وَعَلَّمَ اٰدَمَ الْاَسْمَاۤءَ كُلَّهَا ثُمَّ عَرَضَهُمْ عَلَى الْمَلٰۤىِٕكَةِ فَقَالَ اَنْۢبِـُٔوْنِيْ بِاَسْمَاۤءِ هٰٓؤُلَاۤءِ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ ٣١
- waʿallama
- وَعَلَّمَ
- இன்னும் கற்பித்தான்
- ādama
- ءَادَمَ
- ஆதமுக்கு
- l-asmāa
- ٱلْأَسْمَآءَ
- பெயர்களை
- kullahā
- كُلَّهَا
- எல்லாவற்றையும்/ அவை
- thumma
- ثُمَّ
- பிறகு
- ʿaraḍahum
- عَرَضَهُمْ
- வைத்தான்/அவற்றை
- ʿalā l-malāikati
- عَلَى ٱلْمَلَٰٓئِكَةِ
- முன்/வானவர்கள்
- faqāla
- فَقَالَ
- இன்னும் கூறினான்
- anbiūnī
- أَنۢبِـُٔونِى
- அறிவியுங்கள்/எனக்கு
- bi-asmāi hāulāi
- بِأَسْمَآءِ هَٰٓؤُلَآءِ
- பெயர்களை/இவற்றின்
- in kuntum
- إِن كُنتُمْ
- நீங்கள் இருந்தால்
- ṣādiqīna
- صَٰدِقِينَ
- உண்மையாளர்களாக
பின்பு (ஆதமைப் படைத்து) ஆதமுக்கு எல்லாப் (பொருள்களின்) பெயர்களையும் (அவற்றின் தன்மைகளையும்) கற்றுக் கொடுத்து, அவைகளை அந்த மலக்குகளுக்கு முன்பாக்கி "(மலக்குகளே! ஆதமுக்கு என்னுடைய பிரதிநிதி ஆவதற்குரிய தகுதியில்லை என்று கூறினீர்களே! இதில்) நீங்கள் உண்மை யானவர்களாக இருந்தால் (இதோ உங்கள் முன்னிருக்கும்) இவற்றின் பெயர்களை எனக்கு அறிவியுங்கள்" எனக் கூறினான். ([௨] ஸூரத்துல் பகரா: ௩௧)Tafseer
قَالُوْا سُبْحٰنَكَ لَا عِلْمَ لَنَآ اِلَّا مَا عَلَّمْتَنَا ۗاِنَّكَ اَنْتَ الْعَلِيْمُ الْحَكِيْمُ ٣٢
- qālū
- قَالُوا۟
- கூறினார்கள்
- sub'ḥānaka
- سُبْحَٰنَكَ
- நீ மகாத்தூயவன்
- lā ʿil'ma
- لَا عِلْمَ
- அறவேஇல்லை/அறிவு
- lanā
- لَنَآ
- எங்களுக்கு
- illā
- إِلَّا
- தவிர
- mā ʿallamtanā
- مَا عَلَّمْتَنَآۖ
- எவை/கற்பித்தாய்/எங்களுக்கு
- innaka anta
- إِنَّكَ أَنتَ
- நிச்சயமாக நீதான்
- l-ʿalīmu
- ٱلْعَلِيمُ
- நன்கறிந்தவன்
- l-ḥakīmu
- ٱلْحَكِيمُ
- மகா ஞானவான்
(அவ்வாறு அறிவிக்க முடியாமல்) அவர்கள் (இறைவனை நோக்கி) "நீ மிகத் தூய்மையானவன். நீ எங்களுக்கு அறிவித்தவற்றைத் தவிர (வேறொன்றையும்) நாங்கள் அறிய மாட்டோம். நிச்சயமாக நீ மிக்க அறிந்தவனும், ஞானம் உடையவனாகவும் இருக்கின்றாய்" எனக் கூறினார்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௩௨)Tafseer
قَالَ يٰٓاٰدَمُ اَنْۢبِئْهُمْ بِاَسْمَاۤىِٕهِمْ ۚ فَلَمَّآ اَنْۢبَاَهُمْ بِاَسْمَاۤىِٕهِمْۙ قَالَ اَلَمْ اَقُلْ لَّكُمْ اِنِّيْٓ اَعْلَمُ غَيْبَ السَّمٰوٰتِ وَالْاَرْضِۙ وَاَعْلَمُ مَا تُبْدُوْنَ وَمَا كُنْتُمْ تَكْتُمُوْنَ ٣٣
- qāla
- قَالَ
- கூறினான்
- yāādamu
- يَٰٓـَٔادَمُ
- ஆதமே
- anbi'hum
- أَنۢبِئْهُم
- அறிவிப்பீராக/அவர்களுக்கு
- bi-asmāihim
- بِأَسْمَآئِهِمْۖ
- பெயர்களை/அவற்றின்
- falammā
- فَلَمَّآ
- போது/அறிவித்தார்
- anba-ahum
- أَنۢبَأَهُم
- அவர்களுக்கு
- bi-asmāihim
- بِأَسْمَآئِهِمْ
- பெயர்களை/அவற்றின்
- qāla
- قَالَ
- கூறினான்
- alam aqul
- أَلَمْ أَقُل
- நான் கூறவில்லையா?
