Skip to content

ஸூரா ஸூரத்துல் மாயிதா - Page: 12

Al-Ma'idah

(al-Māʾidah)

௧௧௧

وَاِذْ اَوْحَيْتُ اِلَى الْحَوَارِيّٖنَ اَنْ اٰمِنُوْا بِيْ وَبِرَسُوْلِيْ ۚ قَالُوْٓا اٰمَنَّا وَاشْهَدْ بِاَنَّنَا مُسْلِمُوْنَ ١١١

wa-idh
وَإِذْ
சமயத்தை நினைவு கூர்வீராக
awḥaytu
أَوْحَيْتُ
வஹீ அறிவித்தேன்
ilā l-ḥawāriyīna
إِلَى ٱلْحَوَارِيِّۦنَ
பக்கம்/சிஷ்யர்கள்
an āminū bī
أَنْ ءَامِنُوا۟ بِى
நம்பிக்கை கொள்ளுங்கள் என்று/என்னை
wabirasūlī
وَبِرَسُولِى
இன்னும் என் தூதரை
qālū
قَالُوٓا۟
கூறினார்கள்
āmannā
ءَامَنَّا
நம்பிக்கை கொண்டோம்
wa-ish'had
وَٱشْهَدْ
இன்னும் சாட்சியளிப்பீராக
bi-annanā
بِأَنَّنَا
நிச்சயமாக நாங்கள்
mus'limūna
مُسْلِمُونَ
முஸ்லிம்கள்
அன்றி, என்னையும், என்னுடைய தூதரையும் (அதாவது உங்களையும்) நம்பிக்கை கொள்ளும்படி (அப்போஸ்தலர்கள் என்னும் உங்களது) சிஷ்யர்களுக்கு நான் வஹீயின் மூலம் தெரிவித்த சமயத்தில், அவர்கள் (அவ்வாறே) நாங்கள் நம்பினோம்; நிச்சயமாக நாங்கள் (உங்களுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்கள் என்பதற்கு நீங்களே சாட்சியாக இருங்கள்! என்று கூறியதையும் நினைத்துப் பாருங்கள்" (என்றும் அந்நாளில் கூறுவான்.) ([௫] ஸூரத்துல் மாயிதா: ௧௧௧)
Tafseer
௧௧௨

اِذْ قَالَ الْحَوَارِيُّوْنَ يٰعِيْسَى ابْنَ مَرْيَمَ هَلْ يَسْتَطِيْعُ رَبُّكَ اَنْ يُّنَزِّلَ عَلَيْنَا مَاۤىِٕدَةً مِّنَ السَّمَاۤءِ ۗقَالَ اتَّقُوا اللّٰهَ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ ١١٢

idh qāla
إِذْ قَالَ
கூறிய சமயம்
l-ḥawāriyūna
ٱلْحَوَارِيُّونَ
சிஷ்யர்கள்
yāʿīsā
يَٰعِيسَى
ஈஸாவே
ib'na
ٱبْنَ
மகன்
maryama
مَرْيَمَ
மர்யமுடைய
hal yastaṭīʿu
هَلْ يَسْتَطِيعُ
இயலுவானா?
rabbuka
رَبُّكَ
உம் இறைவன்
an yunazzila
أَن يُنَزِّلَ
அவன் இறக்குவதற்கு
ʿalaynā
عَلَيْنَا
எங்கள் மீது
māidatan
مَآئِدَةً
ஓர் உணவுத் தட்டை
mina l-samāi
مِّنَ ٱلسَّمَآءِۖ
வானத்திலிருந்து
qāla
قَالَ
கூறினார்
ittaqū
ٱتَّقُوا۟
அஞ்சுங்கள்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வை
in kuntum
إِن كُنتُم
நீங்கள் இருந்தால்
mu'minīna
مُّؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களாக
தவிர (நபியே! நீங்கள் அவர்களுக்கு ஞாபகமூட்டுங்கள்:) அந்த சிஷ்யர்கள் (ஈஸாவை நோக்கி) "மர்யமுடைய மகன் ஈஸாவே! உங்களுடைய இறைவன், வானத்திலிருந்து எங்களுக்காக ஓர் உணவு(ப் பொருள்கள் நிரம்பிய) தட்டை இறக்கி வைக்க முடியுமா?" என்று கேட்டதற்கு (ஈஸா, அவர்களை நோக்கி) "மெய்யாகவே நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் (இத்தகைய கேள்வி கேட்பதைப் பற்றி) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து கொள்ளுங்கள்" என்று கூறினார். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௧௧௨)
Tafseer
௧௧௩

