Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மாயிதா வசனம் ௯௨

Qur'an Surah Al-Ma'idah Verse 92

ஸூரத்துல் மாயிதா [௫]: ௯௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاَطِيْعُوا اللّٰهَ وَاَطِيْعُوا الرَّسُوْلَ وَاحْذَرُوْا ۚفَاِنْ تَوَلَّيْتُمْ فَاعْلَمُوْٓا اَنَّمَا عَلٰى رَسُوْلِنَا الْبَلٰغُ الْمُبِيْنُ (المائدة : ٥)

wa-aṭīʿū
وَأَطِيعُوا۟
And obey
இன்னும் கீழ்ப்படியுங்கள்
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்வுக்கு
wa-aṭīʿū
وَأَطِيعُوا۟
and obey
இன்னும் கீழ்ப்படியுங்கள்
l-rasūla
ٱلرَّسُولَ
the Messenger
தூதருக்கு
wa-iḥ'dharū
وَٱحْذَرُوا۟ۚ
and beware
இன்னும் எச்சரிக்கையாக இருங்கள்
fa-in tawallaytum
فَإِن تَوَلَّيْتُمْ
And if you turn away
நீங்கள்திரும்பினால்
fa-iʿ'lamū
فَٱعْلَمُوٓا۟
then know
அறிந்து கொள்ளுங்கள்
annamā
أَنَّمَا
only
நிச்சயமாக
ʿalā rasūlinā
عَلَىٰ رَسُولِنَا
upon Our Messenger
நம் தூதர் மீது
l-balāghu
ٱلْبَلَٰغُ
(is to) convey (the Message)
எடுத்துரைப்பது
l-mubīnu
ٱلْمُبِينُ
clearly
தெளிவாக

Transliteration:

Wa atee'ul laaha wa atee'ur Rasoola wahzaroo; fa in tawal laitum fa'lamooo annamaa 'alaa Rasoolinal balaaghul mubeen (QS. al-Māʾidah:92)

English Sahih International:

And obey Allah and obey the Messenger and beware. And if you turn away – then know that upon Our Messenger is only [the responsibility for] clear notification. (QS. Al-Ma'idah, Ayah ௯௨)

Abdul Hameed Baqavi:

அல்லாஹ்வுக்கும் வழிப்படுங்கள்; (அல்லாஹ்வுடைய) தூதருக்கும் கட்டுப்படுங்கள். (அவர்களுக்கு மாறு செய்யாது) எச்சரிக்கையாக இருங்கள். (இதனை) நீங்கள் புறக்கணித்து விட்டால் (நம்முடைய கட்டளைகளை, உங்களுக்குத்) தெளிவாக எடுத்துரைப்பது மட்டுமே நம் தூதர்மீது கடமையாகும் என்பதை நிச்சயமாக நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். (ஸூரத்துல் மாயிதா, வசனம் ௯௨)

Jan Trust Foundation

இன்னும் அல்லாஹ்வுக்கும் வழிபடுங்கள்; (அவன்) தூதருக்கும் கட்டுப்படுங்கள்; எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்; (இதனை) நீங்கள் புறக்கணித்துவிட்டால், (நம் கட்டளைகளைத்) தெளிவாக எடுத்து விளக்குவது மட்டுமே நம் தூதர்மீது கடமையாகும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அல்லாஹ்வுக்கு கீழ்ப்படியுங்கள்; தூதருக்கு கீழ்ப்படியுங்கள்; (பாவங்களை விட்டு விலகி) எச்சரிக்கையாக இருங்கள். நீங்கள் (அறிவுரையை புறக்கணித்து) திரும்பினால் (நம் கட்டளைகளை, உங்களுக்குத்) தெளிவாக எடுத்துரைப்பது தான் நம் தூதர் மீது கடமையாகும் என்பதை நிச்சயமாக அறிந்து கொள்ளுங்கள்.