Skip to content

ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் - Page: 15

Ali 'Imran

(ʾĀl ʿImrān)

௧௪௧

وَلِيُمَحِّصَ اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا وَيَمْحَقَ الْكٰفِرِيْنَ ١٤١

waliyumaḥḥiṣa
وَلِيُمَحِّصَ
இன்னும் சோதிப்பதற்காக
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
alladhīna
ٱلَّذِينَ
எவர்களை
āmanū
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டார்கள்
wayamḥaqa
وَيَمْحَقَ
இன்னும் அழிப்பதற்காக
l-kāfirīna
ٱلْكَٰفِرِينَ
நிராகரிப்பாளர்களை
நிராகரிப்பவர்களை அழித்து உண்மை நம்பிக்கை யாளர்களை வடிகட்டி எடுப்பதற்காகவும் (இவ்வாறு செய்கின்றான்.) ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௪௧)
Tafseer
௧௪௨

اَمْ حَسِبْتُمْ اَنْ تَدْخُلُوا الْجَنَّةَ وَلَمَّا يَعْلَمِ اللّٰهُ الَّذِيْنَ جَاهَدُوْا مِنْكُمْ وَيَعْلَمَ الصّٰبِرِيْنَ ١٤٢

am ḥasib'tum
أَمْ حَسِبْتُمْ
நினைத்தீர்களா?
an tadkhulū
أَن تَدْخُلُوا۟
நீங்கள் நுழைய
l-janata
ٱلْجَنَّةَ
சொர்க்கத்தில்
walammā yaʿlami l-lahu
وَلَمَّا يَعْلَمِ ٱللَّهُ
அல்லாஹ் அறியாமல்
alladhīna jāhadū
ٱلَّذِينَ جَٰهَدُوا۟
போர் புரிந்தவர்களை
minkum
مِنكُمْ
உங்களில்
wayaʿlama
وَيَعْلَمَ
(அவன்) அறிவதுடன்
l-ṣābirīna
ٱلصَّٰبِرِينَ
பொறுமையாளர்களை
(நம்பிக்கையாளர்களே!) உங்களில் (அல்லாஹ்வுக்காக) போர் புரிபவர்கள் யார்? (கஷ்டங்களைப் பொறுமையுடன்) சகித்துக் கொள்பவர்கள் யார்? என்பதை அல்லாஹ் (பரிசோதித்து) அறிவதற்கு முன்னதாகவே நீங்கள் சுவர்க்கம் நுழைந்துவிடலாம் என்று எண்ணிக் கொண்டு இருக்கின்றீர்களா? ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௪௨)
Tafseer
௧௪௩

وَلَقَدْ كُنْتُمْ تَمَنَّوْنَ الْمَوْتَ مِنْ قَبْلِ اَنْ تَلْقَوْهُۖ فَقَدْ رَاَيْتُمُوْهُ وَاَنْتُمْ تَنْظُرُوْنَ ࣖ ١٤٣

walaqad kuntum
وَلَقَدْ كُنتُمْ
இன்னும் திட்டமாக இருந்தீர்கள்
tamannawna
تَمَنَّوْنَ
ஆசைவைக்கிறீர்கள்
l-mawta
ٱلْمَوْتَ
மரணத்தை
min qabli
مِن قَبْلِ
முன்னர்
an talqawhu
أَن تَلْقَوْهُ
அதைச் சந்திப்பதற்கு
faqad ra-aytumūhu
فَقَدْ رَأَيْتُمُوهُ
அதைப் பார்த்தும் விட்டீர்கள்
wa-antum
وَأَنتُمْ
நீங்களோ
tanẓurūna
تَنظُرُونَ
காண்கிறீர்கள்
நீங்கள் இறந்து விடுவதற்கு முன்னதாகவே, (அல்லாஹ்வின் பாதையில் உங்கள்) உயிரை அர்ப்பணம் செய்ய விரும்பிக் கொண்டிருந்தீர்களே! (இப்போது) அது உங்கள் கண் முன் இருப்பதைத் திட்டமாகப் பார்த்து விட்டீர்கள். (ஆகவே இந்த போரில் ஏன் தயங்குகின்றீர்கள்?) ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௪௩)
Tafseer
௧௪௪

