Skip to content

ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் - Page: 8

Ali 'Imran

(ʾĀl ʿImrān)

௭௧

يٰٓاَهْلَ الْكِتٰبِ لِمَ تَلْبِسُوْنَ الْحَقَّ بِالْبَاطِلِ وَتَكْتُمُوْنَ الْحَقَّ وَاَنْتُمْ تَعْلَمُوْنَ ࣖ ٧١

yāahla l-kitābi
يَٰٓأَهْلَ ٱلْكِتَٰبِ
வேதக்காரர்களே
lima talbisūna
لِمَ تَلْبِسُونَ
ஏன் கலக்கிறீர்கள்
l-ḥaqa
ٱلْحَقَّ
உண்மையை
bil-bāṭili
بِٱلْبَٰطِلِ
பொய்யுடன்
wataktumūna
وَتَكْتُمُونَ
இன்னும் மறைக்கிறீர்கள்
l-ḥaqa
ٱلْحَقَّ
உண்மையை
wa-antum taʿlamūna
وَأَنتُمْ تَعْلَمُونَ
நீங்கள் அறிந்து கொண்டே
வேதத்தையுடையவர்களே! உண்மையை பொய்யுடன் ஏன் கலக்கின்றீர்கள். நீங்கள் நன்கறிந்து கொண்டே உண்மையை ஏன் மறைக்கின்றீர்கள். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௭௧)
Tafseer
௭௨

وَقَالَتْ طَّاۤىِٕفَةٌ مِّنْ اَهْلِ الْكِتٰبِ اٰمِنُوْا بِالَّذِيْٓ اُنْزِلَ عَلَى الَّذِيْنَ اٰمَنُوْا وَجْهَ النَّهَارِ وَاكْفُرُوْٓا اٰخِرَهٗ لَعَلَّهُمْ يَرْجِعُوْنَۚ ٧٢

waqālat
وَقَالَت
கூறினர்
ṭāifatun
طَّآئِفَةٌ
ஒரு கூட்டத்தினர்
min ahli l-kitābi
مِّنْ أَهْلِ ٱلْكِتَٰبِ
வேதக்காரர்களில்
āminū
ءَامِنُوا۟
நம்பிக்கை கொள்ளுங்கள்
bi-alladhī
بِٱلَّذِىٓ
எதை
unzila
أُنزِلَ
இறக்கப்பட்டது
ʿalā alladhīna
عَلَى ٱلَّذِينَ
மீது/எவர்கள்
āmanū
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டார்கள்
wajha l-nahāri
وَجْهَ ٱلنَّهَارِ
பகலின் ஆரம்பம்
wa-uk'furū
وَٱكْفُرُوٓا۟
இன்னும் நிராகரியுங்கள்
ākhirahu
ءَاخِرَهُۥ
அதன் இறுதியில்
laʿallahum yarjiʿūna
لَعَلَّهُمْ يَرْجِعُونَ
அவர்கள் திரும்புவதற்காக
வேதத்தையுடையவர்களில் ஒரு கூட்டத்தினர் (தங்கள் இனத்தாரை நோக்கிக்) கூறுகின்றனர்: "நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களுக்கு அருளப்பட்ட (இவ்வேதத்)தைக் காலையில் நம்பிக்கை கொண்டு மாலையில் (அதனை) நிராகரித்து விடுங்கள். (இதனால் நம்பிக்கை கொண்ட) அவர்களும் (குழப்பமடைந்து தங்கள் நம்பிக்கையிலிருந்து) விலகி விடக்கூடும்" (என்றும்) ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௭௨)
Tafseer
௭௩

وَلَا تُؤْمِنُوْٓا اِلَّا لِمَنْ تَبِعَ دِيْنَكُمْ ۗ قُلْ اِنَّ الْهُدٰى هُدَى اللّٰهِ ۙ اَنْ يُّؤْتٰىٓ اَحَدٌ مِّثْلَ مَآ اُوْتِيْتُمْ اَوْ يُحَاۤجُّوْكُمْ عِنْدَ رَبِّكُمْ ۗ قُلْ اِنَّ الْفَضْلَ بِيَدِ اللّٰهِ ۚ يُؤْتِيْهِ مَنْ يَّشَاۤءُ ۗوَاللّٰهُ وَاسِعٌ عَلِيْمٌ ۚ ٧٣

