Skip to content

ஸூரா ஸூரத்துல் மாயிதா - Page: 5

Al-Ma'idah

(al-Māʾidah)

௪௧

۞ يٰٓاَيُّهَا الرَّسُوْلُ لَا يَحْزُنْكَ الَّذِيْنَ يُسَارِعُوْنَ فِى الْكُفْرِ مِنَ الَّذِيْنَ قَالُوْٓا اٰمَنَّا بِاَفْوَاهِهِمْ وَلَمْ تُؤْمِنْ قُلُوْبُهُمْ ۛ وَمِنَ الَّذِيْنَ هَادُوْا ۛ سَمّٰعُوْنَ لِلْكَذِبِ سَمّٰعُوْنَ لِقَوْمٍ اٰخَرِيْنَۙ لَمْ يَأْتُوْكَ ۗ يُحَرِّفُوْنَ الْكَلِمَ مِنْۢ بَعْدِ مَوَاضِعِهٖۚ يَقُوْلُوْنَ اِنْ اُوْتِيْتُمْ هٰذَا فَخُذُوْهُ وَاِنْ لَّمْ تُؤْتَوْهُ فَاحْذَرُوْا ۗوَمَنْ يُّرِدِ اللّٰهُ فِتْنَتَهٗ فَلَنْ تَمْلِكَ لَهٗ مِنَ اللّٰهِ شَيْـًٔا ۗ اُولٰۤىِٕكَ الَّذِيْنَ لَمْ يُرِدِ اللّٰهُ اَنْ يُّطَهِّرَ قُلُوْبَهُمْ ۗ لَهُمْ فِى الدُّنْيَا خِزْيٌ ۖوَّلَهُمْ فِى الْاٰخِرَةِ عَذَابٌ عَظِيْمٌ ٤١

yāayyuhā l-rasūlu
يَٰٓأَيُّهَا ٱلرَّسُولُ
தூதரே
lā yaḥzunka
لَا يَحْزُنكَ
உமக்குக் கவலையூட்ட வேண்டாம்
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
yusāriʿūna
يُسَٰرِعُونَ
தீவிரம்காட்டுகிறார்கள்
fī l-kuf'ri
فِى ٱلْكُفْرِ
நிராகரிப்பில்
mina
مِنَ
இருந்து
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
qālū
قَالُوٓا۟
கூறினார்கள்
āmannā
ءَامَنَّا
நம்பிக்கை கொண்டோம்
bi-afwāhihim
بِأَفْوَٰهِهِمْ
தங்கள் வாய்களால்
walam tu'min
وَلَمْ تُؤْمِن
இன்னும் நம்பிக்கை கொள்ளவில்லை
qulūbuhum
قُلُوبُهُمْۛ
அவர்களுடைய உள்ளங்கள்
wamina
وَمِنَ
இன்னும் இருந்து
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
hādū
هَادُوا۟ۛ
யூதராகி விட்டார்கள்
sammāʿūna
سَمَّٰعُونَ
அதிகம் செவிமடுக்கிறார்கள்
lil'kadhibi
لِلْكَذِبِ
பொய்யை
sammāʿūna
سَمَّٰعُونَ
அதிகம் செவிமடுக்கிறார்கள்
liqawmin
لِقَوْمٍ
கூட்டத்திற்காக
ākharīna
ءَاخَرِينَ
மற்றெறாரு
lam yatūka
لَمْ يَأْتُوكَۖ
அவர்கள் வரவில்லை /உம்மிடம்
yuḥarrifūna
يُحَرِّفُونَ
மாற்றுகின்றனர்
l-kalima
ٱلْكَلِمَ
வசனங்களை
min baʿdi
مِنۢ بَعْدِ
இருந்து
mawāḍiʿihi
مَوَاضِعِهِۦۖ
அவற்றின் இடங்கள்
yaqūlūna
يَقُولُونَ
கூறுகின்றனர்
in ūtītum
إِنْ أُوتِيتُمْ
நீங்கள் கொடுக்கப்பட்டால்
hādhā
هَٰذَا
இதை
fakhudhūhu
فَخُذُوهُ
அதை எடுங்கள்
