِقَوْمٍ يَّشْكُرُوْنَ ࣖ ٥٨

wal-baladu
وَٱلْبَلَدُ
பூமி
l-ṭayibu
ٱلطَّيِّبُ
நல்லது
yakhruju
يَخْرُجُ
வெளியாகிறது
nabātuhu
نَبَاتُهُۥ
அதன் தாவரம்
bi-idh'ni
بِإِذْنِ
அனுமதி கொண்டு
rabbihi
رَبِّهِۦۖ
தன் இறைவனின்
wa-alladhī
وَٱلَّذِى
எது
khabutha
خَبُثَ
கெட்டுவிட்டது
lā yakhruju
لَا يَخْرُجُ
வெளியாகாது
illā
إِلَّا
தவிர
nakidan
نَكِدًاۚ
வெகு சொற்பமாக
kadhālika
كَذَٰلِكَ
இவ்வாறு
nuṣarrifu
نُصَرِّفُ
விவரிக்கிறோம்
l-āyāti
ٱلْءَايَٰتِ
வசனங்களை
liqawmin
لِقَوْمٍ
மக்களுக்கு
yashkurūna
يَشْكُرُونَ
நன்றி செலுத்துகிறார்கள்
(ஒரேவிதமான மழை பெய்தபோதிலும்) வளமான பூமி, தன் இறைவனின் கட்டளையைக் கொண்டே எல்லா புற்பூண்டுகளையும் வெளியாக்குகிறது. எனினும், கெட்ட (வளமற்ற) பூமியிலோ வெகு சொற்பமாகவே தவிர முளைப்பதில்லை. நன்றி செலுத்தும் மக்களுக்கு இவ்வாறு பல வகைகளிலும் (நம்முடைய) வசனங்களை விவரிக்கின்றோம். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௫௮)
Tafseer
௫௯

لَقَدْ اَرْسَلْنَا نُوْحًا اِلٰى قَوْمِهٖ فَقَالَ يٰقَوْمِ اعْبُدُوا اللّٰهَ مَا لَكُمْ مِّنْ اِلٰهٍ غَيْرُهٗۗ اِنِّيْٓ اَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ عَظِيْمٍ ٥٩

laqad
لَقَدْ
திட்டவட்டமாக
arsalnā
أَرْسَلْنَا
அனுப்பினோம்
nūḥan
نُوحًا
நூஹை
ilā qawmihi
إِلَىٰ قَوْمِهِۦ
அவருடைய சமுதாயத்திற்கு
faqāla
فَقَالَ
கூறினார்
yāqawmi
يَٰقَوْمِ
என் சமுதாயமே
uʿ'budū
ٱعْبُدُوا۟
வணங்குங்கள்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வை
مَا
இல்லை
lakum
لَكُم
உங்களுக்கு
min ilāhin
مِّنْ إِلَٰهٍ
வணங்கப்படும் ஒரு கடவுளும்
ghayruhu
غَيْرُهُۥٓ
அவனையன்றி
innī
إِنِّىٓ
நிச்சயமாக நான்
akhāfu
أَخَافُ
பயப்படுகிறேன்
ʿalaykum
عَلَيْكُمْ
உங்கள் மீது
ʿadhāba
عَذَابَ
வேதனையை
yawmin ʿaẓīmin
يَوْمٍ عَظِيمٍ
மகத்தான நாளின்
நிச்சயமாக நாம் நூஹை அவருடைய மக்களுக்கு (நம்முடைய) தூதராக அனுப்பி வைத்தோம். அவர் (அவர்களை நோக்கி) "என்னுடைய மக்களே! நீங்கள் அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். அவனைத் தவிர வேறு இறைவன் உங்களுக்கில்லை. (இதற்கு நீங்கள் மாறு செய்தால்) உங்களுக்கு (வரக்கூடிய) மகத்தானதொரு நாளின் வேதனையை நான் பயப்படுகிறேன்" என்று கூறினார். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௫௯)
Tafseer
௬௦

قَالَ الْمَلَاُ مِنْ قَوْمِهٖٓ اِنَّا لَنَرٰىكَ فِيْ ضَلٰلٍ مُّبِيْنٍ ٦٠

qāla
قَالَ
கூறினர்
l-mala-u
ٱلْمَلَأُ
தலைவர்கள் (முக்கியஸ்தர்கள்)
min qawmihi
مِن قَوْمِهِۦٓ
இருந்து/சமுதாயம்/அவருடைய
innā
إِنَّا
நிச்சயமாக நாம்
lanarāka
لَنَرَىٰكَ
உம்மை காண்கிறோம்
fī ḍalālin
فِى ضَلَٰلٍ
வழிகேட்டில்
mubīnin
مُّبِينٍ
தெளிவானது
அதற்கு அவருடைய மக்களின் தலைவர்கள் (அவரை நோக்கி) "நீங்கள் பகிரங்கமான வழிகேட்டில் இருப்பதை மெய்யாகவே நாங்கள் காண்கின்றோம்" என்று கூறினார்கள். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௬௦)
Tafseer