- lakum
- لَّكُمْ
- உங்களுக்கு
- innī
- إِنِّىٓ
- நிச்சயமாக நான்
- aʿlamu
- أَعْلَمُ
- அறிவேன்
- ghayba
- غَيْبَ
- மறைவானவற்றை
- l-samāwāti
- ٱلسَّمَٰوَٰتِ
- வானங்கள்
- wal-arḍi
- وَٱلْأَرْضِ
- இன்னும் பூமி
- wa-aʿlamu
- وَأَعْلَمُ
- இன்னும் அறிவேன்
- mā tub'dūna
- مَا تُبْدُونَ
- எதை/ வெளிப்படுத்துகிறீர்கள்
- wamā kuntum taktumūna
- وَمَا كُنتُمْ تَكْتُمُونَ
- இன்னும் எதை/இருந்தீர்கள்/மறைக்கிறீர்கள்
(பின்னர் இறைவன்) "ஆதமே! நீங்கள் அவற்றின் பெயர்களை அவர்களுக்கு அறிவியுங்கள்" எனக் கூறினான். அவர் அவர்களுக்கு அவற்றின் பெயர்களை அறிவித்தபொழுது அவன் (மலக்குகளை நோக்கி) "பூமியிலும் வானங்களிலும் (உங்களுக்கு) மறைவானவைகளை நிச்சயமாக நான் நன்கறிபவன் என்று நான் உங்களுக்குக் கூறவில்லையா? ஆகவே, நீங்கள் (ஆதமை பற்றி) வெளியிட்டதையும், மறைத்துக் கொண்டதையும் நிச்சயமாக நான் (நன்கு) அறிவேன்" என்றான். ([௨] ஸூரத்துல் பகரா: ௩௩)Tafseer
وَاِذْ قُلْنَا لِلْمَلٰۤىِٕكَةِ اسْجُدُوْا لِاٰدَمَ فَسَجَدُوْٓا اِلَّآ اِبْلِيْسَۗ اَبٰى وَاسْتَكْبَرَۖ وَكَانَ مِنَ الْكٰفِرِيْنَ ٣٤
- wa-idh qul'nā
- وَإِذْ قُلْنَا
- சமயம்/கூறினோம்
- lil'malāikati
- لِلْمَلَٰٓئِكَةِ
- வானவர்களுக்கு
- us'judū
- ٱسْجُدُوا۟
- சிரம் பணியுங்கள்
- liādama
- لِءَادَمَ
- ஆதமுக்கு
- fasajadū
- فَسَجَدُوٓا۟
- ஆகவே சிரம் பணிந்தார்கள்
- illā
- إِلَّآ
- தவிர
- ib'līsa
- إِبْلِيسَ
- இப்லீஸ்
- abā
- أَبَىٰ
- மறுத்தான்
- wa-is'takbara
- وَٱسْتَكْبَرَ
- இன்னும் பெருமையடித்தான்
- wakāna
- وَكَانَ
- இன்னும் ஆகிவிட்டான்
- mina l-kāfirīna
- مِنَ ٱلْكَٰفِرِينَ
- நிராகரிப்பாளர்களில்
பின்னர் நாம் மலக்குகளை (நோக்கி) "ஆதமுக்கு நீங்கள் பணி(ந்து ஸுஜூது செய்)யுங்கள்" எனக் கூறியபோது இப்லீஸைத் தவிர (அனைவரும்) ஸுஜூது செய்தார்கள். அவனோ பெருமை கொண்டு விலகி (நம்முடைய கட்டளையை) நிராகரிப்பவனாகி விட்டான். ([௨] ஸூரத்துல் பகரா: ௩௪)Tafseer
وَقُلْنَا يٰٓاٰدَمُ اسْكُنْ اَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَاۖ وَلَا تَقْرَبَا هٰذِهِ الشَّجَرَةَ فَتَكُوْنَا مِنَ الظّٰلِمِيْنَ ٣٥
- waqul'nā
- وَقُلْنَا
- இன்னும் கூறினோம்
- yāādamu
- يَٰٓـَٔادَمُ
