Skip to content

ஸூரா ஸூரத்துல் அஹ்காஃப் - Page: 2

Al-Ahqaf

(al-ʾAḥq̈āf)

௧௧

وَقَالَ الَّذِيْنَ كَفَرُوْا لِلَّذِيْنَ اٰمَنُوْا لَوْ كَانَ خَيْرًا مَّا سَبَقُوْنَآ اِلَيْهِۗ وَاِذْ لَمْ يَهْتَدُوْا بِهٖ فَسَيَقُوْلُوْنَ هٰذَآ اِفْكٌ قَدِيْمٌ ١١

waqāla
وَقَالَ
கூறினார்கள்
alladhīna kafarū
ٱلَّذِينَ كَفَرُوا۟
நிராகரித்தவர்கள்
lilladhīna āmanū
لِلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டவர்களை நோக்கி
law kāna khayran
لَوْ كَانَ خَيْرًا
இது சிறந்ததாக இருந்தால்
mā sabaqūnā
مَّا سَبَقُونَآ
இவர்கள் நம்மை முந்தியிருக்க மாட்டார்கள்
ilayhi
إِلَيْهِۚ
இதனளவில்
wa-idh lam yahtadū
وَإِذْ لَمْ يَهْتَدُوا۟
அவர்கள் நேர்வழி பெறாமல் போனபோது
bihi
بِهِۦ
இதன் மூலம்
fasayaqūlūna
فَسَيَقُولُونَ
கூறுகின்றனர்
hādhā
هَٰذَآ
இது
if'kun
إِفْكٌ
பொய்யாகும்
qadīmun
قَدِيمٌ
பழைய(து)
நிராகரிப்பவர்கள் நம்பிக்கையாளர்களை நோக்கி "இவ்வேதம் நன்மையானதாக இருந்தால் (அதனை நம்பிக்கை கொள்ள இப்பாமர மக்கள்) எங்களைவிட முந்திக்கொள்ள மாட்டார்கள். (இதில் யாதொரு நன்மையுமே இல்லை. ஆதலால்தான், அதனை நாங்கள் நிராகரித்து விட்டோம்)" என்றும் கூறுகின்றனர். அவர்கள் இ(வ்வுண்மையான வேதத்)தைப் பின்பற்றாத நிலைமையில், இது பழங்காலத்துப் பொய்யான கட்டுக்கதைகள்தாம் என்றும் அவர்கள் கூறுவார்கள். ([௪௬] ஸூரத்துல் அஹ்காஃப்: ௧௧)
Tafseer
௧௨

وَمِنْ قَبْلِهٖ كِتٰبُ مُوْسٰٓى اِمَامًا وَّرَحْمَةً ۗوَهٰذَا كِتٰبٌ مُّصَدِّقٌ لِّسَانًا عَرَبِيًّا لِّيُنْذِرَ الَّذِيْنَ ظَلَمُوْا ۖوَبُشْرٰى لِلْمُحْسِنِيْنَ ١٢

wamin qablihi
وَمِن قَبْلِهِۦ
இதற்கு முன்னர்
kitābu mūsā
كِتَٰبُ مُوسَىٰٓ
மூஸாவின் வேதம்
imāman
إِمَامًا
ஒரு முன்னோடியாக(வும்)
waraḥmatan
وَرَحْمَةًۚ
அருளாகவும்
wahādhā
وَهَٰذَا
இதுவோ
kitābun
كِتَٰبٌ
ஒரு வேதமாகும்
muṣaddiqun
مُّصَدِّقٌ
மெய்ப்பிக்கக்கூடிய(து)
lisānan ʿarabiyyan
لِّسَانًا عَرَبِيًّا
அரபி மொழியில்
liyundhira
لِّيُنذِرَ
எச்சரிப்பதற்காக(வும்)
alladhīna ẓalamū
ٱلَّذِينَ ظَلَمُوا۟
அநியாயக்காரர்களை
wabush'rā
وَبُشْرَىٰ
நற்செய்தியாகவும்
lil'muḥ'sinīna
لِلْمُحْسِنِينَ
நல்லவர்களுக்கு
இதற்கு முன்னர், மூஸாவுடைய வேதம் (மக்களுக்கு) வழிகாட்டியாகவும், அருளாகவும் இருந்தது. இதுவோ, (அதனை) உண்மைப்படுத்தும் வேதமாகத் தெளிவான அரபி மொழியில் இருக்கின்றது. அன்றி, அநியாயக்காரர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்துகொண்டும், நன்மை செய்பவர்களுக்கு நற்செய்தி கூறிக்கொண்டும் இருக்கின்றது. ([௪௬] ஸூரத்துல் அஹ்காஃப்: ௧௨)
Tafseer
௧௩

