Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௯௧

Qur'an Surah Al-Baqarah Verse 91

ஸூரத்துல் பகரா [௨]: ௯௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاِذَا قِيْلَ لَهُمْ اٰمِنُوْا بِمَآ اَنْزَلَ اللّٰهُ قَالُوْا نُؤْمِنُ بِمَآ اُنْزِلَ عَلَيْنَا وَيَكْفُرُوْنَ بِمَا وَرَاۤءَهٗ وَهُوَ الْحَقُّ مُصَدِّقًا لِّمَا مَعَهُمْ ۗ قُلْ فَلِمَ تَقْتُلُوْنَ اَنْۢبِيَاۤءَ اللّٰهِ مِنْ قَبْلُ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ (البقرة : ٢)

wa-idhā qīla
وَإِذَا قِيلَ
And when it is said
கூறப்பட்டால்
lahum
لَهُمْ
to them
அவர்களுக்கு
āminū
ءَامِنُوا۟
"Believe
நம்பிக்கை கொள்ளுங்கள்
bimā anzala
بِمَآ أَنزَلَ
in what has revealed
எதை/இறக்கினான்
l-lahu
ٱللَّهُ
Allah"
அல்லாஹ்
qālū
قَالُوا۟
they say
கூறுகிறார்கள்
nu'minu
نُؤْمِنُ
"We believe
நம்பிக்கை கொள்கிறோம்
bimā unzila
بِمَآ أُنزِلَ
in what was revealed
எதை/இறக்கப்பட்டது
ʿalaynā
عَلَيْنَا
to us"
எங்கள் மீது
wayakfurūna
وَيَكْفُرُونَ
And they disbelieve
இன்னும் நிராகரிக்கிறார்கள்
bimā warāahu
بِمَا وَرَآءَهُۥ
in what (is) besides it
எதை/அதற்கு அப்பால்
wahuwa
وَهُوَ
while it
அதுவோ
l-ḥaqu
ٱلْحَقُّ
(is) the truth
உண்மை
muṣaddiqan
مُصَدِّقًا
confirming
உண்மைப்படுத்தக் கூடியது
limā maʿahum
لِّمَا مَعَهُمْۗ
what (is) with them
எதை/அவர்களிடம்
qul
قُلْ
Say
கூறுவீராக
falima
فَلِمَ
"Then why
எதற்காக
taqtulūna
تَقْتُلُونَ
(did) you kill
கொலை செய்தீர்கள்
anbiyāa
أَنۢبِيَآءَ
(the) Prophets
தூதர்களை
l-lahi
ٱللَّهِ
(of) Allah
அல்லாஹ்வுடைய
min qablu
مِن قَبْلُ
from before
முன்னர்
in kuntum
إِن كُنتُم
if you were
நீங்கள் இருந்தால்
mu'minīna
مُّؤْمِنِينَ
believers?"
நம்பிக்கையாளர்களாக

Transliteration:

Wa izaa qeela lahum aaminoo bimaaa anzalal laahu qaaloo nu'minu bimaaa unzila 'alainaa wa yakfuroona bimaa waraaa'ahoo wa huwal haqqu musaddiqal limaa ma'ahum; qul falima taqtuloona Ambiyaaa'al laahi min qablu in kuntum mu'mineen (QS. al-Baq̈arah:91)

English Sahih International:

And when it is said to them, "Believe in what Allah has revealed," they say, "We believe [only] in what was revealed to us." And they disbelieve in what came after it, while it is the truth confirming that which is with them. Say, "Then why did you kill the prophets of Allah before, if you are [indeed] believers?" (QS. Al-Baqarah, Ayah ௯௧)

Abdul Hameed Baqavi:

"அல்லாஹ் இறக்கிவைத்த (இ)தை நீங்கள் நம்பிக்கை கொள்ளுங்கள்" என அவர்களுக்குக் கூறப்பட்டால் "எங்கள் (நபிமார்கள்) மீது இறக்கப்பட்டவை(யான வேதங்)களை (மட்டுமே) நம்பிக்கை கொள்வோம்" எனக் கூறி அவைகளைத் தவிர உள்ள இ(ந்)த(க்குர்ஆ)னை நிராகரித்து விடுகின்றார்கள். ஆனால், இதுவோ அவர்களிடமுள்ள (தவ்றாத்)தை மெய்யாக்கி வைக்கின்ற உண்மையா(ன வேதமா)க இருக்கிறது. (நபியே! நீங்கள் அவர்களை நோக்கிக்) கேளுங்கள்: "(உங்கள் வேதத்தை) உண்மையாகவே நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களாயிருந்தால் (உங்களில் தோன்றிய) அல்லாஹ்வுடைய நபிமார்களை இதற்கு முன் நீங்கள் ஏன் கொலை செய்தீர்கள்?" (ஸூரத்துல் பகரா, வசனம் ௯௧)

Jan Trust Foundation

“அல்லாஹ் இறக்கி வைத்த (திருக்குர்ஆன் மீது) ஈமான் கொள்ளுங்கள்” என்று அவர்களுக்கு சொல்லப்பட்டால், “எங்கள் மீது இறக்கப்பட்டதன் மீதுதான் நம்பிக்கை கொள்வோம்” என்று கூறுகிறார்கள் அதற்கு பின்னால் உள்ளவற்றை நிராகரிக்கிறார்கள். ஆனால் இதுவோ(குர்ஆன்) அவர்களிடம் இருப்பதை உண்மைப் படுத்துகிறது. “நீங்கள் உண்மை விசுவாசிகளாக இருந்தால், ஏன் அல்லாஹ்வின் முந்திய நபிமார்களை நீங்கள் கொலை செய்தீர்கள்?” என்று அவர்களிடம் (நபியே!) நீர் கேட்பீராக.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

"அல்லாஹ் இறக்கிய (இவ்வேதத்)தை நீங்கள் நம்பிக்கை கொள்ளுங்கள்" என அவர்களுக்குக் கூறப்பட்டால் "எங்கள் (நபிமார்கள்) மீது இறக்கப்பட்டதை (மட்டுமே) நம்பிக்கை கொள்வோம்" எனக் கூறுகிறார்கள். அதற்கு அப்பால் உள்ளதை நிராகரிக்கிறார்கள். அதுவோ அவர்களிடமுள்ள (தவ்றாத்)தை உண்மைப்படுத்தக்கூடிய உண்மையா(ன வேதமா)கும். (நபியே) கூறுவீராக: "(உங்கள் வேதத்தை உண்மையாகவே நம்பிய) நம்பிக்கையாளர்களாக நீங்கள் இருந்தால் அல்லாஹ்வுடைய தூதர்களை (இதற்கு) முன்னர் எதற்காகக் கொலை செய்தீர்கள்?