wa-in lam tu'tawhu
وَإِن لَّمْ تُؤْتَوْهُ
நீங்கள் கொடுக்கப்படவில்லையெனில்/அதை
fa-iḥ'dharū
فَٱحْذَرُوا۟ۚ
எச்சரிக்கையாக இருங்கள்
waman
وَمَن
எவர்
yuridi
يُرِدِ
நாடினான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
fit'natahu
فِتْنَتَهُۥ
சோதிக்க/அவரை
falan tamlika
فَلَن تَمْلِكَ
உரிமை பெறமாட்டீர்
lahu
لَهُۥ
அவருக்காக
mina
مِنَ
விடம்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்
shayan
شَيْـًٔاۚ
எதையும்
ulāika
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
lam yuridi
لَمْ يُرِدِ
நாடவில்லை
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
an yuṭahhira
أَن يُطَهِّرَ
அவன்பரிசுத்தமாக்க
qulūbahum
قُلُوبَهُمْۚ
உள்ளங்களை/அவர்களுடைய
lahum
لَهُمْ
அவர்களுக்கு
fī l-dun'yā
فِى ٱلدُّنْيَا
இம்மையில்
khiz'yun
خِزْىٌۖ
இழிவு
walahum
وَلَهُمْ
இன்னும் அவர்களுக்கு
fī l-ākhirati
فِى ٱلْءَاخِرَةِ
மறுமையில்
ʿadhābun
عَذَابٌ
வேதனை
ʿaẓīmun
عَظِيمٌ
பெரிய
(நம்முடைய) தூதரே! சிலர் நிராகரிப்பின் பக்கம் விரைந்தோடுவது உங்களுக்குக் கவலையைத் தரவேண்டாம். ஏனென்றால், அவர்கள் தங்கள் வாயினால் மட்டும் "நம்பிக்கை கொண்டோம்" என்று கூறினார்களே தவிர, அவர்களுடைய உள்ளங்கள் (அதனை) ஒப்புக் கொள்ளவில்லை. (அவ்வாறே) யூதர் (களிலும் சிலருண்டு. அவர்)கள் பொய்(யான விஷயங்)களையே (ஆவலோடு) அதிகமாகக் கேட்கின்றனர். அன்றி, (இதுவரையில்) உங்களிடம் வராத மற்றொரு கூட்டத்தினருக்(கு இவைகளை அறிவிப்பதற்)காகவும், (விஷமத்தனமான வார்த்தைகளையே) அதிகமாகக் கேட்கின்றனர். அவர்கள் (வேத) வசனங்களை அவற்றின் (உண்மை) அர்த்தத்திலிருந்து புரட்டி (இவர்களை நோக்கி) "உங்களுக்கு (இந்த நபியிடமிருந்து) இன்ன கட்டளைக் கிடைத்தால் அதனை எடுத்துக் கொள்ளுங்கள். அது உங்களுக்குக் கிடைக்கா விட்டால் (அதிலிருந்து) விலகிக் கொள்ளுங்கள்" என்றும் கூறுகின்றனர். அல்லாஹ் எவரையும் கஷ்டத்திற்குள்ளாக்க விரும்பினால் அல்லாஹ்வைத் தடைசெய்ய உங்களால் ஒரு சிறிதும் முடியாது. இத்தகையவர்களின் உள்ளங்களைப் பரிசுத்தமாக்கி வைக்க அல்லாஹ் விரும்பவேயில்லை. இவர்களுக்கு, இம்மையில் இழிவும் மறுமையில் மகத்தான வேதனையும் உண்டு. ([௫] ஸூரத்துல் மாயிதா: ௪௧)
Tafseer
௪௨

