قَالَ رَبِّ اجْعَلْ لِّيْٓ اٰيَةً ۗ قَالَ اٰيَتُكَ اَلَّا تُكَلِّمَ النَّاسَ ثَلٰثَةَ اَيَّامٍ اِلَّا رَمْزًا ۗ وَاذْكُرْ رَّبَّكَ كَثِيْرًا وَّسَبِّحْ بِالْعَشِيِّ وَالْاِبْكَارِ ࣖ ٤١
- qāla
- قَالَ
- கூறினார்
- rabbi
- رَبِّ
- என் இறைவா
- ij'ʿal lī
- ٱجْعَل لِّىٓ
- ஆக்கு/எனக்கு
- āyatan
- ءَايَةًۖ
- ஓர் அத்தாட்சியை
- qāla
- قَالَ
- கூறினான்
- āyatuka
- ءَايَتُكَ
- உம் அத்தாட்சி
- allā tukallima
- أَلَّا تُكَلِّمَ
- நீர் பேசமால் இருப்பது
- l-nāsa
- ٱلنَّاسَ
- மக்களிடம்
- thalāthata ayyāmin
- ثَلَٰثَةَ أَيَّامٍ
- மூன்று நாட்கள்
- illā ramzan
- إِلَّا رَمْزًاۗ
- தவிர/சாடையாக
- wa-udh'kur
- وَٱذْكُر
- இன்னும் நினைவு கூறுவீராக
- rabbaka
- رَّبَّكَ
- உம் இறைவனை
- kathīran
- كَثِيرًا
- அதிகம்
- wasabbiḥ
- وَسَبِّحْ
- இன்னும் துதித்து தூய்மைப்படுத்துவீராக
- bil-ʿashiyi
- بِٱلْعَشِىِّ
- மாலையில்
- wal-ib'kāri
- وَٱلْإِبْكَٰرِ
- இன்னும் காலையில்
(அதற்கு) ஜகரிய்யா "என் இறைவனே! இதற்கு எனக்கொரு அத்தாட்சி அளிப்பாயாக" என்று கேட்டார். அதற்கு (இறைவன்) "உங்களுக்களிக்கப்படும் அத்தாட்சியாவது மூன்று நாள்கள் வரையில் ஜாடையாகவே தவிர நீங்கள் மனிதர்களுடன் பேசமாட்டீர்கள். (அந்நாள்களில்) நீங்கள் உங்கள் இறைவனை அதிகமாக நினைத்துக் கொண்டும், காலையிலும் மாலையிலும் அவனைத் துதிசெய்து கொண்டும் இருங்கள்" என்று கூறினான். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௪௧)Tafseer
وَاِذْ قَالَتِ الْمَلٰۤىِٕكَةُ يٰمَرْيَمُ اِنَّ اللّٰهَ اصْطَفٰىكِ وَطَهَّرَكِ وَاصْطَفٰىكِ عَلٰى نِسَاۤءِ الْعٰلَمِيْنَ ٤٢
- wa-idh
- وَإِذْ
- சமயம்
- qālati
- قَالَتِ
- கூறினா(ர்க)ள்
- l-malāikatu
- ٱلْمَلَٰٓئِكَةُ
- வானவர்கள்
- yāmaryamu
- يَٰمَرْيَمُ
- மர்யமே!
