Skip to content

ஸூரா ஸூரத்துல் பகரா - Page: 21

Al-Baqarah

(al-Baq̈arah)

௨௦௧

وَمِنْهُمْ مَّنْ يَّقُوْلُ رَبَّنَآ اٰتِنَا فِى الدُّنْيَا حَسَنَةً وَّفِى الْاٰخِرَةِ حَسَنَةً وَّقِنَا عَذَابَ النَّارِ ٢٠١

wamin'hum
وَمِنْهُم
அவர்களில்
man
مَّن
எவர்
yaqūlu
يَقُولُ
கூறுகிறார்
rabbanā
رَبَّنَآ
எங்கள் இறைவா
ātinā
ءَاتِنَا
எங்களுக்குத் தா
fī l-dun'yā
فِى ٱلدُّنْيَا
இம்மையில்
ḥasanatan
حَسَنَةً
அழகியதை
wafī l-ākhirati
وَفِى ٱلْءَاخِرَةِ
இன்னும் மறுமையில்
ḥasanatan
حَسَنَةً
அழகியதை
waqinā
وَقِنَا
இன்னும் காத்துக்கொள்/ எங்களை
ʿadhāba
عَذَابَ
வேதனையிலிருந்து
l-nāri
ٱلنَّارِ
(நரக) நெருப்பின்
அன்றி "எங்கள் இறைவனே! எங்களுக்கு நீ இம்மையிலும் நன்மை அளிப்பாயாக! மறுமையிலும் நன்மையளிப்பாயாக! (நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் எங்களை நீ பாதுகாப்பாயாக!" எனக் கோருபவர்களும் மனிதர்களில் உண்டு. ([௨] ஸூரத்துல் பகரா: ௨௦௧)
Tafseer
௨௦௨

اُولٰۤىِٕكَ لَهُمْ نَصِيْبٌ مِّمَّا كَسَبُوْا ۗ وَاللّٰهُ سَرِيْعُ الْحِسَابِ ٢٠٢

ulāika
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்
lahum
لَهُمْ
அவர்களுக்கு
naṣībun
نَصِيبٌ
பங்கு
mimmā
مِّمَّا
எதிலிருந்து
kasabū
كَسَبُوا۟ۚ
செய்தார்கள்
wal-lahu
وَٱللَّهُ
இன்னும் அல்லாஹ்
sarīʿu
سَرِيعُ
விரைவானவன்
l-ḥisābi
ٱلْحِسَابِ
கணக்கிடுவதில்/ விசாரணையில்
தாங்கள் செய்த (நற்)செயல்களின் (பயனை இம்மையிலும் மறுமையிலும் அடையும்) பாக்கியம் இவர்களுக்குத்தான் உண்டு. தவிர, (சிரமமேற்படாத வண்ணம் இவர்களின் செயலைப் பற்றி மறுமையில்) அல்லாஹ் வெகு விரைவாகக் (கேள்வி) கணக்கெடுப்பான். (அவனுக்கு அது சிரமமன்று). ([௨] ஸூரத்துல் பகரா: ௨௦௨)
Tafseer
௨௦௩

۞ وَاذْكُرُوا اللّٰهَ فِيْٓ اَيَّامٍ مَّعْدُوْدٰتٍ ۗ فَمَنْ تَعَجَّلَ فِيْ يَوْمَيْنِ فَلَآ اِثْمَ عَلَيْهِ ۚوَمَنْ تَاَخَّرَ فَلَآ اِثْمَ عَلَيْهِۙ لِمَنِ اتَّقٰىۗ وَاتَّقُوا اللّٰهَ وَاعْلَمُوْٓا اَنَّكُمْ اِلَيْهِ تُحْشَرُوْنَ ٢٠٣