walā tu'minū
وَلَا تُؤْمِنُوٓا۟
இன்னும் நம்பாதீர்கள்
illā
إِلَّا
தவிர
liman
لِمَن
எவரை
tabiʿa
تَبِعَ
பின்பற்றினார்
dīnakum
دِينَكُمْ
உங்கள் மார்க்கத்தை
qul
قُلْ
கூறுவீராக
inna
إِنَّ
நிச்சயமாக
l-hudā
ٱلْهُدَىٰ
நேர்வழி
hudā
هُدَى
நேர்வழி
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
an yu'tā
أَن يُؤْتَىٰٓ
கொடுக்கப்படுவார்
aḥadun
أَحَدٌ
ஒருவர்
mith'la mā
مِّثْلَ مَآ
போன்று/எது
ūtītum
أُوتِيتُمْ
கொடுக்கப்பட்டீர்கள்
aw yuḥājjūkum
أَوْ يُحَآجُّوكُمْ
அல்லது/உங்களோடு தர்க்கிப்பார்கள்
ʿinda
عِندَ
இடம்
rabbikum
رَبِّكُمْۗ
உங்கள் இறைவன்
qul
قُلْ
கூறுவீராக
inna l-faḍla
إِنَّ ٱلْفَضْلَ
நிச்சயமாக/அருள்
biyadi
بِيَدِ
கையில்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
yu'tīhi
يُؤْتِيهِ
அதை கொடுக்கின்றான்
man
مَن
எவருக்கு
yashāu
يَشَآءُۗ
நாடுகிறான்
wal-lahu
وَٱللَّهُ
இன்னும் அல்லாஹ்
wāsiʿun
وَٰسِعٌ
விசாலமானவன்
ʿalīmun
عَلِيمٌ
மிக அறிந்தவன்
"உங்கள் மார்க்கத்தைப் பின்பற்றியவர்களைத் தவிர (மற்றெவரையும்) நீங்கள் நம்பாதீர்கள்" (என்றும் கூறுகின்றனர்). இதற்கு (நபியே!) நீங்கள் கூறுங்கள்: "உண்மையான நேர்வழி அல்லாஹ்வின் நேர்வழிதான்." (அன்றி அவர்கள் தங்கள் இனத்தாரை நோக்கி) "உங்களுக்குக் கொடுக்கப்பட்டது போன்று (வேதம்) மற்றெவருக்கும் கொடுக்கப்படும் என்பதையோ அல்லது அந்த நம்பிக்கையாளர்கள் உங்கள் இறைவன் முன்பாக தர்க்கித்து உங்களை வெற்றிக் கொள்வார்கள் என்பதையோ நம்பாதீர்கள்!" (என்றும் கூறுகின்றனர். அதற்கு நபியே!) நீங்கள் கூறுங்கள்: "(வேதம் என்னும்) பெரும்பாக்கியம் நிச்சயமாக அல்லாஹ்வின் கையில்தான் இருக்கின்றது. அதனை அவன் விரும்பியவர்களுக்கே கொடுக்கின்றான். அல்லாஹ் மிக விசாலமானவனும், (மனிதர்களின் தகுதியை) நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௭௩)
Tafseer
௭௪

يَخْتَصُّ بِرَحْمَتِهٖ مَنْ يَّشَاۤءُ ۗوَاللّٰهُ ذُو الْفَضْلِ الْعَظِيْمِ ٧٤

yakhtaṣṣu
يَخْتَصُّ
சொந்தமாக்குகிறான்
biraḥmatihi
بِرَحْمَتِهِۦ
தனது அருளுக்கு
man
مَن
எவரை
yashāu
يَشَآءُۗ
நாடுகிறான்
wal-lahu
وَٱللَّهُ
இன்னும் அல்லாஹ்
dhū l-faḍli
ذُو ٱلْفَضْلِ
அருளுடையவன்
l-ʿaẓīmi
ٱلْعَظِيمِ
மகத்தானது
அல்லாஹ் தான் விரும்பியவர்களை தன் அருளுக்குச் சொந்தமாக்கிக் கொள்கிறான். அவன் மகத்தான கொடையாளி யாகவும் இருக்கின்றான். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௭௪)
Tafseer
௭௫

