Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௧௦௨

Qur'an Surah Al-Baqarah Verse 102

ஸூரத்துல் பகரா [௨]: ௧௦௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاتَّبَعُوْا مَا تَتْلُوا الشَّيٰطِيْنُ عَلٰى مُلْكِ سُلَيْمٰنَ ۚ وَمَا كَفَرَ سُلَيْمٰنُ وَلٰكِنَّ الشَّيٰطِيْنَ كَفَرُوْا يُعَلِّمُوْنَ النَّاسَ السِّحْرَ وَمَآ اُنْزِلَ عَلَى الْمَلَكَيْنِ بِبَابِلَ هَارُوْتَ وَمَارُوْتَ ۗ وَمَا يُعَلِّمٰنِ مِنْ اَحَدٍ حَتّٰى يَقُوْلَآ اِنَّمَا نَحْنُ فِتْنَةٌ فَلَا تَكْفُرْ ۗ فَيَتَعَلَّمُوْنَ مِنْهُمَا مَا يُفَرِّقُوْنَ بِهٖ بَيْنَ الْمَرْءِ وَزَوْجِهٖ ۗ وَمَا هُمْ بِضَاۤرِّيْنَ بِهٖ مِنْ اَحَدٍ اِلَّا بِاِذْنِ اللّٰهِ ۗ وَيَتَعَلَّمُوْنَ مَا يَضُرُّهُمْ وَلَا يَنْفَعُهُمْ ۗ وَلَقَدْ عَلِمُوْا لَمَنِ اشْتَرٰىهُ مَا لَهٗ فِى الْاٰخِرَةِ مِنْ خَلَاقٍ ۗ وَلَبِئْسَ مَاشَرَوْا بِهٖٓ اَنْفُسَهُمْ ۗ لَوْ كَانُوْا يَعْلَمُوْنَ (البقرة : ٢)

