Skip to content

ஸூரா ஸூரத்துல் அஃராஃப் - Page: 11

Al-A'raf

(al-ʾAʿrāf)

௧௦௧

تِلْكَ الْقُرٰى نَقُصُّ عَلَيْكَ مِنْ اَنْۢبَاۤىِٕهَاۚ وَلَقَدْ جَاۤءَتْهُمْ رُسُلُهُمْ بِالْبَيِّنٰتِۚ فَمَا كَانُوْا لِيُؤْمِنُوْا بِمَا كَذَّبُوْا مِنْ قَبْلُۗ كَذٰلِكَ يَطْبَعُ اللّٰهُ عَلٰى قُلُوْبِ الْكٰفِرِيْنَ ١٠١

til'ka l-qurā
تِلْكَ ٱلْقُرَىٰ
அந்த ஊர்கள்
naquṣṣu
نَقُصُّ
விவரிக்கிறோம்
ʿalayka
عَلَيْكَ
உமக்கு
min
مِنْ
இருந்து
anbāihā
أَنۢبَآئِهَاۚ
அவற்றின் செய்திகள்
walaqad
وَلَقَدْ
திட்டவட்டமாக
jāathum
جَآءَتْهُمْ
வந்தனர்/அவர்களிடம்
rusuluhum
رُسُلُهُم
அவர்களுடைய தூதர்கள்
bil-bayināti
بِٱلْبَيِّنَٰتِ
அத்தாட்சிகளைக் கொண்டு
famā kānū
فَمَا كَانُوا۟
அவர்கள் இல்லை
liyu'minū
لِيُؤْمِنُوا۟
அவர்கள் நம்பிக்கை கொள்பவர்களாக
bimā
بِمَا
எதை
kadhabū
كَذَّبُوا۟
பொய்ப்பித்தனர்
min qablu
مِن قَبْلُۚ
முன்னர்
kadhālika
كَذَٰلِكَ
இவ்வாறே
yaṭbaʿu
يَطْبَعُ
முத்திரையிடுகிறான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
ʿalā qulūbi
عَلَىٰ قُلُوبِ
உள்ளங்கள் மீது
l-kāfirīna
ٱلْكَٰفِرِينَ
நிராகரிப்பாளர்களின்
(நபியே!) இவ்வூர்களின் சரித்திரத்தை நாம் உங்களுக்குக் கூறுகின்றோம். (அவற்றில் வசித்திருந்த) அவர்களுக்கு (இறைவனால்) அனுப்பப்பட்ட தூதர்கள் நிச்சயமாகத் தெளிவான வசனங்களையே கொண்டு வந்தனர். எனினும், அவர்களோ முன்னர் ஏதாவது ஒன்றை பொய்யாக்கி விட்டால் (பின்னர் அதனை) ஒருக்காலத்திலும் நம்பிக்கை கொள்ளாதவர்களாகவே இருந்தனர். இவ்வாறே, நிராகரிப்பவர்களின் உள்ளங்களில் அல்லாஹ் முத்திரையிட்டு விடுகின்றான். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௧௦௧)
Tafseer
௧௦௨

وَمَا وَجَدْنَا لِاَكْثَرِهِمْ مِّنْ عَهْدٍۚ وَاِنْ وَّجَدْنَآ اَكْثَرَهُمْ لَفٰسِقِيْنَ ١٠٢

wamā wajadnā
وَمَا وَجَدْنَا
நாம் காணவில்லை
li-aktharihim
لِأَكْثَرِهِم
அவர்களில் அதிகமானவர்களுக்கு
min ʿahdin
مِّنْ عَهْدٍۖ
எந்த வாக்குறுதியையும்
wa-in wajadnā
وَإِن وَجَدْنَآ
நிச்சயமாக கண்டோம்
aktharahum
أَكْثَرَهُمْ
அவர்களில் அதிகமானவர்களை
lafāsiqīna
لَفَٰسِقِينَ
பாவிகளாகவே
அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு வாக்குறுதி(யை நிறைவேற்றும் தன்மை) இருப்பதாகவும் நாம் காணவில்லை. அன்றி, நாம் அவர்களில் பெரும்பாலானவர்களை பாவிகளாகவே கண்டோம். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௧௦௨)
Tafseer
௧௦௩