قَالُوْا نُرِيْدُ اَنْ نَّأْكُلَ مِنْهَا وَتَطْمَىِٕنَّ قُلُوْبُنَا وَنَعْلَمَ اَنْ قَدْ صَدَقْتَنَا وَنَكُوْنَ عَلَيْهَا مِنَ الشّٰهِدِيْنَ ١١٣

qālū
قَالُوا۟
கூறினார்கள்
nurīdu
نُرِيدُ
நாடுகிறோம்
an nakula
أَن نَّأْكُلَ
நாங்கள் புசிப்பதற்கு
min'hā
مِنْهَا
அதிலிருந்து
wataṭma-inna
وَتَطْمَئِنَّ
இன்னும் திருப்தியடைவதற்கு
qulūbunā
قُلُوبُنَا
எங்கள் உள்ளங்கள்
wanaʿlama
وَنَعْلَمَ
இன்னும் நாங்கள் அறிவதற்கு
an
أَن
என்று
qad
قَدْ
உறுதியாக
ṣadaqtanā
صَدَقْتَنَا
உண்மைகூறினீர்/எங்களிடம்
wanakūna
وَنَكُونَ
நாங்கள் ஆகிவிடுவதற்கு
ʿalayhā
عَلَيْهَا
அதன் மீது
mina l-shāhidīna
مِنَ ٱلشَّٰهِدِينَ
சாட்சியாளர்களில்
அதற்கவர்கள், அதிலிருந்து நாங்கள் புசித்து, எங்கள் உள்ளங்கள் திருப்தியடையவும், அன்றி நீங்கள் (உங்களுடைய தூதைப் பற்றி) மெய்யாகவே உண்மை கூறினீர்கள் என்று நாங்கள் அறிந்து கொண்டு அதற்கு நாங்களும் சாட்சியாக இருக்கவுமே விரும்புகின்றோம்" என்று கூறினார்கள். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௧௧௩)
Tafseer
௧௧௪

قَالَ عِيْسَى ابْنُ مَرْيَمَ اللهم رَبَّنَآ اَنْزِلْ عَلَيْنَا مَاۤىِٕدَةً مِّنَ السَّمَاۤءِ تَكُوْنُ لَنَا عِيْدًا لِّاَوَّلِنَا وَاٰخِرِنَا وَاٰيَةً مِّنْكَ وَارْزُقْنَا وَاَنْتَ خَيْرُ الرّٰزِقِيْنَ ١١٤