۞ وَمِنْ اَهْلِ الْكِتٰبِ مَنْ اِنْ تَأْمَنْهُ بِقِنْطَارٍ يُّؤَدِّهٖٓ اِلَيْكَۚ وَمِنْهُمْ مَّنْ اِنْ تَأْمَنْهُ بِدِيْنَارٍ لَّا يُؤَدِّهٖٓ اِلَيْكَ اِلَّا مَا دُمْتَ عَلَيْهِ قَاۤىِٕمًا ۗ ذٰلِكَ بِاَنَّهُمْ قَالُوْا لَيْسَ عَلَيْنَا فِى الْاُمِّيّٖنَ سَبِيْلٌۚ وَيَقُوْلُوْنَ عَلَى اللّٰهِ الْكَذِبَ وَهُمْ يَعْلَمُوْنَ ٧٥

wamin ahli l-kitābi
وَمِنْ أَهْلِ ٱلْكِتَٰبِ
வேதக்காரர்களில்
man
مَنْ
எவர்
in tamanhu
إِن تَأْمَنْهُ
நீர் அவரை நம்பினால்
biqinṭārin
بِقِنطَارٍ
ஒரு பொற்குவியலில்
yu-addihi
يُؤَدِّهِۦٓ
அதை நிறைவேற்றுவார்
ilayka
إِلَيْكَ
உமக்கு
wamin'hum
وَمِنْهُم
இன்னும் அவர்களில்
man
مَّنْ
எவர்
in tamanhu
إِن تَأْمَنْهُ
(நீர்) அவரை நம்பினால்
bidīnārin
بِدِينَارٍ
ஒரு நாணயத்தால்
lā yu-addihi
لَّا يُؤَدِّهِۦٓ
அதை நிறைவேற்ற மாட்டார்
ilayka
إِلَيْكَ
உமக்கு
illā
إِلَّا
தவிர
mā dum'ta
مَا دُمْتَ
(நீர்) தொடர்ந்தால்
ʿalayhi
عَلَيْهِ
அவரிடம்
qāiman
قَآئِمًاۗ
நிற்பவராக
dhālika
ذَٰلِكَ
இது
bi-annahum
بِأَنَّهُمْ
காரணம்/நிச்சயமாக அவர்கள்
qālū
قَالُوا۟
கூறினார்கள்
laysa
لَيْسَ
இல்லை
ʿalaynā
عَلَيْنَا
நம்மீது
fī l-umiyīna
فِى ٱلْأُمِّيِّۦنَ
பாமரர்கள்விஷயத்தில்
sabīlun
سَبِيلٌ
குற்றம்
wayaqūlūna
وَيَقُولُونَ
இன்னும் கூறுகின்றனர்
ʿalā l-lahi
عَلَى ٱللَّهِ
அல்லாஹ்வின் மீது
l-kadhiba
ٱلْكَذِبَ
பொய்யை
wahum yaʿlamūna
وَهُمْ يَعْلَمُونَ
அவர்கள் அறிந்து கொண்டே
(நபியே!) வேதத்தையுடையவர்களில் சிலர் இருக்கின்றனர். அவர்களிடம் நீங்கள் ஒரு (பொற்) குவியலையே நம்பி ஒப்படைத்தபோதிலும் (யாதொரு குறைவுமின்றி) உங்களிடம் திரும்ப செலுத்தி விடுவார்கள். அவர்களில் வேறு சிலரும் இருக்கின்றனர். அவர்களிடம் நீங்கள் ஓர் அற்ப நாணயத்தையே நம்பி ஒப்படைத்தாலும் அதற்காக நீங்கள் (வம்பு செய்து) அவர்கள் (தலை) மேல் நிற்காத வரையில் அதனைத் திரும்பக் கொடுக்க மாட்டார்கள். இதன் காரணம்: (தங்களையல்லாத) "பாமரர் விஷயத்தில் (நாம் என்ன கொடுமை செய்தபோதிலும் அதற்காக) நம்மை குற்றம் பிடிக்க வழியில்லை" என்று அவர்கள் (பகிரங்கமாகக்) கூறுவதுதான். ஆனால், அவர்கள் அறிந்து கொண்டே (தங்களைக் குற்றம் பிடிக்கமாட்டான் என்று) அல்லாஹ்வின் மீது பொய் கூறுகின்றனர். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௭௫)
Tafseer
௭௬