سَمّٰعُوْنَ لِلْكَذِبِ اَكّٰلُوْنَ لِلسُّحْتِۗ فَاِنْ جَاۤءُوْكَ فَاحْكُمْ بَيْنَهُمْ اَوْ اَعْرِضْ عَنْهُمْ ۚوَاِنْ تُعْرِضْ عَنْهُمْ فَلَنْ يَّضُرُّوْكَ شَيْـًٔا ۗ وَاِنْ حَكَمْتَ فَاحْكُمْ بَيْنَهُمْ بِالْقِسْطِۗ اِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُقْسِطِيْنَ ٤٢

sammāʿūna
سَمَّٰعُونَ
அதிகம் செவிமடுக்கிறார்கள்
lil'kadhibi
لِلْكَذِبِ
பொய்யை
akkālūna
أَكَّٰلُونَ
அதிகம் விழுங்குகிறார்கள்
lilssuḥ'ti
لِلسُّحْتِۚ
ஆகாத செல்வத்தை
fa-in jāūka
فَإِن جَآءُوكَ
இவர்கள் வந்தால்/உம்மிடம்
fa-uḥ'kum
فَٱحْكُم
தீர்ப்பளிப்பீராக
baynahum
بَيْنَهُمْ
அவர்களுக்கு மத்தியில்
aw
أَوْ
அல்லது
aʿriḍ
أَعْرِضْ
புறக்கணிப்பீராக
ʿanhum
عَنْهُمْۖ
அவர்களை
wa-in tuʿ'riḍ
وَإِن تُعْرِضْ
நீர் புறக்கணித்தால்
ʿanhum
عَنْهُمْ
அவர்களை
falan yaḍurrūka
فَلَن يَضُرُّوكَ
அவர்கள் கெடுதி செய்யவே முடியாது/உமக்கு
shayan
شَيْـًٔاۖ
கொஞ்சமும்
wa-in ḥakamta
وَإِنْ حَكَمْتَ
நீர் தீர்ப்பளித்தால்
fa-uḥ'kum
فَٱحْكُم
தீர்ப்பளிப்பீராக
baynahum
بَيْنَهُم
அவர்களுக்கு மத்தியில்
bil-qis'ṭi
بِٱلْقِسْطِۚ
நீதமாக
inna
إِنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
yuḥibbu
يُحِبُّ
நேசிக்கிறான்
l-muq'siṭīna
ٱلْمُقْسِطِينَ
நீதவான்களை
இவர்கள் பொய்யையே அதிகமாகக் கேட்கின்றனர் (பொய்யான விஷயங்களையே அதிகம் பின்பற்றுகின்றனர்). ஆகாத பொருள்களையே அதிகமாக விழுங்கிக் கொண்டிருக்கின்றனர். இத்தகையவர்கள் (யாதொரு நியாயத்திற்காக) உங்களிடம் வரும் சமயத்தில் அவர்களுக்கிடையில் நீங்கள் (நியாயப்படி) தீர்ப்பளியுங்கள் அல்லது (தீர்ப்பளிக்காது) அவர்களைப் புறக்கணித்து விடுங்கள். நீங்கள் அவர்களைப் புறக்கணித்து விட்டாலும், அவர்கள் உங்களுக்கு யாதொரு தீங்கும் செய்ய முடியாது. அவர்களுக்கு இடையில் நீங்கள் தீர்ப்பளித்தால், நியாயமான தீர்ப்பே அளியுங்கள். ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் நீதவான்களை நேசிக்கின்றான். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௪௨)
Tafseer
௪௩

وَكَيْفَ يُحَكِّمُوْنَكَ وَعِنْدَهُمُ التَّوْرٰىةُ فِيْهَا حُكْمُ اللّٰهِ ثُمَّ يَتَوَلَّوْنَ مِنْۢ بَعْدِ ذٰلِكَ ۗوَمَآ اُولٰۤىِٕكَ بِالْمُؤْمِنِيْنَ ࣖ ٤٣

wakayfa
وَكَيْفَ
எவ்வாறு
yuḥakkimūnaka
يُحَكِّمُونَكَ
தீர்ப்பாளராக ஆக்குகிறார்கள்/உம்மை
waʿindahumu
وَعِندَهُمُ
இருக்க / இடம் அவர்கள்
l-tawrātu
ٱلتَّوْرَىٰةُ
தவ்றாத்
fīhā
فِيهَا
அதில்
ḥuk'mu
حُكْمُ
சட்டம்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
thumma
ثُمَّ
பிறகு
yatawallawna
يَتَوَلَّوْنَ
திரும்புகின்றனர்
min baʿdi
مِنۢ بَعْدِ
பின்னர்
dhālika
ذَٰلِكَۚ
அதற்கு
wamā
وَمَآ
இல்லை
ulāika
أُو۟لَٰٓئِكَ
இவர்கள்
bil-mu'minīna
بِٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களாக
(எனினும் நபியே!) இவர்கள் உங்களை (தங்களுக்குத்) தீர்ப்பு கூறுபவராக எவ்வாறு எடுத்துக் கொள்வார்கள்? (ஏனென்றால்,) இவர்களிடத்திலோ தவ்றாத் என்னும் வேதம் இருக்கின்றது. அதில் அல்லாஹ்வுடைய கட்டளையும் இருக்கின்றது. அவ்வாறிருந்தும் அதனை இவர்கள் புறக்கணித்து விட்டனர். ஆகவே (அதனையும்) இவர்கள் நம்பிக்கை கொண்டவர்கள் அல்லர். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௪௩)
Tafseer
௪௪

اِنَّآ اَنْزَلْنَا التَّوْرٰىةَ فِيْهَا هُدًى وَّنُوْرٌۚ يَحْكُمُ بِهَا النَّبِيُّوْنَ الَّذِيْنَ اَسْلَمُوْا لِلَّذِيْنَ هَادُوْا وَالرَّبَّانِيُّوْنَ وَالْاَحْبَارُ بِمَا اسْتُحْفِظُوْا مِنْ كِتٰبِ اللّٰهِ وَكَانُوْا عَلَيْهِ شُهَدَاۤءَۚ فَلَا تَخْشَوُا النَّاسَ وَاخْشَوْنِ وَلَا تَشْتَرُوْا بِاٰيٰتِيْ ثَمَنًا قَلِيْلًا ۗوَمَنْ لَّمْ يَحْكُمْ بِمَآ اَنْزَلَ اللّٰهُ فَاُولٰۤىِٕكَ هُمُ الْكٰفِرُوْنَ ٤٤

