Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௧௩௫

Qur'an Surah Al-Baqarah Verse 135

ஸூரத்துல் பகரா [௨]: ௧௩௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَقَالُوْا كُوْنُوْا هُوْدًا اَوْ نَصٰرٰى تَهْتَدُوْا ۗ قُلْ بَلْ مِلَّةَ اِبْرٰهٖمَ حَنِيْفًا ۗوَمَا كَانَ مِنَ الْمُشْرِكِيْنَ (البقرة : ٢)

waqālū
وَقَالُوا۟
And they said
இன்னும் கூறினார்கள்
kūnū
كُونُوا۟
"Be
ஆகிவிடுங்கள்
hūdan
هُودًا
Jews
யூதர்களாக
aw
أَوْ
or
அல்லது
naṣārā
نَصَٰرَىٰ
Christians
கிறித்துவர்களாக
tahtadū
تَهْتَدُوا۟ۗ
(then) you will be guided"
நேர்வழி பெறுவீர்கள்
qul
قُلْ
Say
கூறுவீராக
bal
بَلْ
"Nay
மாறாக
millata
مِلَّةَ
(the) religion
மார்க்கத்தை
ib'rāhīma
إِبْرَٰهِۦمَ
(of) Ibrahim
இப்ராஹீமின்
ḥanīfan
حَنِيفًاۖ
(the) upright;
இஸ்லாமிய மார்க்கத்தில் உறுதியுடையவர்
wamā kāna
وَمَا كَانَ
and not he was
இன்னும் அவர் இருக்கவில்லை
mina l-mush'rikīna
مِنَ ٱلْمُشْرِكِينَ
of those who associated partners (with Allah)"
இணைவைப்பவர்களில்

Transliteration:

Wa qaaloo koonoo Hoodan aw Nasaaraa tahtadoo; qul bal Millata Ibraaheema Haneefanw wa maa kaana minal mushrikeen (QS. al-Baq̈arah:135)

English Sahih International:

They say, "Be Jews or Christians [so] you will be guided." Say, "Rather, [we follow] the religion of Abraham, inclining toward truth, and he was not of the polytheists." (QS. Al-Baqarah, Ayah ௧௩௫)

Abdul Hameed Baqavi:

(நம்பிக்கையாளர்களை நோக்கி) அவர்கள் "நீங்கள் யூதர்களாக அல்லது கிறிஸ்தவர்களாக ஆகிவிடுங்கள். நேரான வழியை அடைந்து விடுவீர்கள்" எனக் கூறுகிறார்கள். அதற்கு "அவ்வாறன்று! நேரான வழியைச் சார்ந்த இப்ராஹீமின் மார்க்கத்தையே (பின்பற்றுவோம்). அவர் (உங்களைப்போல்) இணை வைத்து வணங்கியவரல்ல" என்றும் (நபியே!) நீங்கள் கூறுங்கள். (ஸூரத்துல் பகரா, வசனம் ௧௩௫)

Jan Trust Foundation

“நீங்கள் யூதர்களாக அல்லது கிறிஸ்தவர்களாக மாறிவிடுங்கள் - நீங்கள் நேர்வழியை அடைவீர்கள்” என்று அவர்கள் கூறுகிறார்கள். “அப்படியல்ல! (நேரான வழியைச் சார்ந்த) இப்ராஹீமின் மார்க்கத்தையே பின்பற்றுவோம், (இணை வைக்கும்) முஷ்ரிக்குகளில் நின்றும் அவரில்லை” என்று (நபியே!) நீர் கூறுவீராக!

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(முஸ்லிம்களை நோக்கி), "நீங்கள் யூதர்களாக அல்லது கிறித்துவர்களாக ஆகிவிடுங்கள், நேர்வழி பெறுவீர்கள்" எனக் கூறினார்கள். (நபியே) கூறுவீராக! "மாறாக, இஸ்லாமிய மார்க்கத்தில் உறுதியுடையவரான இப்ராஹீமின் மார்க்கத்தையே (பின்பற்றுவோம்). அவர் இணைவைப்பவர்களில் இருக்கவில்லை."