Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மாயிதா வசனம் ௩

Qur'an Surah Al-Ma'idah Verse 3

ஸூரத்துல் மாயிதா [௫]: ௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

حُرِّمَتْ عَلَيْكُمُ الْمَيْتَةُ وَالدَّمُ وَلَحْمُ الْخِنْزِيْرِ وَمَآ اُهِلَّ لِغَيْرِ اللّٰهِ بِهٖ وَالْمُنْخَنِقَةُ وَالْمَوْقُوْذَةُ وَالْمُتَرَدِّيَةُ وَالنَّطِيْحَةُ وَمَآ اَكَلَ السَّبُعُ اِلَّا مَا ذَكَّيْتُمْۗ وَمَا ذُبِحَ عَلَى النُّصُبِ وَاَنْ تَسْتَقْسِمُوْا بِالْاَزْلَامِۗ ذٰلِكُمْ فِسْقٌۗ اَلْيَوْمَ يَىِٕسَ الَّذِيْنَ كَفَرُوْا مِنْ دِيْنِكُمْ فَلَا تَخْشَوْهُمْ وَاخْشَوْنِۗ اَلْيَوْمَ اَكْمَلْتُ لَكُمْ دِيْنَكُمْ وَاَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِيْ وَرَضِيْتُ لَكُمُ الْاِسْلَامَ دِيْنًاۗ فَمَنِ اضْطُرَّ فِيْ مَخْمَصَةٍ غَيْرَ مُتَجَانِفٍ لِّاِثْمٍۙ فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ (المائدة : ٥)

ḥurrimat
حُرِّمَتْ
Are made unlawful
விலக்கப்பட்டன
ʿalaykumu
عَلَيْكُمُ
on you
உங்களுக்கு
l-maytatu
ٱلْمَيْتَةُ
the dead animals
செத்தது
wal-damu
وَٱلدَّمُ
and the blood
இன்னும் இரத்தம்
walaḥmu l-khinzīri
وَلَحْمُ ٱلْخِنزِيرِ
and flesh (of) the swine
இன்னும் இறைச்சி/பன்றி
wamā
وَمَآ
and what
இன்னும் எது
uhilla
أُهِلَّ
has been dedicated
பெயர் கூறப்பட்டது
lighayri
لِغَيْرِ
to other than
அல்லாதவற்றிற்காக
l-lahi
ٱللَّهِ
Allah
அல்லாஹ்
bihi
بِهِۦ
[on it]
அதை
wal-mun'khaniqatu
وَٱلْمُنْخَنِقَةُ
and that which is strangled (to death)
இன்னும் கழுத்து நெருக்கிச் செத்தது
wal-mawqūdhatu
وَٱلْمَوْقُوذَةُ
and that which is hit fatally
இன்னும் அடிப்பட்டுச் செத்தது
wal-mutaradiyatu
وَٱلْمُتَرَدِّيَةُ
and that which has a fatal fall
இன்னும் விழுந்து செத்தது
wal-naṭīḥatu
وَٱلنَّطِيحَةُ
and that which is gored by horns
இன்னும் கொம்பால் குத்தப்பட்டுச் செத்தது
wamā akala
وَمَآ أَكَلَ
and that which ate (it)
இன்னும் எதை/தின்றது
l-sabuʿu
ٱلسَّبُعُ
the wild animal
மிருகங்கள்
illā
إِلَّا
except
தவிர
mā dhakkaytum
مَا ذَكَّيْتُمْ
what you slaughtered
எதை/அறுத்தீர்கள்
wamā dhubiḥa
وَمَا ذُبِحَ
and what is sacrificed
இன்னும் எது/அறுக்கப்பட்டது
ʿalā l-nuṣubi
عَلَى ٱلنُّصُبِ
on the stone altars
மீது/நடப்பட்டவை, சிலைகள்
wa-an tastaqsimū
وَأَن تَسْتَقْسِمُوا۟
and that you seek division
இன்னும் பாகம் பிரித்துக் கொள்வது
bil-azlāmi
بِٱلْأَزْلَٰمِۚ
by divining arrows -
அம்புகளைக்கொண்டு
dhālikum
ذَٰلِكُمْ
that
இவை
fis'qun l-yawma
فِسْقٌۗ ٱلْيَوْمَ
(is) grave disobedience This day
பாவம்/இன்று
ya-isa
يَئِسَ
(have) despaired
நம்பிக்கை இழந்தனர்
alladhīna
ٱلَّذِينَ
those who
எவர்கள்
kafarū
كَفَرُوا۟
disbelieved
நிராகரித்தார்கள்
min
مِن
of
விட்டு
dīnikum
دِينِكُمْ
your religion
உங்கள் மார்க்கம்
falā
فَلَا
so (do) not
ஆகவே பயப்படாதீர்கள்
takhshawhum
تَخْشَوْهُمْ
fear them
ஆகவே பயப்படாதீர்கள் அவர்களை
wa-ikh'shawni
وَٱخْشَوْنِۚ
but fear Me
என்னை பயப்படுங்கள்
l-yawma
ٱلْيَوْمَ
This day
இன்று
akmaltu
أَكْمَلْتُ
I have perfected
முழுமையாக்கினேன்
lakum
لَكُمْ
for you
உங்களுக்கு
dīnakum
دِينَكُمْ
your religion
உங்கள் மார்க்கத்தை
wa-atmamtu
وَأَتْمَمْتُ
and I have completed
இன்னும் முழுமையாக்கினேன்
ʿalaykum
عَلَيْكُمْ
upon you
உங்கள் மீது
niʿ'matī
نِعْمَتِى
My Favor
என் அருளை
waraḍītu
وَرَضِيتُ
and I have approved
இன்னும் திருப்தியடைந்தேன்
lakumu
لَكُمُ
for you
உங்களுக்கு
l-is'lāma
ٱلْإِسْلَٰمَ
[the] Islam
இஸ்லாமை
dīnan
دِينًاۚ
(as) a religion
மார்க்கமாக
famani
فَمَنِ
But whoever
ஆகவே எவர்
uḍ'ṭurra
ٱضْطُرَّ
(is) forced
நிர்ப்பந்திக்கப்பட்டார்
fī makhmaṣatin
فِى مَخْمَصَةٍ
by hunger
கடுமையான பசியில்
ghayra mutajānifin
غَيْرَ مُتَجَانِفٍ
(and) not inclining
சாயாதவராக
li-ith'min
لِّإِثْمٍۙ
to sin
பாவத்தின் பக்கம்
fa-inna
فَإِنَّ
then indeed
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்
ghafūrun
غَفُورٌ
(is) Oft-Forgiving
மகா மன்னிப்பாளன்
raḥīmun
رَّحِيمٌ
Most Merciful
மகா கருணையாளன்

