Skip to content

ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் - Page: 4

Ali 'Imran

(ʾĀl ʿImrān)

௩௧

قُلْ اِنْ كُنْتُمْ تُحِبُّوْنَ اللّٰهَ فَاتَّبِعُوْنِيْ يُحْبِبْكُمُ اللّٰهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوْبَكُمْ ۗ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ ٣١

qul
قُلْ
கூறுவீராக
in kuntum
إِن كُنتُمْ
நீங்கள் இருந்தால்
tuḥibbūna
تُحِبُّونَ
நேசிப்பீர்கள்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வை
fa-ittabiʿūnī
فَٱتَّبِعُونِى
என்னைப் பின்பற்றுங்கள்
yuḥ'bib'kumu
يُحْبِبْكُمُ
உங்களைநேசிப்பான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
wayaghfir lakum
وَيَغْفِرْ لَكُمْ
இன்னும் மன்னிப்பான்/ உங்களுக்கு
dhunūbakum
ذُنُوبَكُمْۗ
உங்கள் பாவங்களை
wal-lahu
وَٱللَّهُ
இன்னும் அல்லாஹ்
ghafūrun
غَفُورٌ
மகா மன்னிப்பாளன்
raḥīmun
رَّحِيمٌ
மகா கருணையாளன்
(நபியே! மனிதர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: "நீங்கள் மெய்யாகவே அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள். உங்களை அல்லாஹ் நேசிப்பான். உங்கள் பாவங்களையும் அவன் மன்னித்து விடுவான். அல்லாஹ் மிக அதிகம் மன்னிப்பவனும், நிகரற்ற அன்புடையவனுமாக இருக்கின்றான்." ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௩௧)
Tafseer
௩௨

قُلْ اَطِيْعُوا اللّٰهَ وَالرَّسُوْلَ ۚ فَاِنْ تَوَلَّوْا فَاِنَّ اللّٰهَ لَا يُحِبُّ الْكٰفِرِيْنَ ٣٢

qul
قُلْ
கூறுவீராக
aṭīʿū
أَطِيعُوا۟
கீழ்ப்படியுங்கள்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்விற்கு
wal-rasūla
وَٱلرَّسُولَۖ
இன்னும் தூதருக்கு
fa-in tawallaw
فَإِن تَوَلَّوْا۟
(நீங்கள்) திரும்பினால்
fa-inna l-laha
فَإِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
lā yuḥibbu
لَا يُحِبُّ
நேசிக்க மாட்டான்
l-kāfirīna
ٱلْكَٰفِرِينَ
நிராகரிப்பாளர்களை
(நபியே! மேலும்) நீங்கள் கூறுங்கள்: "அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் நீங்கள் கீழ்படியுங்கள். அன்றி நீங்கள் புறக்கணித்தால் நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பவர்களை நேசிப்பதில்லை". ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௩௨)
Tafseer
௩௩

۞ اِنَّ اللّٰهَ اصْطَفٰىٓ اٰدَمَ وَنُوْحًا وَّاٰلَ اِبْرٰهِيْمَ وَاٰلَ عِمْرَانَ عَلَى الْعٰلَمِيْنَۙ ٣٣

inna l-laha
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
iṣ'ṭafā
ٱصْطَفَىٰٓ
தேர்ந்தெடுத்தான்
ādama wanūḥan
ءَادَمَ وَنُوحًا
ஆதமை/இன்னும் நூஹை
waāla
وَءَالَ
இன்னும் குடும்பத்தை
ib'rāhīma
إِبْرَٰهِيمَ
இப்றாஹீமின்
waāla ʿim'rāna
وَءَالَ عِمْرَٰنَ
இன்னும் இம்ரானின் குடும்பத்தை
ʿalā l-ʿālamīna
عَلَى ٱلْعَٰلَمِينَ
அகிலத்தாரை விட
நிச்சயமாக அல்லாஹ் ஆதமையும், (அவருக்குப் பின்னர்) நூஹையும் (அவ்வாறே) இப்ராஹீமுடைய குடும்பத்தையும், இம்ரானுடைய குடும்பத்தையும் அகிலகத்தாரைவிட மேலாக தேர்ந்தெடுத்தான். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௩௩)
Tafseer
௩௪