qāla
قَالَ
கூறினார்
ʿīsā
عِيسَى
ஈஸா
ub'nu
ٱبْنُ
மகன்
maryama
مَرْيَمَ
மர்யமுடைய
l-lahuma
ٱللَّهُمَّ
அல்லாஹ்வே
rabbanā
رَبَّنَآ
எங்கள் இறைவா
anzil
أَنزِلْ
இறக்கு
ʿalaynā
عَلَيْنَا
எங்கள் மீது
māidatan
مَآئِدَةً
ஓர் உணவுத் தட்டை
mina
مِّنَ
இருந்து
l-samāi
ٱلسَّمَآءِ
வானம்
takūnu
تَكُونُ
அது இருக்கும்
lanā
لَنَا
எங்களுக்கு
ʿīdan
عِيدًا
ஒரு பெருநாளாக
li-awwalinā
لِّأَوَّلِنَا
எங்கள் முன் இருப்பவர்களுக்கு
waākhirinā
وَءَاخِرِنَا
இன்னும் எங்களுக்குப் பின் வருபவர்களுக்கு
waāyatan
وَءَايَةً
இன்னும் ஓர் அத்தாட்சியாக
minka
مِّنكَۖ
உன்னிடமிருந்து
wa-ur'zuq'nā
وَٱرْزُقْنَا
இன்னும் எங்களுக்கு உணவளி
wa-anta khayru
وَأَنتَ خَيْرُ
நீ மிகச் சிறந்தவன்
l-rāziqīna
ٱلرَّٰزِقِينَ
உணவளிப்பவர்களில்
அதற்கு மர்யமுடைய மகன் ஈஸா "எங்கள் இறைவனே! வானத்தில் இருந்து ஓர் உணவுத் தட்டை எங்களுக்கு நீ இறக்கி வைப்பாயாக! எங்களுக்கும், எங்கள் முன் இருப்பவர்களுக்கும், எங்களுக்குப் பின் வருபவர்களுக்கும் அது ஒரு பெருநாளாகவும், உன்னுடைய (வல்லமைக்கு) ஓர் அத்தாட்சியாகவும் இருக்கும். ஆகவே, (அவ்வாறே) எங்களுக்கும் உணவை அளிப்பாயாக! நீயோ உணவளிப்பதில் மிகச் சிறந்தவன்" என்று (பிரார்த்தித்துக்) கூறினார். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௧௧௪)
Tafseer
௧௧௫

قَالَ اللّٰهُ اِنِّيْ مُنَزِّلُهَا عَلَيْكُمْ ۚ فَمَنْ يَّكْفُرْ بَعْدُ مِنْكُمْ فَاِنِّيْٓ اُعَذِّبُهٗ عَذَابًا لَّآ اُعَذِّبُهٗٓ اَحَدًا مِّنَ الْعٰلَمِيْنَ ࣖ ١١٥

qāla
قَالَ
கூறினான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
innī
إِنِّى
நிச்சயமாக நான்
munazziluhā
مُنَزِّلُهَا
அதை இறக்குவேன்
ʿalaykum
عَلَيْكُمْۖ
உங்கள் மீது
faman
فَمَن
ஆகவே எவர்
yakfur
يَكْفُرْ
நிராகரிப்பாரோ
baʿdu
بَعْدُ
பின்னர்
minkum
مِنكُمْ
உங்களில்
fa-innī
فَإِنِّىٓ
நிச்சயமாக நான்
uʿadhibuhu
أُعَذِّبُهُۥ
வேதனை செய்வேன்/ அவருக்கு
ʿadhāban
عَذَابًا
வேதனையால்
lā uʿadhibuhu
لَّآ أُعَذِّبُهُۥٓ
தண்டிக்க மாட்டேன்/அதைக்கொண்டு
aḥadan
أَحَدًا
ஒருவரையும்
mina l-ʿālamīna
مِّنَ ٱلْعَٰلَمِينَ
உலகத்தாரில்
அதற்கு அல்லாஹ் "நிச்சயமாக நான் (நீங்கள் கேட்டவாறு) அதனை உங்களுக்கு இறக்கி வைப்பேன். (எனினும்) இதற்குப் பின்னர் உங்களில் எவரேனும் (என் கட்டளைக்கு) மாறு செய்தால், அவரை உலகத்தில் எவருக்கும் செய்திராத அவ்வளவு கொடியதொரு வேதனையைக் கொண்டு நிச்சயமாக நான் தண்டிப்பேன்" என்று கூறினான். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௧௧௫)
Tafseer
௧௧௬