بَلٰى مَنْ اَوْفٰى بِعَهْدِهٖ وَاتَّقٰى فَاِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُتَّقِيْنَ ٧٦

balā
بَلَىٰ
ஏனில்லை
man
مَنْ
எவர்
awfā
أَوْفَىٰ
நிறைவேற்றினார்
biʿahdihi
بِعَهْدِهِۦ
தன் வாக்குறுதியை
wa-ittaqā
وَٱتَّقَىٰ
இன்னும் அல்லாஹ்வை அஞ்சினார்
fa-inna l-laha
فَإِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
yuḥibbu
يُحِبُّ
நேசிக்கிறான்
l-mutaqīna
ٱلْمُتَّقِينَ
அஞ்சுபவர்களை
(உண்மை) அவ்வாறன்று. எவர்கள் தங்கள் வாக்குறுதியை நிறைவேற்றி, (இறைவனுக்கு) பயந்து நடக்கின்றார்களோ அவர்கள்தாம் குற்றம் பிடிக்கப்படமாட்டார்கள். நிச்சயமாக அல்லாஹ் (இத்தகைய) இறை அச்சம் உடையவர்களை நேசிக்கின்றான். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௭௬)
Tafseer
௭௭

اِنَّ الَّذِيْنَ يَشْتَرُوْنَ بِعَهْدِ اللّٰهِ وَاَيْمَانِهِمْ ثَمَنًا قَلِيْلًا اُولٰۤىِٕكَ لَا خَلَاقَ لَهُمْ فِى الْاٰخِرَةِ وَلَا يُكَلِّمُهُمُ اللّٰهُ وَلَا يَنْظُرُ اِلَيْهِمْ يَوْمَ الْقِيٰمَةِ وَلَا يُزَكِّيْهِمْ ۖ وَلَهُمْ عَذَابٌ اَلِيْمٌ ٧٧

inna
إِنَّ
நிச்சயமாக
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
yashtarūna
يَشْتَرُونَ
வாங்குகிறார்கள்
biʿahdi
بِعَهْدِ
வாக்குறுதிக்குபகரமாக
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
wa-aymānihim
وَأَيْمَٰنِهِمْ
இன்னும் அவர்களுடைய சத்தியங்கள்
thamanan
ثَمَنًا
விலையை
qalīlan
قَلِيلًا
சொற்பமானது
ulāika
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்
lā khalāqa
لَا خَلَٰقَ
அறவே (நற்)பாக்கியமில்லை
lahum
لَهُمْ
அவர்களுக்கு
fī l-ākhirati
فِى ٱلْءَاخِرَةِ
மறுமையில்
walā yukallimuhumu
وَلَا يُكَلِّمُهُمُ
இன்னும் அவர்களுடன் பேசமாட்டான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
walā yanẓuru
وَلَا يَنظُرُ
இன்னும் பார்க்கமாட்டான்
ilayhim
إِلَيْهِمْ
அவர்கள் பக்கம்
yawma l-qiyāmati
يَوْمَ ٱلْقِيَٰمَةِ
மறுமை நாளில்
walā yuzakkīhim
وَلَا يُزَكِّيهِمْ
இன்னும் அவர்களைத் தூய்மைப்படுத்தமாட்டான்
walahum
وَلَهُمْ
இன்னும் அவர்களுக்கு
ʿadhābun
عَذَابٌ
வேதனை
alīmun
أَلِيمٌ
துன்புறுத்தக்கூடியது
எவர்கள் அல்லாஹ்விடத்தில் செய்த வாக்குறுதியையும், தங்களுடைய சத்தியங்களையும் சொற்ப விலைக்கு விற்று விடுகின்றார்களோ அவர்களுக்கு மறுமையில் நிச்சயமாக யாதொரு (நற்)பாக்கியமுமில்லை. அன்றி அல்லாஹ் மறுமையில் அவர்களுடன் (விரும்பிப்) பேசவுமாட்டான்; (அன்புடன்) அவர்களை இறுதிநாளில் திரும்பிப் பார்க்கவும் மாட்டான்; அவர்களைப் புனிதப்படுத்தவும் மாட்டான். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு. ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௭௭)
Tafseer
௭௮