ذُرِّيَّةً ۢ بَعْضُهَا مِنْۢ بَعْضٍۗ وَاللّٰهُ سَمِيْعٌ عَلِيْمٌۚ ٣٤

dhurriyyatan
ذُرِّيَّةًۢ
ஒரு சந்ததி
baʿḍuhā
بَعْضُهَا
அதில் சிலர்
min baʿḍin
مِنۢ بَعْضٍۗ
சிலரைச் சேர்ந்தவர்
wal-lahu
وَٱللَّهُ
இன்னும் அல்லாஹ்
samīʿun
سَمِيعٌ
நன்கு செவியுறுபவன்
ʿalīmun
عَلِيمٌ
நன்கறிந்தவன்
அவர்களில் ஒருவர் மற்றவருடைய சந்ததிதான். அல்லாஹ் (அனைத்தையும்) செவியுறுபவனும் நன்கு அறிபவனாகவும் இருக்கின்றான். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௩௪)
Tafseer
௩௫

اِذْ قَالَتِ امْرَاَتُ عِمْرَانَ رَبِّ اِنِّيْ نَذَرْتُ لَكَ مَا فِيْ بَطْنِيْ مُحَرَّرًا فَتَقَبَّلْ مِنِّيْ ۚ اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْمُ ٣٥

idh qālati
إِذْ قَالَتِ
கூறியசமயம்
im'ra-atu
ٱمْرَأَتُ
மனைவி
ʿim'rāna
عِمْرَٰنَ
இம்ரானுடைய
rabbi
رَبِّ
என் இறைவா
innī
إِنِّى
நிச்சயமாக நான்
nadhartu
نَذَرْتُ
நேர்ச்சை செய்தேன்
laka
لَكَ
உனக்கு
مَا
எது
fī baṭnī
فِى بَطْنِى
என் வயிற்றில்
muḥarraran
مُحَرَّرًا
அர்ப்பணிக்கப்பட்டதாக
fataqabbal
فَتَقَبَّلْ
ஆகவே ஏற்றுக்கொள்
minnī
مِنِّىٓۖ
என்னிடமிருந்து
innaka anta
إِنَّكَ أَنتَ
நிச்சயமாக நீதான்
l-samīʿu
ٱلسَّمِيعُ
நன்கு செவியுறுபவன்
l-ʿalīmu
ٱلْعَلِيمُ
மிக அறிந்தவன்
இம்ரானுடைய மனைவி (கர்ப்பமானபொழுது ஆண் குழந்தை பெற விரும்பி இறைவனை நோக்கி) "என் இறைவனே! நிச்சயமாக நான் என் கர்ப்பத்திலுள்ளதை உனக்கு முற்றிலும் அர்ப்பணம் செய்துவிட நேர்ச்சை செய்து கொண்டேன். ஆதலால், (அதனை) என்னிடமிருந்து நீ அங்கீகரித்துக் கொள்வாயாக! நிச்சயமாக நீதான் (பிரார்த்தனைகளை) செவியுறுபவனும், (மனதில் உள்ளவற்றை) நன்கறிபவனாகவும் இருக்கின்றாய்" என்று (பிரார்த்தித்துக்) கூறியபின், ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௩௫)
Tafseer
௩௬

فَلَمَّا وَضَعَتْهَا قَالَتْ رَبِّ اِنِّيْ وَضَعْتُهَآ اُنْثٰىۗ وَاللّٰهُ اَعْلَمُ بِمَا وَضَعَتْۗ وَلَيْسَ الذَّكَرُ كَالْاُنْثٰى ۚ وَاِنِّيْ سَمَّيْتُهَا مَرْيَمَ وَاِنِّيْٓ اُعِيْذُهَا بِكَ وَذُرِّيَّتَهَا مِنَ الشَّيْطٰنِ الرَّجِيْمِ ٣٦

