Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துன்னிஸாவு வசனம் ௬

Qur'an Surah An-Nisa Verse 6

ஸூரத்துன்னிஸாவு [௪]: ௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَابْتَلُوا الْيَتٰمٰى حَتّٰىٓ اِذَا بَلَغُوا النِّكَاحَۚ فَاِنْ اٰنَسْتُمْ مِّنْهُمْ رُشْدًا فَادْفَعُوْٓا اِلَيْهِمْ اَمْوَالَهُمْ ۚ وَلَا تَأْكُلُوْهَآ اِسْرَافًا وَّبِدَارًا اَنْ يَّكْبَرُوْا ۗ وَمَنْ كَانَ غَنِيًّا فَلْيَسْتَعْفِفْ ۚ وَمَنْ كَانَ فَقِيْرًا فَلْيَأْكُلْ بِالْمَعْرُوْفِ ۗ فَاِذَا دَفَعْتُمْ اِلَيْهِمْ اَمْوَالَهُمْ فَاَشْهِدُوْا عَلَيْهِمْ ۗ وَكَفٰى بِاللّٰهِ حَسِيْبًا (النساء : ٤)

wa-ib'talū
وَٱبْتَلُوا۟
And test
சோதியுங்கள்
l-yatāmā
ٱلْيَتَٰمَىٰ
the orphans
அநாதைகளை
ḥattā
حَتَّىٰٓ
until
இறுதியாக
idhā balaghū
إِذَا بَلَغُوا۟
[when] they reach[ed]
அவர்கள் அடைந்தால்
l-nikāḥa
ٱلنِّكَاحَ
(the age of) marriage
திருமணத்தை
fa-in ānastum
فَإِنْ ءَانَسْتُم
then if you perceive
நீங்கள் கண்டால்
min'hum
مِّنْهُمْ
in them
அவர்களிடம்
rush'dan
رُشْدًا
sound judgement
தெளிவான அறிவை
fa-id'faʿū
فَٱدْفَعُوٓا۟
then deliver
ஒப்படையுங்கள்
ilayhim
إِلَيْهِمْ
to them
அவர்களிடம்
amwālahum
أَمْوَٰلَهُمْۖ
their wealth
செல்வங்களை/ அவர்களுடைய
walā takulūhā
وَلَا تَأْكُلُوهَآ
And (do) not eat it
சாப்பிடாதீர்கள் / அவற்றை
is'rāfan
إِسْرَافًا
extravagantly
அளவு கடந்து
wabidāran
وَبِدَارًا
and hastily
இன்னும் அவரை அவசரமாக
an yakbarū
أَن يَكْبَرُوا۟ۚ
(fearing) that they will grow up
அவர்கள் பெரியவர்களாகுவதை
waman
وَمَن
And whoever
எவர்
kāna
كَانَ
is
இருக்கிறார்
ghaniyyan
غَنِيًّا
rich
செல்வந்தராக
falyastaʿfif
فَلْيَسْتَعْفِفْۖ
then he should refrain
அவர் தவிர்க்கவும்
waman
وَمَن
and whoever
இன்னும் எவர்
kāna
كَانَ
is
இருக்கிறார்
faqīran
فَقِيرًا
poor
ஏழையாக
falyakul
فَلْيَأْكُلْ
then let him eat (of it)
புசிக்கவும்
bil-maʿrūfi
بِٱلْمَعْرُوفِۚ
in a fair manner
முறையுடன்
fa-idhā dafaʿtum
فَإِذَا دَفَعْتُمْ
Then when you deliver
நீங்கள் ஒப்படைத்தால்
ilayhim
إِلَيْهِمْ
to them
அவர்களிடம்
amwālahum
أَمْوَٰلَهُمْ
their wealth
செல்வங்களை/ அவர்களுடைய
fa-ashhidū
فَأَشْهِدُوا۟
then take witnesses
சாட்சியாக்குங்கள்
ʿalayhim
عَلَيْهِمْۚ
on them
அவர்கள் மீது
wakafā
وَكَفَىٰ
And is sufficient
இன்னும் போதுமானவன்
bil-lahi
بِٱللَّهِ
Allah
அல்லாஹ்
ḥasīban
حَسِيبًا
(as) a Reckoner
துல்லியமாக கணக்கெடுப்பவனாக

Transliteration:

Wabtalul yataamaa hattaaa izaa balaghun nikaaha fa in aanastum minhum rushdan fad fa'ooo ilaihim amwaalahum wa laa taa kuloohaaa israafanw wa bidaaran ai yakbaroo; wa mai kaana ghaniyyan falyasta' fif wa mai kaana faqeeran falyaakul bilma'roof; fa izaa dafa'tum ilaihim amwaalahum fa'ashhidoo 'alaihim; wa kafaa billaahi Haseeba (QS. an-Nisāʾ:6)

English Sahih International:

And test the orphans [in their abilities] until they reach marriageable age. Then if you perceive in them sound judgement, release their property to them. And do not consume it excessively and quickly, [anticipating] that they will grow up. And whoever, [when acting as guardian], is self-sufficient should refrain [from taking a fee]; and whoever is poor – let him take according to what is acceptable. Then when you release their property to them, bring witnesses upon them. And sufficient is Allah as Accountant. (QS. An-Nisa, Ayah ௬)

Abdul Hameed Baqavi:

அன்றி, அநாதை(ச் சிறுவர்)களை (நல்லொழுக்கம், கல்வி, தொழில் திறமைகளை கற்பித்து)ச் சோதித்து வாருங்கள். அவர்கள் திருமண பருவத்தை அடைந்த பின்னர் (தங்கள் சொத்தை நிர்வகிக்கக் கூடிய) பகுத்தறிவை அவர்களிடம் நீங்கள் கண்டால், அவர்களுடைய பொருள்களை அவர்களிடம் ஒப்படைத்து விடுங்கள். அவர்கள் பெரியவர்களாகி(த் தங்கள் பொருள்களைப் பெற்றுக் கொண்டு) விடுவார்கள் என்ற எண்ணத்தின் மீது, அவர்களுடைய பொருள்களை அவசரமாகவும் அளவு கடந்தும் சாப்பிட்டு விடாதீர்கள். (அநாதையின் பொருள்களுடைய பொறுப்பாளர்) பணக்காரராக இருந்தால் (தனக்காக அநாதையின் பொருள்களிலிருந்து யாதொன்றையும் பயன் பெறாமல்) தவிர்த்துக் கொள்ளவும். அவர் ஏழையாக இருந்தாலோ முறையான அளவு (அதிலிருந்து) புசிக்கலாம். அவர்களுடைய பொருள்களை நீங்கள் அவர்களிடம் ஒப்படைத்தால் அதற்காக சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். (உண்மைக்) கணக்கை அறிய அல்லாஹ் போதுமானவனாக இருக்கின்றான். (ஆகவே அவர்களுடைய கணக்கில் ஏதும் மோசம் செய்யாதீர்கள்.) (ஸூரத்துன்னிஸாவு, வசனம் ௬)

Jan Trust Foundation

அநாதைகளை அவர்கள் திருமண வயது அடையும் வரை (அவர்கள் முன்னேற்றம் கருதி) சோதித்துக் கொண்டிருங்கள் - (அவர்கள் மணப் பருவத்தை அடைந்ததும்) அவர்கள் (தங்கள் சொத்தை நிர்வகிக்கும் ஆற்றல்) அறிவை பெற்றுவிட்டதாக நீங்கள் அறிந்தால் அவர்களிடம் அவர்கள் சொத்தை ஒப்படைத்து விடுங்கள்; அவர்கள் பெரியவர்களாகி (தம் பொருள்களைத் திரும்பப் பெற்று) விடுவார்கள் என்று அவர்கள் சொத்தை அவசர அவசரமாகவும், வீண் விரையமாகவும் சாப்பிடாதீர்கள். இன்னும் (அவ்வநாதைகளின் பொறுப்பேற்றுக் கொண்டவர்) செல்வந்தராக இருந்தால் (அச்சொத்திலிருந்து ஊதியம் பெறுவதைத்) தவிர்த்துக் கொள்ளட்டும் - ஆனால், அவர் ஏழையாக இருந்தால் நியாயமான அளவு சாப்பிட்டுக் கொள்ளவும்; மேலும் அவர்களுடைய பொருட்களை அவர்களிடம் ஒப்படைக்கும்போது அவர்கள் மீது சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் - (உண்மையாகக்) கணக்கெடுப்பதில் அல்லாஹ்வே போதுமானவன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இறுதியாக அநாதைகளைச் சோதியுங்கள், அவர்கள் திருமண (பருவ)த்தை அடைந்தால் (செல்வத்தை நிர்வகிக்கக்கூடிய) தெளிவான அறிவை அவர்களிடம் நீங்கள் கண்டால், அவர்களுடைய செல்வங்களை அவர்களிடம் ஒப்படையுங்கள். அவர்கள் பெரியவர்களாகி(த் தங்கள் செல்வங்களை திரும்பப் பெற்று) விடுவார்கள் என்பதற்காக, அவற்றை அளவு கடந்தும் அவசர அவசரமாகவும் சாப்பிடாதீர்கள். (அநாதையின் காப்பாளர்களில்) எவர் செல்வந்தராக இருக்கிறாரோ (அநாதையின் செல்வத்திலிருந்து தான் பயன் பெறுவதை) அவர் தவிர்க்கவும். எவர் ஏழையாக இருக்கிறாரோ அவர் (நீதமாக) முறையுடன் (அதிலிருந்து) புசிக்கவும். அவர்களுடைய செல்வங்களை நீங்கள் அவர்களிடம் ஒப்படைத்தால் அவர்கள் மீது சாட்சியாக்குங்கள். துல்லியமாக கணக்கெடுப்பவனாக அல்லாஹ் போதுமானவன்.