Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௧௪௮

Qur'an Surah Al-A'raf Verse 148

ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௧௪௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاتَّخَذَ قَوْمُ مُوْسٰى مِنْۢ بَعْدِهٖ مِنْ حُلِيِّهِمْ عِجْلًا جَسَدًا لَّهٗ خُوَارٌۗ اَلَمْ يَرَوْا اَنَّهٗ لَا يُكَلِّمُهُمْ وَلَا يَهْدِيْهِمْ سَبِيْلًاۘ اِتَّخَذُوْهُ وَكَانُوْا ظٰلِمِيْنَ (الأعراف : ٧)

wa-ittakhadha
وَٱتَّخَذَ
And took
எடுத்துக் கொண்டனர்
qawmu
قَوْمُ
(the) people
சமுதாயம்
mūsā
مُوسَىٰ
(of) Musa
மூஸாவுடைய
min baʿdihi
مِنۢ بَعْدِهِۦ
from after him
அவருக்குப் பின்னர்
min ḥuliyyihim
مِنْ حُلِيِّهِمْ
from their ornaments
தங்கள் நகையிலிருந்து
ʿij'lan
عِجْلًا
a calf
ஒரு காளைக் கன்றை
jasadan lahu
جَسَدًا لَّهُۥ
an image [for] it
ஓர் உடலை/அதற்கு
khuwārun
خُوَارٌۚ
(had) a lowing sound
மாட்டின் சப்தம்
alam yaraw
أَلَمْ يَرَوْا۟
Did not they see
அவர்கள் பார்க்கவில்லையா?
annahu lā yukallimuhum
أَنَّهُۥ لَا يُكَلِّمُهُمْ
that it (could) not speak to them
நிச்சயமாக அது/பேசுவதுமில்லை/அவர்களுடன்
walā yahdīhim
وَلَا يَهْدِيهِمْ
and not guide them
(நேர்)வழி காட்டுவதுமில்லை/அவர்களுக்கு
sabīlan
سَبِيلًاۘ
(to) a way?
பாதையை
ittakhadhūhu
ٱتَّخَذُوهُ
They took it (for worship)
எடுத்துக் கொண்டார்கள்/அதை
wakānū
وَكَانُوا۟
and they were
இன்னும் ஆகிவிட்டனர்
ẓālimīna
ظَٰلِمِينَ
wrongdoers
அநியாயக்காரர்களாக

Transliteration:

Wattakhaza qawmu Moosaa mim ba'dihee min huliyyihim 'ijlan jasadal lahoo khuwaar; alam yaraw annahoo laa yukallimuhum wa laa yahdeehim sabeelaa; ittakha zoohu wa kaanoo zaalimeen (QS. al-ʾAʿrāf:148)

English Sahih International:

And the people of Moses made, after [his departure], from their ornaments a calf – an image having a lowing sound. Did they not see that it could neither speak to them nor guide them to a way? They took it [for worship], and they were wrongdoers. (QS. Al-A'raf, Ayah ௧௪௮)

Abdul Hameed Baqavi:

(தன் இறைவனிடம் உரையாட மூஸா சென்றதற்குப்) பின்னர் மூஸாவுடைய மக்கள் தங்கள் ஆபரணங்களைக் கொண்(டு செய்யப்பட்)ட கன்றுக் குட்டியின் சிலையை(த் தெய்வமாக) எடுத்துக் கொண்டார்கள். அதற்கு (மாட்டின் சப்தத்தைப் போன்ற) சப்தமிருந்தது. எனினும் (அது உயிரற்ற வெறும் சிலை.) நிச்சயமாக அது அவர்களுடன் பேசுவதுமில்லை; அவர்களுக்கு யாதொரு வழியை அறிவிப்பதுமில்லை என்பதையும் அவர்கள் கவனித்திருக்க வேண்டாமா? எனினும், அவர்கள் அதனையே (தெய்வமாக) எடுத்துக் கொண்டு (அதனால் தங்களுக்குத்தாமே) தீங்கிழைத்துக் கொண்டவர்கள் ஆனார்கள். (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௧௪௮)

Jan Trust Foundation

மூஸாவின் சமூகத்தார் அவர் (சென்ற) பின் தங்கள் நகைகளைக் கொண்டு ஒரு காளைக் கன்றின் சிலையை(ச் செய்து அதைத் தெய்வமாக) ஆக்கிக் கொண்டார்கள்; அதற்கு (மாட்டின் சப்தத்தைப் போல் வெறும்) சப்தமிருந்தது; நிச்சயமாக அது அவர்களிடம் பேசவும் மாட்டாது, இன்னும் அவர்களுக்கு (நேர்) வழி காட்டவும் செய்யாது என்பதை அவர்கள் கவனித்திருக்க வேண்டாமா, அவர்கள் அதனையே (தெய்வமாக) ஆக்கிக் கொண்டார்கள் - இன்னும் அவர்கள் (தமக்குத் தாமே) அநியாயம் செய்து கொண்டார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

மூஸாவுடைய சமுதாயம் அவருக்குப் பின்னர் தங்கள் நகையிலிருந்து ஒரு காளைக் கன்றை -அதற்கு மாட்டின் சப்தத்தை உடைய ஓர் உடலை - (தெய்வமாக) எடுத்துக் கொண்டனர். நிச்சயமாக அது அவர்களுடன் பேசுவதுமில்லை; அவர்களுக்கு (நேரான) பாதையை வழிகாட்டுவதுமில்லை என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? அவர்கள் அதை (வணங்கப்படும் தெய்வமாக) எடுத்துக் கொண்டார்கள். இன்னும் அநியாயக்காரர்களாக ஆகிவிட்டனர்.