- ஆதமே
- us'kun
- ٱسْكُنْ
- வசிப்பீராக
- anta
- أَنتَ
- நீர்
- wazawjuka
- وَزَوْجُكَ
- இன்னும் உம் மனைவி
- l-janata
- ٱلْجَنَّةَ
- சொர்க்கத்தில்
- wakulā
- وَكُلَا
- இன்னும் இருவரும் சாப்பிடுங்கள்
- min'hā
- مِنْهَا
- அதிலிருந்து
- raghadan
- رَغَدًا
- தாராளமாக
- ḥaythu shi'tumā
- حَيْثُ شِئْتُمَا
- விதத்தில்/இருவரும் நாடினீர்கள்
- walā taqrabā
- وَلَا تَقْرَبَا
- இன்னும் இருவரும் நெருங்காதீர்கள்
- hādhihi
- هَٰذِهِ
- இந்த
- l-shajarata
- ٱلشَّجَرَةَ
- மரத்தை
- fatakūnā
- فَتَكُونَا
- இருவரும் ஆகிவிடுவீர்கள்
- mina l-ẓālimīna
- مِنَ ٱلظَّٰلِمِينَ
- அநியாயக்காரர்களில்
பின்னர் நாம் (ஆதமுக்குத் துணையாக அவர் மனைவியைப் படைத்து ஆதமை நோக்கி) "ஆதமே! நீங்கள் உங்களுடைய மனைவியுடன் இச்சோலையில் வசித்திருங்கள். நீங்கள் இருவரும் இதில் விரும்பும் இடத்தில் (விரும்பியவற்றைத்) தாராளமாகப் புசியுங்கள். ஆனால் இந்த மரத்தை அணுகாதீர்கள். அணுகினால் நீங்கள் இருவரும் (உங்களுக்குத்) தீங்கிழைத்துக் கொண்டவர் களாவீர்கள்" என்று கூறினோம். ([௨] ஸூரத்துல் பகரா: ௩௫)Tafseer
فَاَزَلَّهُمَا الشَّيْطٰنُ عَنْهَا فَاَخْرَجَهُمَا مِمَّا كَانَا فِيْهِ ۖ وَقُلْنَا اهْبِطُوْا بَعْضُكُمْ لِبَعْضٍ عَدُوٌّ ۚ وَلَكُمْ فِى الْاَرْضِ مُسْتَقَرٌّ وَّمَتَاعٌ اِلٰى حِيْنٍ ٣٦
- fa-azallahumā
- فَأَزَلَّهُمَا
- பிறழச் செய்தான்/அவ்விருவரை
- l-shayṭānu
- ٱلشَّيْطَٰنُ
- ஷைத்தான்
- ʿanhā
- عَنْهَا
- அதிலிருந்து
- fa-akhrajahumā
- فَأَخْرَجَهُمَا
- வெளியேற்றினான்/அவ்விருவரை
- mimmā
- مِمَّا
- எதிலிருந்து
- kānā
- كَانَا
- இருவரும்இருந்தனர்
- fīhi
- فِيهِۖ
- அதில்
- waqul'nā
- وَقُلْنَا
- இன்னும் கூறினோம்
- ih'biṭū
- ٱهْبِطُوا۟
- இறங்குங்கள்
- baʿḍukum
- بَعْضُكُمْ
- உங்களில் சிலர்
- libaʿḍin
- لِبَعْضٍ
- சிலருக்கு
- ʿaduwwun
- عَدُوٌّۖ
- எதிரி
- walakum
- وَلَكُمْ
- இன்னும் உங்களுக்கு
- fī l-arḍi
- فِى ٱلْأَرْضِ
- பூமியில்
- mus'taqarrun
- مُسْتَقَرٌّ
- வசிக்குமிடம்
- wamatāʿun
- وَمَتَٰعٌ
- இன்னும் இன்பம்
- ilā
- إِلَىٰ
- வரை
- ḥīnin
- حِينٍ
- ஒரு காலம்
