Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௭

Qur'an Surah Ali 'Imran Verse 7

ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

هُوَ الَّذِيْٓ اَنْزَلَ عَلَيْكَ الْكِتٰبَ مِنْهُ اٰيٰتٌ مُّحْكَمٰتٌ هُنَّ اُمُّ الْكِتٰبِ وَاُخَرُ مُتَشٰبِهٰتٌ ۗ فَاَمَّا الَّذِيْنَ فِيْ قُلُوْبِهِمْ زَيْغٌ فَيَتَّبِعُوْنَ مَا تَشَابَهَ مِنْهُ ابْتِغَاۤءَ الْفِتْنَةِ وَابْتِغَاۤءَ تَأْوِيْلِهٖۚ وَمَا يَعْلَمُ تَأْوِيْلَهٗٓ اِلَّا اللّٰهُ ۘوَالرَّاسِخُوْنَ فِى الْعِلْمِ يَقُوْلُوْنَ اٰمَنَّا بِهٖۙ كُلٌّ مِّنْ عِنْدِ رَبِّنَا ۚ وَمَا يَذَّكَّرُ اِلَّآ اُولُوا الْاَلْبَابِ (آل عمران : ٣)

huwa
هُوَ
He
அவன்
alladhī
ٱلَّذِىٓ
(is) the One Who
எப்படிப்பட்ட
anzala
أَنزَلَ
revealed
இறக்கினான்
ʿalayka
عَلَيْكَ
to you
உம்மீது
l-kitāba
ٱلْكِتَٰبَ
the Book
வேதத்தை
min'hu āyātun
مِنْهُ ءَايَٰتٌ
of it (are) Verses
அதில்/வசனங்கள்
muḥ'kamātun hunna
مُّحْكَمَٰتٌ هُنَّ
absolutely clear they (are)
பொருள் தெளிவானவை/அவை
ummu l-kitābi
أُمُّ ٱلْكِتَٰبِ
the foundation (of) the Book
அடிப்படை/வேதம்
wa-ukharu
وَأُخَرُ
and others
இன்னும் வேறு
mutashābihātun
مُتَشَٰبِهَٰتٌۖ
(are) allegorical
பொருள் தெரியாதவை
fa-ammā alladhīna
فَأَمَّا ٱلَّذِينَ
Then as for those
ஆகவே/எவர்கள்
fī qulūbihim
فِى قُلُوبِهِمْ
in their hearts
தங்கள் உள்ளங்களில்
zayghun
زَيْغٌ
(is) perversity
கோணல்
fayattabiʿūna
فَيَتَّبِعُونَ
[so] they follow
பின்பற்றுகிறார்கள்
مَا
what
எதை
tashābaha
تَشَٰبَهَ
(is) allegorical
பொருள் தெரிய முடி யாமல்ஆகிவிட்டது
min'hu
مِنْهُ
of it
அதில்
ib'tighāa
ٱبْتِغَآءَ
seeking
தேடி
l-fit'nati
ٱلْفِتْنَةِ
[the] discord
குழப்பத்தை
wa-ib'tighāa
وَٱبْتِغَآءَ
and seeking
இன்னும் தேடி
tawīlihi
تَأْوِيلِهِۦۗ
its interpretation
அதன் விளக்கத்தை
wamā yaʿlamu
وَمَا يَعْلَمُ
And not knows
இன்னும் அறியமாட்டார்
tawīlahu
تَأْوِيلَهُۥٓ
its interpretation
அதன் விளக்கத்தை
illā
إِلَّا
except
தவிர
l-lahu
ٱللَّهُۗ
Allah
அல்லாஹ்
wal-rāsikhūna
وَٱلرَّٰسِخُونَ
And those firm
தேர்ச்சி அடைந்தவர்கள்
fī l-ʿil'mi
فِى ٱلْعِلْمِ
in [the] knowledge
கல்வியில்
yaqūlūna
يَقُولُونَ
they say
கூறுவார்கள்
āmannā
ءَامَنَّا
"We believe
நம்பிக்கை கொண்டோம்
bihi
بِهِۦ
in it
அதை
kullun
كُلٌّ
All
எல்லாம்
min
مِّنْ
(is)
இருந்து
ʿindi
عِندِ
from
இடம்
rabbinā
رَبِّنَاۗ
our Lord"
எங்கள் இறைவன்
wamā yadhakkaru
وَمَا يَذَّكَّرُ
And not will take heed
இன்னும் நல்லறிவுபெறமாட்டார்
illā
إِلَّآ
except
தவிர
ulū l-albābi
أُو۟لُوا۟ ٱلْأَلْبَٰبِ
men (of) understanding
அறிவுள்ளவர்கள்

Transliteration:

Huwal lazeee anzala 'alaikal Kitaaba minhu Aayaatum Muh kamaatun hunna Ummul Kitaabi wa ukharu Mutashaabihaatun faammal lazeena fee quloobihim ziyghun fa yattabi'oona ma tashaabaha minhubtighaaa 'alfitnati wabtighaaa'a taaweelih; wa maa ya'lamu taaweelahooo illal laah; warraasikhoona fil 'ilmi yaqooloona aamannaa bihee kullum min 'indi Rabbinaa; wa maa yazzakkaru illaaa ulul albaab (QS. ʾĀl ʿImrān:7)

English Sahih International:

It is He who has sent down to you, [O Muhammad], the Book; in it are verses [that are] precise – they are the foundation of the Book – and others unspecific. As for those in whose hearts is deviation [from truth], they will follow that of it which is unspecific, seeking discord and seeking an interpretation [suitable to them]. And no one knows its [true] interpretation except Allah. But those firm in knowledge say, "We believe in it. All [of it] is from our Lord." And no one will be reminded except those of understanding. (QS. Ali 'Imran, Ayah ௭)

Abdul Hameed Baqavi:

(நபியே!) அவனே இவ்வேதத்தையும் உங்கள்மீது இறக்கி வைத்தான். இதில் முற்றிலும் தெளிவான பொருள் கொண்ட வசனங்களும் இருக்கின்றன. இவைதான் இவ்வேதத்தின் அடிப்படையாகும். மேலும், (உங்களுக்கு) முழுமையான பொருள் தெரிய முடியாத வசனங்களும் இருக்கின்றன. எவர்களுடைய உள்ளங்களில் மாறுபாடு இருக்கிறதோ அவர்கள் தெளிவற்ற பொருள்களுடைய வசனங்களையே தேடிப் பின்பற்றுவார்கள். குழப்பத்தை உண்டுபண்ணக் கருதியும் அதை (தங்களின் தவறான நோக்கத்திகேற்ப) மாற்றுவதற்காகவும் இவ்வாறு செய்கின்றனர். ஆயினும், இதன் உண்மைக் கருத்தை அல்லாஹ்வையன்றி ஒருவரும் அறிய மாட்டார்கள். உறுதிமிக்க கல்விமான்களோ (அதன் கருத்து தங்களுக்கு முழுமையாக விளங்காவிட்டாலும்) இதனையும் நாங்கள் நம்பிக்கை கொண்டோம். (இவ்விருவகை வசனங்கள்) அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவைதான் என்று கூறுவார்கள். அறிவுடையவர்களையன்றி மற்ற எவரும் (இவைகளைக் கொண்டு) நல்லுபதேசம் அடைய மாட்டார்கள். (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௭)

Jan Trust Foundation

அவன்தான் (இவ்) வேதத்தை உம்மீது இறக்கினான். இதில் விளக்கமான வசனங்களும் இருக்கின்றன. இவை தான் இவ்வேதத்தின் அடிப்படையாகும். மற்றவை (பல அந்தரங்கங்களைக் கொண்ட) முதஷாபிஹாத் (என்னும் ஆயத்துகள்) ஆகும்; எனினும் எவர்களுடைய உள்ளங்களில் வழிகேடு இருக்கிறதோ அவர்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக முதஷாபிஹ் வசனங்களின் விளக்கத்தைத் தேடி அதனைப் பின்பற்றுகின்றனர். அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் அதன் உண்மையான விளக்கத்தை அறியமாட்டார்கள். கல்வியில் உறுதிப்பாடு உடையவர்கள் அவை அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவைதான். நாங்கள் அதை நம்பிக்கை கொள்கிறோம், என்று அவர்கள் கூறுவார்கள். அறிவுடையோரைத் தவிர மற்றவர்கள் இதைக்கொண்டு நல்லுபதேசம் பெறமாட்டார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) அவன்தான் (இவ்)வேதத்தை உம்மீது இறக்கியவன். அதில் பொருள் தெளிவான (முஹ்கம்) வசனங்கள் உள்ளன. அவைதான் வேதத்தின் அடிப்படையாகும். இன்னும், பொருள் தெரியமுடியாத வேறு (முதஷாபிஹ் வசனங்களு)ம் உள்ளன. ஆக, தங்கள் உள்ளங்களில் கோணல், (சந்தேகம்) உள்ளவர்கள் குழப்பத்தை தேடியும் (மறைக்கப்பட்ட) அதன் விளக்கத்தை தேடியும் அதில் பொருள் தெரிய(முடியாதவற்றைப் பின்பற்றுகிறார்கள். அதன் விளக்கத்தை அல்லாஹ்வைத் தவிர (யாரும்) அறியமாட்டார். கல்வியில் தேர்ச்சியடைந்தவர்கள் "அதை நாங்கள் நம்பிக்கை கொண்டோம். (முஹ்கம், முதஷாபிஹ்) எல்லாம் எங்கள் இறைவனிடமிருந்துதான் (இறக்கப்பட்டவை)" எனக் கூறுவார்கள். அறிவுடையவர்களைத் தவிர (மற்றவர்) நல்லறிவு பெறமாட்டார்.