Skip to content

ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் - Page: 14

Ali 'Imran

(ʾĀl ʿImrān)

௧௩௧

وَاتَّقُوا النَّارَ الَّتِيْٓ اُعِدَّتْ لِلْكٰفِرِيْنَ ۚ ١٣١

wa-ittaqū
وَٱتَّقُوا۟
இன்னும் அஞ்சுங்கள்
l-nāra allatī
ٱلنَّارَ ٱلَّتِىٓ
நெருப்பை/எது
uʿiddat
أُعِدَّتْ
தயார்படுத்தப்பட்டது
lil'kāfirīna
لِلْكَٰفِرِينَ
நிராகரிப்பாளர் களுக்காக
(நரக) நெருப்பிற்குப் பயந்து கொள்ளுங்கள். அது (இறைவனுடைய இக்கட்டளையை) நிராகரிப்பவர்களுக்காக தயார்படுத்தப்பட்டுள்ளது. ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௩௧)
Tafseer
௧௩௨

وَاَطِيْعُوا اللّٰهَ وَالرَّسُوْلَ لَعَلَّكُمْ تُرْحَمُوْنَۚ ١٣٢

wa-aṭīʿū
وَأَطِيعُوا۟
இன்னும் கீழ்ப்படியுங்கள்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வுக்கு
wal-rasūla
وَٱلرَّسُولَ
இன்னும் தூதருக்கு
laʿallakum tur'ḥamūna
لَعَلَّكُمْ تُرْحَمُونَ
நீங்கள் கருணை காட்டப்படுவதற்காக
அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும் கீழ்படிந்து நடங்கள். அதனால் நீங்கள் (அல்லாஹ்வின்) அன்பை அடையலாம். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௩௨)
Tafseer
௧௩௩

۞ وَسَارِعُوْٓا اِلٰى مَغْفِرَةٍ مِّنْ رَّبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمٰوٰتُ وَالْاَرْضُۙ اُعِدَّتْ لِلْمُتَّقِيْنَۙ ١٣٣

wasāriʿū
وَسَارِعُوٓا۟
இன்னும் விரையுங்கள்
ilā
إِلَىٰ
பக்கம்
maghfiratin
مَغْفِرَةٍ
மன்னிப்பு
min rabbikum
مِّن رَّبِّكُمْ
உங்கள் இறைவனின்
wajannatin
وَجَنَّةٍ
இன்னும் சொர்க்கம்
ʿarḍuhā
عَرْضُهَا
அதன் அகலம்
l-samāwātu
ٱلسَّمَٰوَٰتُ
வானங்கள்
wal-arḍu
وَٱلْأَرْضُ
இன்னும் பூமி
uʿiddat
أُعِدَّتْ
தயார்படுத்தப்பட்டுள்ளது
lil'muttaqīna
لِلْمُتَّقِينَ
அல்லாஹ்வை அஞ்சுபவர்களுக்கு
உங்கள் இறைவனின் மன்னிப்புக்கும், சுவர்க்கத்துக்கும் விரைந்து செல்லுங்கள். அதன் விசாலம் வானங்கள், பூமியின் விசாலத்தைப் போன்றது. (அது) இறை அச்சம் உடையவர் களுக்காக(வே) தயார்படுத்தப்பட்டுள்ளது. ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௩௩)
Tafseer
௧௩௪

الَّذِيْنَ يُنْفِقُوْنَ فِى السَّرَّۤاءِ وَالضَّرَّۤاءِ وَالْكَاظِمِيْنَ الْغَيْظَ وَالْعَافِيْنَ عَنِ النَّاسِۗ وَاللّٰهُ يُحِبُّ الْمُحْسِنِيْنَۚ ١٣٤

alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
yunfiqūna
يُنفِقُونَ
தர்மம் புரிவார்கள்
fī l-sarāi
فِى ٱلسَّرَّآءِ
செல்வத்தில்
wal-ḍarāi
وَٱلضَّرَّآءِ
இன்னும் வறுமையில்
wal-kāẓimīna
وَٱلْكَٰظِمِينَ
இன்னும் மென்றுவிடுபவர்கள்
l-ghayẓa
ٱلْغَيْظَ
கோபத்தை
wal-ʿāfīna
وَٱلْعَافِينَ
இன்னும் மன்னித்து விடுபவர்கள்
ʿani l-nāsi
عَنِ ٱلنَّاسِۗ
மக்களை
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
yuḥibbu
يُحِبُّ
நேசிக்கிறான்
l-muḥ'sinīna
ٱلْمُحْسِنِينَ
நல்லறம் புரிவோரை
அவர்கள் (எத்தகையவர்கள் என்றால்) செல்வ நிலைமையிலும், வறுமை நிலைமையிலும் தானம் செய்து கொண்டே இருப்பார்கள். கோபத்தை விழுங்கி விடுவார்கள். மனிதர்(களின் குற்றங்)களை மன்னித்து விடுவார்கள். அல்லாஹ் (இத்தகைய) அழகிய குணமுடையவர்களை நேசிக்கின்றான். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௩௪)
Tafseer
௧௩௫

وَالَّذِيْنَ اِذَا فَعَلُوْا فَاحِشَةً اَوْ ظَلَمُوْٓا اَنْفُسَهُمْ ذَكَرُوا اللّٰهَ فَاسْتَغْفَرُوْا لِذُنُوْبِهِمْۗ وَمَنْ يَّغْفِرُ الذُّنُوْبَ اِلَّا اللّٰهُ ۗ وَلَمْ يُصِرُّوْا عَلٰى مَا فَعَلُوْا وَهُمْ يَعْلَمُوْنَ ١٣٥

wa-alladhīna
وَٱلَّذِينَ
இன்னும் எவர்கள்
idhā faʿalū
إِذَا فَعَلُوا۟
செய்தால்
fāḥishatan
فَٰحِشَةً
ஒரு மானக்கேடானதை
aw
أَوْ
அல்லது
ẓalamū
ظَلَمُوٓا۟
அநீதியிழைத்தால்
anfusahum
أَنفُسَهُمْ
தங்களுக்கு
dhakarū
ذَكَرُوا۟
நினைவுகூர்வார்கள்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வை
fa-is'taghfarū
فَٱسْتَغْفَرُوا۟
இன்னும் மன்னிப்புத் தேடுவார்கள்
lidhunūbihim
لِذُنُوبِهِمْ
தங்கள் பாவங்களுக்கு
waman yaghfiru
وَمَن يَغْفِرُ
யார்?/மன்னிப்பார்
l-dhunūba
ٱلذُّنُوبَ
பாவங்களை
illā
إِلَّا
தவிர
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
walam yuṣirrū
وَلَمْ يُصِرُّوا۟
இன்னும் நிலைத்திருக்க மாட்டார்கள்
ʿalā
عَلَىٰ
மீது
mā faʿalū
مَا فَعَلُوا۟
எது/செய்தார்கள்
wahum
وَهُمْ
அவர்களுமோ
yaʿlamūna
يَعْلَمُونَ
அறிந்து கொண்டு
அன்றி, அவர்கள் யாதொரு மானக்கேடான காரியத்தைச் செய்து விட்டாலும் அல்லது தங்களுக்குத் தாங்களே தீங்கிழைத்துக் கொண்டாலும் உடனே அல்லாஹ்வை நினைத்து (அவனிடமே) தங்களுடைய பாவமன்னிப்பைத் தேடுவார்கள். (அல்லாஹ்வும் அவர்களை மன்னித்து விடுவான்.) அல்லாஹ்வையன்றி (இத்தகையவர்களின்) குற்றங்களை மன்னிப்பவன் யார்? அவர்கள் செய்த (தவறான) காரியத்தை (தவறென்று) அவர்கள் அறிந்து கொண்டால் அதில் நிலைத்திருக்கவும் மாட்டார்கள். (உடனே அதில் இருந்து விலகி விடுவார்கள்.) ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௩௫)
Tafseer
௧௩௬