wa-ittabaʿū
وَٱتَّبَعُوا۟
And they followed
இன்னும் பின்பற்றினார்கள்
mā tatlū
مَا تَتْلُوا۟
what recite(d)
எவற்றை/ஓதின
l-shayāṭīnu
ٱلشَّيَٰطِينُ
the devils
ஷைத்தான்கள்
ʿalā
عَلَىٰ
over
இல்
mul'ki
مُلْكِ
(the) kingdom
ஆட்சி
sulaymāna
سُلَيْمَٰنَۖ
(of) Sulaiman
சுலைமானுடைய
wamā kafara
وَمَا كَفَرَ
And not disbelieved
நிராகரிக்கவில்லை
sulaymānu
سُلَيْمَٰنُ
Sulaiman
சுலைமான்
walākinna
وَلَٰكِنَّ
[and] but
எனினும்
l-shayāṭīna
ٱلشَّيَٰطِينَ
the devils
ஷைத்தான்கள்
kafarū
كَفَرُوا۟
disbelieved
நிராகரித்தார்கள்
yuʿallimūna
يُعَلِّمُونَ
they teach
கற்பித்தார்கள்
l-nāsa
ٱلنَّاسَ
the people
மனிதர்களுக்கு
l-siḥ'ra
ٱلسِّحْرَ
[the] magic
சூனியத்தை
wamā
وَمَآ
and what
இன்னும் எவற்றை
unzila ʿalā
أُنزِلَ عَلَى
was sent down to
இறக்கப்பட்டன/மீது
l-malakayni
ٱلْمَلَكَيْنِ
the two angels
இரு வானவர்கள்
bibābila
بِبَابِلَ
in Babylon
பாபிலோனில்
hārūta
هَٰرُوتَ
Harut
ஹறாரூத்
wamārūta
وَمَٰرُوتَۚ
and Marut
இன்னும் மாரூத்
wamā yuʿallimāni
وَمَا يُعَلِّمَانِ
And not they both teach
அவ்விருவரும் கற்றுக் கொடுக்கவில்லை
min aḥadin
مِنْ أَحَدٍ
any one
ஒருவருக்கும்
ḥattā
حَتَّىٰ
unless
வரை
yaqūlā
يَقُولَآ
they [both] say
அவ்விருவரும் கூறுவார்கள்
innamā naḥnu
إِنَّمَا نَحْنُ
"Only we
நாங்கள் எல்லாம்
fit'natun
فِتْنَةٌ
(are) a trial
ஒரு சோதனை
falā takfur
فَلَا تَكْفُرْۖ
so (do) not disbelieve"
ஆகவேநிராகரிக்காதே
fayataʿallamūna
فَيَتَعَلَّمُونَ
But they learn
கற்றார்கள்
min'humā
مِنْهُمَا
from those two
அவ்விருவரிடமிருந்து
مَا
what
எதை
yufarriqūna
يُفَرِّقُونَ
[they] causes separation
பிரிப்பார்கள்
bihi
بِهِۦ
with it
அதன் மூலம்
bayna
بَيْنَ
between
இடையில்
l-mari
ٱلْمَرْءِ
the man
ஆண்
wazawjihi
وَزَوْجِهِۦۚ
and his spouse
இன்னும் மனைவி/அவனுடைய
wamā
وَمَا
And not
இல்லை
hum
هُم
they (could)
அவர்கள்
biḍārrīna
بِضَآرِّينَ
at all [be those who] harm
தீங்கிழைப்பவர்களாக
bihi
بِهِۦ
with it
அதன் மூலம்
min aḥadin
مِنْ أَحَدٍ
any one
ஒருவருக்கும்
illā
إِلَّا
except
தவிர
bi-idh'ni
بِإِذْنِ
by permission
அனுமதி கொண்டே
l-lahi
ٱللَّهِۚ
(of) Allah
அல்லாஹ்வுடைய
wayataʿallamūna
وَيَتَعَلَّمُونَ
And they learn
கற்றார்கள்
مَا
what
எவற்றை
yaḍurruhum
يَضُرُّهُمْ
harms them
தீங்கிழைக்கும்/அவர்களுக்கு
walā yanfaʿuhum
وَلَا يَنفَعُهُمْۚ
and not profits them
இன்னும் பலனளிக்காது/அவர்களுக்கு
walaqad
وَلَقَدْ
And indeed
இன்னும் திட்டவட்டமாக
ʿalimū
عَلِمُوا۟
they knew
அறிந்தார்கள்
lamani ish'tarāhu
لَمَنِ ٱشْتَرَىٰهُ
that whoever buys it
நிச்சயமாக எவர்/விலைக்கு வாங்கினார்/அதை
mā lahu
مَا لَهُۥ
not for him
இல்லை/அவருக்கு
fī l-ākhirati
فِى ٱلْءَاخِرَةِ
in the Hereafter
மறுமையில்
min khalāqin
مِنْ خَلَٰقٍۚ
any share
எந்த பாக்கியமும்
walabi'sa
وَلَبِئْسَ
And surely evil
இன்னும் திட்டமாக கெட்டது
mā sharaw
مَا شَرَوْا۟
(is) what they sold
எது/விற்றார்கள்
bihi
بِهِۦٓ
with it
அதற்கு பகரமாக
anfusahum
أَنفُسَهُمْۚ
themselves
தங்களையே
law kānū yaʿlamūna
لَوْ كَانُوا۟ يَعْلَمُونَ
if they were (to) know
அவர்கள் அறிந்திருக்க வேண்டுமே

Transliteration:

Wattaba'oo maa tatlush Shayaateenu 'alaa mulki Sulaimaana wa maa kafara Sulaimaanu wa laakinnash Shayattena kafaroo yu'al limoonan naasas sihra wa maaa unzila 'alal malakaini bi Baabila Haaroota wa Maaroot; wa maa yu'allimaani min ahadin hattaa yaqoolaaa innamaa nahnu fitnatun falaa takfur fayata'al lamoona minhumaa maa yufarriqoona bihee bainal mar'i wa zawjih; wa maa hum bidaaarreena bihee min ahadin illaa bi-iznillah; wa yata'allamoona maa yadurruhum wa laa yanfa'uhum; wa laqad 'alimoo lamanish taraahu maa lahoo fil Aakhirati min khalaaq; wa labi'sa maa sharaw biheee anfusahum; law kaanoo ya'lamoon (QS. al-Baq̈arah:102)