ثُمَّ بَعَثْنَا مِنْۢ بَعْدِهِمْ مُّوْسٰى بِاٰيٰتِنَآ اِلٰى فِرْعَوْنَ وَمَلَا۟ىِٕهٖ فَظَلَمُوْا بِهَاۚ فَانْظُرْ كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُفْسِدِيْنَ ١٠٣

thumma
ثُمَّ
பிறகு
baʿathnā
بَعَثْنَا
அனுப்பினோம்
min
مِنۢ
பின்னர்
baʿdihim
بَعْدِهِم
பின்னர் அவர்களுக்கு
mūsā
مُّوسَىٰ
மூஸாவை
biāyātinā
بِـَٔايَٰتِنَآ
நம் அத்தாட்சிகளைக் கொண்டு
ilā fir'ʿawna
إِلَىٰ فِرْعَوْنَ
ஃபிர்அவ்னிடம்
wamala-ihi
وَمَلَإِي۟هِۦ
இன்னும் அவனுடைய தலைவர்களிடம்
faẓalamū
فَظَلَمُوا۟
அநீதியிழைத்தனர்
bihā
بِهَاۖ
அவற்றுக்கு
fa-unẓur
فَٱنظُرْ
கவனிப்பீராக
kayfa kāna
كَيْفَ كَانَ
எவ்வாறு இருந்தது
ʿāqibatu
عَٰقِبَةُ
முடிவு
l-muf'sidīna
ٱلْمُفْسِدِينَ
விஷமிகளின்
இதற்குப் பின்னரும் மூஸாவை நம்முடைய அத்தாட்சி களுடன் ஃபிர்அவ்னிடமும் அவனுடைய தலைவர்களிடமும் அனுப்பி வைத்தோம். எனினும், அவர்களோ அந்த அத்தாட்சிகளை அவமதித்து (நிராகரித்து) விட்டனர். (இத்தகைய) விஷமிகளின் முடிவு எவ்வாறாயிற்று என்பதை (நபியே!) நீங்கள் கவனியுங்கள். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௧௦௩)
Tafseer
௧௦௪

وَقَالَ مُوْسٰى يٰفِرْعَوْنُ اِنِّيْ رَسُوْلٌ مِّنْ رَّبِّ الْعٰلَمِيْنَۙ ١٠٤

waqāla
وَقَالَ
கூறினார்
mūsā
مُوسَىٰ
மூஸா
yāfir'ʿawnu
يَٰفِرْعَوْنُ
ஃபிர்அவ்னே
innī
إِنِّى
நிச்சயமாக நான்
rasūlun
رَسُولٌ
ஒரு தூதர்
min rabbi
مِّن رَّبِّ
இறைவனிடமிருந்து அனுப்பப்பட்ட
l-ʿālamīna
ٱلْعَٰلَمِينَ
அகிலங்களின்
மூஸா (ஃபிர்அவ்னை நோக்கி) "ஃபிர்அவ்னே! நிச்சயமாக நான் அகிலத்தார் அனைவரின் இறைவனால் (உன்னிடம்) அனுப்பப்பட்ட ஒரு தூதர்" என்று கூறினார். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௧௦௪)
Tafseer
௧௦௫

حَقِيْقٌ عَلٰٓى اَنْ لَّآ اَقُوْلَ عَلَى اللّٰهِ اِلَّا الْحَقَّۗ قَدْ جِئْتُكُمْ بِبَيِّنَةٍ مِّنْ رَّبِّكُمْ فَاَرْسِلْ مَعِيَ بَنِيْٓ اِسْرَاۤءِيْلَ ۗ ١٠٥

ḥaqīqun
حَقِيقٌ
பேராசை உள்ளவன், கடமைப் பட்டவன், தகுதி உள்ளவன்
ʿalā an lā aqūla
عَلَىٰٓ أَن لَّآ أَقُولَ
நான் கூறாமலிருப்பதற்கு
ʿalā l-lahi
عَلَى ٱللَّهِ
அல்லாஹ்வின் மீது
illā l-ḥaqa
إِلَّا ٱلْحَقَّۚ
உண்மையைத் தவிர
qad ji'tukum
قَدْ جِئْتُكُم
வந்துவிட்டேன்/உங்களிடம்
bibayyinatin
بِبَيِّنَةٍ
ஓர் அத்தாட்சியைக் கொண்டு
min rabbikum
مِّن رَّبِّكُمْ
உங்கள் இறைவனிடமிருந்து
fa-arsil
فَأَرْسِلْ
ஆகவே அனுப்பிவை
maʿiya
مَعِىَ
என்னுடன்
banī is'rāīla
بَنِىٓ إِسْرَٰٓءِيلَ
இஸ்ரவேலர்களை
(அன்றி,) "நான் அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர (வேறு எதனையும்) கூறாமலிருப்பது (என்மீது) கடமையாகும். உங்கள் இறைவனிடமிருந்து தெளிவான அத்தாட்சியை நிச்சயமாக நான் உங்களிடம் கொண்டு வந்திருக்கின்றேன். ஆதலால் (நீ அடிமைப்படுத்தி வைத்திருக்கும்) இஸ்ராயீலின் சந்ததிகளை என்னுடன் அனுப்பிவை" (என்றும் கூறினார்.) ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௧௦௫)
Tafseer
௧௦௬