وَاِذْ قَالَ اللّٰهُ يٰعِيْسَى ابْنَ مَرْيَمَ ءَاَنْتَ قُلْتَ لِلنَّاسِ اتَّخِذُوْنِيْ وَاُمِّيَ اِلٰهَيْنِ مِنْ دُوْنِ اللّٰهِ ۗقَالَ سُبْحٰنَكَ مَا يَكُوْنُ لِيْٓ اَنْ اَقُوْلَ مَا لَيْسَ لِيْ بِحَقٍّ ۗاِنْ كُنْتُ قُلْتُهٗ فَقَدْ عَلِمْتَهٗ ۗتَعْلَمُ مَا فِيْ نَفْسِيْ وَلَآ اَعْلَمُ مَا فِيْ نَفْسِكَ ۗاِنَّكَ اَنْتَ عَلَّامُ الْغُيُوْبِ ١١٦

wa-idh qāla
وَإِذْ قَالَ
சமயம்/கூறினான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
yāʿīsā
يَٰعِيسَى
ஈஸாவே
ib'na
ٱبْنَ
மகன்
maryama
مَرْيَمَ
மர்யமுடைய
a-anta
ءَأَنتَ
நீர்
qul'ta
قُلْتَ
கூறினீர்
lilnnāsi
لِلنَّاسِ
மக்களுக்கு
ittakhidhūnī
ٱتَّخِذُونِى
எடுத்துக் கொள்ளுங்கள்/என்னை
wa-ummiya
وَأُمِّىَ
இன்னும் என் தாயை
ilāhayni
إِلَٰهَيْنِ
வணங்கப்படும் (இரு) தெய்வங்களாக
min dūni l-lahi
مِن دُونِ ٱللَّهِۖ
அல்லாஹ்வையன்றி
qāla
قَالَ
கூறுவார்
sub'ḥānaka
سُبْحَٰنَكَ
நீ மிகப்பரிசுத்தமானவன்
mā yakūnu
مَا يَكُونُ
ஆகாது
لِىٓ
எனக்கு
an aqūla
أَنْ أَقُولَ
நான் கூறுவது
مَا
எதை
laysa lī
لَيْسَ لِى
இல்லை/எனக்கு
biḥaqqin
بِحَقٍّۚ
தகுதி
in kuntu
إِن كُنتُ
நான் இருந்தால்
qul'tuhu
قُلْتُهُۥ
அதைக் கூறினேன்
faqad ʿalim'tahu
فَقَدْ عَلِمْتَهُۥۚ
திட்டமாக நீ அதை அறிந்திருப்பாய்
taʿlamu
تَعْلَمُ
நன்கறிவாய்
mā fī nafsī
مَا فِى نَفْسِى
எதை/என் உள்ளத்தில்
walā aʿlamu mā
وَلَآ أَعْلَمُ مَا
இன்னும் அறிய மாட்டேன்/எதை
fī nafsika
فِى نَفْسِكَۚ
உன் உள்ளத்தில்
innaka anta
إِنَّكَ أَنتَ
நிச்சயமாக நீதான்
ʿallāmu
عَلَّٰمُ
மிக மிக அறிந்தவன்
l-ghuyūbi
ٱلْغُيُوبِ
மறைவானவற்றை
அன்றி, அல்லாஹ் (மறுமை நாளில் ஈஸாவை நோக்கி) "மர்யமுடைய மகன் ஈஸாவே! அல்லாஹ்வுடன் என்னையும், என்னுடைய தாயையும் இரு கடவுள்களாக எடுத்துக் கொள்ளுங்கள் என்று மனிதர்களை நோக்கி நீங்கள் கூறினீர்களா?" என்று கேட்பான் என்பதையும் ஞாபமூட்டுங்கள். அதற்கு அவர் கூறுவார்: "நீ மிகப் பரிசுத்தமானவன். எனக்கு ஒரு சிறிதும் தகாததை நான் ஒருபோதும் கூறமாட்டேன். அவ்வாறு நான் கூறியிருந்தால் நிச்சயமாக நீ அதனை அறிந்திருப்பாயே! என் உள்ளத்திலுள்ளதை நீ நன்கறிவாய். உன் உள்ளத்திலுள்ளதை நான் அறியமாட்டேன். நிச்சயமாக நீதான் மறைவானவை அனைத்தையும் நன்கறிபவன். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௧௧௬)
Tafseer
௧௧௭