எனினும் (இப்லீஸாகிய) ஷைத்தான் அவ்விருவரையும் (தடுக்கப்பட்டிருந்த மரத்தை அணுகித்) தவறிழைக்கும்படிச் செய்து அச்சோலையை விட்டும், அவ்விருவரும் இருந்த (மேலான) நிலைமையிலிருந்தும் அவர்களை வெளியேறும்படி செய்து விட்டான். ஆகவே (அவர்களை நோக்கி) "உங்களில் சிலர் சிலருக்கு எதிரியாவர். (இச்சோலையிலிருந்து) நீங்கள் இறங்கிவிடுங்கள். உங்களுக்கு பூமியில்தான் வசிக்க இடமுண்டு. அதில் சிறிது காலம் வரையில் சுகமும் அனுபவிக்கலாம்" என நாம் கூறினோம். ([௨] ஸூரத்துல் பகரா: ௩௬)Tafseer
فَتَلَقّٰٓى اٰدَمُ مِنْ رَّبِّهٖ كَلِمٰتٍ فَتَابَ عَلَيْهِ ۗ اِنَّهٗ هُوَ التَّوَّابُ الرَّحِيْمُ ٣٧
- fatalaqqā
- فَتَلَقَّىٰٓ
- பெற்றார்
- ādamu
- ءَادَمُ
- ஆதம்
- min
- مِن
- இருந்து
- rabbihi
- رَّبِّهِۦ
- தம் இறைவன்
- kalimātin
- كَلِمَٰتٍ
- (சில) வாக்கியங்களை
- fatāba
- فَتَابَ
- ஆகவே மன்னித்தான்
- ʿalayhi
- عَلَيْهِۚ
- அவரை
- innahu huwa
- إِنَّهُۥ هُوَ
- நிச்சயமாக அவன்தான்
- l-tawābu
- ٱلتَّوَّابُ
- தவ்பாவை அங்கீகரிப்பவன்
- l-raḥīmu
- ٱلرَّحِيمُ
- பேரன்பாளன்
பின்னர் ஆதம் சில வாக்கியங்களைத் தன் இறைவனிட மிருந்து கற்றுக் கொண்டார். (அவ்வாக்கியங்களைக் கொண்டு அவர் பிரார்த்தனை செய்த வண்ணமாகவே இருந்தார்.) அதனால் அவரை (அல்லாஹ்) மன்னித்துவிட்டான். நிச்சயமாக அவன்தான் மிக்க மன்னிப்பவனும் அளவற்ற அன்புடையவனுமாக இருக்கின்றான். ([௨] ஸூரத்துல் பகரா: ௩௭)Tafseer
قُلْنَا اهْبِطُوْا مِنْهَا جَمِيْعًا ۚ فَاِمَّا يَأْتِيَنَّكُمْ مِّنِّيْ هُدًى فَمَنْ تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ ٣٨
- qul'nā
- قُلْنَا
- கூறினோம்
- ih'biṭū
- ٱهْبِطُوا۟
- இறங்குங்கள்
- min'hā
- مِنْهَا
- அதிலிருந்து
- jamīʿan
- جَمِيعًاۖ
- அனைவரும்
- fa-immā yatiyannakum
- فَإِمَّا يَأْتِيَنَّكُم
- நிச்சயமாக வரும்/உங்களுக்கு
- minnī
- مِّنِّى
- என்னிடமிருந்து
- hudan
- هُدًى
- நேர்வழி
- faman
- فَمَن
- எவர்(கள்)
- tabiʿa
- تَبِعَ
- பின்பற்றினார்(கள்)
- hudāya
- هُدَاىَ
- நேர்வழியை/என்
- falā khawfun
- فَلَا خَوْفٌ
- அச்சமில்லை
- ʿalayhim
- عَلَيْهِمْ
- அவர்கள் மீது
- walā hum yaḥzanūna
- وَلَا هُمْ يَحْزَنُونَ
- இன்னும் அவர்கள் கவலைப்பட மாட்டார்கள்