اِنَّ الَّذِيْنَ قَالُوْا رَبُّنَا اللّٰهُ ثُمَّ اسْتَقَامُوْا فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَۚ ١٣

inna
إِنَّ
நிச்சயமாக
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
qālū
قَالُوا۟
கூறினார்கள்
rabbunā
رَبُّنَا
எங்கள் இறைவன்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்தான்
thumma
ثُمَّ
பிறகு
is'taqāmū
ٱسْتَقَٰمُوا۟
உறுதியாக இருந்தார்களோ
falā khawfun
فَلَا خَوْفٌ
பயமில்லை
ʿalayhim
عَلَيْهِمْ
அவர்கள் மீது
walā hum yaḥzanūna
وَلَا هُمْ يَحْزَنُونَ
இன்னும் அவர்கள் கவலைப்பட மாட்டார்கள்
எவர்கள், எங்கள் இறைவன் அல்லாஹ்தான் என்று கூறி (அவன் அருள் புரிந்த இவ்வேதத்தை நம்பிக்கை கொண்டு,) அதில் உறுதியாகவும் இருக்கின்றார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக யாதொரு பயமுமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். ([௪௬] ஸூரத்துல் அஹ்காஃப்: ௧௩)
Tafseer
௧௪

اُولٰۤىِٕكَ اَصْحٰبُ الْجَنَّةِ خٰلِدِيْنَ فِيْهَاۚ جَزَاۤءً ۢبِمَا كَانُوْا يَعْمَلُوْنَ ١٤

ulāika
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்
aṣḥābu l-janati
أَصْحَٰبُ ٱلْجَنَّةِ
சொர்க்கவாசிகள்
khālidīna
خَٰلِدِينَ
நிரந்தரமாக இருப்பார்கள்
fīhā
فِيهَا
அதில்
jazāan
جَزَآءًۢ
கூலியாக
bimā kānū yaʿmalūna
بِمَا كَانُوا۟ يَعْمَلُونَ
அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிற்கு
இவர்கள்தாம் சுவனவாசிகள். அவர்கள் செய்யும் நன்மைக்குக் கூலியாக என்றென்றுமே அதில் அவர்கள் தங்கி விடுவார்கள். ([௪௬] ஸூரத்துல் அஹ்காஃப்: ௧௪)
Tafseer
௧௫

وَوَصَّيْنَا الْاِنْسَانَ بِوَالِدَيْهِ اِحْسَانًا ۗحَمَلَتْهُ اُمُّهٗ كُرْهًا وَّوَضَعَتْهُ كُرْهًا ۗوَحَمْلُهٗ وَفِصٰلُهٗ ثَلٰثُوْنَ شَهْرًا ۗحَتّٰىٓ اِذَا بَلَغَ اَشُدَّهٗ وَبَلَغَ اَرْبَعِيْنَ سَنَةًۙ قَالَ رَبِّ اَوْزِعْنِيْٓ اَنْ اَشْكُرَ نِعْمَتَكَ الَّتِيْٓ اَنْعَمْتَ عَلَيَّ وَعَلٰى وَالِدَيَّ وَاَنْ اَعْمَلَ صَالِحًا تَرْضٰىهُ وَاَصْلِحْ لِيْ فِيْ ذُرِّيَّتِيْۗ اِنِّيْ تُبْتُ اِلَيْكَ وَاِنِّيْ مِنَ الْمُسْلِمِيْنَ ١٥