مَا قُلْتُ لَهُمْ اِلَّا مَآ اَمَرْتَنِيْ بِهٖٓ اَنِ اعْبُدُوا اللّٰهَ رَبِّيْ وَرَبَّكُمْ ۚوَكُنْتُ عَلَيْهِمْ شَهِيْدًا مَّا دُمْتُ فِيْهِمْ ۚ فَلَمَّا تَوَفَّيْتَنِيْ كُنْتَ اَنْتَ الرَّقِيْبَ عَلَيْهِمْ ۗوَاَنْتَ عَلٰى كُلِّ شَيْءٍ شَهِيْدٌ ١١٧

mā qul'tu
مَا قُلْتُ
நான் கூறவில்லை
lahum
لَهُمْ
அவர்களுக்கு
illā mā amartanī
إِلَّا مَآ أَمَرْتَنِى
தவிர/எதை/நீ ஏவினாய்/எனக்கு
bihi ani uʿ'budū
بِهِۦٓ أَنِ ٱعْبُدُوا۟
அதை/என்பதை/வணங்குங்கள்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வை
rabbī
رَبِّى
என் இறைவன்
warabbakum
وَرَبَّكُمْۚ
இன்னும் உங்கள் இறைவன்
wakuntu
وَكُنتُ
இருந்தேன்
ʿalayhim
عَلَيْهِمْ
அவர்கள் மீது
shahīdan
شَهِيدًا
சாட்சியாளனாக
mā dum'tu
مَّا دُمْتُ
நான் இருந்தவரை
fīhim
فِيهِمْۖ
அவர்களுடன்
falammā tawaffaytanī
فَلَمَّا تَوَفَّيْتَنِى
நீ கைப்பற்றிய போது/என்னை
kunta
كُنتَ
இருந்தாய்
anta
أَنتَ
நீ
l-raqība
ٱلرَّقِيبَ
கண்கானிப்பவனாக
ʿalayhim
عَلَيْهِمْۚ
அவர்கள் மீது
wa-anta
وَأَنتَ
நீ
ʿalā
عَلَىٰ
மீது
kulli shayin
كُلِّ شَىْءٍ
எல்லாவற்றின்
shahīdun
شَهِيدٌ
சாட்சியாளன்
(அன்றி) நீ எனக்கு ஏவியபடியே நான் (அவர்களை நோக்கி) "நீங்கள் எனக்கும் உங்களுக்கும் இறைவனாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்" என்று கூறினேனேயன்றி வேறொன்றையும் (ஒருபோதும்) நான் கூறவில்லை. நான் அவர்களுடன் இருந்த வரையில் அவர்களின் செயலை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். நீ என்னைக் கைப்பற்றிய பின்னர் நீதான் அவர்களைக் கவனித்தவனாக இருந்தாய். அனைத்திற்கும் நீயே சாட்சி. ([௫] ஸூரத்துல் மாயிதா: ௧௧௭)
Tafseer
௧௧௮

اِنْ تُعَذِّبْهُمْ فَاِنَّهُمْ عِبَادُكَ ۚوَاِنْ تَغْفِرْ لَهُمْ فَاِنَّكَ اَنْتَ الْعَزِيْزُ الْحَكِيْمُ ١١٨

in tuʿadhib'hum
إِن تُعَذِّبْهُمْ
நீ வேதனை செய்தால்/அவர்களை
fa-innahum
فَإِنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
ʿibāduka
عِبَادُكَۖ
உன் அடியார்கள்
wa-in taghfir
وَإِن تَغْفِرْ
நீ மன்னித்தால்
lahum
لَهُمْ
அவர்களை
fa-innaka anta
فَإِنَّكَ أَنتَ
நிச்சயமாக நீதான்
l-ʿazīzu
ٱلْعَزِيزُ
மிகைத்தவன்
l-ḥakīmu
ٱلْحَكِيمُ
ஞானவான்
அவர்களை நீ வேதனை செய்தால் நிச்சயமாக அவர்கள் உன்னுடைய அடியார்களே! (உன்னுடைய அடியார்களை உன் இஷ்டப்படிச் செய்ய உனக்கு உரிமையுண்டு.) அன்றி, அவர்களை நீ மன்னித்துவிட்டாலோ (அதனை தடை செய்ய எவராலும் முடியாது. ஏனென்றால்) நிச்சயமாக நீதான் (அனைவரையும்) மிகைத்தவனும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றாய்" (என்று கூறுவார்.) ([௫] ஸூரத்துல் மாயிதா: ௧௧௮)
Tafseer
௧௧௯