Transliteration:

Hurrimat 'alaikumul maitatu waddamu wa lahmul khinzeeri wa maaa uhilla lighiril laahi bihee walmun khani qatu wal mawqoozatu wal mutarad diyatu wanna teehatu wa maaa akalas sabu'u illaa maa zakkaitum wa maa zubiha 'alan nusubi wa an tastaqsimoo bil azlaam; zaalikum fisq; alyawma ya'isal lazeena kafaroo min deenikum falaa takhshawhum wakh shawn; alyawma akmaltu lakum deenakum wa atmamtu 'alaikum ni'matee wa radeetu lakumul Islaama deenaa; famanidturra fee makhmasatin ghaira mutajaanifil li ismin fa innallaaha Ghafoorur Raheem (QS. al-Māʾidah:3)

English Sahih International:

Prohibited to you are dead animals, blood, the flesh of swine, and that which has been dedicated to other than Allah, and [those animals] killed by strangling or by a violent blow or by a head-long fall or by the goring of horns, and those from which a wild animal has eaten, except what you [are able to] slaughter [before its death], and those which are sacrificed on stone altars, and [prohibited is] that you seek decision through divining arrows. That is grave disobedience. This day those who disbelieve have despaired of [defeating] your religion; so fear them not, but fear Me. This day I have perfected for you your religion and completed My favor upon you and have approved for you IsLam as religion. But whoever is forced by severe hunger with no inclination to sin – then indeed, Allah is Forgiving and Merciful. (QS. Al-Ma'idah, Ayah ௩)

Abdul Hameed Baqavi:

(நம்பிக்கையாளர்களே! தானாக) செத்தது, இரத்தம், பன்றி இறைச்சி, அல்லாஹ் அல்லாதவைகளின் பெயர் கூறப்பட்டவை ஆகியவைகளும், அடிப்பட்டுச் செத்ததும், (மேலிருந்து) விழுந்து செத்ததும், கழுத்து நெருக்கிச் செத்ததும், கொம்பால் குத்தப்பட்டுச் செத்ததும், (சிங்கப்பல்லும், வீர நகமுள்ள மாமிசம் தின்னும் மிருகங்களாகிய சிங்கம், புலி, சிறுத்தை போன்ற) ஐவாய் மிருகங்கள் கடித்(துச் செத்)தவையும் உங்களுக்கு விலக்கப்பட்டிக்கின்றன. (எனினும், இம்மிருகங்கள் வேட்டையாடிய) அவைகளில் (உயிரோடிருப்பவற்றில்) முறைப்படி (பிஸ்மில்லாஹ் சொல்லி) அறுக்கப்பட்டவைகளைத் தவிர. (அவ்வாறு அறுக்கப் பட்டவைகளைப் புசிக்கலாம். பூஜை செய்வதற்காக) நடப்பட்ட (ஸ்தம்பம், கொடி, பாவட்டா, சிலை போன்ற)வைகளுக்காக அறுக்கப் பட்டவைகளும், அம்பு எய்து (குறி கேட்டுப்) பாகம் பிரித்துக் கொள்வதும் (உங்களுக்கு விலக்கப்பட்டிருக்கின்றன.) இவை அனைத்தும் பாவங்களாகும். நிராகரிப்பவர்கள் உங்கள் மார்க்கத்தை (அழித்துவிடலாம் என்பதை)ப் பற்றிய நம்பிக்கையை இன்றைய தினம் இழந்துவிட்டார்கள். ஆகவே, அவர்களுக்கு நீங்கள் (ஒரு சிறிதும்) பயப்படவேண்டாம். எனக்கே பயப்படுங்கள். இன்றைய தினம் நாம் உங்களுக்கு உங்களுடைய மார்க்கத்தை முழுமையாக்கி வைத்து என்னுடைய அருளையும் உங்கள் மீது முழுமையாக்கி வைத்து விட்டோம். உங்களுடைய இந்த இஸ்லாம் மார்க்கத்தைப் பற்றியும் திருப்தியடைந்தோம். (அங்கீகரித்துக் கொண்டோம்) எவரேனும், பாவம் செய்யும் எண்ணமின்றி பசியின் கொடுமையினால் நிர்ப்பந்திக்கப்பட்டு (மேலே கூறப்பட்ட விலக்கப்பட்டவைகளைப் புசித்து) விட்டால் (அது குற்றமாகாது.) ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் (நிர்ப்பந்தத்திற்குள்ளான அவருடைய குற்றங்களை) மிகவும் மன்னித்துக் கிருபை செய்பவனாக இருக்கின்றான். (ஸூரத்துல் மாயிதா, வசனம் ௩)

Jan Trust Foundation

(தானாகச்) செத்தது, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாததின் பெயர் அதன் மீது கூறப்பட்ட (அறுக்கப்பட்ட)தும், கழுத்து நெறித்துச் செத்ததும், அடிபட்டுச் செத்ததும், கீழே விழுந்து செத்ததும், கொம்பால் முட்டப் பட்டுச் செத்ததும், (கரடி, புலி போன்ற) விலங்குகள் கடித்(துச் செத்)தவையும் உங்கள் மீது ஹராமாக்கப் பட்டிருக்கின்றன; (அனுமதிக்கப்பட்டவற்றில்) எதை நீங்கள் (உயிரோடு பார்த்து, முறைப்படி) அறுத்தீர்களோ அதைத் தவிர; (அதை உண்ணலாம். அன்றியும் பிற வணக்கம் செய்வதற்காகச்) சின்னங்கள் வைக்கப் பெற்ற இடங்களில் அறுக்கப்பட்டவையும்; அம்புகள் மூலம் நீங்கள் குறி கேட்பதும் (உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளன) - இவையாவும் (பெரும்) பாவங்களாகும்; இன்றைய தினம் காஃபிர்கள் உங்களுடைய மார்க்கத்தை (அழித்து விடலாம் என்பதை)ப் பற்றிய நம்பிக்கையை இழந்து விட்டார்கள்; எனவே நீங்கள் அவர்களுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கே அஞ்சி நடப்பீர்களாக; இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்; மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்; ஆனால் உங்களில் எவரேனும் பாவம் செய்யும் நாட்டமின்றி, பசிக் கொடுமையினால் நிர்ப்பந்திக்கப்பட்டு (மேலே கூறப்பட்ட விலக்கப்பட்டவற்றைப் புசித்து) விட்டால் (அது குற்றமாகாது). ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும், கருணை மிக்கோனாகவும் இருக்கின்றான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(தானாக) செத்தது, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதவற்றிற்காக பெயர் கூறப்பட்டவை, கழுத்து நெருக்கிச் செத்தது, அடிப்பட்டுச் செத்தது, விழுந்து செத்தது, கொம்பால் குத்தப்பட்டுச் செத்தது, மிருகங்கள் தின்றது உங்களுக்கு விலக்கப்பட்டன. (எனினும், மிருகங்கள் வேட்டையாடியதில் உயிரோடிருப்பவற்றில் பிஸ்மில்லாஹ் கூறி) நீங்கள் அறுத்தவற்றைத் தவிர. (பூஜை செய்வதற்காக) நடப்பட்ட (கொடி, ஜண்டா, சிலை போன்ற)வற்றுக்காக அறுக்கப்பட்டவை, அம்புகளைக் கொண்டு (குறி கேட்டுப்) பாகம் பிரித்துக் கொள்வது (ஆகிய அனைத்தும் உங்களுக்கு விலக்கப்பட்டன). இவை பாவங்களாகும். நிராகரிப்பவர்கள் உங்கள் மார்க்கத்தை விட்டு இன்று நம்பிக்கை இழந்தனர். ஆகவே, அவர்களைப் பயப்படாதீர்கள். என்னைப் பயப்படுங்கள். இன்று உங்களுக்கு உங்கள் மார்க்கத்தை முழுமையாக்கினேன். என் அருளை உங்கள் மீது முழுமையாக்கினேன். உங்களுக்கு இஸ்லாமை மார்க்கமாக திருப்தியடைந்தேன். ஆக, எவர் பாவத்தின் பக்கம் சாயாதவராக, கடுமையான பசியில் நிர்ப்பந்திக்கப்பட்டால் (விலக்கப்பட்ட மாமிசத்தை புசிப்பது குற்றமாகாது), நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன் ஆவான்.