Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௧௧௯

Qur'an Surah Ali 'Imran Verse 119

ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௧௧௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

هٰٓاَنْتُمْ اُولَاۤءِ تُحِبُّوْنَهُمْ وَلَا يُحِبُّوْنَكُمْ وَتُؤْمِنُوْنَ بِالْكِتٰبِ كُلِّهٖۚ وَاِذَا لَقُوْكُمْ قَالُوْٓا اٰمَنَّاۖ وَاِذَا خَلَوْا عَضُّوْا عَلَيْكُمُ الْاَنَامِلَ مِنَ الْغَيْظِ ۗ قُلْ مُوْتُوْا بِغَيْظِكُمْ ۗ اِنَّ اللّٰهَ عَلِيْمٌ ۢبِذَاتِ الصُّدُوْرِ (آل عمران : ٣)

hāantum
هَٰٓأَنتُمْ
Lo! You are
நீங்கள்
ulāi
أُو۟لَآءِ
those
எப்படிப்பட்டவர்கள்
tuḥibbūnahum
تُحِبُّونَهُمْ
you love them
நேசிக்கிறீர்கள்/ இவர்களை
walā yuḥibbūnakum
وَلَا يُحِبُّونَكُمْ
but not they love you
அவர்கள் நேசிப்பதில்லை/ உங்களை
watu'minūna
وَتُؤْمِنُونَ
and you believe
இன்னும் நம்பிக்கை கொள்கிறீர்கள்
bil-kitābi
بِٱلْكِتَٰبِ
in the Book -
வேதத்தை
kullihi
كُلِّهِۦ
all of it
அவை எல்லாம்
wa-idhā
وَإِذَا
And when
இன்னும் அவர்கள் சந்தித்தால்
laqūkum
لَقُوكُمْ
they meet you
இன்னும் அவர்கள் சந்தித்தால் உங்களை
qālū
قَالُوٓا۟
they say
கூறுகின்றனர்
āmannā
ءَامَنَّا
"We believe"
நம்பிக்கை கொண்டோம்
wa-idhā khalaw
وَإِذَا خَلَوْا۟
And when they are alone
இன்னும் அவர்கள் தனித்தால்
ʿaḍḍū
عَضُّوا۟
they bite
கடித்தனர்
ʿalaykumu
عَلَيْكُمُ
at you
உங்கள் மீது
l-anāmila
ٱلْأَنَامِلَ
the finger tips
விரல் நுனிகளை
mina l-ghayẓi
مِنَ ٱلْغَيْظِۚ
(out) of [the] rage
கோபத்தினால்
qul
قُلْ
Say
கூறுவீராக
mūtū
مُوتُوا۟
Die
சாவுங்கள்
bighayẓikum
بِغَيْظِكُمْۗ
in your rage
உங்கள்கோபத்தினால்
inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்
ʿalīmun
عَلِيمٌۢ
(is) All-Knowing
நன்கறிந்தவன்
bidhāti
بِذَاتِ
of what
உள்ளவற்றை
l-ṣudūri
ٱلصُّدُورِ
(is in) the breasts"
நெஞ்சங்களில்

Transliteration:

Haaa antum ulaaa'i tuhibboonahum wa laa yuhibboonakum wa tu'minoona bil kitaabi kullihee wa izaa laqookum qaalooo aamannaa wa izaa khalaw 'addoo 'alaikumul anaamila minal ghaiz; qul mootoo bighai zikum; innal laaha 'aleemum bizaatis sudoor (QS. ʾĀl ʿImrān:119)

English Sahih International:

Here you are loving them but they are not loving you, while you believe in the Scripture – all of it. And when they meet you, they say, "We believe." But when they are alone, they bite their fingertips at you in rage. Say, "Die in your rage. Indeed, Allah is Knowing of that within the breasts." (QS. Ali 'Imran, Ayah ௧௧௯)

Abdul Hameed Baqavi:

(நம்பிக்கையாளர்களே!) இவர்களையா நீங்கள் நேசிக்கின்றீர்கள்! அவர்களோ உங்களை நேசிப்பதில்லை. நீங்கள் (அவர்களுடைய) வேதங்கள் அனைத்தையும் நம்பிக்கை கொள்கின்றீர்கள். (அவர்கள் உங்கள் வேதத்தை நம்பிக்கை கொள்வதில்லை. எனினும்) அவர்கள் உங்களைச் சந்தித்தால், "(உங்களுடைய வேதத்தையும்) நாங்கள் நம்பிக்கை கொள்கின்றோம்" என்று (பொய்) கூறுகின்றனர். உங்களைவிட்டு விலகினாலோ (உங்கள் மீதுள்ள) கோபத்தினால் தங்கள் (கை) விரல்களையே கடித்துக் கொள்கின்றனர். ஆகவே, (நபியே! அவர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: "உங்கள் கோபத்திலேயே நீங்கள் சாவீர்களாக! நிச்சயமாக அல்லாஹ் (உங்கள்) உள்ளங்களில் உள்ளவற்றை நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்." (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௧௧௯)

Jan Trust Foundation

(முஃமின்களே!) அறிந்து கொள்ளுங்கள்; நீங்கள் இவர்களை நேசிப்போராய் இருக்கின்றீர்கள் - ஆனால் அவர்கள் உங்களை நேசிக்கவில்லை; நீங்கள் வேதத்தை முழுமையாக நம்புகிறீர்கள்; ஆனால் அவர்களோ உங்களைச் சந்திக்கும் போது| “நாங்களும் நம்புகிறோம்” என்று கூறுகிறார்கள்; எனினும் அவர்கள் (உங்களை விட்டு விலகித்) தனியாக இருக்கும் போது, அவர்கள் உங்கள் மேலுள்ள ஆத்திரத்தினால் (தம்) விரல் நுனிகளைக் கடித்துக்கொள்கிறார்கள். (நபியே!) நீர் கூறும்| “நீங்கள் உங்கள் ஆத்திரத்தில் இறந்து விடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் (உங்கள்) உள்ளங்களில் உள்ளவற்றை அறிந்தவன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நீங்கள் இவர்களை(யா) நேசிக்கிறீர்கள்! அவர்கள் உங்களை நேசிப்பதில்லை. வேதம் எல்லாவற்றையும் நம்பிக்கை கொள்கிறீர்கள். அவர்கள் உங்களைச் சந்தித்தால், "நம்பிக்கை கொண்டோம்" எனக் கூறுகின்றனர். அவர்கள் (உங்களை விட்டு) தனித்தால் உங்கள் மீது (உள்ள) கோபத்தினால் (தங்கள்) விரல் நுனிகளை கடிக்கின்றனர். (நபியே!) கூறுவீராக: "உங்கள் கோபத்தினால் சாவுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் நெஞ்சங்களில் உள்ளவற்றை நன்கறிந்தவன்."