Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௫௩

Qur'an Surah Al-A'raf Verse 53

ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௫௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

هَلْ يَنْظُرُوْنَ اِلَّا تَأْوِيْلَهٗۗ يَوْمَ يَأْتِيْ تَأْوِيْلُهٗ يَقُوْلُ الَّذِيْنَ نَسُوْهُ مِنْ قَبْلُ قَدْ جَاۤءَتْ رُسُلُ رَبِّنَا بِالْحَقِّۚ فَهَلْ لَّنَا مِنْ شُفَعَاۤءَ فَيَشْفَعُوْا لَنَآ اَوْ نُرَدُّ فَنَعْمَلَ غَيْرَ الَّذِيْ كُنَّا نَعْمَلُۗ قَدْ خَسِرُوْٓا اَنْفُسَهُمْ وَضَلَّ عَنْهُمْ مَّا كَانُوْا يَفْتَرُوْنَ ࣖ (الأعراف : ٧)

hal yanẓurūna
هَلْ يَنظُرُونَ
Do they wait
எதிர்பார்க்கின்றனரா?
illā
إِلَّا
except
தவிர
tawīlahu
تَأْوِيلَهُۥۚ
(for) its fulfillment
அதன் முடிவை
yawma
يَوْمَ
(The) Day
நாள்
yatī
يَأْتِى
(will) come
வரும்
tawīluhu
تَأْوِيلُهُۥ
its fulfillment
அதன் முடிவு
yaqūlu
يَقُولُ
will say
கூறுவார்(கள்)
alladhīna
ٱلَّذِينَ
those who
எவர்கள்
nasūhu
نَسُوهُ
had forgotten it
மறந்தனர்/அதை
min qablu
مِن قَبْلُ
from before
முன்னர்
qad jāat
قَدْ جَآءَتْ
"Verily had come
வந்தா(ர்க)ள்
rusulu
رُسُلُ
(the) Messengers
தூதர்கள்
rabbinā
رَبِّنَا
(of) our Lord
எங்கள் இறைவனின்
bil-ḥaqi
بِٱلْحَقِّ
with the truth
உண்மையைக் கொண்டு
fahal lanā
فَهَل لَّنَا
so are (there) for us
எங்களுக்கு உண்டா?
min shufaʿāa
مِن شُفَعَآءَ
any intercessors
சிபாரிசு செய்பவர்களில்
fayashfaʿū
فَيَشْفَعُوا۟
so (that) they intercede
சிபாரிசு செய்வார்கள்
lanā
لَنَآ
for us
எங்களுக்கு
aw
أَوْ
or
அல்லது
nuraddu
نُرَدُّ
we are sent back
நாங்கள் திருப்பி அனுப்பப்பட்டால்
fanaʿmala
فَنَعْمَلَ
so (that) we do (deeds)
செய்வோமே
ghayra alladhī
غَيْرَ ٱلَّذِى
other than that which
அல்லாததை
kunnā naʿmalu
كُنَّا نَعْمَلُۚ
we used to do"
இருந்தோம்/செய்வோம்
qad khasirū
قَدْ خَسِرُوٓا۟
Verily they lost
நஷ்டமிழைத்துக் கொண்டனர்
anfusahum
أَنفُسَهُمْ
themselves
தங்களுக்கே
waḍalla
وَضَلَّ
and strayed
இன்னும் மறைந்துவிட்டன
ʿanhum
عَنْهُم
from them
அவர்களை விட்டு
mā kānū
مَّا كَانُوا۟
what they used to
எவை/இருந்தனர்
yaftarūna
يَفْتَرُونَ
invent
இட்டுக்கட்டுவார்கள்

Transliteration:

hal yanzuroona illaa taa weelah; yawma yaatee taaweeluhoo yaqoolul lazeena nasoohu min qablu qad jaaa'at Rusulu Rabbinaa bilhaqq; fahal lanaa min shufa'aaa'a fa yashfa'oo lanaaa aw nuraddu fana'mala ghairal lazee kunnaa na'mal; qad khasirooo anfusahum wa dalla 'anhum maa kaanoo yaftaroon (QS. al-ʾAʿrāf:53)

English Sahih International:

Do they await except its result? The Day its result comes, those who had ignored it before will say, "The messengers of our Lord had come with the truth, so are there [now] any intercessors to intercede for us or could we be sent back to do other than what we used to do?" They will have lost themselves, and lost from them is what they used to invent. (QS. Al-A'raf, Ayah ௫௩)

Abdul Hameed Baqavi:

(மக்காவாசிகளாகிய) இவர்கள் (தங்களுக்கு எச்சரிக்கப்பட்டு வந்த) தண்டனை (நாள்) வருவதையன்றி (வேறெதனையும்) எதிர்பார்க்கின்றனரா? அந்தத் தண்டனை நாள் வந்தபொழுது இதற்கு முன் அதனை (முற்றிலும்) மறந்திருந்த இவர்கள் "நிச்சயமாக எங்கள் இறைவனின் தூதர்கள் (எங்களிடம்) சத்திய (வேத)த்தைக் கொண்டு வந்தனர். (இன்று) எங்களுக்குப் பரிந்து பேசுபவர்கள் எவரும் உண்டா? அவ்வாறாயின் அவர்கள் எங்களுக்குப் பரிந்து பேசவும் அல்லது எங்களை (உலகத்திற்கு)த் திரும்ப அனுப்பப் பட்டால் (முன்னர்) நாங்கள் செய்து கொண்டிருந்தவைகளைத் தவிர்த்து வேறு (நன்மைகளையே) செய்வோம்" என்று கூறுவார்கள். நிச்சயமாக இவர்கள் தங்களுக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டனர். அன்றி இவர்கள் (தங்கள் தெய்வங்களென) பொய்யாகக் கூறிக் கொண்டிருந்தவை அனைத்தும் இவர்களை விட்டு மறைந்து (மாயமாகி) விடும். (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௫௩)

Jan Trust Foundation

இவர்கள் (தங்களுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டு வந்த) இறுதியையன்றி வேறு எதையும் எதிர்பார்க்கிறார்களா? அந்தத் தண்டனை நாள் வந்தபொழுது, இதற்குமுன் அதனை முற்றிலும் மறந்திருந்த இவர்கள், “நிச்சயமாக எங்கள் இறைவனின் தூதர்கள் சத்திய(வேத)த்தையே கொண்டு வந்தனர், எங்களுக்குப் பரிந்து பேசக்கூடியவர்கள் எவரும் இருக்கின்றனரா? அவ்வாறாயின் அவர்கள் எங்களுக்காகப் பரிந்து பேசட்டும்; அல்லது நாங்கள் (உலகத்திற்குத்) திருப்பி அனுப்பப்படுவோமா? அப்படியாயின், நாங்கள் முன்செய்து கொண்டிருந்த (தீய)வற்றை விட்டு வேறு (நன்மைகளையே) செய்வோம்” என்று கூறுவார்கள் - நிச்சயமாக அவர்கள் தமக்குத் தாமே இழப்புக்கு ஆளாக்கிக் கொண்டார்கள், அவர்கள் கற்பனை செய்து வந்தவை அவர்களை விட்டு மறைந்து விடும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(மக்காவாசிகள்) அதன் முடிவைத் தவிர (வேறு எதையாவது) எதிர்பார்க்கின்றனரா? அதன் முடிவு நாள் வரும் போது முன்னர் அதை மறந்(திருந்)தவர்கள் “எங்கள் இறைவனின் தூதர்கள் உண்மையைக் கொண்டு வந்தார்கள். ஆகவே சிபாரிசு செய்பவர்களில் எவரும் எங்களுக்கு உண்டா? அவர்கள் எங்களுக்கு சிபாரிசு செய்வார்களே. அல்லது நாங்கள் திருப்பி அனுப்பப்பட்டால் (முன்னர்) நாங்கள் செய்து கொண்டிருந்த (கெட்ட)வை அல்லாத (நல்ல காரியத்)தை செய்வோமே!” என்று கூறுவார்கள். (அவர்கள்) தங்களுக்கே நஷ்டமிழைத்துக் கொண்டனர். அவர்கள் இட்டுக்கட்டிக் கொண்டிருந்த (சிலைகள் போன்ற)வை அவர்களை விட்டு மறைந்துவிட்டன.