Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மாயிதா வசனம் ௧௧௦

Qur'an Surah Al-Ma'idah Verse 110

ஸூரத்துல் மாயிதா [௫]: ௧௧௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِذْ قَالَ اللّٰهُ يٰعِيْسَى ابْنَ مَرْيَمَ اذْكُرْ نِعْمَتِيْ عَلَيْكَ وَعَلٰى وَالِدَتِكَ ۘاِذْ اَيَّدْتُّكَ بِرُوْحِ الْقُدُسِۗ تُكَلِّمُ النَّاسَ فِى الْمَهْدِ وَكَهْلًا ۚوَاِذْ عَلَّمْتُكَ الْكِتٰبَ وَالْحِكْمَةَ وَالتَّوْرٰىةَ وَالْاِنْجِيْلَ ۚوَاِذْ تَخْلُقُ مِنَ الطِّيْنِ كَهَيْـَٔةِ الطَّيْرِ بِاِذْنِيْ فَتَنْفُخُ فِيْهَا فَتَكُوْنُ طَيْرًاۢ بِاِذْنِيْ وَتُبْرِئُ الْاَكْمَهَ وَالْاَبْرَصَ بِاِذْنِيْ ۚوَاِذْ تُخْرِجُ الْمَوْتٰى بِاِذْنِيْ ۚوَاِذْ كَفَفْتُ بَنِيْٓ اِسْرَاۤءِيْلَ عَنْكَ اِذْ جِئْتَهُمْ بِالْبَيِّنٰتِ فَقَالَ الَّذِيْنَ كَفَرُوْا مِنْهُمْ اِنْ هٰذَآ اِلَّا سِحْرٌ مُّبِيْنٌ (المائدة : ٥)

idh qāla
إِذْ قَالَ
When said
சமயம்/கூறினான்
l-lahu
ٱللَّهُ
Allah
அல்லாஹ்
yāʿīsā
يَٰعِيسَى
"O Isa
ஈஸாவே
ib'na
ٱبْنَ
son
மகன்
maryama
مَرْيَمَ
(of) Maryam!
மர்யமுடைய
udh'kur
ٱذْكُرْ
Remember
நினைவு கூர்வீராக
niʿ'matī
نِعْمَتِى
My Favor
என் அருளை
ʿalayka
عَلَيْكَ
upon you
உம்மீது
waʿalā wālidatika
وَعَلَىٰ وَٰلِدَتِكَ
and upon your mother
இன்னும் மீது/உம் தாய்
idh
إِذْ
when
சமயம்
ayyadttuka
أَيَّدتُّكَ
I strengthened you
பலப்படுத்தினேன்/உம்மை
birūḥi
بِرُوحِ
with (the) Spirit
ஆத்மாவைக்கொண்டு
l-qudusi
ٱلْقُدُسِ
the Holy
பரிசுத்தமான
tukallimu
تُكَلِّمُ
you spoke
பேசுவீர்
l-nāsa
ٱلنَّاسَ
(to) the people
மக்களிடம்
fī l-mahdi
فِى ٱلْمَهْدِ
in the cradle
தொட்டிலில்
wakahlan
وَكَهْلًاۖ
and (in) maturity
இன்னும் வாலிபராக
wa-idh
وَإِذْ
And when
இன்னும் சமயம்
ʿallamtuka
عَلَّمْتُكَ
I taught you
கற்பித்தேன்/உமக்கு
l-kitāba
ٱلْكِتَٰبَ
the Book
எழுதுவதை
wal-ḥik'mata
وَٱلْحِكْمَةَ
and the wisdom
இன்னும் ஞானத்தை
wal-tawrāta
وَٱلتَّوْرَىٰةَ
and the Taurat
இன்னும் தவ்றாத்தை
wal-injīla
وَٱلْإِنجِيلَۖ
and the Injeel
இன்னும் இன்ஜீலை
wa-idh takhluqu
وَإِذْ تَخْلُقُ
and when you make
இன்னும் சமயம்/படைப்பீர்
mina
مِنَ
from
இருந்து
l-ṭīni
ٱلطِّينِ
the clay
களிமண்
kahayati
كَهَيْـَٔةِ
like the shape
உருவத்தைப் போல்
l-ṭayri
ٱلطَّيْرِ
(of) the bird
பறவையின்
bi-idh'nī
بِإِذْنِى
by My permission
என் அனுமதியினால்
fatanfukhu
فَتَنفُخُ
then you breath
ஊதுவீர்
fīhā
فِيهَا
into it
அதில்
fatakūnu
فَتَكُونُ
and it becomes
அது/ஆகிவிடும்
ṭayran
طَيْرًۢا
a bird
பறவையாக
bi-idh'nī
بِإِذْنِىۖ
by My permission
என் அனுமதியினால்
watub'ri-u
وَتُبْرِئُ
and you heal
இன்னும் சுகமளிப்பீர்
l-akmaha
ٱلْأَكْمَهَ
the born blind
பிறவிக் குருடரை
wal-abraṣa
وَٱلْأَبْرَصَ
and the leper
இன்னும் வெண்குஷ்டரை
bi-idh'nī
بِإِذْنِىۖ
by My permission
என் அனுமதியினால்
wa-idh
وَإِذْ
and when
இன்னும் சமயம்
tukh'riju
تُخْرِجُ
you bring forth
வெளியாக்குவீர்
l-mawtā
ٱلْمَوْتَىٰ
the dead
மரணித்தவர்களை
bi-idh'nī
بِإِذْنِىۖ
by My permission
என் அனுமதியினால்
wa-idh kafaftu
وَإِذْ كَفَفْتُ
And when I restrained
இன்னும் சமயம்/தடுத்தேன்
banī is'rāīla
بَنِىٓ إِسْرَٰٓءِيلَ
(the) Children (of) Israel
இஸ்ரவேலர்களை
ʿanka
عَنكَ
from you
உம்மைவிட்டு
idh
إِذْ
when
போது
ji'tahum
جِئْتَهُم
you came to them
வந்தீர்/அவர்களிடம்
bil-bayināti
بِٱلْبَيِّنَٰتِ
with the clear proofs
தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு
faqāla
فَقَالَ
then said
கூறினார்(கள்)
alladhīna
ٱلَّذِينَ
those who
எவர்கள்
kafarū
كَفَرُوا۟
disbelieved
நிராகரித்தார்கள்
min'hum
مِنْهُمْ
among them
அவர்களில்
in hādhā illā
إِنْ هَٰذَآ إِلَّا
"Not "(is) this but
இல்லை/இது/தவிர
siḥ'run mubīnun
سِحْرٌ مُّبِينٌ
magic" clear"
சூனியம்/தெளிவானது