falammā waḍaʿathā
فَلَمَّا وَضَعَتْهَا
போது/அவளைப் பெற்றெடுத்தாள்
qālat
قَالَتْ
கூறினாள்
rabbi
رَبِّ
என் இறைவா
innī
إِنِّى
நிச்சயமாக நான்
waḍaʿtuhā
وَضَعْتُهَآ
அவளைப் பெற்றெடுத்தேன்
unthā
أُنثَىٰ
ஒரு பெண்ணாக
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
aʿlamu
أَعْلَمُ
மிக அறிந்தவன்
bimā waḍaʿat
بِمَا وَضَعَتْ
அவள் பெற்றெடுத்ததை
walaysa
وَلَيْسَ
இன்னும் இல்லை
l-dhakaru
ٱلذَّكَرُ
ஆண்
kal-unthā
كَٱلْأُنثَىٰۖ
பெண்ணைப்போன்று
wa-innī
وَإِنِّى
இன்னும் நிச்சயமாக நான்
sammaytuhā
سَمَّيْتُهَا
அவளுக்குப் பெயரிட்டேன்
maryama
مَرْيَمَ
மர்யம்
wa-innī
وَإِنِّىٓ
இன்னும் நிச்சயமாக நான்
uʿīdhuhā
أُعِيذُهَا
அவளை பாதுகாக்கிறேன்
bika
بِكَ
உன்னைக்கொண்டு
wadhurriyyatahā
وَذُرِّيَّتَهَا
இன்னும் அவளுடைய சந்ததியை
mina l-shayṭāni
مِنَ ٱلشَّيْطَٰنِ
இருந்து/ஷைத்தான்
l-rajīmi
ٱلرَّجِيمِ
விரட்டப்பட்டவன்
அவர் (தன் விருப்பத்திற்கு மாறாக) ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தபோது "என் இறைவனே! நான் ஒரு பெண்ணையே பெற்றேன்" என்று கூறினார். ஆயினும் (அவர் விரும்பிய) ஆண், இந்தப் பெண்ணைப் போன்றல்ல என்பதை அல்லாஹ் (தான்) நன்கறிவான். (பிறகு இம்ரானின் மனைவி) நிச்சயமாக நான் அதற்கு "மர்யம்" எனப் பெயரிட்டேன். அதனையும், அதன் சந்ததியையும் விரட்டப்பட்ட ஷைத்தானி(ன் வஞ்சனை களி)லிருந்து நீ காப்பாற்ற உன்னிடம் பிரார்த்திக்கின்றேன்!" என்றார். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௩௬)
Tafseer
௩௭

فَتَقَبَّلَهَا رَبُّهَا بِقَبُوْلٍ حَسَنٍ وَّاَنْۢبَتَهَا نَبَاتًا حَسَنًاۖ وَّكَفَّلَهَا زَكَرِيَّا ۗ كُلَّمَا دَخَلَ عَلَيْهَا زَكَرِيَّا الْمِحْرَابَۙ وَجَدَ عِنْدَهَا رِزْقًا ۚ قَالَ يٰمَرْيَمُ اَنّٰى لَكِ هٰذَا ۗ قَالَتْ هُوَ مِنْ عِنْدِ اللّٰهِ ۗ اِنَّ اللّٰهَ يَرْزُقُ مَنْ يَّشَاۤءُ بِغَيْرِ حِسَابٍ ٣٧

