Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மாயிதா வசனம் ௫௪

Qur'an Surah Al-Ma'idah Verse 54

ஸூரத்துல் மாயிதா [௫]: ௫௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا مَنْ يَّرْتَدَّ مِنْكُمْ عَنْ دِيْنِهٖ فَسَوْفَ يَأْتِى اللّٰهُ بِقَوْمٍ يُّحِبُّهُمْ وَيُحِبُّوْنَهٗٓ ۙاَذِلَّةٍ عَلَى الْمُؤْمِنِيْنَ اَعِزَّةٍ عَلَى الْكٰفِرِيْنَۖ يُجَاهِدُوْنَ فِيْ سَبِيْلِ اللّٰهِ وَلَا يَخَافُوْنَ لَوْمَةَ لَاۤىِٕمٍ ۗذٰلِكَ فَضْلُ اللّٰهِ يُؤْتِيْهِ مَنْ يَّشَاۤءُۗ وَاللّٰهُ وَاسِعٌ عَلِيْمٌ (المائدة : ٥)

yāayyuhā alladhīna āmanū
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
O you who believe!
நம்பிக்கையாளர்களே
man
مَن
Whoever
எவரும்
yartadda
يَرْتَدَّ
turns back
மாறுவார்
minkum
مِنكُمْ
among you
உங்களிலிருந்து
ʿan dīnihi
عَن دِينِهِۦ
from his religion
விட்டு/தன்மார்க்கம்
fasawfa yatī
فَسَوْفَ يَأْتِى
then soon (will be) brought
கொண்டு வருவான்
l-lahu
ٱللَّهُ
(by) Allah
அல்லாஹ்
biqawmin
بِقَوْمٍ
a people
ஒரு சமுதாயத்தை
yuḥibbuhum
يُحِبُّهُمْ
whom He loves
நேசிப்பான்/அவர்களை
wayuḥibbūnahu
وَيُحِبُّونَهُۥٓ
and they love Him
இன்னும் நேசிப்பார்கள்/அவனை
adhillatin
أَذِلَّةٍ
humble
பணிவானவர்கள்
ʿalā
عَلَى
towards
இடம்
l-mu'minīna
ٱلْمُؤْمِنِينَ
the believers
நம்பிக்கையாளர்கள்
aʿizzatin
أَعِزَّةٍ
(and) stern
கண்டிப்பானவர்கள்
ʿalā l-kāfirīna
عَلَى ٱلْكَٰفِرِينَ
towards the disbelievers
நிராகரிப்பாளர்களிடம்
yujāhidūna
يُجَٰهِدُونَ
striving
போரிடுவார்கள்
fī sabīli
فِى سَبِيلِ
in (the) way
பாதையில்
l-lahi
ٱللَّهِ
(of) Allah
அல்லாஹ்வின்
walā yakhāfūna
وَلَا يَخَافُونَ
and not fearing
பயப்பட மாட்டார்கள்
lawmata
لَوْمَةَ
the blame
பழிப்பை
lāimin
لَآئِمٍۚ
(of) a critic
பழிப்பவனின்
dhālika
ذَٰلِكَ
That
இது
faḍlu
فَضْلُ
(is the) Grace
அருள்
l-lahi
ٱللَّهِ
(of) Allah
அல்லாஹ்வின்
yu'tīhi
يُؤْتِيهِ
He grants
அதை கொடுக்கின்றான்
man yashāu
مَن يَشَآءُۚ
whom He wills
எவருக்கு/நாடுகிறான்
wal-lahu
وَٱللَّهُ
And Allah
அல்லாஹ்
wāsiʿun
وَٰسِعٌ
(is) All-Encompassing
விசாலமானவன்
ʿalīmun
عَلِيمٌ
All-Knowing
நன்கறிந்தவன்

Transliteration:

Yaa aiyuhal lazeena aamanoo mai yartadda minkum 'an deenihee fasawfa yaatil laahu biqawminy yuhibbuhum wa yuhibboonahoo azillatin 'alal mu'mineena a'izzatin 'alal kaafireena yujaahidoona fee sabeelil laahi wa laa yakhaafoona lawmata laaa'im; zaalika fadlul laahi yu'teehi mai yashaaa'; wallaahu Waasi'un 'Aleem (QS. al-Māʾidah:54)

English Sahih International:

O you who have believed, whoever of you should revert from his religion – Allah will bring forth [in place of them] a people He will love and who will love Him [who are] humble toward the believers, strong against the disbelievers; they strive in the cause of Allah and do not fear the blame of a critic. That is the favor of Allah; He bestows it upon whom He wills. And Allah is all-Encompassing and Knowing. (QS. Al-Ma'idah, Ayah ௫௪)

Abdul Hameed Baqavi:

நம்பிக்கையாளர்களே! உங்களில் எவரேனும் தங்கள் மார்க்கத்தில் இருந்து மாறிவிட்டால் (அதனால் அல்லாஹ்வுக்கு நஷ்டமொன்றுமில்லை. உங்களைப்போக்கி) வேறு மக்களை அல்லாஹ் கொண்டு வருவான். அவன் அவர்களை நேசிப்பான்; அவர்களும் அவனை நேசிப்பார்கள். அவர்கள் நம்பிக்கை கொண்டவர்களிடம் பணிவாக நடந்து கொள்வார்கள்; நிராகரிப்பவர்களிடம் கண்டிப்புடையவர்களாக இருப்பார்கள்; அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவார்கள். பழிப்பவனின் பழிப்பை அவர்கள் அஞ்ச மாட்டார்கள். இது அல்லாஹ்வின் அருளாகும். அவன் விரும்பியவர்களுக்குத்தான் இதனை அளிக்கின்றான். அல்லாஹ் மிக விசாலமானவனும், (அனைத்தையும்) நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். (ஸூரத்துல் மாயிதா, வசனம் ௫௪)

Jan Trust Foundation

முஃமின்களே! உங்களில் எவரேனும் தன் மார்க்கத்தைவிட்டு மாறிவிட்டால் (அல்லாஹ்வுக்கு அதனால் நஷ்டமில்லை); அப்பொழுது அல்லாஹ் வேறு ஒரு கூட்டத்தாரைக் கொண்டு வருவான்; அவன் அவர்களை நேசிப்பான்; அவனை அவர்களும் நேசிப்பார்கள்; அவர்கள் முஃமின்களிடம் பணிவாக நடந்து கொள்வார்கள்; காஃபிர்களிடம் கடுமையாக இருப்பார்கள்; அல்லாஹ்வின் பாதையில் போர் செய்வார்கள்; நிந்தனை செய்வோரின் நிந்தனைக்கு அஞ்சமாட்டார்கள்; இது அல்லாஹ்வின் அருட்கொடையாகும்; இதை அவன் நாடியவருக்குக் கொடுக்கின்றான்; அல்லாஹ் மிகவும் விசாலமானவனும் (எல்லாம்) நன்கறிந்தவனுமாக இருக்கின்றான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நம்பிக்கையாளர்களே! உங்களில் எவரும் தன் மார்க்கத்தை விட்டும் மாறினால் அல்லாஹ் ஒரு சமுதாயத்தைக் கொண்டு வருவான். அவன் அவர்களை நேசிப்பான்; அவர்களும் அவனை நேசிப்பார்கள். (அவர்கள்) நம்பிக்கையாளர்களிடம் பணிவானவர்கள்; நிராகரிப்பாளர்களிடம் கண்டிப்பானவர்கள்; அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்கள். பழிப்பவனின் பழிப்பை பயப்படமாட்டார்கள். இது அல்லாஹ்வின் அருள். தான் நாடியவர்களுக்கு அதைத் தருகிறான். அல்லாஹ் விசாலமானவன், நன்கறிந்தவன்.