English Sahih International:

And they followed [instead] what the devils had recited during the reign of Solomon. It was not Solomon who disbelieved, but the devils disbelieved, teaching people magic and that which was revealed to the two angels at Babylon, Harout and Marout. But they [i.e., the two angels] do not teach anyone unless they say, "We are a trial, so do not disbelieve [by practicing magic]." And [yet] they learn from them that by which they cause separation between a man and his wife. But they do not harm anyone through it except by permission of Allah. And they [i.e., people] learn what harms them and does not benefit them. But they [i.e., the Children of Israel] certainly knew that whoever purchased it [i.e., magic] would not have in the Hereafter any share. And wretched is that for which they sold themselves, if they only knew. (QS. Al-Baqarah, Ayah ௧௦௨)

Abdul Hameed Baqavi:

மேலும், (அந்த யூதர்கள்) ஸுலைமானுடைய ஆட்சியைப் பற்றி (அவர்களுக்கு) ஷைத்தான் ஓதிக் (கற்றுக்) கொடுத்திருந்த (சூனியம், மாய மந்திரம் ஆகிய)வைகளைப் பின்பற்றினார்கள். ஆனால் ஸுலைமானோ "நிராகரிப்பவராக" இருக்கவில்லை; அந்த ஷைத்தான்கள்தான் உண்மையாகவே நிராகரிப்பவர்களாக இருந்தார்கள். ஏனென்றால், அவர்கள் மனிதர்களுக்கு சூனியத்தையும் "பாபிலூன்" (என்னும் ஊரில்) "ஹாரூத்" "மாரூத்" என்னும் இரு மலக்குகளுக்கு இறக்கப்பட்டிருந்தவற்றையும் கற்றுக்கொடுத்து வந்தார்கள். அவ்விரு மலக்குகளோ (அவர்களிடம் சூனியத்தைக் கற்கச்சென்ற மனிதர்களை நோக்கி) "நாங்கள் சோதனையாக இருக்கிறோம். (இதைக் கற்றால் நீங்கள் நிராகரிப்பவர் களாகி விடுவீர்கள். ஆதலால் இதைக்கற்று) நீங்கள் நிராகரிப்பவர் களாகிவிட வேண்டாம் என்று கூறும் வரையில் அவர்கள் அதனை ஒருவருக்கும் கற்றுக் கொடுப்பதேயில்லை, (இவ்விதம் கூறிய பின்னும் இதைக் கற்க விரும்பியவர்கள்) கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் பிரிவினை உண்டுபண்ணக் கூடிய வழியை அவர்களிடமிருந்து கற்றுக் கொள்வார்கள். அல்லாஹ்வின் கட்டளையின்றி அதன் மூலம் அவர்கள் ஒருவருக்குமே தீங்கிழைத்திட முடியாது. அன்றி, அவர்களுக்கு யாதொரு பலனுமளிக்காமல் தீங்கிழைக்கக் கூடியது எதுவோ அதைத்தான் அவர்கள் கற்றுக் கொள்கிறார்கள். தவிர, (இறை நம்பிக்கைக்குப் பதிலாக) அ(ச் சூனியத்)தை எவன் விலைக்கு வாங்கிக் கொண்டானோ அவனுக்கு மறுமையில் யாதொரு பாக்கியமும் இல்லை என்பதைத் தெளிவாக சந்தேகமற அவர்களும் அறிந்திருக்கிறார்கள். அன்றி, தங்களையே விற்று அவர்கள் எதை வாங்கிக் கொண்டார்களோ அது (மிகக்) கெட்டது. (இதை) அவர்கள் அறிந்துகொள்ள வேண்டுமே! (ஸூரத்துல் பகரா, வசனம் ௧௦௨)

Jan Trust Foundation

அவர்கள் ஸுலைமானின் ஆட்சிக்கு எதிராக ஷைத்தான்கள் ஓதியவற்றையே பின்பற்றினார்கள்; ஆனால் ஸுலைமான் ஒருபோதும் நிராகரித்தவர் அல்லர்; ஷைத்தான்கள் தாம் நிராகரிப்பவர்கள்; அவர்கள்தாம் மனிதர்களுக்குச் சூனியத்தைக் கற்றுக்கொடுத்தார்கள்; இன்னும், பாபில் (பாபிலோன் என்னும் ஊரில்) ஹாரூத், மாரூத் என்ற இரண்டு மலக்குகளுக்கு இறக்கப்பட்டதையும் (தவறான வழியில் பிரயோகிக்கக் கற்றுக்கொடுத்தார்கள்). ஆனால் அவர்கள் (மலக்குகள்) இருவரும் “நிச்சயமாக நாங்கள் சோதனையாக இருக்கிறோம் (இதைக் கற்று) நீங்கள் நிராகரிக்கும் காஃபிர்கள் ஆகிவிடாதீர்கள்” என்று சொல்லி எச்சரிக்காத வரையில், எவருக்கும் இ(ந்த சூனியத்)தைக் கற்றுக் கொடுக்கவில்லை; அப்படியிருந்தும் கணவன் - மனைவியிடையே பிரிவை உண்டாக்கும் செயலை அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டார்கள். எனினும் அல்லாஹ்வின் கட்டளையின்றி அவர்கள் எவருக்கும் எத்தகைய தீங்கும் இதன் மூலம் இழைக்க முடியாது; தங்களுக்குத் தீங்கிழைப்பதையும், எந்த வித நன்மையும் தராததையுமே - கற்றுக் கொண்டார்கள். (சூனியத்தை) விலை கொடுத்து வாங்கிக் கொண்டவர்களுக்கு, மறுமையில் யாதொரு பாக்கியமும் இல்லை என்பதை அவர்கள் நன்கறிந்துள்ளார்கள். அவர்கள் தங்கள் ஆத்மாக்களை விற்றுப்பெற்றுக்கொண்டது கெட்டதாகும். இதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டாமா?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(யூதர்கள்) சுலைமானுடைய ஆட்சியில் ஷைத்தான்கள் ஓதியவற்றைப் பின்பற்றினார்கள். சுலைமான் நிராகரிக்கவில்லை. எனினும் ஷைத்தான்கள் தான் நிராகரித்தார்கள். (அவர்கள்) மனிதர்களுக்கு சூனியத்தையும் பாபிலோனில் ஹாரூத், மாரூத் (என்ற இரு) வானவர்களுக்கு இறக்கப்பட்டவற்றையும் கற்பித்தார்கள். அவ்விரு(வான)வர்கள், "நாங்களெல்லாம் ஒரு சோதனையாவோம். ஆகவே. (இதைக் கற்று) நிராகரிக்காதே!" என்று கூறும் வரை (அதை) ஒருவருக்கும் கற்றுக் கொடுக்கவில்லை. எனவே, ஆணுக்கும் அவன் மனைவிக்கும் இடையில் எதன் மூலம் பிரிப்பார்களோ அதை அவ்விருவரிடமிருந்து கற்றார்கள். அல்லாஹ்வின் அனுமதி கொண்டே தவிர அதன் மூலம் அவர்கள் ஒருவருக்குமே தீங்கிழைப்பவர்களாக இல்லை. அவர்களுக்குப் பலனளிக்காத, அவர்களுக்குத் தீங்கிழைக்கக்கூடியவற்றைத்தான் (அவர்கள்) கற்றார்கள். அதை எவர் விலைக்கு வாங்கினாரோ அவருக்கு மறுமையில் எந்த பாக்கியமும் இல்லை என்பதை திட்டவட்டமாக (அவர்கள்) அறிந்தார்கள். தங்களையே எதற்கு பகரமாக விற்றார்களோ அது திட்டமாக கெட்டது. (இதை) அவர்கள் அறிந்திருக்க வேண்டுமே!