Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௨௮௧

Qur'an Surah Al-Baqarah Verse 281

ஸூரத்துல் பகரா [௨]: ௨௮௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاتَّقُوْا يَوْمًا تُرْجَعُوْنَ فِيْهِ اِلَى اللّٰهِ ۗثُمَّ تُوَفّٰى كُلُّ نَفْسٍ مَّا كَسَبَتْ وَهُمْ لَا يُظْلَمُوْنَ ࣖ (البقرة : ٢)

wa-ittaqū
وَٱتَّقُوا۟
And fear
இன்னும் அஞ்சுங்கள்
yawman
يَوْمًا
a Day
ஒரு நாளை
tur'jaʿūna
تُرْجَعُونَ
you will be brought back
மீட்கப்படுவீர்கள்
fīhi
فِيهِ
[in it]
அதில்
ilā l-lahi
إِلَى ٱللَّهِۖ
to Allah
அல்லாஹ்வின் பக்கம்
thumma
ثُمَّ
Then
பிறகு
tuwaffā
تُوَفَّىٰ
(will be) repaid in full
முழுமையாக நிறைவேற்றப்படும்
kullu nafsin
كُلُّ نَفْسٍ
every soul
எல்லா ஆன்மாக்களுக்கும்
mā kasabat
مَّا كَسَبَتْ
what it earned
எவற்றை/செய்தன
wahum
وَهُمْ
and they
இன்னும் அவர்கள்
lā yuẓ'lamūna
لَا يُظْلَمُونَ
not will be wronged
அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்

Transliteration:

Wattaqoo yawman turja'oona feehi ilal laahi summa tuwaffaa kullu nafsim maa kasabat wa hum laa yuzlamoon (QS. al-Baq̈arah:281)

English Sahih International:

And fear a Day when you will be returned to Allah. Then every soul will be compensated for what it earned, and they will not be wronged [i.e., treated unjustly]. (QS. Al-Baqarah, Ayah ௨௮௧)

Abdul Hameed Baqavi:

மேலும், ஒரு நாளை பற்றிப் பயப்படுங்கள். அந்நாளில் (கடன் வாங்கியவர்கள், கொடுத்தவர்கள் ஆக) நீங்கள் (அனைவரும்) அல்லாஹ்விடம் கொண்டு வரப்படுவீர்கள். ஒவ்வொரு ஆத்மாவுக்கும் அவைகள் செய்த செயல்களுக்கு முழுமையாகக் (கூலி) கொடுக்கப்படும். அன்றி, அவர்கள் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள். (ஸூரத்துல் பகரா, வசனம் ௨௮௧)

Jan Trust Foundation

தவிர, அந்த நாளைப் பற்றி அஞ்சிக் கொள்ளுங்கள்; அன்று நீங்களனைவரும் அல்லாஹ்விடம் மீட்டப்படுவீர்கள்; பின்னர் ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அது சம்பாதித்ததற்குரிய (கூலி) பூரணமாகக் கொடுக்கப்படும்; மேலும் (கூலி) வழங்கப்படுவதில் அவை அநியாயம் செய்யப்படமாட்டா.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஒரு நாளை அஞ்சுங்கள். அதில் அல்லாஹ்வின் பக்கம் மீட்கப்படுவீர்கள். பிறகு, எல்லா ஆன்மாக்களுக்கும் அவை செய்தவற்றை முழுமையாகக் கொடுக்கப்படும். அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.