innā
إِنَّآ
நிச்சயமாக நாம்
anzalnā
أَنزَلْنَا
இறக்கினோம்
l-tawrāta
ٱلتَّوْرَىٰةَ
தவ்றாத்தை
fīhā
فِيهَا
அதிலே
hudan
هُدًى
நேர்வழி
wanūrun
وَنُورٌۚ
இன்னும் ஒளி
yaḥkumu
يَحْكُمُ
தீர்ப்பளிப்பார்(கள்)
bihā
بِهَا
அதைக் கொண்டே
l-nabiyūna
ٱلنَّبِيُّونَ
நபிமார்கள்
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
aslamū
أَسْلَمُوا۟
முற்றிலும் பணிந்தனர்
lilladhīna
لِلَّذِينَ
எவர்களுக்கு
hādū
هَادُوا۟
யூதராகி விட்டனர்
wal-rabāniyūna
وَٱلرَّبَّٰنِيُّونَ
இன்னும் குருமார்கள்
wal-aḥbāru
وَٱلْأَحْبَارُ
இன்னும் பண்டிதர்கள்
bimā
بِمَا
எதன் காரணமாக
us'tuḥ'fiẓū
ٱسْتُحْفِظُوا۟
காக்கும்படி கோரப்பட்டார்கள்
min kitābi
مِن كِتَٰبِ
வேதத்தை
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
wakānū
وَكَانُوا۟
இன்னும் இருந்தார்கள்
ʿalayhi
عَلَيْهِ
அதன் மீது
shuhadāa
شُهَدَآءَۚ
சாட்சியாளர்களாக
falā takhshawū
فَلَا تَخْشَوُا۟
ஆகவே அஞ்சாதீர்கள்
l-nāsa
ٱلنَّاسَ
மக்களுக்கு
wa-ikh'shawni
وَٱخْشَوْنِ
எனக்கு அஞ்சுங்கள்
walā tashtarū
وَلَا تَشْتَرُوا۟
வாங்காதீர்கள்
biāyātī
بِـَٔايَٰتِى
என் வசனங்களுக்குப் பகரமாக
thamanan
ثَمَنًا
கிரயத்தை
qalīlan
قَلِيلًاۚ
சொற்பமானது
waman
وَمَن
எவர்
lam yaḥkum
لَّمْ يَحْكُم
தீர்ப்பளிக்கவில்லை
bimā anzala
بِمَآ أَنزَلَ
இறக்கியதைக்கொண்டு
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
fa-ulāika humu
فَأُو۟لَٰٓئِكَ هُمُ
அவர்கள்தான்
l-kāfirūna
ٱلْكَٰفِرُونَ
நிராகரிப்பவர்கள்
"தவ்றாத்" (என்னும் வேதத்)தையும் நிச்சயமாக நாம்தான் இறக்கி வைத்தோம்.) அதில் நேர்வழியும் இருக்கின்றது; ஒளியும் இருக்கின்றது. (அல்லாஹ்வுக்கு) முற்றிலும் வழிப்பட்டு நடந்த நபிமார்கள் அதனைக் கொண்டே யூதர்களுக்கு (மார்க்க)க் கட்டளையிட்டு வந்தார்கள். அவர்களுடைய (பண்டிதர்களாகிய) ரிப்பிய்யூன்களும், (குருமார்களாகிய) அஹ்பார்களும், அல்லாஹ் வுடைய வேதத்தைக் காப்பவர்கள் என்ற முறையில் (அதனைக் கொண்டே தீர்ப்பளித்து வந்தார்கள். அன்றி இவர்கள்) அதற்கு சாட்சிகளாகவும் இருந்தார்கள். (அவ்விதமிருந்தும் யூதர்கள் புறக்கணித்து விட்டனர். நம்பிக்கையாளர்களே!) நீங்கள் மனிதர் களுக்கு அஞ்ச வேண்டாம்; எனக்கே அஞ்சிக் கொள்ளுங்கள். என் வசனங்களை ஒரு சொற்ப விலைக்கு விற்று விடாதீர்கள். எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்தவைகளைக் கொண்டு தீர்ப்பளிக்க வில்லையோ அவர்கள் நிச்சயமாக நிராகரிப்பவர்களே! ([௫] ஸூரத்துல் மாயிதா: ௪௪)
Tafseer
௪௫

وَكَتَبْنَا عَلَيْهِمْ فِيْهَآ اَنَّ النَّفْسَ بِالنَّفْسِ وَالْعَيْنَ بِالْعَيْنِ وَالْاَنْفَ بِالْاَنْفِ وَالْاُذُنَ بِالْاُذُنِ وَالسِّنَّ بِالسِّنِّۙ وَالْجُرُوْحَ قِصَاصٌۗ فَمَنْ تَصَدَّقَ بِهٖ فَهُوَ كَفَّارَةٌ لَّهٗ ۗوَمَنْ لَّمْ يَحْكُمْ بِمَآ اَنْزَلَ اللّٰهُ فَاُولٰۤىِٕكَ هُمُ الظّٰلِمُوْنَ ٤٥