fataqabbalahā
فَتَقَبَّلَهَا
ஆகவேஅவளைஏற்றான்
rabbuhā
رَبُّهَا
அவளுடைய இறைவன்
biqabūlin
بِقَبُولٍ
ஏற்பாக
ḥasanin
حَسَنٍ
அழகியது
wa-anbatahā
وَأَنۢبَتَهَا
இன்னும் அவளை வளர்த்தான்
nabātan
نَبَاتًا
வளர்ப்பாக
ḥasanan
حَسَنًا
அழகியது
wakaffalahā
وَكَفَّلَهَا
இன்னும் அவளுக்கு பொறுப்பாளராக்கினான்
zakariyyā
زَكَرِيَّاۖ
ஸகரிய்யாவை
kullamā dakhala
كُلَّمَا دَخَلَ
நுழையும் போதெல்லாம்
ʿalayhā
عَلَيْهَا
அவளிடம்
zakariyyā
زَكَرِيَّا
ஸகரிய்யா
l-miḥ'rāba
ٱلْمِحْرَابَ
மாடத்தில்
wajada
وَجَدَ
பெற்றார்
ʿindahā
عِندَهَا
அவளிடம்
riz'qan
رِزْقًاۖ
ஓர் உணவை
qāla
قَالَ
கூறினார்
yāmaryamu
يَٰمَرْيَمُ
மர்யமே!
annā
أَنَّىٰ
எங்கிருந்து?
laki
لَكِ
உனக்கு
hādhā
هَٰذَاۖ
இது
qālat
قَالَتْ
கூறினாள்
huwa
هُوَ
இது
min ʿindi l-lahi
مِنْ عِندِ ٱللَّهِۖ
அல்லாஹ்விடமிருந்து
inna l-laha
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
yarzuqu
يَرْزُقُ
வழங்குவான்
man yashāu
مَن يَشَآءُ
எவர்/நாடுகிறான்
bighayri ḥisābin
بِغَيْرِ حِسَابٍ
கணக்கின்றி
ஆகவே அவருடைய இறைவன் அதனை அன்பாய் அங்கீகரித்து பரிசுத்தமாகவும், அழகாகவும் அதனை வளரச் செய்து அதனை (வளர்க்க) ஜகரிய்யா பொறுப்பேற்றுக் கொள்ளுமாறும் செய்தான். ஜகரிய்யா அப்பிள்ளை இருந்த மாடத்திற்குள் நுழையும்போதெல்லாம், அவளிடத்தில் (ஏதேனும்) உணவுப் பொருள் இருப்பதைக் கண்டு "மர்யமே! இது உனக்கு ஏது? (எங்கிருந்து வந்தது?)" என்று கேட்பார். அதற்கவள் "இது அல்லாஹ் விடமிருந்துதான் (வருகின்றது.) ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் தான் விரும்பியவர்களுக்கு அளவின்றியே உணவளிக்கின்றான்" என்று கூறுவாள். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௩௭)
Tafseer
௩௮

هُنَالِكَ دَعَا زَكَرِيَّا رَبَّهٗ ۚ قَالَ رَبِّ هَبْ لِيْ مِنْ لَّدُنْكَ ذُرِّيَّةً طَيِّبَةً ۚ اِنَّكَ سَمِيْعُ الدُّعَاۤءِ ٣٨

hunālika
هُنَالِكَ
அவ்விடத்தில்
daʿā
دَعَا
பிரார்த்தித்தார்
zakariyyā
زَكَرِيَّا
ஸகரிய்யா
rabbahu
رَبَّهُۥۖ
அவரின் இறைவனை
qāla
قَالَ
கூறினார்
rabbi
رَبِّ
என் இறைவா
hab lī
هَبْ لِى
எனக்கு தா!
min ladunka
مِن لَّدُنكَ
உன் புறத்திலிருந்து
dhurriyyatan
ذُرِّيَّةً
ஒரு சந்ததியை
ṭayyibatan innaka
طَيِّبَةًۖ إِنَّكَ
நல்லது/நிச்சயமாக நீ
samīʿu
سَمِيعُ
நன்கு செவியுறுபவன்
l-duʿāi
ٱلدُّعَآءِ
பிரார்த்தனை
(அப்பொழுது) ஜகரிய்யா, அவ்விடத்தில் (தனக்காகத்) தன் இறைவனிடம் பிரார்த்தித்து "என் இறைவனே! உன் புறத்திலிருந்து எனக்கொரு நல்ல சந்ததியை அளிப்பாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனைகளை செவியேற்பவனாக இருக்கின்றாய்" என்று கூறினார். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௩௮)
Tafseer
௩௯

