Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஹ்காஃப் வசனம் ௧௧

Qur'an Surah Al-Ahqaf Verse 11

ஸூரத்துல் அஹ்காஃப் [௪௬]: ௧௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَقَالَ الَّذِيْنَ كَفَرُوْا لِلَّذِيْنَ اٰمَنُوْا لَوْ كَانَ خَيْرًا مَّا سَبَقُوْنَآ اِلَيْهِۗ وَاِذْ لَمْ يَهْتَدُوْا بِهٖ فَسَيَقُوْلُوْنَ هٰذَآ اِفْكٌ قَدِيْمٌ (الأحقاف : ٤٦)

waqāla
وَقَالَ
And say
கூறினார்கள்
alladhīna kafarū
ٱلَّذِينَ كَفَرُوا۟
those who disbelieve
நிராகரித்தவர்கள்
lilladhīna āmanū
لِلَّذِينَ ءَامَنُوا۟
of those who believe
நம்பிக்கை கொண்டவர்களை நோக்கி
law kāna khayran
لَوْ كَانَ خَيْرًا
"If it had been good
இது சிறந்ததாக இருந்தால்
mā sabaqūnā
مَّا سَبَقُونَآ
not they (would) have preceded us
இவர்கள் நம்மை முந்தியிருக்க மாட்டார்கள்
ilayhi
إِلَيْهِۚ
to it"
இதனளவில்
wa-idh lam yahtadū
وَإِذْ لَمْ يَهْتَدُوا۟
And when not they (are) guided
அவர்கள் நேர்வழி பெறாமல் போனபோது
bihi
بِهِۦ
by it
இதன் மூலம்
fasayaqūlūna
فَسَيَقُولُونَ
they say
கூறுகின்றனர்
hādhā
هَٰذَآ
"This
இது
if'kun
إِفْكٌ
(is) a lie
பொய்யாகும்
qadīmun
قَدِيمٌ
ancient"
பழைய(து)

Transliteration:

Wa qaalal lazeena kafaroo lillazeena aamanoo law kaana khairam maa sabaqoonaaa ilyh; wa iz lam yahtadoo bihee fasa yaqooloona haazaaa ifkun qadeem (QS. al-ʾAḥq̈āf:11)

English Sahih International:

And those who disbelieve say of those who believe, "If it had [truly] been good, they would not have preceded us to it." And when they are not guided by it, they will say, "This is an ancient falsehood." (QS. Al-Ahqaf, Ayah ௧௧)

Abdul Hameed Baqavi:

நிராகரிப்பவர்கள் நம்பிக்கையாளர்களை நோக்கி "இவ்வேதம் நன்மையானதாக இருந்தால் (அதனை நம்பிக்கை கொள்ள இப்பாமர மக்கள்) எங்களைவிட முந்திக்கொள்ள மாட்டார்கள். (இதில் யாதொரு நன்மையுமே இல்லை. ஆதலால்தான், அதனை நாங்கள் நிராகரித்து விட்டோம்)" என்றும் கூறுகின்றனர். அவர்கள் இ(வ்வுண்மையான வேதத்)தைப் பின்பற்றாத நிலைமையில், இது பழங்காலத்துப் பொய்யான கட்டுக்கதைகள்தாம் என்றும் அவர்கள் கூறுவார்கள். (ஸூரத்துல் அஹ்காஃப், வசனம் ௧௧)

Jan Trust Foundation

நிராகரிப்பவர்கள் ஈமான் கொண்டவர்களைப்பற்றி| “இது (குர்ஆன்) நல்லதாக இருந்தால், இவர்கள் எங்களைவிட அதன்பால் முந்தியிருக்க மாட்டார்கள்” என்று கூறினார்கள். மேலுமவர்கள் இதைக் கொண்டு நேர்வழி பெறாத போது “இது பண்டைக்காலக் கட்டுக் கதை” எனக் கூறுவார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிராகரித்தவர்கள் நம்பிக்கை கொண்டவர்களை நோக்கி கூறினார்கள்: இது (-இந்த வேதமும் இந்த மார்க்கமும்) சிறந்ததாக இருந்தால் இவர்கள் (இந்த பாமர மக்கள்) இதனளவில் நம்மை முந்தியிருக்க மாட்டார்கள். அவர்கள் இதன் மூலம் நேர்வழி பெறாமல் போனபோது, “இது பழைய பொய்யாகும்” என்று கூறுகின்றனர்.