wakatabnā
وَكَتَبْنَا
இன்னும் விதித்தோம்
ʿalayhim
عَلَيْهِمْ
அவர்கள் மீது
fīhā
فِيهَآ
அதில்
anna
أَنَّ
நிச்சயமாக
l-nafsa
ٱلنَّفْسَ
உயிர்
bil-nafsi
بِٱلنَّفْسِ
உயிருக்குப் பதிலாக
wal-ʿayna
وَٱلْعَيْنَ
இன்னும் கண்
bil-ʿayni
بِٱلْعَيْنِ
கண்ணுக்குப் பதிலாக
wal-anfa
وَٱلْأَنفَ
இன்னும் மூக்கு
bil-anfi
بِٱلْأَنفِ
மூக்குக்குப் பதிலாக
wal-udhuna
وَٱلْأُذُنَ
இன்னும் காது
bil-udhuni
بِٱلْأُذُنِ
காதுக்குப் பதிலாக
wal-sina
وَٱلسِّنَّ
இன்னும் பல்
bil-sini
بِٱلسِّنِّ
பல்லுக்குப் பதிலாக
wal-jurūḥa
وَٱلْجُرُوحَ
இன்னும் காயங்கள்
qiṣāṣun
قِصَاصٌۚ
பழிவாங்கப்படும்
faman
فَمَن
எவர்
taṣaddaqa
تَصَدَّقَ
மன்னிப்பார்
bihi
بِهِۦ
அதை
fahuwa
فَهُوَ
அது
kaffāratun
كَفَّارَةٌ
பரிகாரமாகும்
lahu
لَّهُۥۚ
அவருக்கு
waman
وَمَن
எவர்கள்
lam yaḥkum
لَّمْ يَحْكُم
தீர்ப்பளிக்கவில்லை
bimā anzala
بِمَآ أَنزَلَ
இறக்கியதைக்கொண்டு
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
fa-ulāika humu
فَأُو۟لَٰٓئِكَ هُمُ
அவர்கள்தான்
l-ẓālimūna
ٱلظَّٰلِمُونَ
அநியாயக்காரர்கள்
அவர்களுக்காக அ(வர்களுடைய வேதமாகிய தவ்றாத்)தில் நாம் கட்டளையிட்டிருந்தோம்: "உயிருக்கு உயிர், கண்ணுக்குக் கண், மூக்குக்கு மூக்கு, காதுக்குக் காது, பல்லுக்குப் பல், காயத்திற்கும் (காயமாக) நிச்சயமாக பழிவாங்கப்படும்" என்பதாக. எனினும், எவரேனும் பழிவாங்குவதை (மன்னித்து) அறமாக விட்டுவிட்டால் அது அவரு(டைய தீய செயலு)க்குப் பரிகாரமாகிவிடும். எவர்கள், அல்லாஹ் இறக்கி வைத்தவைகளைக்கொண்டு தீர்ப்பளிக்க வில்லையோ அவர்கள் நிச்சயமாக அநியாயக்காரர்கள்தான்! ([௫] ஸூரத்துல் மாயிதா: ௪௫)
Tafseer
௪௬

وَقَفَّيْنَا عَلٰٓى اٰثَارِهِمْ بِعِيْسَى ابْنِ مَرْيَمَ مُصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَيْهِ مِنَ التَّوْرٰىةِ ۖواٰتَيْنٰهُ الْاِنْجِيْلَ فِيْهِ هُدًى وَّنُوْرٌۙ وَّمُصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَيْهِ مِنَ التَّوْرٰىةِ وَهُدًى وَّمَوْعِظَةً لِّلْمُتَّقِيْنَۗ ٤٦

waqaffaynā
وَقَفَّيْنَا
தொடரச்செய்தோம்
ʿalā āthārihim
عَلَىٰٓ ءَاثَٰرِهِم
அவர்களுடைய அடிச்சுவடுகளில்
biʿīsā
بِعِيسَى
ஈஸாவை
ib'ni
ٱبْنِ
மகன்
maryama
مَرْيَمَ
மர்யமுடைய
muṣaddiqan
مُصَدِّقًا
உண்மைப்படுத்துபவராக
limā
لِّمَا
எதை
bayna yadayhi
بَيْنَ يَدَيْهِ
தனக்கு முன்
mina
مِنَ
இருந்து
l-tawrāti
ٱلتَّوْرَىٰةِۖ
தவ்றாத்
waātaynāhu
وَءَاتَيْنَٰهُ
இன்னும் அவருக்குக் கொடுத்தோம்
l-injīla
ٱلْإِنجِيلَ
இன்ஜீலை
fīhi hudan
فِيهِ هُدًى
அதில்/நேர்வழி
wanūrun
وَنُورٌ
இன்னும் ஒளி
wamuṣaddiqan
وَمُصَدِّقًا
உண்மைப்படுத்தக் கூடியது
limā bayna yadayhi
لِّمَا بَيْنَ يَدَيْهِ
எதை/தனக்கு முன்
mina l-tawrāti
مِنَ ٱلتَّوْرَىٰةِ
தவ்றாத்திலிருந்து
wahudan
وَهُدًى
நேர்வழியாக
wamawʿiẓatan
وَمَوْعِظَةً
இன்னும் ஓர் உபதேசமாக
lil'muttaqīna
لِّلْمُتَّقِينَ
அஞ்சுபவர்களுக்கு
(முன்னிருந்த நபிமார்களாகிய) அவர்களுடைய அடிச்சுவடுகளிலேயே மர்யமுடைய மகன் ஈஸாவையும் நாம் அனுப்பி வைத்தோம். அவர் தன் முன்னிருந்த தவ்றாத்தை உண்மையாக்கி வைப்பவராக இருந்தார். அன்றி, அவருக்கு "இன்ஜீல்" என்னும் வேதத்தையும் நாம் அருளினோம். அதிலும் நேர்வழியும் ஒளியும் இருக்கின்றன. அது தன் முன்னுள்ள தவ்றாத்தை உண்மையாக்கி வைக்கின்றது. இறை அச்சமுடையவர்களுக்கு அது ஒரு நல்லுபதேசமாகவும், நேரான வழியாகவும் இருக்கின்றது. ([௫] ஸூரத்துல் மாயிதா: ௪௬)
Tafseer
௪௭