وَاِنَّ مِنْهُمْ لَفَرِيْقًا يَّلْوٗنَ اَلْسِنَتَهُمْ بِالْكِتٰبِ لِتَحْسَبُوْهُ مِنَ الْكِتٰبِ وَمَا هُوَ مِنَ الْكِتٰبِۚ وَيَقُوْلُوْنَ هُوَ مِنْ عِنْدِ اللّٰهِ وَمَا هُوَ مِنْ عِنْدِ اللّٰهِ ۚ وَيَقُوْلُوْنَ عَلَى اللّٰهِ الْكَذِبَ وَهُمْ يَعْلَمُوْنَ ٧٨

wa-inna
وَإِنَّ
நிச்சயமாக
min'hum
مِنْهُمْ
அவர்களில்
lafarīqan
لَفَرِيقًا
உறுதியாக ஒரு பிரிவினர்
yalwūna
يَلْوُۥنَ
கோணுகின்றனர்
alsinatahum
أَلْسِنَتَهُم
தங்கள் நாவை
bil-kitābi
بِٱلْكِتَٰبِ
வேதத்தில்
litaḥsabūhu
لِتَحْسَبُوهُ
(நீங்கள்) அதை எண்ணுவதற்காக
mina l-kitābi
مِنَ ٱلْكِتَٰبِ
வேதத்தில்
wamā
وَمَا
இன்னும் இல்லை
huwa mina l-kitābi
هُوَ مِنَ ٱلْكِتَٰبِ
அது/வேதத்தில்
wayaqūlūna
وَيَقُولُونَ
இன்னும் கூறுகின்றனர்
huwa
هُوَ
அது
min ʿindi l-lahi
مِنْ عِندِ ٱللَّهِ
அல்லாஹ்விடமிருந்து
wamā
وَمَا
இல்லை
huwa
هُوَ
அது
min
مِنْ
இருந்து
ʿindi l-lahi
عِندِ ٱللَّهِ
அல்லாஹ்விடம்
wayaqūlūna
وَيَقُولُونَ
இன்னும் கூறுகின்றனர்
ʿalā
عَلَى
மீது
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்
l-kadhiba
ٱلْكَذِبَ
பொய்
wahum yaʿlamūna
وَهُمْ يَعْلَمُونَ
அவர்கள் அறிந்து கொண்டே
நிச்சயமாக அவர்களில் ஒரு பிரிவினர் இருக்கின்றனர். (அவர்கள்) வேதத்தை ஓதும்போது (அத்துடன் பல வாக்கியங் களைக் கலந்து, அதுவும்) வேதத்திலுள்ளதுதான் என நீங்கள் எண்ணிக்கொள்வதற்காக தங்கள் நாவைக் கோணி உளறுகின்றனர். எனினும் அது வேதத்திலுள்ளது அல்ல. அன்றி "அது அல்லாஹ்விடமிருந்து வந்தது" என்றும் அவர்கள் கூறுகின்றனர். ஆனால், அது அல்லாஹ்விடமிருந்து வந்ததல்ல. அவர்கள் நன்கறிந்து கொண்டே அல்லாஹ்வின் மீது இவ்வாறு பொய் கூறுகின்றனர். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௭௮)
Tafseer
௭௯

مَا كَانَ لِبَشَرٍ اَنْ يُّؤْتِيَهُ اللّٰهُ الْكِتٰبَ وَالْحُكْمَ وَالنُّبُوَّةَ ثُمَّ يَقُوْلَ لِلنَّاسِ كُوْنُوْا عِبَادًا لِّيْ مِنْ دُوْنِ اللّٰهِ وَلٰكِنْ كُوْنُوْا رَبَّانِيّٖنَ بِمَا كُنْتُمْ تُعَلِّمُوْنَ الْكِتٰبَ وَبِمَا كُنْتُمْ تَدْرُسُوْنَ ۙ ٧٩