- inna l-laha
- إِنَّ ٱللَّهَ
- நிச்சயமாக அல்லாஹ்
- iṣ'ṭafāki
- ٱصْطَفَىٰكِ
- உம்மைத் தேர்ந்தெடுத்தான்
- waṭahharaki
- وَطَهَّرَكِ
- இன்னும் உம்மைப் பரிசுத்தப்படுத்தினான்
- wa-iṣ'ṭafāki
- وَٱصْطَفَىٰكِ
- இன்னும் உம்மைத் தேர்ந்தெடுத்தான்
- ʿalā nisāi
- عَلَىٰ نِسَآءِ
- பெண்களைவிட
- l-ʿālamīna
- ٱلْعَٰلَمِينَ
- அகிலத்தார்களின்
(நபியே! மர்யமை நோக்கி) மலக்குகள் கூறிய சமயத்தில் "மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் உங்களைத் தேர்ந்தெடுத் திருக்கின்றான். உங்களை பரிசுத்தமாகவும் ஆக்கியிருக்கின்றான். உலகத்திலுள்ள பெண்கள் அனைவரையும்விட உங்களை மேன்மையாக்கியும் வைத்திருக்கின்றான், (என்றும்) ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௪௨)Tafseer
يٰمَرْيَمُ اقْنُتِيْ لِرَبِّكِ وَاسْجُدِيْ وَارْكَعِيْ مَعَ الرَّاكِعِيْنَ ٤٣
- yāmaryamu
- يَٰمَرْيَمُ
- மர்யமே!
- uq'nutī
- ٱقْنُتِى
- பணிவீராக
- lirabbiki
- لِرَبِّكِ
- உம் இறைவனுக்கு
- wa-us'judī
- وَٱسْجُدِى
- இன்னும் சிரம் தாழ்த்துவீராக
- wa-ir'kaʿī
- وَٱرْكَعِى
- இன்னும் குனிவீராக
- maʿa
- مَعَ
- உடன்
- l-rākiʿīna
- ٱلرَّٰكِعِينَ
- குனிபவர்களுடன்
(ஆகவே) மர்யமே! நீங்கள் உங்களுடைய இறைவனுக்கு வழிப்பட்டு குனிந்து (சிரம் பணிந்து) வணங்குபவர்களுடன் நீங்களும் குனிந்து (சிரம் பணிந்து) வணங்குங்கள்!" (என்று கூறினார்கள்.) ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௪௩)Tafseer
ذٰلِكَ مِنْ اَنْۢبَاۤءِ الْغَيْبِ نُوْحِيْهِ اِلَيْكَ ۗوَمَا كُنْتَ لَدَيْهِمْ اِذْ يُلْقُوْنَ اَقْلَامَهُمْ اَيُّهُمْ يَكْفُلُ مَرْيَمَۖ وَمَا كُنْتَ لَدَيْهِمْ اِذْ يَخْتَصِمُوْنَ ٤٤
- dhālika
- ذَٰلِكَ
- இவை
- min
- مِنْ
- இருந்து
- anbāi
- أَنۢبَآءِ
- செய்திகள்
- l-ghaybi
- ٱلْغَيْبِ
- மறைவானவை
- nūḥīhi
- نُوحِيهِ
- இவற்றை வஹீ அறிவிக்கிறோம்
- ilayka
- إِلَيْكَۚ
- உமக்கு
- wamā kunta
- وَمَا كُنتَ
- நீர் இருக்கவில்லை
- ladayhim
- لَدَيْهِمْ
- அவர்களிடம்
- idh yul'qūna
- إِذْ يُلْقُونَ
- போது/எறிகிறார்கள்
- aqlāmahum
- أَقْلَٰمَهُمْ
- தங்கள் எழுது கோல்களை
- ayyuhum
- أَيُّهُمْ
- அவர்களில் யார்
- yakfulu
- يَكْفُلُ
- பொறுப்பேற்பார்
- maryama
- مَرْيَمَ
- மர்யமை
- wamā kunta
- وَمَا كُنتَ
- நீர் இருக்கவில்லை
- ladayhim
- لَدَيْهِمْ
- அவர்களிடம்
- idh yakhtaṣimūna
- إِذْ يَخْتَصِمُونَ
- போது/ தர்க்கிக்கிறார்கள்
(நபியே!) இவை (அனைத்தும் நீங்கள் அறியாத) மறைவான விஷயங்களாகும். இவைகளை நாம் உங்களுக்கு வஹீயின் மூலம் அறிவிக்கின்றோம். அன்றி, மர்யமை (வளர்க்க) யார் பொறுப்பேற்றுக் கொள்வது என்று (அறிய) அவர்கள் தங்கள் எழுதுகோல்களை (ஆற்றில்) எறிந்தபோதும் நீங்கள் அவர்களுடன் இருக்கவில்லை. (இதைப் பற்றி) அவர்கள் தர்க்கித்துக் கொண்டபோதும் நீங்கள் அவர்களுடன் இருக்கவில்லை. ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௪௪)Tafseer
اِذْ قَالَتِ الْمَلٰۤىِٕكَةُ يٰمَرْيَمُ اِنَّ اللّٰهَ يُبَشِّرُكِ بِكَلِمَةٍ مِّنْهُۖ اسْمُهُ الْمَسِيْحُ عِيْسَى ابْنُ مَرْيَمَ وَجِيْهًا فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِ وَمِنَ الْمُقَرَّبِيْنَۙ ٤٥
- idh qālati
- إِذْ قَالَتِ
- கூறியசமயம்
- l-malāikatu
- ٱلْمَلَٰٓئِكَةُ
- வானவர்கள்
- yāmaryamu
- يَٰمَرْيَمُ
- மர்யமே!