وَلْيَحْكُمْ اَهْلُ الْاِنْجِيْلِ بِمَآ اَنْزَلَ اللّٰهُ فِيْهِۗ وَمَنْ لَّمْ يَحْكُمْ بِمَآ اَنْزَلَ اللّٰهُ فَاُولٰۤىِٕكَ هُمُ الْفٰسِقُوْنَ ٤٧

walyaḥkum
وَلْيَحْكُمْ
தீர்ப்பளிக்கவும்
ahlu l-injīli
أَهْلُ ٱلْإِنجِيلِ
இன்ஜீலுடையவர்கள்
bimā
بِمَآ
இறக்கியதைக்கொண்டு
anzala l-lahu
أَنزَلَ ٱللَّهُ
அல்லாஹ்
fīhi
فِيهِۚ
அதில்
waman
وَمَن
எவர்கள்
lam yaḥkum
لَّمْ يَحْكُم
தீர்ப்பளிக்கவில்லை
bimā
بِمَآ
எதைக் கொண்டு
anzala
أَنزَلَ
இறக்கினான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
fa-ulāika humu
فَأُو۟لَٰٓئِكَ هُمُ
அவர்கள்தான்
l-fāsiqūna
ٱلْفَٰسِقُونَ
பாவிகள்
ஆகவே, இன்ஜீலை உடையவர்கள் அதில் அல்லாஹ் அறிவித்து இருக்கும் (கட்டளைகளின்)படியே தீர்ப்பளிக்கவும். எவர்கள், அல்லாஹ் அறிவித்த (கட்டளைகளின்)படியே தீர்ப்பளிக்க வில்லையோ அவர்கள் நிச்சயமாக பாவிகள்தான். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௪௭)
Tafseer
௪௮

وَاَنْزَلْنَآ اِلَيْكَ الْكِتٰبَ بِالْحَقِّ مُصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَيْهِ مِنَ الْكِتٰبِ وَمُهَيْمِنًا عَلَيْهِ فَاحْكُمْ بَيْنَهُمْ بِمَآ اَنْزَلَ اللّٰهُ وَلَا تَتَّبِعْ اَهْوَاۤءَهُمْ عَمَّا جَاۤءَكَ مِنَ الْحَقِّۗ لِكُلٍّ جَعَلْنَا مِنْكُمْ شِرْعَةً وَّمِنْهَاجًا ۗوَلَوْ شَاۤءَ اللّٰهُ لَجَعَلَكُمْ اُمَّةً وَّاحِدَةً وَّلٰكِنْ لِّيَبْلُوَكُمْ فِيْ مَآ اٰتٰىكُمْ فَاسْتَبِقُوا الْخَيْرٰتِۗ اِلَى اللّٰهِ مَرْجِعُكُمْ جَمِيْعًا فَيُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ فِيْهِ تَخْتَلِفُوْنَۙ ٤٨