wawaṣṣaynā
وَوَصَّيْنَا
நாம் உபதேசித்தோம்
l-insāna
ٱلْإِنسَٰنَ
மனிதனுக்கு
biwālidayhi
بِوَٰلِدَيْهِ
தன் பெற்றோருக்கு
iḥ'sānan
إِحْسَٰنًاۖ
நன்மை செய்வதற்கு
ḥamalathu
حَمَلَتْهُ
அவனை சுமந்தாள்
ummuhu
أُمُّهُۥ
அவனது தாய்
kur'han
كُرْهًا
சிரமத்துடன்
wawaḍaʿathu
وَوَضَعَتْهُ
இன்னும் அவனை ஈன்றெடுத்தாள்
kur'han
كُرْهًاۖ
சிரமத்துடன்
waḥamluhu
وَحَمْلُهُۥ
அவனை சுமந்ததும்
wafiṣāluhu
وَفِصَٰلُهُۥ
இன்னும் அவனுக்கு பால்குடி மறக்கச் செய்ததும்
thalāthūna
ثَلَٰثُونَ
முப்பது
shahran
شَهْرًاۚ
மாதங்களாகும்
ḥattā
حَتَّىٰٓ
இறுதியாக
idhā balagha
إِذَا بَلَغَ
அவன் அடைந்து (விட்டால்)
ashuddahu
أَشُدَّهُۥ
தனது வாலிபத்தை
wabalagha
وَبَلَغَ
இன்னும் அடைந்து(விட்டால்)
arbaʿīna
أَرْبَعِينَ
நாற்பது
sanatan
سَنَةً
வயதை
qāla
قَالَ
அவன் கூறுகிறான்
rabbi
رَبِّ
என் இறைவா
awziʿ'nī
أَوْزِعْنِىٓ
என்னை தூண்டுவாயாக
an ashkura
أَنْ أَشْكُرَ
நான் நன்றி செலுத்துவதற்கு(ம்)
niʿ'mataka
نِعْمَتَكَ
உனது அருளுக்கு
allatī
ٱلَّتِىٓ
எது
anʿamta
أَنْعَمْتَ
நீ அருள் புரிந்தாய்
ʿalayya
عَلَىَّ
என்மீது(ம்)
waʿalā
وَعَلَىٰ
மீதும்
wālidayya
وَٰلِدَىَّ
என் பெற்றோர்
wa-an aʿmala
وَأَنْ أَعْمَلَ
நான் செய்வதற்கும்
ṣāliḥan
صَٰلِحًا
நல்ல அமலை
tarḍāhu
تَرْضَىٰهُ
அதை நீ திருப்திபடுகின்றாய்
wa-aṣliḥ
وَأَصْلِحْ
இன்னும் சீர்திருத்தம் செய்
لِى
எனக்கு
fī dhurriyyatī
فِى ذُرِّيَّتِىٓۖ
என் சந்ததியில்
innī
إِنِّى
நிச்சயமாக நான்
tub'tu
تُبْتُ
திரும்பி விட்டேன்
ilayka
إِلَيْكَ
உன் பக்கம்
wa-innī
وَإِنِّى
இன்னும் நிச்சயமாக நான்
mina l-mus'limīna
مِنَ ٱلْمُسْلِمِينَ
முஸ்லிம்களில் ஒருவனாவேன்
மனிதன் தன்னுடைய தாய் தந்தைக்கு நன்றி செலுத்தும்படி நாம் அவனுக்கு நல்லுபதேசம் செய்தோம். அவனுடைய தாய், கஷ்டத்துடனேயே அவனை (கர்ப்பத்தில்) சுமந்திருந்து கஷ்டத்துடனேயே பிரசவிக்கின்றாள். அவள் கர்ப்பமானதிலிருந்து, இவன் பால்குடி மறக்கும் வரையில், முப்பது மாதங்கள் (மிக்க கஷ்டத்துடன்) செல்கின்றன. இவன் வாலிபமாகி நாற்பது வயதையடைந்தால் "என் இறைவனே! நீ என் மீதும், என் தாய் தந்தை மீதும் புரிந்த அருளுக்காக உனக்கு நான் நன்றி செலுத்தி, உன்னுடைய திருப்தியை அடையக்கூடிய நற்செயல்களைச் செய்யும்படி(யான நல்லறிவை) நீ எனக்குத் தந்தருள்வாயாக! எனக்கு உதவியாக இருக்கும்படி என்னுடைய குடும்பத்தை சீர்திருத்திவை. நிச்சயமாக நான் உன்னையே நோக்கினேன். (உனக்கு) முற்றிலும் வழிபட்டவர்களில் நானும் ஒருவன்" என்று கூறுவான். ([௪௬] ஸூரத்துல் அஹ்காஃப்: ௧௫)
Tafseer
௧௬

