Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துன்னிஸாவு வசனம் ௧௬௦

Qur'an Surah An-Nisa Verse 160

ஸூரத்துன்னிஸாவு [௪]: ௧௬௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَبِظُلْمٍ مِّنَ الَّذِيْنَ هَادُوْا حَرَّمْنَا عَلَيْهِمْ طَيِّبٰتٍ اُحِلَّتْ لَهُمْ وَبِصَدِّهِمْ عَنْ سَبِيْلِ اللّٰهِ كَثِيْرًاۙ (النساء : ٤)

fabiẓul'min
فَبِظُلْمٍ
Then for (the) wrongdoing
அநியாயத்தின் காரணமாக
mina alladhīna hādū
مِّنَ ٱلَّذِينَ هَادُوا۟
of those who were Jews
யூதர்களின்
ḥarramnā
حَرَّمْنَا
We made unlawful
விலக்கினோம்
ʿalayhim
عَلَيْهِمْ
for them
அவர்களுக்கு
ṭayyibātin
طَيِّبَٰتٍ
good things
நல்லவற்றை
uḥillat
أُحِلَّتْ
which had been lawful
அனுமதிக்கப்பட்டன
lahum
لَهُمْ
for them
அவர்களுக்கு
wabiṣaddihim
وَبِصَدِّهِمْ
and for their hindering
இன்னும் அவர்கள் தடுப்பது
ʿan sabīli
عَن سَبِيلِ
from (the) way
பாதையை விட்டு
l-lahi
ٱللَّهِ
(of) Allah -
அல்லாஹ்வின்
kathīran
كَثِيرًا
many
அதிகமானவர்களை

Transliteration:

Fabizulmin minal lazeena haadoo harramnaa 'alaihim taiyibaatin uhillat lahum wa bisadihim 'an sabeelil laahi kaseeraa (QS. an-Nisāʾ:160)

English Sahih International:

For wrongdoing on the part of the Jews, We made unlawful for them [certain] good foods which had been lawful to them, and for their averting from the way of Allah many [people], (QS. An-Nisa, Ayah ௧௬௦)

Abdul Hameed Baqavi:

யூதர்களின் (இத்தகைய) அநியாயங்களின் காரணமாகவும், (அவ்வாறே) அல்லாஹ்வின் பாதையில் (செல்ல முடியாதவாறு) பலரைத் தடுத்துக் கொண்டிருந்ததின் காரணமாகவும் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டிருந்தவைகளில் நல்லவைகளை நாம் அவர்களுக்கு விலக்கி விட்டோம். (ஸூரத்துன்னிஸாவு, வசனம் ௧௬௦)

Jan Trust Foundation

எனவே யூதர்களாக இருந்த அவர்களுடைய அக்கிரமத்தின் காரணமாக அவர்களுக்கு (முன்னர்) ஆகுமாக்கப்பட்டிருந்த நல்ல (ஆகார) வகைகளை அவர்களுக்கு ஹராமாக்கி (விலக்கி) விட்டோம்; இன்னும் அவர்கள் அநேகரை அல்லாஹ்வின் பாதையில் செல்லவிடாது தடுத்துக் கொண்டிருந்ததனாலும் (அவர்களுக்கு இவ்வாறு தடை செய்தோம்.)

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

யூதர்களின் அநியாயம், அல்லாஹ்வின் பாதையை விட்டு அதிகமானவர்களை அவர்கள் தடுப்பது, அவர்கள் வட்டி வாங்குவது, அவர்களுமோ அதிலிருந்து தடுக்கப்பட்டிருக்க இன்னும் மக்களின் செல்வங்களை அவர்கள் தப்பான வழியில் சாப்பிடுவது ஆகியவற்றின் காரணமாக அவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட (சில) நல்லவற்றை அவர்களுக்கு விலக்கினோம். அவர்களில் நிராகரிப்பாளர்களுக்குத் துன்புறுத்தக்கூடிய வேதனையை ஏற்படுத்தினோம்.