وَمَا مُحَمَّدٌ اِلَّا رَسُوْلٌۚ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُ ۗ اَفَا۟ىِٕنْ مَّاتَ اَوْ قُتِلَ انْقَلَبْتُمْ عَلٰٓى اَعْقَابِكُمْ ۗ وَمَنْ يَّنْقَلِبْ عَلٰى عَقِبَيْهِ فَلَنْ يَّضُرَّ اللّٰهَ شَيْـًٔا ۗوَسَيَجْزِى اللّٰهُ الشّٰكِرِيْنَ ١٤٤

wamā
وَمَا
இல்லை
muḥammadun
مُحَمَّدٌ
முஹம்மது
illā
إِلَّا
தவிர
rasūlun
رَسُولٌ
ஒரு தூதரே
qad khalat
قَدْ خَلَتْ
சென்று விட்டனர்
min qablihi
مِن قَبْلِهِ
அவருக்கு முன்னர்
l-rusulu
ٱلرُّسُلُۚ
தூதர்கள்
afa-in māta
أَفَإِي۟ن مَّاتَ
அவர் இறந்தால்
aw
أَوْ
அல்லது
qutila
قُتِلَ
கொல்லப்பட்டால்
inqalabtum
ٱنقَلَبْتُمْ
புரண்டு விடுவீர்கள்
ʿalā
عَلَىٰٓ
மீது
aʿqābikum
أَعْقَٰبِكُمْۚ
உங்கள் குதிங்கால்கள்
waman
وَمَن
இன்னும் எவர்
yanqalib
يَنقَلِبْ
புரண்டு விடுவாரோ
ʿalā
عَلَىٰ
மீது
ʿaqibayhi
عَقِبَيْهِ
தன் குதிங்கால்கள்
falan yaḍurra
فَلَن يَضُرَّ
அறவே தீங்கு செய்யமுடியாது
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்விற்கு
shayan
شَيْـًٔاۗ
எதையும்
wasayajzī
وَسَيَجْزِى
கூலி வழங்குவான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
l-shākirīna
ٱلشَّٰكِرِينَ
நன்றி செலுத்துபவர்களுக்கு
முஹம்மது (நபி) ஒரு தூதரேயன்றி (இறக்காமல் இருக்கக் கூடிய இறைவன்) அல்ல. அவருக்கு முன்னரும் (இவ்வாறே) பல தூதர்கள் சென்றிருக்கின்றனர். அவர் இறந்துவிட்டால் அல்லது வெட்டப்பட்டு விட்டால் நீங்கள் புறங்காட்டிச் சென்று விடுவீர்களோ? (அவ்வாறு) எவரேனும் புறங்காட்டிச் சென்றுவிட்டால் அதனால் அவன் அல்லாஹ்வுக்கு ஒன்றும் நஷ்டம் உண்டாக்கி விடமாட்டான். நன்றியறிபவர்களுக்கு அல்லாஹ் அதிசீக்கிரத்தில் (நற்)கூலியைத் தருவான். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௪௪)
Tafseer
௧௪௫

وَمَا كَانَ لِنَفْسٍ اَنْ تَمُوْتَ اِلَّا بِاِذْنِ اللّٰهِ كِتٰبًا مُّؤَجَّلًا ۗ وَمَنْ يُّرِدْ ثَوَابَ الدُّنْيَا نُؤْتِهٖ مِنْهَاۚ وَمَنْ يُّرِدْ ثَوَابَ الْاٰخِرَةِ نُؤْتِهٖ مِنْهَا ۗ وَسَنَجْزِى الشّٰكِرِيْنَ ١٤٥

wamā kāna
وَمَا كَانَ
(சாத்தியம்) இல்லை
linafsin
لِنَفْسٍ
ஓர் ஆத்மாவிற்கு
an tamūta
أَن تَمُوتَ
மரணிப்பது
illā
إِلَّا
தவிர
bi-idh'ni
بِإِذْنِ
அனுமதியுடன்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
kitāban
كِتَٰبًا
விதிக்கு ஏற்ப
mu-ajjalan
مُّؤَجَّلًاۗ
காலம் குறிக்கப்பட்ட
waman yurid
وَمَن يُرِدْ
இன்னும் எவர்/நாடுவாரோ
thawāba
ثَوَابَ
நன்மையை
l-dun'yā
ٱلدُّنْيَا
உலகத்தின்
nu'tihi
نُؤْتِهِۦ
அவருக்கு கொடுப்போம்
min'hā
مِنْهَا
அதிலிருந்து
waman yurid
وَمَن يُرِدْ
இன்னும் எவர்/நாடுவாரோ
thawāba
ثَوَابَ
நன்மையை
l-ākhirati
ٱلْءَاخِرَةِ
மறுமையின்
nu'tihi
نُؤْتِهِۦ
அவருக்கு கொடுப்போம்
min'hā
مِنْهَاۚ
அதிலிருந்து
wasanajzī
وَسَنَجْزِى
கூலி வழங்குவோம்
l-shākirīna
ٱلشَّٰكِرِينَ
நன்றி செலுத்துபவர்கள்
யாதொரு ஆத்மாவும் அல்லாஹ்வின் அனுமதியின்றி இறப்பதில்லை. இது தவணை நிர்ணயிக்கப்பட்ட விதியாகும். எவர் (தன் செயலுக்கு) இந்த உலகத்தின் நன்மையை (மட்டும்) விரும்புகின்றாரோ அவருக்கு அதனை (மட்டும்) அளிப்போம். எவர் மறுமையின் நன்மையை(யும்) விரும்புகின்றாரோ அவருக்கு அதனை(யும்) வழங்குவோம். மேலும், நன்றி செலுத்துபவர்களுக்கு நாம் அதிசீக்கிரத்தில் நற்பயனை வழங்குவோம். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௪௫)
Tafseer
௧௪௬

وَكَاَيِّنْ مِّنْ نَّبِيٍّ قَاتَلَۙ مَعَهٗ رِبِّيُّوْنَ كَثِيْرٌۚ فَمَا وَهَنُوْا لِمَآ اَصَابَهُمْ فِيْ سَبِيْلِ اللّٰهِ وَمَا ضَعُفُوْا وَمَا اسْتَكَانُوْا ۗ وَاللّٰهُ يُحِبُّ الصّٰبِرِيْنَ ١٤٦

waka-ayyin
وَكَأَيِّن
எத்தனையோ
min
مِّن
இருந்து
nabiyyin
نَّبِىٍّ
நபி
qātala
قَٰتَلَ
போர் புரிந்தார்
maʿahu
مَعَهُۥ
அவருடன்
ribbiyyūna
رِبِّيُّونَ
நல்லடியார்கள்
kathīrun
كَثِيرٌ
அதிகமான
famā wahanū
فَمَا وَهَنُوا۟
அவர்கள் துணிவிழக்கவில்லை
limā aṣābahum
لِمَآ أَصَابَهُمْ
அவர்களுக்கு ஏற்பட்டதின் காரணமாக
fī sabīli l-lahi
فِى سَبِيلِ ٱللَّهِ
அல்லாஹ்வின் பாதையில்
wamā ḍaʿufū
وَمَا ضَعُفُوا۟
இன்னும் அவர்கள் பலவீனமடையவில்லை
wamā is'takānū
وَمَا ٱسْتَكَانُوا۟ۗ
இன்னும் அவர்கள் பணியவில்லை
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
yuḥibbu
يُحِبُّ
நேசிக்கிறான்
l-ṣābirīna
ٱلصَّٰبِرِينَ
பொறுமையாளர்களை
எத்தனையோ இறைத்தூதர்களும், அவர்களுடன் இறைவனின் பல நல்லடியார்களும் சேர்ந்து (அல்லாஹ்வின் பாதையில்) போர் புரிந்திருக்கின்றனர். அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் (போர் செய்ததனால்) தங்களுக்கு ஏற்பட்ட கஷ்டத்தின் காரணமாக அவர்கள் தங்கள் தைரியத்தை இழந்திடவுமில்லை; பலவீனமாகிவிடவுமில்லை; (எதிரிகளுக்கு) பணிந்து விடவும் இல்லை. (இவ்வாறு கஷ்டங்களைச்) சகித்துக் கொள்பவர்களைத்தான் அல்லாஹ் நேசிக்கின்றான். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௪௬)
Tafseer
௧௪௭

وَمَا كَانَ قَوْلَهُمْ اِلَّآ اَنْ قَالُوْا رَبَّنَا اغْفِرْ لَنَا ذُنُوْبَنَا وَاِسْرَافَنَا فِيْٓ اَمْرِنَا وَثَبِّتْ اَقْدَامَنَا وَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكٰفِرِيْنَ ١٤٧

wamā kāna
وَمَا كَانَ
இருக்கவில்லை
qawlahum
قَوْلَهُمْ
அவர்களுடைய கூற்றாக
illā
إِلَّآ
தவிர
an qālū
أَن قَالُوا۟
அவர்கள் கூறியது
rabbanā
رَبَّنَا
எங்கள் இறைவா
igh'fir lanā
ٱغْفِرْ لَنَا
எங்களுக்கு மன்னி
dhunūbanā
ذُنُوبَنَا
எங்கள் பாவங்களை
wa-is'rāfanā
وَإِسْرَافَنَا
இன்னும் எங்கள்வரம்பு மீறலை
fī amrinā
فِىٓ أَمْرِنَا
எங்கள் காரியத்தில்
wathabbit
وَثَبِّتْ
இன்னும் உறுதிப்படுத்து
aqdāmanā
أَقْدَامَنَا
எங்கள் பாதங்களை
wa-unṣur'nā
وَٱنصُرْنَا
இன்னும் எங்களுக்கு உதவு
ʿalā
عَلَى
எதிராக
l-qawmi
ٱلْقَوْمِ
மக்களுக்கு
l-kāfirīna
ٱلْكَٰفِرِينَ
நிராகரிப்பாளர்கள்
(இத்தகைய சந்தர்ப்பங்களில் அவர்கள் தங்கள் இறைவனை நோக்கி) "எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களை நீ மன்னிப்பாயாக! எங்கள் செயல்களில் நாங்கள் வரம்பு மீறிய (குற்றத்)தையும் மன்னிப்பாயாக! எங்கள் பாதங்களை (போரில் நழுவாது) நீ உறுதிபடுத்தியும் வைப்பாயாக! (உன்னை) நிராகரிக்கும் மக்களை வெற்றி பெற நீ எங்களுக்கு உதவிபுரிவாயாக!" என்று அவர்கள் (பிரார்த்தித்துக்) கூறியதைத் தவிர (வேறொன்றும்) கூறியதில்லை. ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௪௭)
Tafseer
௧௪௮

فَاٰتٰىهُمُ اللّٰهُ ثَوَابَ الدُّنْيَا وَحُسْنَ ثَوَابِ الْاٰخِرَةِ ۗ وَاللّٰهُ يُحِبُّ الْمُحْسِنِيْنَ ࣖ ١٤٨

faātāhumu
فَـَٔاتَىٰهُمُ
ஆகவே அவர்களுக்கு கொடுத்தான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
thawāba
ثَوَابَ
நன்மையை
l-dun'yā
ٱلدُّنْيَا
உலகத்தின்
waḥus'na
وَحُسْنَ
இன்னும் அழகான
thawābi
ثَوَابِ
நன்மை(யை)
l-ākhirati
ٱلْءَاخِرَةِۗ
மறுமையின்
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
yuḥibbu
يُحِبُّ
நேசிக்கிறான்
l-muḥ'sinīna
ٱلْمُحْسِنِينَ
நல்லறம் புரிவோரை
ஆதலால் அல்லாஹ் அவர்களுக்கு இவ்வுலகத்தின் நன்மையையும், மறுமையின் அழகான நன்மையையும் வழங்கினான். அல்லாஹ் (இத்தகைய) நல்லவர்களையே நேசிக்கின்றான். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௪௮)
Tafseer
௧௪௯

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْٓا اِنْ تُطِيْعُوا الَّذِيْنَ كَفَرُوْا يَرُدُّوْكُمْ عَلٰٓى اَعْقَابِكُمْ فَتَنْقَلِبُوْا خٰسِرِيْنَ ١٤٩

yāayyuhā alladhīna āmanū
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟
நம்பிக்கையாளர்களே
in tuṭīʿū
إِن تُطِيعُوا۟
நீங்கள் கீழ்ப்படிந்தால்
alladhīna kafarū
ٱلَّذِينَ كَفَرُوا۟
நிராகரிப்பாளர்களுக்கு
yaruddūkum
يَرُدُّوكُمْ
திருப்பி விடுவார்கள்/ உங்களை
ʿalā
عَلَىٰٓ
மீது
aʿqābikum
أَعْقَٰبِكُمْ
உங்கள் குதிங்கால்கள்
fatanqalibū
فَتَنقَلِبُوا۟
திரும்பி விடுவீர்கள்
khāsirīna
خَٰسِرِينَ
நஷ்டவாளிகளாக
நம்பிக்கையாளர்களே! (அல்லாஹ்வை) நிராகரிப்பவர்களை நீங்கள் பின்பற்றினால் அவர்கள் உங்களை (உங்கள் நம்பிக்கையி லிருந்து நீங்கள் விலகி)ப் பின் செல்லும்படி திருப்பி விடுவார்கள். அதனால் நீங்கள் நஷ்டமடைந்தவர்களாகவே மாறிவிடுவீர்கள். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௪௯)
Tafseer
௧௫௦

بَلِ اللّٰهُ مَوْلٰىكُمْ ۚ وَهُوَ خَيْرُ النّٰصِرِيْنَ ١٥٠

bali l-lahu
بَلِ ٱللَّهُ
மாறாக/அல்லாஹ்
mawlākum
مَوْلَىٰكُمْۖ
உங்கள் எஜமான்
wahuwa khayru
وَهُوَ خَيْرُ
அவன்/சிறந்தவன்
l-nāṣirīna
ٱلنَّٰصِرِينَ
உதவியாளர்களில்
(இவர்கள்) அல்ல, அல்லாஹ்தான் உங்கள் பாதுகாவலன். அவன் உதவி செய்பவர்களில் மிகச் சிறந்தவனுமாக இருக்கின்றான். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௫௦)
Tafseer