Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௧௪௪

Qur'an Surah Ali 'Imran Verse 144

ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௧௪௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمَا مُحَمَّدٌ اِلَّا رَسُوْلٌۚ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُ ۗ اَفَا۟ىِٕنْ مَّاتَ اَوْ قُتِلَ انْقَلَبْتُمْ عَلٰٓى اَعْقَابِكُمْ ۗ وَمَنْ يَّنْقَلِبْ عَلٰى عَقِبَيْهِ فَلَنْ يَّضُرَّ اللّٰهَ شَيْـًٔا ۗوَسَيَجْزِى اللّٰهُ الشّٰكِرِيْنَ (آل عمران : ٣)

wamā
وَمَا
And not
இல்லை
muḥammadun
مُحَمَّدٌ
(is) Muhammad
முஹம்மது
illā
إِلَّا
except
தவிர
rasūlun
رَسُولٌ
a Messenger
ஒரு தூதரே
qad khalat
قَدْ خَلَتْ
certainly passed away
சென்று விட்டனர்
min qablihi
مِن قَبْلِهِ
from before him
அவருக்கு முன்னர்
l-rusulu
ٱلرُّسُلُۚ
[the] (other) Messengers
தூதர்கள்
afa-in māta
أَفَإِي۟ن مَّاتَ
So if he died
அவர் இறந்தால்
aw
أَوْ
or
அல்லது
qutila
قُتِلَ
is slain
கொல்லப்பட்டால்
inqalabtum
ٱنقَلَبْتُمْ
will you turn back
புரண்டு விடுவீர்கள்
ʿalā
عَلَىٰٓ
on
மீது
aʿqābikum
أَعْقَٰبِكُمْۚ
your heels?
உங்கள் குதிங்கால்கள்
waman
وَمَن
And whoever
இன்னும் எவர்
yanqalib
يَنقَلِبْ
turns back
புரண்டு விடுவாரோ
ʿalā
عَلَىٰ
on
மீது
ʿaqibayhi
عَقِبَيْهِ
his heels
தன் குதிங்கால்கள்
falan yaḍurra
فَلَن يَضُرَّ
then never will he harm
அறவே தீங்கு செய்யமுடியாது
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்விற்கு
shayan
شَيْـًٔاۗ
(in) anything
எதையும்
wasayajzī
وَسَيَجْزِى
And will reward
கூலி வழங்குவான்
l-lahu
ٱللَّهُ
Allah
அல்லாஹ்
l-shākirīna
ٱلشَّٰكِرِينَ
the grateful ones
நன்றி செலுத்துபவர்களுக்கு

Transliteration:

Wa maa Muhammadun illaa Rasoolun qad khalat min qablihir Rusul; afa'im maata aw qutilan qalabtum 'alaaa a'qaabikum; wa mai yanqalib 'alaa aqibihi falai yadurral laaha shai'aa; wa sayajzil laahush shaakireen (QS. ʾĀl ʿImrān:144)

English Sahih International:

Muhammad is not but a messenger. [Other] messengers have passed on before him. So if he was to die or be killed, would you turn back on your heels [to unbelief]? And he who turns back on his heels will never harm Allah at all; but Allah will reward the grateful. (QS. Ali 'Imran, Ayah ௧௪௪)

Abdul Hameed Baqavi:

முஹம்மது (நபி) ஒரு தூதரேயன்றி (இறக்காமல் இருக்கக் கூடிய இறைவன்) அல்ல. அவருக்கு முன்னரும் (இவ்வாறே) பல தூதர்கள் சென்றிருக்கின்றனர். அவர் இறந்துவிட்டால் அல்லது வெட்டப்பட்டு விட்டால் நீங்கள் புறங்காட்டிச் சென்று விடுவீர்களோ? (அவ்வாறு) எவரேனும் புறங்காட்டிச் சென்றுவிட்டால் அதனால் அவன் அல்லாஹ்வுக்கு ஒன்றும் நஷ்டம் உண்டாக்கி விடமாட்டான். நன்றியறிபவர்களுக்கு அல்லாஹ் அதிசீக்கிரத்தில் (நற்)கூலியைத் தருவான். (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௧௪௪)

Jan Trust Foundation

முஹம்மது(ஸல்) (இறைவனின்) தூதரே அன்றி(வேறு) அல்லர்; அவருக்கு முன்னரும் (அல்லாஹ்வின்) தூதர்கள் பலர் (காலம்) சென்றுவிட்டார்கள்; அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டால்; நீங்கள் உங்கள் குதிகால்களின் மேல் (புறங்காட்டித்) திரும்பி விடுவீர்களா? அப்படி எவரேனும் தம் குதிகால்கள்மேல் (புறங்காட்டி) திரும்பி விடுவாரானால் அவர் அல்லாஹ்வுக்கு எவ்விதத் தீங்கும் செய்துவிட முடியாது; அன்றியும், அல்லாஹ் நன்றியுடையோருக்கு அதிசீக்கிரத்தில் நற்கூலியை வழங்குவான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

முஹம்மது (நபி) ஒரு தூதரே தவிர (இறைவன்) இல்லை. அவருக்கு முன்னர் (பல) தூதர்கள் சென்றுவிட்டனர். அவர் இறந்தால் அல்லது கொல்லப்பட்டால் (மார்க்கத்தை விட்டும்) உங்கள் குதிங்கால்கள் மீது புரண்டுவிடுவீர்களோ? எவர் தன் குதிங்கால்கள் மீது புரண்டுவிடுவாரோ (அவர்) அல்லாஹ்விற்கு எதையும் அறவே தீங்குசெய்யமுடியாது. நன்றி செலுத்துபவர்களுக்கு அல்லாஹ் (நற்)கூலி வழங்குவான்.