Transliteration:

Iz qaalal laahu yaa 'Eesab-na-Maryamaz kur ni'matee 'alaika wa 'alaa waalidatik; iz aiyattuka bi Roohil Qudusi tukallimun naasa fil mahdi wa kahlanw wa iz 'allamtukal kitaaba wal Hikmata wa Tawraata wal Injeela wa iz Takhluqu minat teeni kahai 'atit tairi bi iznee fatanfukhu feeha fatakoonu tairam bi iznee wa tubri'ul akmaha wal abrasa bi iznee wa iz tukhrijul mawtaa bi iznee wa iz kafaftu Baneee Israaa'eela 'anka iz ji'tahum bil baiyinaati fa qaalal lazeena kafaroo minhum in haazaaa illaa sihrum mubeen (QS. al-Māʾidah:110)

English Sahih International:

[The Day] when Allah will say, "O Jesus, Son of Mary, remember My favor upon you and upon your mother when I supported you with the Pure Spirit [i.e., the angel Gabriel] and you spoke to the people in the cradle and in maturity; and [remember] when I taught you writing and wisdom and the Torah and the Gospel; and when you designed from clay [what was] like the form of a bird with My permission, then you breathed into it, and it became a bird with My permission; and you healed the blind [from birth] and the leper with My permission; and when you brought forth the dead with My permission; and when I restrained the Children of Israel from [killing] you when you came to them with clear proofs and those who disbelieved among them said, "This is not but obvious magic." (QS. Al-Ma'idah, Ayah ௧௧௦)

Abdul Hameed Baqavi:

பிறகு அல்லாஹ் (ஈஸாவை நோக்கிக்) கூறுவான்: "மர்யமுடைய மகன் ஈஸாவே! உங்கள்மீதும், உங்கள் தாய் மீது (நான் புரிந்து)ள்ள என்னுடைய அருளை நீங்கள் நினைத்துப் பாருங்கள். பரிசுத்த ஆத்மாவைக் கொண்டு உங்களுக்கு உதவி புரிந்து (உங்கள் தாயின் பரிசுத்தத் தன்மையைப் பற்றி) நீங்கள் தொட்டிற்குழந்தையாக இருந்த சமயத்திலும் (உங்கள் தீர்க்க தரிசனத்தைப் பற்றி) வாலிபத்திலும் உங்களைப் பேசச் செய்ததையும் (நினைத்துப் பாருங்கள்.) வேதத்தையும், ஞானத்தையும், தவ்றாத்தையும், இன்ஜீலையும் நான் உங்களுக்குக் கற்பித்ததையும் (நினைத்துப் பாருங்கள்.) அன்றி, நீங்கள் என் கட்டளைப்படி களிமண்ணால் பறவையின் உருவத்தைப் போல் செய்து அதில் நீங்கள் ஊதிய சமயத்தில், அது என் கட்டளையைக் கொண்டு பறவையானதையும், பிறவிக் குருடனையும், வெண் குஷ்டரோகி யையும் என் உதவியினால் நீங்கள் சுகமாக்கியதையும் (நினைத்துப் பாருங்கள்.) நீங்கள் என் அருளைக் கொண்டு மரணித்தவர்களை (கல்லறையிலிருந்து உயிர்கொடுத்து) புறப்படச் செய்ததையும் (நினைத்துப் பாருங்கள்.) அன்றி, இஸ்ராயீலின் சந்ததிகளிடம் நீங்கள் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தபோது அவர்களில் நிராகரித்தவர்கள் நிச்சயமாக இது சந்தேகமற்ற சூனியத்தைத் தவிர வேறல்ல என்று கூறிய(துடன் உங்களுக்குத் தீங்கிழைக்க முயற்சித்த) சமயத்தில் அவர்(களுடைய தீங்கு)களிலிருந்து நான் உங்களை தடுத்துக் கொண்டதையும் நினைத்துப் பாருங்கள். (ஸூரத்துல் மாயிதா, வசனம் ௧௧௦)