- inna l-laha
- إِنَّ ٱللَّهَ
- நிச்சயமாக அல்லாஹ்
- yubashiruki
- يُبَشِّرُكِ
- உமக்கு நற்செய்தி கூறுகிறான்
- bikalimatin
- بِكَلِمَةٍ
- ஒரு வார்த்தையைக் கொண்டு
- min'hu
- مِّنْهُ
- அவனிடமிருந்து
- us'muhu
- ٱسْمُهُ
- அதன் பெயர்
- l-masīḥu
- ٱلْمَسِيحُ
- அல் மஸீஹ்
- ʿīsā
- عِيسَى
- ஈஸா
- ub'nu maryama
- ٱبْنُ مَرْيَمَ
- மர்யமுடைய மகன்
- wajīhan
- وَجِيهًا
- கம்பீரமானவராக
- fī l-dun'yā
- فِى ٱلدُّنْيَا
- இம்மையில்
- wal-ākhirati
- وَٱلْءَاخِرَةِ
- இன்னும் மறுமை
- wamina l-muqarabīna
- وَمِنَ ٱلْمُقَرَّبِينَ
- நெருக்கமானவர்களில்
(மேலும், மர்யமை நோக்கி) மலக்குகள் "மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னுடைய (ஆகுக! என்ற) ஒரு வார்த்தையைக் கொண்டு உங்களுக்கு (ஒரு குழந்தையை அளிக்க) நற்செய்தி கூறுகின்றான்" என்றும் "அதன் பெயர் அல் மஸீஹ் ஈஸா இப்னு மர்யம்" என்பதாகும். அவர் இம்மை மறுமையில் மிக்க கம்பீரமானவராகவும், (இறைவனுக்கு) மிக்க நெருங்கியவர்களில் ஒருவராகவும் இருப்பார்" என்றும் கூறினார்கள். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௪௫)Tafseer
وَيُكَلِّمُ النَّاسَ فِى الْمَهْدِ وَكَهْلًا وَّمِنَ الصّٰلِحِيْنَ ٤٦
- wayukallimu
- وَيُكَلِّمُ
- இன்னும் பேசுவார்
- l-nāsa fī l-mahdi
- ٱلنَّاسَ فِى ٱلْمَهْدِ
- மக்களிடம்தொட்டிலில்
- wakahlan
- وَكَهْلًا
- இன்னும் வாலிபராக
- wamina l-ṣāliḥīna
- وَمِنَ ٱلصَّٰلِحِينَ
- இன்னும் நல்லோரில்
அன்றி "அவர் தொட்டிலில் (குழந்தையாக) இருக்கும் பொழுது (தன் தாயின் பரிசுத்தத் தன்மையைப் பற்றியு)ம், (தன் நபித்துவத்தைப் பற்றி) வாலிபத்திலும் மனிதர்களுடன் பேசுவார். தவிர நல்லொழுக்கமுடையவர்களில் ஒருவராகவும் இருப்பார்" (என்றும் கூறினார்கள்.) ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௪௬)Tafseer
قَالَتْ رَبِّ اَنّٰى يَكُوْنُ لِيْ وَلَدٌ وَّلَمْ يَمْسَسْنِيْ بَشَرٌ ۗ قَالَ كَذٰلِكِ اللّٰهُ يَخْلُقُ مَا يَشَاۤءُ ۗاِذَا قَضٰٓى اَمْرًا فَاِنَّمَا يَقُوْلُ لَهٗ كُنْ فَيَكُوْنُ ٤٧
- qālat
- قَالَتْ
- கூறினாள்
- rabbi
- رَبِّ
- என் இறைவா
- annā
- أَنَّىٰ
- எவ்வாறு
- yakūnu
- يَكُونُ
- ஏற்படும்
- lī
- لِى
- எனக்கு
- waladun
- وَلَدٌ
- குழந்தை
- walam yamsasnī
- وَلَمْ يَمْسَسْنِى
- என்னைத் தொடாமல் இருக்க
- basharun
- بَشَرٌۖ
- ஓர் ஆடவர்
- qāla
- قَالَ
- கூறினான்
- kadhāliki
- كَذَٰلِكِ
- இவ்வாறு
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- yakhluqu
- يَخْلُقُ
- படைக்கிறான்
- mā
- مَا
- எதை
- yashāu
- يَشَآءُۚ
- நாடுகிறான்
- idhā qaḍā
- إِذَا قَضَىٰٓ
- (அவன்) முடிவு செய்தால்
- amran
- أَمْرًا
- ஒரு காரியத்தை
- fa-innamā yaqūlu
- فَإِنَّمَا يَقُولُ
- அவன் கூறுவதெல்லாம்
- lahu
- لَهُۥ
- அதற்கு
- kun
- كُن
- ஆகுக
- fayakūnu
- فَيَكُونُ
- உடனே ஆகிவிடும்
(அதற்கு மர்யம், தன் இறைவனை நோக்கி) "என் இறைவனே! (மனிதர்களில்) ஒருவருமே என்னைத் தீண்டாதிருக்கும் போது, எனக்கு எவ்வாறு சந்ததி ஏற்பட்டுவிடும்?" என்று கூறினார். (அதற்கு) "இவ்வாறே, அல்லாஹ் தான் நாடியதை படைக்கின்றான். அவன் ஒரு பொருளை (படைக்க) நாடினால் அதனை "ஆகுக" என அவன் கூறியவுடனே அது ஆகிவிடும்" என்று கூறினான். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௪௭)Tafseer
وَيُعَلِّمُهُ الْكِتٰبَ وَالْحِكْمَةَ وَالتَّوْرٰىةَ وَالْاِنْجِيْلَۚ ٤٨
- wayuʿallimuhu
- وَيُعَلِّمُهُ
- இன்னும் அவருக்கு கற்பிப்பான்
- l-kitāba
- ٱلْكِتَٰبَ
- எழுதுவதை
- wal-ḥik'mata
- وَٱلْحِكْمَةَ
- இன்னும் ஞானத்தை
- wal-tawrāta wal-injīla
- وَٱلتَّوْرَىٰةَ وَٱلْإِنجِيلَ
- இன்னும் தவ்றாத்/இன்ஜீல்
மேலும் அவருக்கு வேதத்தையும் ஞானத்தையும், தவ்றாத்தையும் இன்ஜீலையும் கற்பிப்பான். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௪௮)Tafseer
وَرَسُوْلًا اِلٰى بَنِيْٓ اِسْرَاۤءِيْلَ ەۙ اَنِّيْ قَدْ جِئْتُكُمْ بِاٰيَةٍ مِّنْ رَّبِّكُمْ ۙاَنِّيْٓ اَخْلُقُ لَكُمْ مِّنَ الطِّيْنِ كَهَيْـَٔةِ الطَّيْرِ فَاَنْفُخُ فِيْهِ فَيَكُوْنُ طَيْرًاۢ بِاِذْنِ اللّٰهِ ۚوَاُبْرِئُ الْاَكْمَهَ وَالْاَبْرَصَ وَاُحْيِ الْمَوْتٰى بِاِذْنِ اللّٰهِ ۚوَاُنَبِّئُكُمْ بِمَا تَأْكُلُوْنَ وَمَا تَدَّخِرُوْنَ ۙفِيْ بُيُوْتِكُمْ ۗاِنَّ فِيْ ذٰلِكَ لَاٰيَةً لَّكُمْ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَۚ ٤٩
- warasūlan
- وَرَسُولًا
- இன்னும் தூதராக
- ilā
- إِلَىٰ
- பக்கம்
- banī is'rāīla
- بَنِىٓ إِسْرَٰٓءِيلَ
- இஸ்ரவேலர்கள்
- annī
- أَنِّى
- நிச்சயமாக நான்
- qad ji'tukum
- قَدْ جِئْتُكُم
- உங்களிடம் வந்திருக்கின்றேன்
- biāyatin
- بِـَٔايَةٍ
- ஓர் அத்தாட்சியைக் கொண்டு
- min rabbikum
- مِّن رَّبِّكُمْۖ
- உங்கள் இறைவனிடமிருந்து
- annī
- أَنِّىٓ
- நிச்சயமாக நான்
- akhluqu
- أَخْلُقُ
- படைப்பேன்
- lakum
- لَكُم
- உங்களுக்கு
- mina l-ṭīni
- مِّنَ ٱلطِّينِ
- களிமண்ணிலிருந்து
- kahayati
- كَهَيْـَٔةِ
- அமைப்பைப் போல்
- l-ṭayri
- ٱلطَّيْرِ
- பறவையின்
- fa-anfukhu fīhi
- فَأَنفُخُ فِيهِ
- இன்னும் ஊதுவேன்/அதில்
- fayakūnu
- فَيَكُونُ
- (அது) ஆகிவிடும்
- ṭayran
- طَيْرًۢا
- பறவையாக
- bi-idh'ni
- بِإِذْنِ
- அனுமதி கொண்டு
- l-lahi
- ٱللَّهِۖ
- அல்லாஹ்வின்
- wa-ub'ri-u
- وَأُبْرِئُ
- இன்னும் குணப்படுத்துவேன்
- l-akmaha
- ٱلْأَكْمَهَ
- பிறவிக் குருடரை
- wal-abraṣa
- وَٱلْأَبْرَصَ
- இன்னும் வெண்குஷ்டரை
- wa-uḥ'yī
- وَأُحْىِ
- இன்னும் உயிர்ப்பிப்பேன்
- l-mawtā
- ٱلْمَوْتَىٰ
- மரணித்தோரை
- bi-idh'ni
- بِإِذْنِ
- அனுமதி கொண்டு
- l-lahi
- ٱللَّهِۖ
- அல்லாஹ்வின்
- wa-unabbi-ukum
- وَأُنَبِّئُكُم
- இன்னும் உங்களுக்கு அறிவிப்பேன்
- bimā takulūna
- بِمَا تَأْكُلُونَ
- எதை/புசிக்கிறீர்கள்
- wamā
- وَمَا
- இன்னும் எது
- taddakhirūna
- تَدَّخِرُونَ
- சேமிக்கிறீர்கள்
- fī buyūtikum
- فِى بُيُوتِكُمْۚ
- உங்கள் வீடுகளில்
- inna fī dhālika
- إِنَّ فِى ذَٰلِكَ
- நிச்சயமாக/இதில்
- laāyatan
- لَءَايَةً
- திட்டமாக ஓர் அத்தாட்சி
- lakum
- لَّكُمْ
- உங்களுக்கு
- in kuntum
- إِن كُنتُم
- நீங்கள் இருந்தால்
- mu'minīna
- مُّؤْمِنِينَ
- நம்பிக்கையாளர்களாக
இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு (அவரை) ஒரு தூதராகவும் ஆக்குவான் (என்றும் இறைவன் கூறினான். பின்னர், ஈஸா பிறந்து தன் வாலிபத்தை அடைந்து இஸ்ராயீலின் சந்ததிகளிடம் சென்றபொழுது அவர்களை நோக்கிக் கூறியதாவது:) "நிச்சயமாக நான் உங்கள் இறைவனிடமிருந்து (அனுப்பப்பட்ட ஒரு தூதர். அதற்காக) உங்களுக்கு ஒரு அத்தாட்சி கொண்டு வந்திருக் கின்றேன். உங்களுக்காக களிமண்ணிலிருந்து