wa-anzalnā
وَأَنزَلْنَآ
இன்னும் இறக்கினோம்
ilayka
إِلَيْكَ
உமக்கு
l-kitāba
ٱلْكِتَٰبَ
இவ்வேதத்தை
bil-ḥaqi
بِٱلْحَقِّ
உண்மையுடன் கூடிய
muṣaddiqan
مُصَدِّقًا
உண்மைப்படுத்தக் கூடியதாக
limā bayna yadayhi
لِّمَا بَيْنَ يَدَيْهِ
தனக்கு முன்னுள்ளதை
mina
مِنَ
இருந்து
l-kitābi
ٱلْكِتَٰبِ
வேதம்
wamuhayminan
وَمُهَيْمِنًا
இன்னும் பாதுகாக்கக் கூடியதாக
ʿalayhi
عَلَيْهِۖ
அதை
fa-uḥ'kum
فَٱحْكُم
ஆகவே தீர்ப்பளிப்பீராக!
baynahum
بَيْنَهُم
அவர்களுக்கு மத்தியில்
bimā anzala
بِمَآ أَنزَلَ
இறக்கியதைக் கொண்டே
l-lahu
ٱللَّهُۖ
அல்லாஹ்
walā tattabiʿ
وَلَا تَتَّبِعْ
பின்பற்றாதீர்
ahwāahum
أَهْوَآءَهُمْ
விருப்பங்களை அவர்களுடைய
ʿammā
عَمَّا
எதைவிட்டு
jāaka
جَآءَكَ
வந்தது/உமக்கு
mina l-ḥaqi
مِنَ ٱلْحَقِّۚ
உண்மையிலிருந்து
likullin
لِكُلٍّ
ஒவ்வொருவருக்கும்
jaʿalnā
جَعَلْنَا
ஏற்படுத்தினோம்
minkum
مِنكُمْ
உங்களில்
shir'ʿatan
شِرْعَةً
ஒரு மார்க்கத்தை
wamin'hājan
وَمِنْهَاجًاۚ
இன்னும் ஒரு வழியை
walaw shāa
وَلَوْ شَآءَ
நாடி இருந்தால்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
lajaʿalakum
لَجَعَلَكُمْ
உங்களை ஆக்கியிருப்பான்
ummatan
أُمَّةً
ஒரு சமுதாயமாக
wāḥidatan walākin
وَٰحِدَةً وَلَٰكِن
ஒரே/எனினும்
liyabluwakum
لِّيَبْلُوَكُمْ
அவன் உங்களை சோதிப்பதற்காக
fī mā ātākum
فِى مَآ ءَاتَىٰكُمْۖ
உங்களுக்கு அவன் கொடுத்தவற்றில்
fa-is'tabiqū
فَٱسْتَبِقُوا۟
ஆகவே முந்துங்கள்
l-khayrāti
ٱلْخَيْرَٰتِۚ
நன்மைகளில்
ilā
إِلَى
பக்கம்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்
marjiʿukum
مَرْجِعُكُمْ
உங்கள் மீளுமிடம்
jamīʿan
جَمِيعًا
அனைவரும்
fayunabbi-ukum
فَيُنَبِّئُكُم
அறிவிப்பான்/உங்களுக்கு
bimā
بِمَا
எதை
kuntum
كُنتُمْ
இருந்தீர்கள்
fīhi
فِيهِ
அதில்
takhtalifūna
تَخْتَلِفُونَ
முரண்படுகிறீர்கள்
(நபியே! முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தையும் நாமே உங்கள்மீது அருளினோம். இது தனக்கு முன்னுள்ள (மற்ற) வேதங்களையும் உண்மையாக்கி வைக்கின்றது. அன்றி, அவைகளைப் பாதுகாப்பதாகவும் இருக்கின்றது. ஆகவே (நபியே!) நீங்கள் அல்லாஹ் (உங்களுக்கு) அருளிய இதனைக் கொண்டே அவர்களுக்கிடையில் தீர்ப்பளியுங்கள். உங்களுக்கு வந்த உண்மையைப் புறக்கணித்து விட்டு அவர்களுடைய விருப்பங்களை நீங்கள் பின்பற்றாதீர்கள். உங்களில் ஒவ்வொரு வ(குப்பா)ருக்கும் ஒவ்வொரு மார்க்கத்தையும், வழியையும் நாமே ஏற்படுத்தினோம். அல்லாஹ் விரும்பினால் உங்கள் அனைவரையும் ஒரே (மார்க்கத்தைப் பின்பற்றும்) வகுப்பாக ஆக்கியிருக்க முடியும். எனினும், உங்களுக்குக் கொடுக்கப்பட்டவைகளில் (நீங்கள் எவ்வாறு நடந்து கொள்கின்றீர்கள் என்று) உங்களைச் சோதிப்பதற்காகவே (இவ்வாறு செய்திருக்கின்றான்.) ஆகவே, (இவைகளில்) மேலான (இஸ்லாமிய) வழியின் பக்கம் விரைந்து செல்லுங்கள். அல்லாஹ்வின் பக்கம்தான் நீங்கள் அனைவரும் செல்ல வேண்டியதிருக்கின்றது. நீங்கள் எதில் (அபிப்பிராய பேதப்பட்டுத்) தர்க்கித்துக் கொண்டிருந் தீர்களோ அதனை அவன் உங்களுக்கு நன்கறிவித்து விடுவான். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௪௮)
Tafseer
௪௯