اُولٰۤىِٕكَ جَزَاۤؤُهُمْ مَّغْفِرَةٌ مِّنْ رَّبِّهِمْ وَجَنّٰتٌ تَجْرِيْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَا ۗ وَنِعْمَ اَجْرُ الْعٰمِلِيْنَۗ ١٣٦

ulāika
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்
jazāuhum
جَزَآؤُهُم
அவர்களின் கூலி
maghfiratun
مَّغْفِرَةٌ
மன்னிப்பு
min rabbihim
مِّن رَّبِّهِمْ
அவர்களுடைய இறைவனிடமிருந்து
wajannātun
وَجَنَّٰتٌ
இன்னும் சொர்க்கங்கள்
tajrī
تَجْرِى
ஓடும்
min taḥtihā
مِن تَحْتِهَا
அவற்றின்கீழிருந்து
l-anhāru
ٱلْأَنْهَٰرُ
ஆறுகள்
khālidīna
خَٰلِدِينَ
நிரந்தரமானவர்கள்
fīhā
فِيهَاۚ
அதில்
waniʿ'ma
وَنِعْمَ
இன்னும் சிறந்ததாகிவிட்டது
ajru l-ʿāmilīna
أَجْرُ ٱلْعَٰمِلِينَ
கூலி/நன்மைபுரிவோர்
இத்தகையவர்களுக்குப் பிரதிபலன், அவர்கள் இறைவனுடைய மன்னிப்பும், நீரருவிகள் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கும் சுவனபதிகளும் ஆகும். அவர்கள் அங்கு என்றென்றும் தங்கிவிடுவார்கள். நன்மை செய்தவர்களின் கூலியும் நன்றே! ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௩௬)
Tafseer
௧௩௭

قَدْ خَلَتْ مِنْ قَبْلِكُمْ سُنَنٌۙ فَسِيْرُوْا فِى الْاَرْضِ فَانْظُرُوْا كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُكَذِّبِيْنَ ١٣٧

qad khalat
قَدْ خَلَتْ
சென்றுவிட்டன
min qablikum
مِن قَبْلِكُمْ
உங்களுக்குமுன்னர்
sunanun
سُنَنٌ
வரலாறுகள்
fasīrū
فَسِيرُوا۟
ஆகவே சுற்றுங்கள்
fī l-arḍi fa-unẓurū
فِى ٱلْأَرْضِ فَٱنظُرُوا۟
பூமியில்/இன்னும் பாருங்கள்
kayfa kāna
كَيْفَ كَانَ
எப்படி இருந்தது
ʿāqibatu
عَٰقِبَةُ
முடிவு
l-mukadhibīna
ٱلْمُكَذِّبِينَ
பொய்ப்பிப்பவர்களின்
உங்களுக்கு முன்னரும் (இத்தகைய) பல நிகழ்வுகள் நிகழ்ந்திருக்கின்றன. (ஆகவே) நீங்கள் பூமியில் சுற்றித் திரிந்து (இறைவனுடைய வசனங்களைப்) பொய்யாக்கியவர்களின் முடிவு எவ்வாறாயிற்று என்பதைப் பாருங்கள். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௩௭)
Tafseer
௧௩௮

هٰذَا بَيَانٌ لِّلنَّاسِ وَهُدًى وَّمَوْعِظَةٌ لِّلْمُتَّقِيْنَ ١٣٨

hādhā
هَٰذَا
இது
bayānun
بَيَانٌ
தெளிவுரையாகும்
lilnnāsi
لِّلنَّاسِ
மக்களுக்கு
wahudan
وَهُدًى
இன்னும் நேர்வழி
wamawʿiẓatun
وَمَوْعِظَةٌ
இன்னும் நல்லுபதேசம்
lil'muttaqīna
لِّلْمُتَّقِينَ
அல்லாஹ்வை அஞ்சுபவர்களுக்கு
இது (பொதுவாக) மனிதர்களுக்கு (உண்மையைத்) தெளிவாக்கக் கூடியதாகவும், (சிறப்பாக) இறை அச்சமுடைய வர்களுக்கு வழிகாட்டியாகவும், நல்லுபதேசமாகவும் இருக்கின்றது. ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௩௮)
Tafseer
௧௩௯