பறவையைப் போல் செய்து அதில் நான் ஊதுவேன். அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு அது (பறக்கும்) பறவை ஆகிவிடும். பிறவிக் குருடனையும் வெண் குஷ்டரோகியையும் நான் குணப்படுத்துவேன். அல்லாஹ்வின் அனுமதி கொண்டு மரணித் தோரையும் நான் உயிர்ப்பிப்பேன். நீங்கள் புசித்தவைகளையும், உங்கள் வீட்டில் நீங்கள் சேகரித்து வைத்திருப்பவைகளையும் நான் உங்களுக்கு அறிவிப்பேன். மெய்யாகவே நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் இதில் உங்களுக்கு (திருப்தி அளிக்கக்கூடிய) ஒரு அத்தாட்சி இருக்கின்றது (என்றும்,) ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௪௯)Tafseer
وَمُصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرٰىةِ وَلِاُحِلَّ لَكُمْ بَعْضَ الَّذِيْ حُرِّمَ عَلَيْكُمْ وَجِئْتُكُمْ بِاٰيَةٍ مِّنْ رَّبِّكُمْۗ فَاتَّقُوا اللّٰهَ وَاَطِيْعُوْنِ ٥٠
- wamuṣaddiqan
- وَمُصَدِّقًا
- இன்னும் உண்மைப்படுத்துபவராக
- limā bayna yadayya
- لِّمَا بَيْنَ يَدَىَّ
- எனக்கு முன்னுள்ளதை
- mina l-tawrāti
- مِنَ ٱلتَّوْرَىٰةِ
- தவ்றாத்திலிருந்து
- wali-uḥilla
- وَلِأُحِلَّ
- இன்னும் நான் ஆகுமாக்குவதற்காக
- lakum
- لَكُم
- உங்களுக்கு
- baʿḍa
- بَعْضَ
- சிலவற்றை
- alladhī
- ٱلَّذِى
- எது
- ḥurrima
- حُرِّمَ
- தடுக்கப்பட்டது
- ʿalaykum
- عَلَيْكُمْۚ
- உங்கள் மீது
- waji'tukum
- وَجِئْتُكُم
- இன்னும் உங்களிடம் வந்திருக்கிறேன்
- biāyatin
- بِـَٔايَةٍ
- ஓர் அத்தாட்சியைக் கொண்டு
- min rabbikum
- مِّن رَّبِّكُمْ
- உங்கள் இறைவனிடமிருந்து
- fa-ittaqū
- فَٱتَّقُوا۟
- ஆகவே, அஞ்சுங்கள்
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்வை
- wa-aṭīʿūni
- وَأَطِيعُونِ
- இன்னும் எனக்கு கீழ்ப்படியுங்கள்
என் முன்னால் உள்ள தவ்றாத்தை(யும்) நான் உண்மையாக்கி வைத்து (முன்னர்) உங்களுக்கு விலக்கப்பட்ட வைகளில் சிலவற்றை உங்களுக்கு ஆகுமாக்கி வைப்பதற்காகவும் உங்கள் இறைவனிடமிருந்து (இத்தகைய) அத்தாட்சியை உங்களிடம் கொண்டு வந்திருக்கின்றேன். ஆகவே, நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து என்னை பின்பற்றுங்கள். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௫௦)Tafseer