وَاَنِ احْكُمْ بَيْنَهُمْ بِمَآ اَنْزَلَ اللّٰهُ وَلَا تَتَّبِعْ اَهْوَاۤءَهُمْ وَاحْذَرْهُمْ اَنْ يَّفْتِنُوْكَ عَنْۢ بَعْضِ مَآ اَنْزَلَ اللّٰهُ اِلَيْكَۗ فَاِنْ تَوَلَّوْا فَاعْلَمْ اَنَّمَا يُرِيْدُ اللّٰهُ اَنْ يُّصِيْبَهُمْ بِبَعْضِ ذُنُوْبِهِمْ ۗوَاِنَّ كَثِيْرًا مِّنَ النَّاسِ لَفٰسِقُوْنَ ٤٩

wa-ani uḥ'kum
وَأَنِ ٱحْكُم
தீர்ப்பளிப்பீராக
baynahum
بَيْنَهُم
அவர்களுக்கு மத்தியில்
bimā anzala
بِمَآ أَنزَلَ
இறக்கியதைக்கொண்டு
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
walā tattabiʿ
وَلَا تَتَّبِعْ
பின்பற்றாதீர்
ahwāahum
أَهْوَآءَهُمْ
அவர்களின் விருப்பங்களை
wa-iḥ'dharhum
وَٱحْذَرْهُمْ
அவர்களிடம் எச்சரிக்கையுடன் இருப்பீராக
an yaftinūka
أَن يَفْتِنُوكَ
உம்மை அவர்கள் திருப்பிவிடுவது
ʿan baʿḍi
عَنۢ بَعْضِ
சிலவற்றிலிருந்து
mā anzala
مَآ أَنزَلَ
எது/இறக்கினான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
ilayka
إِلَيْكَۖ
உமக்கு
fa-in tawallaw
فَإِن تَوَلَّوْا۟
அவர்கள் திரும்பினால்
fa-iʿ'lam
فَٱعْلَمْ
அறிந்து கொள்வீராக
annamā
أَنَّمَا
எல்லாம்
yurīdu
يُرِيدُ
நாடுகிறான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
an yuṣībahum
أَن يُصِيبَهُم
அவர்களை சோதிப்பதைத்தான்
bibaʿḍi
بِبَعْضِ
சிலவற்றின்
dhunūbihim
ذُنُوبِهِمْۗ
அவர்களுடைய பாவங்கள்
wa-inna kathīran
وَإِنَّ كَثِيرًا
நிச்சயமாக அதிகமானோர்
mina l-nāsi
مِّنَ ٱلنَّاسِ
மனிதர்களில்
lafāsiqūna
لَفَٰسِقُونَ
பாவிகள்தான்
(நபியே!) அல்லாஹ் இறக்கி வைத்தவைகளைக் கொண்டே நீங்கள் அவர்களுக்கிடையில் தீர்ப்பளியுங்கள். நீங்கள் அவர்களுடைய விருப்பத்தைப் பின்பற்றாதீர்கள். அன்றி உங்களுக்கு அல்லாஹ் இறக்கி வைத்தவற்றில் எதிலிருந்தும் உங்களை அவர்கள் திருப்பி விடாதபடியும் நீங்கள் அவர்களைப் பற்றி எச்சரிக்கையாய் இருங்கள். (உங்களுடைய தீர்ப்பை) அவர்கள் புறக்கணித்து விட்டால் நிச்சயமாக நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். அவர்களின் சில (கொடிய) பாவங்களின் காரணமாக அல்லாஹ் (அவர்களைத் தண்டிக்க) அவர்களுக்குக் கஷ்டத்தைத் தர விரும்புகின்றான். நிச்சயமாக, மனிதர்களில் பெரும்பாலோர் பாவிகளாகவே இருக்கின்றனர். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௪௯)
Tafseer
௫௦

اَفَحُكْمَ الْجَاهِلِيَّةِ يَبْغُوْنَۗ وَمَنْ اَحْسَنُ مِنَ اللّٰهِ حُكْمًا لِّقَوْمٍ يُّوْقِنُوْنَ ࣖ ٥٠

afaḥuk'ma
أَفَحُكْمَ
சட்டத்தையா?
l-jāhiliyati
ٱلْجَٰهِلِيَّةِ
அறியாமைக்காலத்தின்
yabghūna
يَبْغُونَۚ
தேடுகின்றனர்
waman
وَمَنْ
யார்
aḥsanu
أَحْسَنُ
மிக அழகானவன்
mina
مِنَ
விட
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வை
ḥuk'man
حُكْمًا
சட்டத்தால்
liqawmin
لِّقَوْمٍ
சமுதாயத்திற்கு
yūqinūna
يُوقِنُونَ
உறுதி கொள்கின்றனர்
அறியாமைக் காலத்தின் சட்ட (திட்ட)ங்களையா இவர்கள் விரும்புகின்றனர்? மெய்யாகவே, உறுதிகொண்ட மக்களுக்கு அல்லாஹ்வைவிட அழகான தீர்ப்பளிப்பவர் யார்? ([௫] ஸூரத்துல் மாயிதா: ௫௦)
Tafseer