وَلَا تَهِنُوْا وَلَا تَحْزَنُوْا وَاَنْتُمُ الْاَعْلَوْنَ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ ١٣٩

walā tahinū
وَلَا تَهِنُوا۟
துணிவிழக்காதீர்கள்
walā taḥzanū
وَلَا تَحْزَنُوا۟
இன்னும் கவலைப்படாதீர்கள்
wa-antumu
وَأَنتُمُ
நீங்கள்
l-aʿlawna
ٱلْأَعْلَوْنَ
உயர்ந்தவர்கள்தான்
in kuntum
إِن كُنتُم
நீங்கள் இருந்தால்
mu'minīna
مُّؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களாக
(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் தைரியத்தை இழந்திட வேண்டாம். கவலைப்படவும் வேண்டாம். (உண்மையாகவே) நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் நீங்கள்தான் மேன்மை அடைவீர்கள். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௩௯)
Tafseer
௧௪௦

اِنْ يَّمْسَسْكُمْ قَرْحٌ فَقَدْ مَسَّ الْقَوْمَ قَرْحٌ مِّثْلُهٗ ۗوَتِلْكَ الْاَيَّامُ نُدَاوِلُهَا بَيْنَ النَّاسِۚ وَلِيَعْلَمَ اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا وَيَتَّخِذَ مِنْكُمْ شُهَدَاۤءَ ۗوَاللّٰهُ لَا يُحِبُّ الظّٰلِمِيْنَۙ ١٤٠

in yamsaskum
إِن يَمْسَسْكُمْ
உங்களைஅடைந்தால்
qarḥun
قَرْحٌ
காயம்
faqad massa
فَقَدْ مَسَّ
அடைந்துள்ளது
l-qawma
ٱلْقَوْمَ
(அக்)கூட்டத்திற்கு
qarḥun
قَرْحٌ
காயம்
mith'luhu
مِّثْلُهُۥۚ
அது போன்ற
watil'ka
وَتِلْكَ
அந்த
l-ayāmu
ٱلْأَيَّامُ
நாள்கள்
nudāwiluhā
نُدَاوِلُهَا
அவற்றை சுழற்றுகிறோம்
bayna l-nāsi
بَيْنَ ٱلنَّاسِ
மத்தியில்/மக்கள்
waliyaʿlama
وَلِيَعْلَمَ
இன்னும் அறிவதற்காக
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
āmanū
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டார்கள்
wayattakhidha
وَيَتَّخِذَ
இன்னும் எடுப்பதற்காக
minkum
مِنكُمْ
உங்களில்
shuhadāa
شُهَدَآءَۗ
தியாகிகளை
wal-lahu
وَٱللَّهُ
இன்னும் அல்லாஹ்
lā yuḥibbu
لَا يُحِبُّ
நேசிக்க மாட்டான்
l-ẓālimīna
ٱلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்களை
நீங்கள் (தோல்வியுற்றுக்) காயமடைந்தால் (அதன் காரணமாக தைரியம் இழக்காதீர்கள். ஏனென்றால்,) அந்த மக்களும் இதைப்போன்றே (தோல்வியுற்றுக்) காயமடைந்திருக்கின்றனர். இத்தகைய கஷ்டகாலம் மனிதர்களுக்கு இடையில் மாறி மாறி வரும்படி நாம்தாம் செய்கின்றோம். ஏனென்றால், உங்களில் உண்மையாகவே நம்பிக்கை கொண்டவர்கள் யாரென்று அல்லாஹ் அறி(வித்து விடு)வதற்காகவும், உங்களில் (மார்க்கத்திற்காக உயிரை அர்ப்பணம் செய்யும்) மாபெரும் தியாகியை அவன் எடுத்(தறிவிப்ப) தற்காகவுமே (இவ்வாறு செய்கின்றான்). அநியாயக்காரர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை. ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௪௦)
Tafseer