Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௫௧

Qur'an Surah Al-An'am Verse 51

ஸூரத்துல் அன்ஆம் [௬]: ௫௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاَنْذِرْ بِهِ الَّذِيْنَ يَخَافُوْنَ اَنْ يُّحْشَرُوْٓا اِلٰى رَبِّهِمْ لَيْسَ لَهُمْ مِّنْ دُوْنِهٖ وَلِيٌّ وَّلَا شَفِيْعٌ لَّعَلَّهُمْ يَتَّقُوْنَ (الأنعام : ٦)

wa-andhir
وَأَنذِرْ
And warn
இன்னும் எச்சரிப்பீராக
bihi
بِهِ
with it
இதன் மூலம்
alladhīna
ٱلَّذِينَ
those who
எவர்கள்
yakhāfūna
يَخَافُونَ
fear
பயப்படுவார்கள்
an yuḥ'sharū
أَن يُحْشَرُوٓا۟
that they will be gathered
அவர்கள் ஒன்று திரட்டப்படுவதை
ilā rabbihim
إِلَىٰ رَبِّهِمْۙ
to their Lord
தங்கள் இறைவனிடம்
laysa
لَيْسَ
not
இல்லை
lahum
لَهُم
for them
தங்களுக்கு
min dūnihi
مِّن دُونِهِۦ
of other than Him
அவனைத் தவிர
waliyyun
وَلِىٌّ
any protector
பாதுகாவலர்
walā shafīʿun
وَلَا شَفِيعٌ
and not any intercessor
இன்னும் இல்லை/பரிந்துரைப்பவர்
laʿallahum yattaqūna
لَّعَلَّهُمْ يَتَّقُونَ
so that they may (become) righteous
அவர்கள் அல்லாஹ்வை அஞ்சுவதற்காக

Transliteration:

Wa anzir bihil lazeena yakhaafoona ai yuhsharooo ilaa Rabbihim laisa lahum min doonihee waliyyunw wa laa shafee'ul la'allahum yattaqoon (QS. al-ʾAnʿām:51)

English Sahih International:

And warn by it [i.e., the Quran] those who fear that they will be gathered before their Lord – for them besides Him will be no protector and no intercessor – that they might become righteous. (QS. Al-An'am, Ayah ௫௧)

Abdul Hameed Baqavi:

(நபியே!) எவர்கள், "(மறுமையில்) தங்கள் இறைவனிடம் (விசாரணைக்காகக்) கொண்டு போகப்படுவோம், அங்கு அவனைத் தவிர தங்களுக்கு பாதுகாவலரோ பரிந்துரை செய்பவரோ இருக்க மாட்டார்" என்று பயப்படுகின்றார்களோ அவர்களை நீங்கள் எச்சரிக்கை செய்யுங்கள். அவர்கள் (பாவத்திலிருந்து விலகி) இறைவனை அஞ்சிக் கொள்வார்கள். (ஸூரத்துல் அன்ஆம், வசனம் ௫௧)

Jan Trust Foundation

இன்னும் எவர் தங்கள் இறைவன் முன் (மறுமையில்) கொண்டு வரப்படுவது பற்றி பயப்படுகிறார்களோ அவர்களுக்கு (இவ்வேதத்தைக் கொண்டு) எச்சரிக்கை செய்யும் - (பாவத்திலிருந்து நீங்கி) அவர்கள் பயபக்தியுடையோராகும் பொருட்டு; அவனைத் தவிர அவர்களுக்குப் பாதுகாப்பளிப்பவரோ, பரிந்து பேசுபவரோ வேறு யாரும் இல்லை.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) “(மறுமையில்) தங்கள் இறைவனிடம் ஒன்று திரட்டப்படுவோம், அங்கு தங்களுக்கு அவனைத் தவிர பாதுகாவலரும் இல்லை பரிந்துரைப்பவரும் இல்லை" என்று பயப்படுபவர்களை இதன் மூலம் எச்சரிப்பீராக! அவர்கள் (அதிகமதிகம்) அல்லாஹ்வை அஞ்சுவதற்காக(வும் பாவங்களை விட்டு விலகிக் கொள்வதற்காகவும்).