قَالَ اللّٰهُ هٰذَا يَوْمُ يَنْفَعُ الصّٰدِقِيْنَ صِدْقُهُمْ ۗ لَهُمْ جَنّٰتٌ تَجْرِيْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَآ اَبَدًا ۗرَضِيَ اللّٰهُ عَنْهُمْ وَرَضُوْا عَنْهُ ۗذٰلِكَ الْفَوْزُ الْعَظِيْمُ ١١٩

qāla
قَالَ
கூறுவான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
hādhā
هَٰذَا
இது
yawmu
يَوْمُ
நாள்
yanfaʿu
يَنفَعُ
பலனளிக்கும்
l-ṣādiqīna
ٱلصَّٰدِقِينَ
உண்மையாளர்களுக்கு
ṣid'quhum
صِدْقُهُمْۚ
அவர்களுடைய உண்மை
lahum
لَهُمْ
அவர்களுக்கு
jannātun
جَنَّٰتٌ
சொர்க்கங்கள்
tajrī
تَجْرِى
ஓடும்
min taḥtihā
مِن تَحْتِهَا
இருந்து/அதன் கீழ்
l-anhāru
ٱلْأَنْهَٰرُ
நதிகள்
khālidīna
خَٰلِدِينَ
நிரந்தரமானவர்கள்
fīhā abadan
فِيهَآ أَبَدًاۚ
அதில்/என்றென்றும்
raḍiya
رَّضِىَ
மகிழ்ச்சியடைவான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
ʿanhum
عَنْهُمْ
அவர்களைப் பற்றி
waraḍū
وَرَضُوا۟
இன்னும் மகிழ்ச்சியடைவார்கள்
ʿanhu
عَنْهُۚ
அவனைப் பற்றி
dhālika
ذَٰلِكَ
இதுதான்
l-fawzu
ٱلْفَوْزُ
வெற்றி
l-ʿaẓīmu
ٱلْعَظِيمُ
மகத்தான
அதற்கு அல்லாஹ் "உண்மை சொல்லும் சத்தியவான்களுக்கு அவர்களுடைய உண்மை பலனளிக்கக்கூடிய நாள் இதுதான். தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதிகளும் அவர்களுக்கு உண்டு. அதில் அவர்கள் என்றென்றுமே தங்கி விடுவார்கள்" என்று கூறுவான். (அந்நாளில்) அவர்களைப் பற்றி அல்லாஹ்வும் மகிழ்ச்சியடைவான். அவர்களும் அவனைப் பற்றி மகிழ்ச்சி அடைவார்கள். இது மிக்க மகத்தான பெரும் பாக்கியம். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௧௧௯)
Tafseer
௧௨௦

لِلّٰهِ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا فِيْهِنَّ ۗوَهُوَ عَلٰى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ ࣖ ١٢٠

lillahi
لِلَّهِ
அல்லாஹ்வுக்குரியதே
mul'ku
مُلْكُ
ஆட்சி
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
வானங்களின்
wal-arḍi
وَٱلْأَرْضِ
இன்னும் பூமி
wamā fīhinna
وَمَا فِيهِنَّۚ
இன்னும் அவற்றிலுள்ளவை
wahuwa
وَهُوَ
அவன்
ʿalā kulli shayin
عَلَىٰ كُلِّ شَىْءٍ
எல்லாவற்றின் மீது
qadīrun
قَدِيرٌۢ
பேராற்றலுடையவன்
வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும், இவைகளிலுள்ள அனைத்தின் ஆட்சி அல்லாஹ்வுக்குரியதே! அவன் (இவை) அனைத்தின் மீதும் மிக்க ஆற்றலுடையவன். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௧௨௦)
Tafseer