فَنَادَتْهُ الْمَلٰۤىِٕكَةُ وَهُوَ قَاۤىِٕمٌ يُّصَلِّيْ فِى الْمِحْرَابِۙ اَنَّ اللّٰهَ يُبَشِّرُكَ بِيَحْيٰى مُصَدِّقًاۢ بِكَلِمَةٍ مِّنَ اللّٰهِ وَسَيِّدًا وَّحَصُوْرًا وَّنَبِيًّا مِّنَ الصّٰلِحِيْنَ ٣٩

fanādathu
فَنَادَتْهُ
ஆகவேஅழைத்தா(ர்க)ள்
l-malāikatu
ٱلْمَلَٰٓئِكَةُ
வானவர்கள்
wahuwa qāimun
وَهُوَ قَآئِمٌ
அவர் நின்று தொழுதுகொண்டிருக்க
yuṣallī
يُصَلِّى
தொழுகிறார்
fī l-miḥ'rābi
فِى ٱلْمِحْرَابِ
மாடத்தில்
anna l-laha
أَنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
yubashiruka
يُبَشِّرُكَ
உமக்கு நற்செய்தி கூறுகிறான்
biyaḥyā
بِيَحْيَىٰ
யஹ்யாவைக் கொண்டு
muṣaddiqan
مُصَدِّقًۢا
உண்மைப்படுத்துபவராக
bikalimatin
بِكَلِمَةٍ
ஒரு வாக்கியத்தை
mina l-lahi
مِّنَ ٱللَّهِ
அல்லாஹ்வின்
wasayyidan
وَسَيِّدًا
இன்னும் தலைவராக
waḥaṣūran
وَحَصُورًا
இன்னும் இன்பத்தைத் துறந்தவராக
wanabiyyan
وَنَبِيًّا
இன்னும் நபியாக
mina l-ṣāliḥīna
مِّنَ ٱلصَّٰلِحِينَ
நல்லோரைச்சேர்ந்தவர்
ஆகவே அவர் மாடத்தில் ("மிஹ்ராப்") நின்று தொழுது கொண்டிருந்த சமயத்தில் (அவரை நோக்கி) மலக்குகள் சப்தமிட்டுக் கூறினார்கள்: (ஜகரிய்யாவே!) நிச்சயமாக அல்லாஹ் "யஹ்யா" (என்ற ஒரு மக)வை உங்களுக்கு அளிப்பதாக நற்செய்தி கூறுகின்றான். அவர் அல்லாஹ்வின் ஒரு வாக்கியத்தை (முன்னறிக்கையை) உண்மைப்படுத்தி வைப்பார். (மனிதர்களுக்குத்) தலைவராகவும், (பெண்கள்) இன்பத்தைத் துறந்தவராகவும், நபியாகவும், நல்லொழுக்கம் உடையவராகவும் இருப்பார். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௩௯)
Tafseer
௪௦

قَالَ رَبِّ اَنّٰى يَكُوْنُ لِيْ غُلٰمٌ وَّقَدْ بَلَغَنِيَ الْكِبَرُ وَامْرَاَتِيْ عَاقِرٌ ۗ قَالَ كَذٰلِكَ اللّٰهُ يَفْعَلُ مَا يَشَاۤءُ ٤٠

qāla
قَالَ
கூறினார்
rabbi
رَبِّ
என் இறைவா!
annā
أَنَّىٰ
எவ்வாறு
yakūnu
يَكُونُ
உண்டாகும்
لِى
எனக்கு
ghulāmun
غُلَٰمٌ
ஒரு குழந்தை
waqad balaghaniya
وَقَدْ بَلَغَنِىَ
என்னையோ அடைந்து விட்டிருக்க
l-kibaru
ٱلْكِبَرُ
முதுமை
wa-im'ra-atī
وَٱمْرَأَتِى
இன்னும் என்மனைவியோ
ʿāqirun
عَاقِرٌۖ
மலடி
qāla
قَالَ
கூறினான்
kadhālika
كَذَٰلِكَ
இவ்வாறு
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
yafʿalu
يَفْعَلُ
செய்வான்
مَا
எதை
yashāu
يَشَآءُ
நாடுகிறான்
(அதற்கு) ஜகரிய்யா (அல்லாஹ்வை நோக்கி) "என் இறைவனே! எனக்கு எவ்வாறு சந்ததி உண்டாகும். நிச்சயமாக நானோ முதுமையை அடைந்து விட்டேன். என் மனைவியோ மலடியாயிருக்கின்றாள்" என்று கூறினார். (அதற்கு இறைவன்) "இவ்வாறே (நடைபெறும்.) அல்லாஹ், தான் விரும்பியதை (அவசியம்) செய்(தே தீரு)வான்" என்று கூறினான். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௪௦)
Tafseer