Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௪௦

Qur'an Surah Al-An'am Verse 40

ஸூரத்துல் அன்ஆம் [௬]: ௪௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قُلْ اَرَءَيْتَكُمْ اِنْ اَتٰىكُمْ عَذَابُ اللّٰهِ اَوْ اَتَتْكُمُ السَّاعَةُ اَغَيْرَ اللّٰهِ تَدْعُوْنَۚ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ (الأنعام : ٦)

qul
قُلْ
Say
கூறுவீராக
ara-aytakum
أَرَءَيْتَكُمْ
"Have you seen
அறிவியுங்கள்
in atākum
إِنْ أَتَىٰكُمْ
if (there) came to you
வந்தால்/உங்களுக்கு
ʿadhābu l-lahi
عَذَابُ ٱللَّهِ
punishment (of) Allah
அல்லாஹ்வின் வேதனை
aw
أَوْ
or
அல்லது
atatkumu
أَتَتْكُمُ
(there) came to you
வந்தால்/உங்களுக்கு
l-sāʿatu
ٱلسَّاعَةُ
the Hour
காலம்
aghayra
أَغَيْرَ
is it other
அல்லாதவர்களையா?
l-lahi
ٱللَّهِ
(than) Allah
அல்லாஹ்
tadʿūna
تَدْعُونَ
you call
அழைப்பீர்கள்
in kuntum
إِن كُنتُمْ
if you are
நீங்கள் இருந்தால்
ṣādiqīna
صَٰدِقِينَ
truthful?"
உண்மையாளர்களாக

Transliteration:

Qaul ara'aytakum in ataakum 'azaabul laahi aw atatkumus Saa'atu a-ghairal laahi tad'oona in kuntum saadiqeen (QS. al-ʾAnʿām:40)

English Sahih International:

Say, "Have you considered: if there came to you the punishment of Allah or there came to you the Hour – is it other than Allah you would invoke, if you should be truthful?" (QS. Al-An'am, Ayah ௪௦)

Abdul Hameed Baqavi:

(நபியே! அவர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: உங்களுக்கு அல்லாஹ்வுடைய வேதனை வந்துவிட்டால் அல்லது உங்களுக்கு விசாரணைக்காலம் வந்து விட்டால் அல்லாஹ் அல்லாத (இ)வைகளையா நீங்கள் (உங்கள் உதவிக்கு) அழைப்பீர்கள்! என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்த்தீர்களா? (இந்த சிலைகளை உங்கள் தெய்வங்கள் என்று கூறும்) நீங்கள் உண்மை சொல்பவர் களாயிருந்தால் (அவைகளையே உங்கள் உதவிக்கு அழையுங்கள்.) (ஸூரத்துல் அன்ஆம், வசனம் ௪௦)

Jan Trust Foundation

(நபியே! அவர்களிடம்) நீர் கூறும்| “அல்லாஹ்வுடைய வேதனை உங்களிடம் வந்து விட்டால், அல்லது (நீங்கள் அஞ்சும்) அந்த (விசாரணைக்) காலம் வந்துவிட்டால் (அதிலிருந்து உங்களைக் காப்பாற்ற) அல்லாஹ்வையன்றி (வேறு யாரையாவது) நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் - அழைப்பீர்களா?” என்பதை (நீங்கள் சிந்தித்துப்) பார்த்தீர்களா?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) கூறுவீராக: உங்களுக்கு அல்லாஹ்வின் வேதனை வந்தால் அல்லது உங்களுக்கு (விசாரனைக்) காலம் வந்தால் அல்லாஹ் அல்லாதவர்களையா நீங்கள் அழைப்பீர்கள்? நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் (இதன் பதிலை) அறிவியுங்கள்.