قَالَ اِنْ كُنْتَ جِئْتَ بِاٰيَةٍ فَأْتِ بِهَآ اِنْ كُنْتَ مِنَ الصّٰدِقِيْنَ ١٠٦

qāla
قَالَ
கூறினான்
in kunta ji'ta
إِن كُنتَ جِئْتَ
நீர் இருந்தால்/வந்தீர்
biāyatin
بِـَٔايَةٍ
ஓர் அத்தாட்சியைக் கொண்டு
fati
فَأْتِ
வாரீர்
bihā
بِهَآ
அதைக் கொண்டு
in kunta
إِن كُنتَ
நீர் இருந்தால்
mina l-ṣādiqīna
مِنَ ٱلصَّٰدِقِينَ
உண்மையாளர்களில்
அதற்கவன் "நீங்கள் அத்தாட்சி கொண்டு வந்திருப்பதாக கூறும் உங்கள் கூற்றில் நீங்கள் உண்மை சொல்பவராக இருந்தால் அதனைக் கொண்டு வாருங்கள்" என்று கூறினான். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௧௦௬)
Tafseer
௧௦௭

فَاَلْقٰى عَصَاهُ فَاِذَا هِيَ ثُعْبَانٌ مُّبِيْنٌ ۖ ١٠٧

fa-alqā
فَأَلْقَىٰ
ஆகவே, எறிந்தார்
ʿaṣāhu
عَصَاهُ
தன் தடியை
fa-idhā
فَإِذَا
அப்போது
hiya
هِىَ
அது
thuʿ'bānun
ثُعْبَانٌ
பெரிய பாம்பாக
mubīnun
مُّبِينٌ
தெளிவானது
ஆகவே (மூஸா) தன் (கைத்)தடியை எறிந்தார். உடனே அது பெரியதொரு மலைப்பாம்பாகி விட்டது. ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௧௦௭)
Tafseer
௧௦௮

وَّنَزَعَ يَدَهٗ فَاِذَا هِيَ بَيْضَاۤءُ لِلنّٰظِرِيْنَ ࣖ ١٠٨

wanazaʿa
وَنَزَعَ
இன்னும் வெளியில் எடுத்தார்
yadahu
يَدَهُۥ
தன் கையை
fa-idhā
فَإِذَا
அப்போது
hiya
هِىَ
அது
bayḍāu
بَيْضَآءُ
மிக வெண்மையானதாக
lilnnāẓirīna
لِلنَّٰظِرِينَ
பார்ப்பவர்களுக்கு
அன்றி, அவர் தன்னுடைய கையை (சட்டைப் பையிலிட்டு) வெளியில் எடுத்தார். அது பார்ப்பவர்களுக்கு மிக வெண்மை யானதாக(வும், மிக பிரகாசமானதாகவும்) இருந்தது. ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௧௦௮)
Tafseer
௧௦௯

قَالَ الْمَلَاُ مِنْ قَوْمِ فِرْعَوْنَ اِنَّ هٰذَا لَسٰحِرٌ عَلِيْمٌۙ ١٠٩

qāla
قَالَ
கூறினார்(கள்)
l-mala-u
ٱلْمَلَأُ
தலைவர்கள்
min qawmi
مِن قَوْمِ
சமுதாயத்தின்
fir'ʿawna
فِرْعَوْنَ
ஃபிர்அவ்னுடைய
inna hādhā
إِنَّ هَٰذَا
நிச்சயமாக இவர்
lasāḥirun
لَسَٰحِرٌ
சூனியக்காரர்
ʿalīmun
عَلِيمٌ
கற்றறிந்தவர்
(இதனைக் கண்ட) ஃபிர்அவ்னுடைய மக்களின் தலைவர்கள் (ஃபிர்அவ்னை நோக்கி) "நிச்சயமாக இவர் சூனியத்தில் மிக்க வல்லவராக இருக்கின்றார்" என்று கூறினார்கள். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௧௦௯)
Tafseer
௧௧௦

يُّرِيْدُ اَنْ يُّخْرِجَكُمْ مِّنْ اَرْضِكُمْ ۚ فَمَاذَا تَأْمُرُوْنَ ١١٠

yurīdu
يُرِيدُ
நாடுகிறார்
an yukh'rijakum
أَن يُخْرِجَكُم
உங்களை வெளியேற்ற
min
مِّنْ
இருந்து
arḍikum
أَرْضِكُمْۖ
உங்கள் பூமியிலிருந்து
famādhā
فَمَاذَا
ஆகவே என்ன?
tamurūna
تَأْمُرُونَ
கட்டளையிடுகிறீர்கள்
(அதற்கு ஃபிர்அவ்ன்) "இவர் உங்களை உங்களுடைய பூமியிலிருந்து வெளியேற்றிவிடவே எண்ணுகிறார். ஆகவே, இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?" (என்று கேட்டான்.) ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௧௧௦)
Tafseer