mā kāna
مَا كَانَ
உசிதமில்லை
libasharin
لِبَشَرٍ
ஒரு மனிதருக்கு
an yu'tiyahu
أَن يُؤْتِيَهُ
அவருக்கு கொடுக்க
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
l-kitāba
ٱلْكِتَٰبَ
வேதத்தை
wal-ḥuk'ma
وَٱلْحُكْمَ
இன்னும் ஞானம்
wal-nubuwata
وَٱلنُّبُوَّةَ
இன்னும் நபித்துவம்
thumma
ثُمَّ
பிறகு
yaqūla
يَقُولَ
கூறுவார்
lilnnāsi
لِلنَّاسِ
மக்களுக்கு
kūnū
كُونُوا۟
ஆகிவிடுங்கள்
ʿibādan
عِبَادًا
அடியார்களாக
لِّى
என்
min dūni l-lahi
مِن دُونِ ٱللَّهِ
அல்லாஹ்வைத் தவிர்த்து
walākin
وَلَٰكِن
என்றாலும்
kūnū
كُونُوا۟
ஆகிவிடுங்கள்
rabbāniyyīna
رَبَّٰنِيِّۦنَ
சீர்திருத்தம் செய்யும் இறையச்சமுள்ள நிர்வாகிகளாக
bimā kuntum
بِمَا كُنتُمْ
நீங்கள் இருப்பதால்
tuʿallimūna
تُعَلِّمُونَ
கற்பிக்கிறீர்கள்
l-kitāba
ٱلْكِتَٰبَ
வேதத்தை
wabimā kuntum
وَبِمَا كُنتُمْ
இன்னும் நீங்கள் இருப்பதால்
tadrusūna
تَدْرُسُونَ
கற்றுக் கொள்கிறீர்கள்
ஒரு மனிதருக்கு, வேதத்தையும், ஞானத்தையும், நபித்துவத்தையும் அல்லாஹ் கொடுத்த பின்னர் அவர் மனிதர்களை நோக்கி "அல்லாஹ்வை அன்றி என்னை வணங்குங்கள்" என்று கூறுவதற்கு இல்லை. ஆயினும் (மனிதர்களை நோக்கி) "நீங்கள் வேதத்தை (மற்றவர்களுக்குக்) கற்றுக் கொடுத்துக் கொண்டும், ஓதிக்கொண்டும் இருப்பதன் காரணமாக, (அதில் உள்ளவாறு) இறைவன் ஒருவனையே வணங்கும் மனிதர்களாக ஆகிவிடுங்கள்" என்றுதான் கூறுவார். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௭௯)
Tafseer
௮௦

وَلَا يَأْمُرَكُمْ اَنْ تَتَّخِذُوا الْمَلٰۤىِٕكَةَ وَالنَّبِيّٖنَ اَرْبَابًا ۗ اَيَأْمُرُكُمْ بِالْكُفْرِ بَعْدَ اِذْ اَنْتُمْ مُّسْلِمُوْنَ ࣖ ٨٠

walā
وَلَا
அவர் ஏவுவது இல்லை
yamurakum
يَأْمُرَكُمْ
அவர் ஏவுவது இல்லை உங்களை
an tattakhidhū
أَن تَتَّخِذُوا۟
நீங்கள்எடுத்துக்கொள்வது
l-malāikata
ٱلْمَلَٰٓئِكَةَ
வானவர்களை
wal-nabiyīna
وَٱلنَّبِيِّۦنَ
இன்னும் நபிமார்களை
arbāban
أَرْبَابًاۗ
கடவுள்களாக
ayamurukum
أَيَأْمُرُكُم
உங்களைஏவுவாரா?
bil-kuf'ri
بِٱلْكُفْرِ
நிராகரிக்கும்படி
baʿda
بَعْدَ
பின்னர்
idh antum
إِذْ أَنتُم
நீங்கள் ஆகிய
mus'limūna
مُّسْلِمُونَ
முஸ்லிம்களாக
தவிர "மலக்குகளையும், நபிமார்களையும் தெய்வங்களாக எடுத்துக் கொள்ளுங்கள்" என்றும் அவர் உங்களுக்குக் கட்டளையிடமாட்டார். என்னே! இறைவன் ஒருவனையே நீங்கள் அங்கீகரித்த பின்னர் (அவனை) நிராகரிக்கும்படி அவர் உங்களை ஏவுவாரா? ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௮௦)
Tafseer