Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஹ்காஃப் வசனம் ௨௦

Qur'an Surah Al-Ahqaf Verse 20

ஸூரத்துல் அஹ்காஃப் [௪௬]: ௨௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَيَوْمَ يُعْرَضُ الَّذِيْنَ كَفَرُوْا عَلَى النَّارِۗ اَذْهَبْتُمْ طَيِّبٰتِكُمْ فِيْ حَيَاتِكُمُ الدُّنْيَا وَاسْتَمْتَعْتُمْ بِهَاۚ فَالْيَوْمَ تُجْزَوْنَ عَذَابَ الْهُوْنِ بِمَا كُنْتُمْ تَسْتَكْبِرُوْنَ فِى الْاَرْضِ بِغَيْرِ الْحَقِّ وَبِمَا كُنْتُمْ تَفْسُقُوْنَ ࣖ (الأحقاف : ٤٦)

wayawma yuʿ'raḍu
وَيَوْمَ يُعْرَضُ
And (the) Day will be exposed
சமர்ப்பிக்கப்படுகின்ற நாளில்
alladhīna kafarū
ٱلَّذِينَ كَفَرُوا۟
those who disbelieved
நிராகரிப்பாளர்கள்
ʿalā l-nāri
عَلَى ٱلنَّارِ
to the Fire
நரகத்தின் முன்
adhhabtum
أَذْهَبْتُمْ
"You exhausted
நீங்கள் போக்கிக் கொண்டீர்கள்
ṭayyibātikum
طَيِّبَٰتِكُمْ
your good things
உங்கள் நன்மைகளை
fī ḥayātikumu
فِى حَيَاتِكُمُ
in your life
உங்கள் வாழ்க்கையிலே
l-dun'yā
ٱلدُّنْيَا
(of) the world
உலக
wa-is'tamtaʿtum
وَٱسْتَمْتَعْتُم
and you took your pleasures
இன்னும் இன்பம் அடைந்தீர்கள்
bihā
بِهَا
therein
அவற்றின் மூலம்
fal-yawma
فَٱلْيَوْمَ
So today
ஆகவே இன்றைய தினம்
tuj'zawna
تُجْزَوْنَ
you will be recompensed
கூலியாக கொடுக்கப்படுவீர்கள்
ʿadhāba
عَذَابَ
(with) a punishment
தண்டனையை
l-hūni
ٱلْهُونِ
humiliating
கேவலமான
bimā kuntum
بِمَا كُنتُمْ
because you were
நீங்கள் இருந்த காரணத்தாலும்
tastakbirūna
تَسْتَكْبِرُونَ
arrogant
நீங்கள் பெருமையடிப்பவர்களாக
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
in the earth
பூமியில்
bighayri l-ḥaqi
بِغَيْرِ ٱلْحَقِّ
without [the] right
அநியாயமாக
wabimā kuntum
وَبِمَا كُنتُمْ
and because you were
நீங்கள் இருந்த காரணத்தாலும்
tafsuqūna
تَفْسُقُونَ
defiantly disobedient"
நீங்கள் பாவம் செய்பவர்களாக

Transliteration:

Wa Yawma yu'radul lazeena kafaroo 'alan Naai azhabtum taiyibaatikum fee hayaatikumud dunyaa wastam ta'tum bihaa fal Yawma tujzawna 'azaabal hooni bimaa kuntum tastakbiroona fil ardi bighairil haqqi wa bimaa kuntum tafsuqoon (QS. al-ʾAḥq̈āf:20)

English Sahih International:

And the Day those who disbelieved are exposed to the Fire [it will be said], "You exhausted your pleasures during your worldly life and enjoyed them, so this Day you will be awarded the punishment of [extreme] humiliation because you were arrogant upon the earth without right and because you were defiantly disobedient." (QS. Al-Ahqaf, Ayah ௨௦)

Abdul Hameed Baqavi:

நிராகரிப்பவர்களை நரகத்தின் முன்கொண்டு வரப்படும் நாளில் (அவர்களை நோக்கி) "நீங்கள் உலகத்தில் வாழ்ந்திருந்த காலத்தில், நீங்கள் பெற்றிருந்த நல்லவைகளை எல்லாம், (நன்மையான காரியங்களில் உபயோகிக்காது) உங்களுடைய சுகபோகங்களிலேயே உபயோகித்து இன்பமனுபவித்து விட்டீர்கள். ஆகவே, நீங்கள் பூமியில் நியாயமின்றிப் பெருமையடித்துக் கொண்டும், பாவம் செய்துகொண்டும் இருந்ததன் காரணமாக, இழிவு தரும் வேதனையே இன்றைய தினம் உங்களுக்குக் கூலியாகக் கொடுக்கப்படும்" (என்று கூறப்படும்). (ஸூரத்துல் அஹ்காஃப், வசனம் ௨௦)

Jan Trust Foundation

அன்றியும் (நரக) நெருப்பின் முன் நிராகரிப்பவர்கள் கொண்டுவரப்படும் நாளில், “உங்கள் உலக வாழ்க்கையின் போது உங்களுக்குக் கிடைத்திருந்த மணமான பொருட்களையெல்லாம், வீண் செலவு செய்து, (உலக) இன்பம் தேடினீர்கள், “ஆகவே நீங்கள் பூமியில் அநியாயமாகப் பெருமையடித்துக் கொண்டும், வரம்பு மீறி (வாழ்ந்து) கொண்டும் இருந்த காரணத்தால், இழிவு தரும் வேதனையை இன்று நீங்கள் கூலியாகக் கொடுக்கப்படுகிறீர்கள்” (என்று அவர்களுக்குக் கூறப்படும்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிராகரிப்பாளர்கள் நரகின் முன் சமர்ப்பிக்கப்படுகின்ற நாளில், (அவர்களுக்கு கூறப்படும்:) “நீங்கள் உங்கள் நன்மைகளை உங்கள் உலக வாழ்க்கையிலே போக்கிக் கொண்டீர்கள் (அவற்றை அனுபவித்து முடித்து விட்டீர்கள்). அவற்றின் மூலம் (உலகத்தில்) இன்பம் அடைந்தீர்கள். ஆகவே, பூமியில் நீங்கள் அநியாயமாக பெருமையடிப்பவர்களாக இருந்த காரணத்தாலும் நீங்கள் பாவம் செய்பவர்களாக இருந்த காரணத்தாலும் இன்றைய தினம் கேவலமான தண்டனையை கூலியாகக் கொடுக்கப்படுவீர்கள்.”