(பின்னர்) நாம் கூறினோம்: "நீங்கள் அனைவரும் இதில் இருந்து இறங்கிவிடுங்கள். என்னிடமிருந்து உங்களுக்கு (என்னுடைய தூதர்கள் மூலம்) நேர்வழி நிச்சயமாக வரும். (உங்களில்) எவர்கள் என்னுடைய அந்நேர்வழியைப் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு யாதொரு பயமுமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௩௮)Tafseer
وَالَّذِيْنَ كَفَرُوْا وَكَذَّبُوْا بِاٰيٰتِنَآ اُولٰۤىِٕكَ اَصْحٰبُ النَّارِ ۚ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ ࣖ ٣٩
- wa-alladhīna
- وَٱلَّذِينَ
- இன்னும் எவர்கள்
- kafarū
- كَفَرُوا۟
- நிராகரித்தார்கள்
- wakadhabū
- وَكَذَّبُوا۟
- இன்னும் பொய்ப்பித்தார்கள்
- biāyātinā
- بِـَٔايَٰتِنَآ
- வசனங்களை/நம்
- ulāika
- أُو۟لَٰٓئِكَ
- அவர்கள்
- aṣḥābu l-nāri
- أَصْحَٰبُ ٱلنَّارِۖ
- நரகவாசிகள்
- hum fīhā
- هُمْ فِيهَا
- அவர்கள்/அதில்
- khālidūna
- خَٰلِدُونَ
- நிரந்தரமானவர்கள்
(அன்றி) எவர்கள் (என்னுடைய நேர்வழியை) நிராகரித்து என்னுடைய வசனங்களைப் பொய்யாக்குகின்றார்களோ அவர்கள் நரகவாசிகளே! அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்." ([௨] ஸூரத்துல் பகரா: ௩௯)Tafseer
يٰبَنِيْٓ اِسْرَاۤءِيْلَ اذْكُرُوْا نِعْمَتِيَ الَّتِيْٓ اَنْعَمْتُ عَلَيْكُمْ وَاَوْفُوْا بِعَهْدِيْٓ اُوْفِ بِعَهْدِكُمْۚ وَاِيَّايَ فَارْهَبُوْنِ ٤٠
- yābanī is'rāīla
- يَٰبَنِىٓ إِسْرَٰٓءِيلَ
- சந்ததிகளே/இஸ்ராயீலின்
- udh'kurū
- ٱذْكُرُوا۟
- நினைவு கூறுங்கள்
- niʿ'matiya
- نِعْمَتِىَ
- என் அருளை
- allatī anʿamtu
- ٱلَّتِىٓ أَنْعَمْتُ
- எது/அருள் புரிந்தேன்
- ʿalaykum
- عَلَيْكُمْ
- உங்கள் மீது
- wa-awfū
- وَأَوْفُوا۟
- இன்னும் நிறைவேற்றுங்கள்
- biʿahdī
- بِعَهْدِىٓ
- வாக்கை/என்
- ūfi
- أُوفِ
- நிறைவேற்றுவேன்
- biʿahdikum
- بِعَهْدِكُمْ
- வாக்கை/உங்கள்
- wa-iyyāya
- وَإِيَّٰىَ
- இன்னும் என்னையே
- fa-ir'habūni
- فَٱرْهَبُونِ
- பயப்படுங்கள்/என்னை
இஸ்ராயீலின் சந்ததிகளே! உங்களுக்கு நான் அளித்திருந்த என்னுடைய அருட்கொடையை நினைத்துப் பாருங்கள். நீங்கள் எனக்களித்த வாக்கை நிறைவேற்றுங்கள். நானும் உங்களுக்களித்த வாக்கை நிறைவேற்றுவேன். என்னையே (பயந்து) அஞ்சுங்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௪௦)Tafseer