wa-udh'kurū
وَٱذْكُرُوا۟
இன்னும் நினைவு கூருங்கள்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வை
fī ayyāmin
فِىٓ أَيَّامٍ
நாள்களில்
maʿdūdātin
مَّعْدُودَٰتٍۚ
எண்ணப்பட்டவை
faman
فَمَن
இன்னும் எவர்
taʿajjala
تَعَجَّلَ
அவசரப்பட்டார்
fī yawmayni
فِى يَوْمَيْنِ
இரண்டு நாள்களில்
falā ith'ma
فَلَآ إِثْمَ
அறவே பாவமில்லை
ʿalayhi
عَلَيْهِ
அவர் மீது
waman ta-akhara
وَمَن تَأَخَّرَ
இன்னும் எவர்/தாமதித்தார்
falā ith'ma
فَلَآ إِثْمَ
அறவே பாவமில்லை
ʿalayhi
عَلَيْهِۚ
அவர் மீது
limani
لِمَنِ
எவருக்கு
ittaqā
ٱتَّقَىٰۗ
அஞ்சினார்
wa-ittaqū
وَٱتَّقُوا۟
இன்னும் அஞ்சுங்கள்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வை
wa-iʿ'lamū
وَٱعْلَمُوٓا۟
இன்னும் அறிந்துகொள்ளுங்கள்
annakum
أَنَّكُمْ
நிச்சயமாக நீங்கள்
ilayhi
إِلَيْهِ
அவனிடமே
tuḥ'sharūna
تُحْشَرُونَ
ஒன்று திரட்டப்படுவீர்கள்
(நம்பிக்கையாளர்களே! துல்ஹஜ்ஜு மாதத்தில்) குறிப்பிடப்பட்ட (மூன்று) நாள்கள் வரை ("மினா" என்னும் இடத்தில் தாமதித்திருந்து) அல்லாஹ்வை "திக்ரு" செய்யுங்கள். ஆனால், எவரேனும் இரண்டாம் நாளில் அவசரப்பட்டு(ப் புறப்பட்டு) விட்டால் அவர் மீது குற்றமில்லை. எவரேனும் (மூன்று நாள்களுக்குப்) பிற்பட்(டுப் புறப்பட்)டால் அவர் மீதும் குற்றமில்லை. அவர் இறை அச்சமுடையவராக (இருந்து ஹஜ்ஜுடைய காலத்தில் தடுக்கப்பட்டவற்றிலிருந்து விலகி) இருந்தால் (மட்டும்) போதுமானது. ஆகவே (நம்பிக்கையாளர்களே!) நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்விடமே (நியாயத் தீர்ப்புக்கு எழுப்பிக்) கொண்டு வரப்படுவீர்கள் என்பதை உறுதியாக அறிந்து அல்லாஹ்வுக்குப் பயந்து (நடந்து) கொள்ளுங்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௨௦௩)
Tafseer
௨௦௪

وَمِنَ النَّاسِ مَنْ يُّعْجِبُكَ قَوْلُهٗ فِى الْحَيٰوةِ الدُّنْيَا وَيُشْهِدُ اللّٰهَ عَلٰى مَا فِيْ قَلْبِهٖ ۙ وَهُوَ اَلَدُّ الْخِصَامِ ٢٠٤

wamina l-nāsi
وَمِنَ ٱلنَّاسِ
இன்னும் மக்களில்
man
مَن
எவர்
yuʿ'jibuka
يُعْجِبُكَ
வியக்க வைக்கிறது/உம்மை
qawluhu
قَوْلُهُۥ
அவனுடைய பேச்சு
fī l-ḥayati
فِى ٱلْحَيَوٰةِ
வாழ்க்கையைப் பற்றி
l-dun'yā
ٱلدُّنْيَا
இவ்வுலகம்
wayush'hidu
وَيُشْهِدُ
இன்னும் சாட்சியாக்குவான்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வை
ʿalā
عَلَىٰ
மீது
mā fī qalbihi
مَا فِى قَلْبِهِۦ
எது/அவனுடைய உள்ளத்தில்
wahuwa
وَهُوَ
அவன்
aladdu
أَلَدُّ
கடுமையான வாதி
l-khiṣāmi
ٱلْخِصَامِ
வாதிகளில்
(நபியே! உங்களிடம்) இவ்வுலக வாழ்க்கையைப் பற்றி(ப் பேசும்பொழுது) தன்னுடைய (சாதுரியமான) வார்த்தையைக் கொண்டு உங்களை ஆச்சரியத்திற்குள்ளாக்கக்கூடிய ஒருவன் அம்மனிதர்களில் உண்டு. அவன் (உங்கள்மீது அன்பு கொண்டிருப்பதாகக் கூறி) தன் மனதில் உள்ளவற்றிற்கு (சத்தியம் செய்து) அல்லாஹ்வை சாட்சியாக்குவான். (உண்மையில்) அவன்தான் (உங்களுக்குக்) கொடிய எதிரியாவான். ([௨] ஸூரத்துல் பகரா: ௨௦௪)
Tafseer
௨௦௫

وَاِذَا تَوَلّٰى سَعٰى فِى الْاَرْضِ لِيُفْسِدَ فِيْهَا وَيُهْلِكَ الْحَرْثَ وَالنَّسْلَ ۗ وَ اللّٰهُ لَا يُحِبُّ الْفَسَادَ ٢٠٥

wa-idhā tawallā
وَإِذَا تَوَلَّىٰ
இன்னும் அவன் திரும்பிச் சென்றால்
saʿā
سَعَىٰ
முயற்சிக்கிறான்
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
பூமியில்
liyuf'sida fīhā
لِيُفْسِدَ فِيهَا
அவன் விஷமம் செய்வதற்காக/அதில்
wayuh'lika
وَيُهْلِكَ
இன்னும் அழிக்கிறான்
l-ḥartha
ٱلْحَرْثَ
விளை நிலத்தை
wal-nasla
وَٱلنَّسْلَۗ
இன்னும் கால்நடையை
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
lā yuḥibbu
لَا يُحِبُّ
விரும்ப மாட்டான்
l-fasāda
ٱلْفَسَادَ
விஷமத்தை
அவன் (உங்களிலிருந்து) விலகினாலோ, பூமியில் விஷமம் செய்து (உங்கள்) விவசாயத்தையும் கால்நடைகளையும் அழித்துவிட முயற்சி செய்கின்றான். விஷமத்தை அல்லாஹ் விரும்புவதில்லை. ([௨] ஸூரத்துல் பகரா: ௨௦௫)
Tafseer
௨௦௬

وَاِذَا قِيْلَ لَهُ اتَّقِ اللّٰهَ اَخَذَتْهُ الْعِزَّةُ بِالْاِثْمِ فَحَسْبُهٗ جَهَنَّمُ ۗ وَلَبِئْسَ الْمِهَادُ ٢٠٦

wa-idhā qīla
وَإِذَا قِيلَ
கூறப்பட்டால்
lahu
لَهُ
அவனுக்கு
ittaqi
ٱتَّقِ
அஞ்சிக்கொள்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வை
akhadhathu
أَخَذَتْهُ
அவனைப் பிடித்துக் கொள்கிறது
l-ʿizatu
ٱلْعِزَّةُ
பெருமை
bil-ith'mi
بِٱلْإِثْمِۚ
பாவத்தைக் கொண்டு
faḥasbuhu
فَحَسْبُهُۥ
எனவே அவனுக்குப்போதும்
jahannamu
جَهَنَّمُۚ
நரகம்
walabi'sa
وَلَبِئْسَ
இன்னும் திட்டமாக கெட்டுவிட்டது
l-mihādu
ٱلْمِهَادُ
தங்குமிடம்
தவிர, "நீ அல்லாஹ்வுக்குப் பயந்துகொள். (விஷமம் செய்யாதே)" என அவனுக்குக் கூறப்பட்டால் (அவனுடைய) பெருமை அவனை (விஷமம் செய்து) பாவத்தைச் செய்யும்படியே (இழுத்துப்) பிடித்துக் கொள்கிறது. ஆகவே, அவனுக்கு நரகமே தகுதியாகும். நிச்சயமாக (அது) தங்குமிடங்களில் மிகக் கெட்டது. ([௨] ஸூரத்துல் பகரா: ௨௦௬)
Tafseer
௨௦௭

وَمِنَ النَّاسِ مَنْ يَّشْرِيْ نَفْسَهُ ابْتِغَاۤءَ مَرْضَاتِ اللّٰهِ ۗوَاللّٰهُ رَءُوْفٌۢ بِالْعِبَادِ ٢٠٧

wamina l-nāsi
وَمِنَ ٱلنَّاسِ
இன்னும் மக்களில்
man
مَن
எவர்
yashrī
يَشْرِى
விற்கிறார்
nafsahu
نَفْسَهُ
தன் உயிரை
ib'tighāa
ٱبْتِغَآءَ
தேடுதல்
marḍāti
مَرْضَاتِ
பொருத்தம்
l-lahi
ٱللَّهِۗ
அல்லாஹ்வின்
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
raūfun
رَءُوفٌۢ
மிக இரக்கமுடையவன்
bil-ʿibādi
بِٱلْعِبَادِ
அடியார்கள் மீது
அல்லாஹ்வின் (திருப்) பொருத்தத்தைப் பெறுவதற்காகத் தன்னுடைய உயிரையே தியாகம் செய்யக்கூடியவர்களும் மனிதர்களில் உண்டு. அல்லாஹ் (இத்தகைய) அடியார்கள்மீது மிகவும் கருணையுடையவன். ([௨] ஸூரத்துல் பகரா: ௨௦௭)
Tafseer
௨௦௮