Jan Trust Foundation

அப்பொழுது அல்லாஹ் கூறுவான்| “மர்யமுடைய மகன் ஈஸாவே நான் உம்மீதும், உம் தாயார் மீதும் அருளிய என் நிஃமத்தை (அருள் கொடையயை) நினைவு கூறும்; பரிசுத்த ஆன்மாவைக் கொண்டு உமக்கு உதவியளித்து நீர் தொட்டிலிலும் (குழந்தைப் பருவத்திலும்), வாலிபப் பருவத்திலும் மனிதர்களிடம் பேசச் செய்ததையும், இன்னும் நான் உமக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இன்ஜீலையும் கற்றுக் கொடுத்ததையும் (நினைத்துப் பாரும்); இன்னும் நீர் களிமண்ணினால் என் உத்தரவைக் கொண்டு பறவை வடிவத்தைப் போலுண்டாக்கி அதில் நீர் ஊதியபோது அது என் உத்தரவைக் கொண்டு பறவையாகியதையும், இன்னும் என் உத்தரவைக் கொண்டு பிறவிக் குருடனையும், வெண் குஷ்டக்காரனையும் சுகப்படுத்தியதையும், (நினைத்துப் பாரும்); இறந்தோரை என் உத்தரவைக் கொண்டு (உயிர்ப்பித்துக் கல்லறைகளிலிருந்து) வெளிப்படுத்தியதையும் (நினைத்துப் பாரும்); அன்றியும் இஸ்ராயீலின் சந்ததியினரிடம் நீர் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தபோது, அவர்களில் நிராகரித்தவர்கள், “இது தெளிவான சூனியத்தைத் தவிர வேறு இல்லை” என்று கூறிய வேளை, அவர்கள் (உமக்குத் தீங்கு செய்யாதவாறு) நான் தடுத்து விட்டதையும் நினைத்துப் பாரும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அல்லாஹ், “மர்யமுடைய மகன் ஈஸாவே! உம் மீதும், உம் தாய் மீதுமுள்ள என் அருளை நினைவு கூர்வீராக! என்று கூறிய சமயத்தை, நினைவு கூருங்கள்! (ஈஸாவே!) பரிசுத்த ஆத்மாவைக் கொண்டு உம்மை நான் பலப்படுத்திய சமயத்தை நினைவு கூர்வீராக! தொட்டிலி(ல் குழந்தையாக இருந்த சமயத்தி)லும் வாலிபத்திலும் நீர் பேசினீர், இன்னும் எழுதுவதையும் ஞானத்தையும், தவ்றாத்தையும், இன்ஜீலையும் நான் உமக்குக் கற்பித்த சமயத்தை நினைவு கூர்வீராக! நீர் என் அனுமதியினால் களிமண்ணில் பறவையின் உருவத்தைப் போல் படைத்து, அதில் நீர் ஊத, அது என் அனுமதியினால் பறவையாக ஆகும்; பிறவிக் குருடனையும், வெண்குஷ்டரையும் என் அனுமதியினால் நீர் சுகமாக்கிய சமயத்தை நினைவு கூர்வீராக! என் அனுமதியினால் நீர் மரணித்தவர்களை வெளியாக்கிய சமயத்தை நினைவு கூர்வீராக! இஸ்ரவேலர்களை உம்மை விட்டு நான் தடுத்த சமயத்தை நினைவு கூர்வீராக. நீர் தெளிவான அத்தாட்சிகளை அவர்களிடம் கொண்டு வர, அவர்களில் நிராகரித்தவர்கள் இது தெளிவான சூனியம் தவிர வேறல்ல என்று கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக!