Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௨௩௩

Qur'an Surah Al-Baqarah Verse 233

ஸூரத்துல் பகரா [௨]: ௨௩௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

۞ وَالْوَالِدٰتُ يُرْضِعْنَ اَوْلَادَهُنَّ حَوْلَيْنِ كَامِلَيْنِ لِمَنْ اَرَادَ اَنْ يُّتِمَّ الرَّضَاعَةَ ۗ وَعَلَى الْمَوْلُوْدِ لَهٗ رِزْقُهُنَّ وَكِسْوَتُهُنَّ بِالْمَعْرُوْفِۗ لَا تُكَلَّفُ نَفْسٌ اِلَّا وُسْعَهَا ۚ لَا تُضَاۤرَّ وَالِدَةٌ ۢبِوَلَدِهَا وَلَا مَوْلُوْدٌ لَّهٗ بِوَلَدِهٖ وَعَلَى الْوَارِثِ مِثْلُ ذٰلِكَ ۚ فَاِنْ اَرَادَا فِصَالًا عَنْ تَرَاضٍ مِّنْهُمَا وَتَشَاوُرٍ فَلَا جُنَاحَ عَلَيْهِمَا ۗوَاِنْ اَرَدْتُّمْ اَنْ تَسْتَرْضِعُوْٓا اَوْلَادَكُمْ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ اِذَا سَلَّمْتُمْ مَّآ اٰتَيْتُمْ بِالْمَعْرُوْفِۗ وَاتَّقُوا اللّٰهَ وَاعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ بِمَا تَعْمَلُوْنَ بَصِيْرٌ (البقرة : ٢)

wal-wālidātu
وَٱلْوَٰلِدَٰتُ
And the mothers
தாய்மார்கள்
yur'ḍiʿ'na
يُرْضِعْنَ
shall suckle
பாலூட்டுவார்கள்
awlādahunna
أَوْلَٰدَهُنَّ
their children
தங்கள் குழந்தைகளுக்கு
ḥawlayni
حَوْلَيْنِ
(for) two years
ஈராண்டுகள்
kāmilayni
كَامِلَيْنِۖ
complete
(இரு) முழுமையான
liman
لِمَنْ
for whoever
யாருக்கு
arāda
أَرَادَ
wishes
நாடினார்
an yutimma
أَن يُتِمَّ
to complete
அவர் முழுமைப்படுத்துவதை
l-raḍāʿata
ٱلرَّضَاعَةَۚ
the suckling
பாலூட்டுதலை
waʿalā
وَعَلَى
And upon
மீது
l-mawlūdi lahu
ٱلْمَوْلُودِ لَهُۥ
the father (on) him
எவருக்காக குழந்தை பெற்றெடுக்கப்பட்டதோ அவர் (தந்தை)
riz'quhunna
رِزْقُهُنَّ
(is) their provision
அவர்களுக்கு உணவளிப்பது
wakis'watuhunna
وَكِسْوَتُهُنَّ
and their clothing
இன்னும் அவர்களுக்கு ஆடை கொடுப்பது
bil-maʿrūfi
بِٱلْمَعْرُوفِۚ
in a fair manner
நல்ல முறையில்
lā tukallafu
لَا تُكَلَّفُ
Not is burdened
நிர்ப்பந்திக்கப்படாது
nafsun illā
نَفْسٌ إِلَّا
any soul except
ஓர் ஆத்மா/தவிர
wus'ʿahā
وُسْعَهَاۚ
its capacity
அதன் வசதி
lā tuḍārra
لَا تُضَآرَّ
Not made to suffer
துன்புறுத்தப்பட மாட்டாள்
wālidatun
وَٰلِدَةٌۢ
(the) mother
ஒரு தாய்
biwaladihā
بِوَلَدِهَا
because of her child
தன் குழந்தைக்காக
walā mawlūdun lahu
وَلَا مَوْلُودٌ لَّهُۥ
and not (the) father (be)
இன்னும் இல்லை/ தந்தை
biwaladihi
بِوَلَدِهِۦۚ
because of his child
அவருடைய குழந்தை மூலம்
waʿalā l-wārithi
وَعَلَى ٱلْوَارِثِ
And on the heirs
வாரிசுதாரர் மீது
mith'lu
مِثْلُ
(is a duty) like
போன்றே
dhālika
ذَٰلِكَۗ
that
அது
fa-in arādā
فَإِنْ أَرَادَا
Then if they both desire
அவ்விருவரும் நாடினால்
fiṣālan
فِصَالًا
weaning
பால்குடி நிறுத்த
ʿan tarāḍin
عَن تَرَاضٍ
through mutual consent
பரஸ்பர திருப்தியுடன்
min'humā
مِّنْهُمَا
of both of them
அவ்விருவரின்/ (தங்கள்)
watashāwurin
وَتَشَاوُرٍ
and consultation
இன்னும் பரஸ்பர ஆலோசனை
falā junāḥa
فَلَا جُنَاحَ
then no blame
குற்றமே இல்லை
ʿalayhimā
عَلَيْهِمَاۗ
on both of them
அவ்விருவர் மீது
wa-in aradttum
وَإِنْ أَرَدتُّمْ
And if you want
நீங்கள் விரும்பினால்
an tastarḍiʿū
أَن تَسْتَرْضِعُوٓا۟
to ask another women to suckle
நீங்கள் பாலூட்டத் தேடுவது
awlādakum
أَوْلَٰدَكُمْ
your child
உங்கள் குழந்தைகளுக்கு
falā junāḥa
فَلَا جُنَاحَ
then (there is) no blame
குற்றமே இல்லை
ʿalaykum
عَلَيْكُمْ
on you
உங்கள் மீது
idhā sallamtum
إِذَا سَلَّمْتُم
when you pay
நீங்கள் ஒப்படைத்தால்
مَّآ
what
எதை
ātaytum
ءَاتَيْتُم
(is) due (from) you
நீங்கள் கொடுத்தீர்கள்
bil-maʿrūfi
بِٱلْمَعْرُوفِۗ
in a fair manner
நல்ல முறையில்
wa-ittaqū
وَٱتَّقُوا۟
And fear
இன்னும் அஞ்சுங்கள்
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்வை
wa-iʿ'lamū
وَٱعْلَمُوٓا۟
and know
இன்னும் அறியுங்கள்
anna l-laha
أَنَّ ٱللَّهَ
that Allah
நிச்சயமாக அல்லாஹ்
bimā
بِمَا
of what
எதை
taʿmalūna
تَعْمَلُونَ
you do
நீங்கள் செய்கிறீர்கள்
baṣīrun
بَصِيرٌ
(is) All-Seer
உற்று நோக்குபவன்

Transliteration:

Walwaa lidaatu yurdi'na awlaada hunna hawlaini kaamilaini liman araada ai yutimmar radaa'ah; wa 'alalmawloodi lahoo rizuhunna wa kiswatuhunna bilma'roof; laatukallafu nafsun illaa wus'ahaa; laa tudaaarra waalidatum biwaladihaa wa laa mawloodul lahoo biwaladih; wa 'alal waarisi mislu zaalik; fa in araadaa Fisaalan 'an taraadim minhumaa wa tashaawurin falaa junaaha 'alaimaa; wa in arattum an tastardi'ooo awlaadakum falaa junaaha 'alaikum izaa sallamtum maaa aataitum bilma'roof; wattaqul laaha wa'lamooo annal laaha bimaa ta'maloona baseer (QS. al-Baq̈arah:233)

English Sahih International:

Mothers may nurse [i.e., breastfeed] their children two complete years for whoever wishes to complete the nursing [period]. Upon the father is their [i.e., the mothers'] provision and their clothing according to what is acceptable. No person is charged with more than his capacity. No mother should be harmed through her child, and no father through his child. And upon the [father's] heir is [a duty] like that [of the father]. And if they both desire weaning through mutual consent from both of them and consultation, there is no blame upon either of them. And if you wish to have your children nursed by a substitute, there is no blame upon you as long as you give payment according to what is acceptable. And fear Allah and know that Allah is Seeing of what you do. (QS. Al-Baqarah, Ayah ௨௩௩)

Abdul Hameed Baqavi:

எவரேனும் (தலாக்குக் கூறப்பட்ட மனைவிகளிடம் தங்களுக்குப் பிறந்த குழந்தைகளுக்குத் தலாக்குக் கூறப்பட்ட மனைவிகளைக் கொண்டே) பாலூட்டுவதை முழுமையாக்க விரும்பினால், தாய்மார்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு (அவை பிறந்ததிலிருந்து) இரண்டு ஆண்டுகள்வரை முழுமையாகப் பாலூட்டுவார்கள். தவிர (அத்தாய்மார்கள் பாலூட்டும் வரையில்) அவர்களுக்கு ஆடையும், உணவும் முறைப்படிக் கொடுத்து வருவது குழந்தையின் தந்தை மீது கடமையாகும். யாதொரு ஆத்மாவும் அதன் சக்திக்கு மேல் (செய்யும்படியாக) நிர்பந்திக்கப்படமாட்டாது. (ஆகவே) குழந்தைக்காக (தனக்கு வேண்டிய உணவின்றியே பாலூட்டும்படி) அதன் தாயையோ அல்லது (சக்திக்கு அதிகமாகக் கொடுக்கும்படி) தந்தையையோ துன்புறுத்தப்படமாட்டாது. தவிர இவ்வாறே (குழந்தையின் தந்தை இறந்துவிட்டால் அதனை பராமரிப்பது) வாரிசுகள் மீது கடமையாகும். (குழந்தையின் தாய், தந்தை) இருவரும் ஆலோசனை செய்து (குழந்தையின்) பால்குடியை (இரண்டு ஆண்டுகளுக்குள்) மறக்கடிக்க(வோ அல்லது தாயை விட்டுக் குழந்தையைப் பிரித்துவிடவோ) நாடினால் (அவ்வாறு செய்வது) அவர்கள் மீது குற்றமல்ல. அன்றி, நீங்கள் உங்களுடைய குழந்தைகளுக்கு செவிலித் தாயைக் கொண்டு பாலூட்டக் கருதி (அதுவரையில் பாலூட்டி வந்த பெற்ற தாய்க்கு) நீங்கள் கொடுக்க வேண்டியதை முறைப்படிக் கொடுத்துவிட்டால் (அவ்வாறு செவிலித் தாயைக் கொண்டு பாலூட்டுவது) உங்கள் மீது குற்றமாகாது. (இவற்றில்) நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்துகொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை உற்று நோக்கினவ னாகவே இருக்கின்றான் என்பதையும் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். (ஸூரத்துல் பகரா, வசனம் ௨௩௩)

Jan Trust Foundation

(தலாக் சொல்லப்பட்ட மனைவியர், தம்) குழந்தைகளுக்குப் பூர்த்தியாகப் பாலூட்ட வேண்டுமென்று (தந்தை) விரும்பினால், தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு நிரப்பமான இரண்டு ஆண்டுகள் பாலூட்டுதல் வேண்டும்; பாலூட்டும் தாய்மார்களுக்கு (ஷரீஅத்தின்) முறைப்படி உணவும், உடையும் கொடுத்து வருவது குழந்தையுடைய தகப்பன் மீது கடமையாகும்; எந்த ஓர் ஆத்மாவும் அதன் சக்திக்கு மேல் (எதுவும் செய்ய) நிர்ப்பந்திக்கப்பட மாட்டாது தாயை அவளுடைய குழந்தையின் காரணமாகவோ. (அல்லது) தந்தையை அவன் குழந்தையின் காரணமாகவோ துன்புறுத்தப்படமாட்டாது; (குழந்தையின் தந்தை இறந்து விட்டால்) அதைப் பரிபாலிப்பது வாரிசுகள் கடமையாகும்; இன்னும், (தாய் தந்தையர்) இருவரும் பரஸ்பரம் இணங்கி, ஆலோசித்துப் பாலூட்டலை நிறுத்த விரும்பினால், அது அவர்கள் இருவர் மீதும் குற்றமாகாது; தவிர ஒரு செவிலித்தாயைக் கொண்டு உங்கள் குழந்தைகளுக்குப் பாலூட்ட விரும்பினால் அதில் உங்களுக்கு ஒரு குற்றமுமில்லை; ஆனால், (அக்குழந்தையின் தாய்க்கு உங்களிடமிருந்து) சேரவேண்டியதை முறைப்படி செலுத்திவிட வேண்டும்; அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதை பார்ப்பவனாக இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

எவர் (எந்த தந்தை) பாலூட்டுவதை முழுமைப்படுத்த விரும்புகிறாரோ அவருக்காக, தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு முழுமையான ஈராண்டுகள் பாலூட்டுவார்கள். நல்ல முறையில் அவர்களுக்கு உணவளிப்பதும் ஆடை கொடுப்பதும் எவருக்காக குழந்தை பெற்றெடுக்கப்பட்டதோ அவர் (தந்தை) மீது கடமையாகும். ஓர் ஆத்மா அதன் வசதிக்கு மேல் நிர்பந்திக்கப்படாது. ஒரு தாய் தன் குழந்தைகளுக்காக துன்புறுத்தப்பட மாட்டாள். இன்னும் தந்தையும் தன் குழந்தைக்காக (துன்புறுத்தப்பட மாட்டார்). அது போன்றே வாரிசு தாரர் மீதும் (கடமையாகும்).அவ்விருவரும் தங்கள் பரஸ்பர திருப்தியுடனும் பரஸ்பர ஆலோசனையுடனும் பால்குடியை நிறுத்த நாடினால் அவ்விருவர் மீது(ம்) குற்றமே இல்லை. நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு (பிற பெண் மூலம்) பாலூட்டுவதை விரும்பினால் நீங்கள் கொடுப்பதை நல்ல முறையில் ஒப்படைத்தால் (அது) உங்கள் மீது குற்றமில்லை. அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை உற்று நோக்குபவன் என்பதையும் அறியுங்கள்.