اُولٰۤىِٕكَ الَّذِيْنَ نَتَقَبَّلُ عَنْهُمْ اَحْسَنَ مَا عَمِلُوْا وَنَتَجَاوَزُ عَنْ سَيِّاٰتِهِمْ فِيْٓ اَصْحٰبِ الْجَنَّةِۗ وَعْدَ الصِّدْقِ الَّذِيْ كَانُوْا يُوْعَدُوْنَ ١٦

ulāika
أُو۟لَٰٓئِكَ
இவர்கள்
alladhīna
ٱلَّذِينَ
எப்படிப்பட்டவர்கள்
nataqabbalu
نَتَقَبَّلُ
ஏற்றுக் கொள்வோம்
ʿanhum
عَنْهُمْ
இவர்களிடமிருந்து
aḥsana
أَحْسَنَ
மிக அழகானதை
mā ʿamilū
مَا عَمِلُوا۟
இவர்கள் செய்தவற்றில்
wanatajāwazu
وَنَتَجَاوَزُ
இன்னும் மன்னித்து விடுவோம்
ʿan sayyiātihim
عَن سَيِّـَٔاتِهِمْ
இவர்களின் பாவங்களை
fī aṣḥābi l-janati
فِىٓ أَصْحَٰبِ ٱلْجَنَّةِۖ
சொர்க்க வாசிகளில்
waʿda l-ṣid'qi
وَعْدَ ٱلصِّدْقِ
உண்மையான வாக்காகும்
alladhī kānū yūʿadūna
ٱلَّذِى كَانُوا۟ يُوعَدُونَ
எது/வாக்களிக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள்
இத்தகையவர்கள் செய்த நன்மைகள் அனைத்தையும் நாம் அங்கீகரித்துக் கொண்டு, சுவனவாசிகளான இவர்களின் பாவங்களையும் புறக்கணித்து விடுவோம். இவர்களுக்கு அளிக்கப்பட்ட இவ்வாக்கு உண்மையான வாக்குறுதியாகும். ([௪௬] ஸூரத்துல் அஹ்காஃப்: ௧௬)
Tafseer
௧௭

وَالَّذِيْ قَالَ لِوَالِدَيْهِ اُفٍّ لَّكُمَآ اَتَعِدَانِنِيْٓ اَنْ اُخْرَجَ وَقَدْ خَلَتِ الْقُرُوْنُ مِنْ قَبْلِيْۚ وَهُمَا يَسْتَغِيْثٰنِ اللّٰهَ وَيْلَكَ اٰمِنْ ۖاِنَّ وَعْدَ اللّٰهِ حَقٌّۚ فَيَقُوْلُ مَا هٰذَآ اِلَّآ اَسَاطِيْرُ الْاَوَّلِيْنَ ١٧

