குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௨௫
Qur'an Surah Al-An'am Verse 25
ஸூரத்துல் அன்ஆம் [௬]: ௨௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَمِنْهُمْ مَّنْ يَّسْتَمِعُ اِلَيْكَ ۚوَجَعَلْنَا عَلٰى قُلُوْبِهِمْ اَكِنَّةً اَنْ يَّفْقَهُوْهُ وَفِيْٓ اٰذَانِهِمْ وَقْرًا ۗوَاِنْ يَّرَوْا كُلَّ اٰيَةٍ لَّا يُؤْمِنُوْا بِهَا ۗحَتّٰٓى اِذَا جَاۤءُوْكَ يُجَادِلُوْنَكَ يَقُوْلُ الَّذِيْنَ كَفَرُوْٓا اِنْ هٰذَآ اِلَّآ اَسَاطِيْرُ الْاَوَّلِيْنَ (الأنعام : ٦)
- wamin'hum
- وَمِنْهُم
- And among them
- அவர்களில்
- man
- مَّن
- (are those) who
- எவர்
- yastamiʿu
- يَسْتَمِعُ
- listen
- செவி சாய்ப்பார்
- ilayka
- إِلَيْكَۖ
- to you
- உம் பக்கம்
- wajaʿalnā
- وَجَعَلْنَا
- but We have placed
- இன்னும் ஆக்கினோம்
- ʿalā qulūbihim
- عَلَىٰ قُلُوبِهِمْ
- over their hearts
- அவர்களின் உள்ளங்கள் மீது
- akinnatan
- أَكِنَّةً
- coverings
- திரைகளை
- an yafqahūhu
- أَن يَفْقَهُوهُ
- lest they understand it
- அதை புரிந்துகொள்வதற்கு
- wafī ādhānihim
- وَفِىٓ ءَاذَانِهِمْ
- and in their ears
- இன்னும் காதுகளில்/அவர்களுடைய
- waqran
- وَقْرًاۚ
- deafness
- செவிட்டை
- wa-in yaraw
- وَإِن يَرَوْا۟
- And if they see
- அவர்கள் பார்த்தாலும்
- kulla
- كُلَّ
- every
- எல்லா(ம்)
- āyatin
- ءَايَةٍ
- sign
- அத்தாட்சி(களையும்)
- lā yu'minū bihā
- لَّا يُؤْمِنُوا۟ بِهَاۚ
- not will they believe in it
- நம்பிக்கை கொள்ளமாட்டார்கள்/அவற்றை
- ḥattā
- حَتَّىٰٓ
- Until
- முடிவாக
- idhā jāūka
- إِذَا جَآءُوكَ
- when they come to you
- அவர்கள் வந்தால்/உம்மிடம்
- yujādilūnaka
- يُجَٰدِلُونَكَ
- and argue with you
- தர்க்கித்தவர்களாக/உம்மிடம்
- yaqūlu
- يَقُولُ
- say
- கூறுவார்(கள்)
- alladhīna
- ٱلَّذِينَ
- those who
- எவர்கள்
- kafarū
- كَفَرُوٓا۟
- disbelieved
- நிராகரித்தார்கள்
- in
- إِنْ
- "Not
- இல்லை
- hādhā
- هَٰذَآ
- "(is) this
- இவை
- illā
- إِلَّآ
- but
- தவிர
- asāṭīru
- أَسَٰطِيرُ
- (the) tales
- கட்டுக் கதைகளை
- l-awalīna
- ٱلْأَوَّلِينَ
- (of) the former (people)"
- முன்னோர்கள்
Transliteration:
Wa minhum mai yastami'u ilaika wa ja'alnaa 'alaa quloobihim akinnatan ai yafqahoohu wa feee aazaanihim waqraa; wa ai yaraw kulla Aayatil laa yu'minoo bihaa; hattaaa izaa jaaa'oka yujaadiloonaka yaqoolul lazeena kafaroo in haazaa illaaa asaateerul awwaleen(QS. al-ʾAnʿām:25)
English Sahih International:
And among them are those who listen to you, but We have placed over their hearts coverings, lest they understand it, and in their ears deafness. And if they should see every sign, they will not believe in it. Even when they come to you arguing with you, those who disbelieve say, "This is not but legends of the former peoples." (QS. Al-An'am, Ayah ௨௫)
Abdul Hameed Baqavi:
(நபியே! உங்களுக்கு கட்டுப்படுகிறவர்களைப் போல பாவனை செய்து நீங்கள் கூறுவதைக் கேட்க) உங்களுக்கு செவி சாய்ப்பவர்களும் அவர்களில் உண்டு. எனினும், அவர்கள் (தம் தீயச் செயல்களின் காரணமாக) அதனை விளங்கிக் கொள்ளாதிருக்கும்படி அவர்களுடைய உள்ளங்களில் திரையையும் அவர்களுடைய காதுகளில் செவிட்டையும் நாம் ஏற்படுத்தி விட்டோம். ஆகவே, (இத்தகையவர்கள் சத்தியத்திற்குரிய) அத்தாட்சிகள் யாவையும் (தெளிவாகக்) கண்டபோதிலும் அவற்றை அவர்கள் (ஒரு சிறிதும்) நம்பவே மாட்டார்கள். (நபியே!) அவர்கள் உங்களிடம் வந்த போதிலும், உங்களுடன் தர்க்கித்து "இவை பழங்காலத்தில் உள்ளவர்களின் கட்டுக் கதைகளேயன்றி வேறில்லை" என்றே இந்நிராகரிப்பவர்கள் கூறுவார்கள். (ஸூரத்துல் அன்ஆம், வசனம் ௨௫)
Jan Trust Foundation
அவர்களில் சிலர் உம் பேச்சைக் கேட்(பது போல் பாவனை செய்)கின்றனர்; நாம் அவர்களுடைய உள்ளங்களில் அதை விளங்கிக் கொள்ளாது இருக்குமாறு திரைகளையும் இன்னும் அவர்கள் காதுகளில் செவிட்டுத் தன்மையும் ஏற்படுத்தினோம்; இன்னும் அவர்கள் எல்லா அத்தாட்சிகளையும் பார்த்தாலும் அவற்றை நம்பமாட்டார்கள்; இன்னும் இவர்கள் உம்மிடம் வந்தால் உம்மோடு வாதாடுவார்கள்; “இவையெல்லாம் முன்னோர்களுடைய கட்டுக் கதைகளேயன்றி வேறில்லை” என்று இந்நிராகரிப்போர் கூறுவார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நபியே!) உம் பக்கம் செவிசாய்ப்பவரும் அவர்களில் உண்டு. அவர்களுடைய உள்ளங்களில் அதை புரிந்துகொள்வதற்கு (தடையாக) திரைகளையும், அவர்களுடைய காதுகளில் செவிட்டையும் ஆக்கினோம். எல்லா அத்தாட்சிகளையும் அவர்கள் பார்த்தாலும் அவற்றை (அவர்கள்) நம்பிக்கை கொள்ளமாட்டார்கள். (நபியே!) முடிவாக, அவர்கள் உம்மிடம் தர்க்கித்தவர்களாக வந்தால் நிராகரித்த (அ)வர்கள், “இவை முன்னோர்களின் கட்டுக்கதைகளைத் தவிர (வேறு) இல்லை” என்றே கூறுவார்கள்.