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا ادْخُلُوْا فِى السِّلْمِ كَاۤفَّةً ۖوَّلَا تَتَّبِعُوْا خُطُوٰتِ الشَّيْطٰنِۗ اِنَّهٗ لَكُمْ عَدُوٌّ مُّبِيْنٌ ٢٠٨

yāayyuhā alladhīna āmanū
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கையாளர்களே!
ud'khulū
ٱدْخُلُوا۟
நுழையுங்கள்
fī l-sil'mi
فِى ٱلسِّلْمِ
இஸ்லாமில்
kāffatan
كَآفَّةً
முழுமையாக
walā tattabiʿū
وَلَا تَتَّبِعُوا۟
இன்னும் பின்பற்றாதீர்கள்
khuṭuwāti
خُطُوَٰتِ
அடிச்சுவடுகளை
l-shayṭāni
ٱلشَّيْطَٰنِۚ
ஷைத்தானின்
innahu
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
lakum
لَكُمْ
உங்களுக்கு
ʿaduwwun
عَدُوٌّ
எதிரி
mubīnun
مُّبِينٌ
பகிரங்கமான
நம்பிக்கையாளர்களே! நீங்கள் (தயங்கிக் கொண்டிருக்க வேண்டாம்.) இஸ்லாமில் முற்றிலும் நுழைந்து விடுங்கள். (இதனைத் தடை செய்யும்) ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் உங்களுக்குப் பகிரங்கமான எதிரியாவான். ([௨] ஸூரத்துல் பகரா: ௨௦௮)
Tafseer
௨௦௯

فَاِنْ زَلَلْتُمْ مِّنْۢ بَعْدِ مَا جَاۤءَتْكُمُ الْبَيِّنٰتُ فَاعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ عَزِيْزٌ حَكِيْمٌ ٢٠٩

fa-in zalaltum
فَإِن زَلَلْتُم
நீங்கள் சறுகினால்
min baʿdi mā jāatkumu
مِّنۢ بَعْدِ مَا جَآءَتْكُمُ
பின்னர்/வந்தது/உங்களிடம்
l-bayinātu
ٱلْبَيِّنَٰتُ
தெளிவான சான்றுகள்
fa-iʿ'lamū
فَٱعْلَمُوٓا۟
அறிந்து கொள்ளுங்கள்
anna l-laha
أَنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
ʿazīzun
عَزِيزٌ
மிகைத்தவன்
ḥakīmun
حَكِيمٌ
மகா ஞானவான்
(மனிதர்களே! சந்தேகத்திற்கிடமில்லாத) தெளிவான அத்தாட்சிகள் உங்களிடம் வந்தபின்னும் நீங்கள் (இஸ்லாமில் உறுதியாக இல்லாமல்) நழுவி விடுவீர்களானால் (உங்களைத் தண்டிப்பதில்) நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனும் (உங்களை எவ்விதம் நடத்தவேண்டும் என்பதை நன்கறிந்த) நுண்ணறிவுடைய வனுமாக இருக்கின்றான் என்பதை நீங்கள் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௨௦௯)
Tafseer
௨௧௦

هَلْ يَنْظُرُوْنَ اِلَّآ اَنْ يَّأْتِيَهُمُ اللّٰهُ فِيْ ظُلَلٍ مِّنَ الْغَمَامِ وَالْمَلٰۤىِٕكَةُ وَقُضِيَ الْاَمْرُ ۗ وَاِلَى اللّٰهِ تُرْجَعُ الْاُمُوْرُ ࣖ ٢١٠

hal yanẓurūna
هَلْ يَنظُرُونَ
எதிர்பார்க்கிறார்களா?
illā
إِلَّآ
தவிர
an yatiyahumu
أَن يَأْتِيَهُمُ
அவர்களிடம்வருவதை
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
fī ẓulalin
فِى ظُلَلٍ
நிழல்களில்
mina l-ghamāmi
مِّنَ ٱلْغَمَامِ
மேகங்களின்
wal-malāikatu
وَٱلْمَلَٰٓئِكَةُ
இன்னும் வானவர்கள்
waquḍiya
وَقُضِىَ
இன்னும் முடிக்கப்பட்டது
l-amru
ٱلْأَمْرُۚ
காரியம்
wa-ilā l-lahi
وَإِلَى ٱللَّهِ
அல்லாஹ்வின் பக்கமே
tur'jaʿu
تُرْجَعُ
திருப்பப்படும்
l-umūru
ٱلْأُمُورُ
காரியங்கள்
(நபியே! இவ்வளவு தெளிவான வசனங்களையும் நிராகரிக்கும் அவர்கள்) அல்லாஹ்வும் மலக்குகளும் (வெண்) மேகத்தின் நிழலில் அவர்களிடம் வந்து (அவர்களை அழித்து) அவர்களின் வேலையை முடிப்பதைத் தவிர (வேறெதையும்) அவர்கள் எதிர்பார்க்கின்றனரோ? (அவர்களுடைய) எல்லா விஷயங்களும் (மறுமையில்) அல்லாஹ்விடமே (விசாரணைக்குக்) கொண்டு வரப்படும். ([௨] ஸூரத்துல் பகரா: ௨௧௦)
Tafseer