wa-alladhī qāla
وَٱلَّذِى قَالَ
எவர்/கூறினார்
liwālidayhi
لِوَٰلِدَيْهِ
தனது பெற்றோரை நோக்கி
uffin
أُفٍّ
“சீ”
lakumā
لَّكُمَآ
உங்கள் இருவருக்கும்
ataʿidāninī
أَتَعِدَانِنِىٓ
என்னை எச்சரிக்கிறீர்களா?
an ukh'raja
أَنْ أُخْرَجَ
நான் வெளியேற்றப்படுவேன்
waqad
وَقَدْ
திட்டமாக
khalati
خَلَتِ
சென்றுள்ளனர்
l-qurūnu
ٱلْقُرُونُ
பல தலைமுறைகள்
min qablī
مِن قَبْلِى
எனக்கு முன்னர்
wahumā
وَهُمَا
அவ்விருவரும்
yastaghīthāni
يَسْتَغِيثَانِ
உதவி தேடுகின்றனர்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்விடம்
waylaka
وَيْلَكَ
உனக்கு என்ன கேடு!
āmin
ءَامِنْ
நீ நம்பிக்கை கொள்!
inna waʿda
إِنَّ وَعْدَ
நிச்சயமாக வாக்கு
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
ḥaqqun
حَقٌّ
உண்மையானதே!
fayaqūlu
فَيَقُولُ
அவன் கூறுகிறான்
mā hādhā
مَا هَٰذَآ
இது இல்லை
illā asāṭīru
إِلَّآ أَسَٰطِيرُ
கதைகளே தவிர
l-awalīna
ٱلْأَوَّلِينَ
முன்னோரின்
எவன் தன் தாய் தந்தையை நோக்கி (அவர்கள் மறுமையைப் பற்றிக் கூறிய நல்மொழிகளை மறுத்து) "சீச்சீ! உங்களுக்கென்ன நேர்ந்தது! (நான் இறந்தபின்) உயிர்ப்பிக்கப்படுவேன் என்று நீங்கள் என்னைப் பயமுறுத்துகிறீர்களா? எனக்கு முன்னர் எத்தனையோ கூட்டத்தார் சென்று விட்டனர். (அவர்களில் ஒருவருமே வராது இருக்க நான் மட்டும் உயிர் கொடுத்து எழுப்பப்படுவேனா?) என்று அவன் கூறுகின்றான். அதற்கு அவ்விருவரும் (அவனை) பாதுகாக்குமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து (பின்னர் அவனை நோக்கி) "உனக்கென்ன கேடு! நீ அல்லாஹ்வை நம்பு. நிச்சயமாக அவனுடைய வாக்குறுதி மெய்யானது" என்று கூறுகின்றார்கள். அதற்கவன், "இவைகளெல்லாம் முன்னுள்ளோரின் கட்டுக் கதையே தவிர வேறில்லை. (இதனை நான் நம்பவே மாட்டேன்)" என்று கூறுகின்றான். ([௪௬] ஸூரத்துல் அஹ்காஃப்: ௧௭)
Tafseer
௧௮

اُولٰۤىِٕكَ الَّذِيْنَ حَقَّ عَلَيْهِمُ الْقَوْلُ فِيْٓ اُمَمٍ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِمْ مِّنَ الْجِنِّ وَالْاِنْسِ ۗاِنَّهُمْ كَانُوْا خٰسِرِيْنَ ١٨

ulāika
أُو۟لَٰٓئِكَ
இவர்கள்
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
ḥaqqa
حَقَّ
உறுதியாகிவிட்டது
ʿalayhimu
عَلَيْهِمُ
இவர்கள் மீதும்
l-qawlu
ٱلْقَوْلُ
வாக்கு
fī umamin
فِىٓ أُمَمٍ
சமுதாயங்களுடன்
qad
قَدْ
திட்டமாக
khalat
خَلَتْ
சென்றுவிட்ட(னர்)
min qablihim
مِن قَبْلِهِم
இவர்களுக்கு முன்னர்
mina l-jini
مِّنَ ٱلْجِنِّ
ஜின்களில்
wal-insi
وَٱلْإِنسِۖ
மற்றும் மனித(ர்கள்)
innahum
إِنَّهُمْ
நிச்சயமாக இவர்கள்
kānū
كَانُوا۟
இருக்கின்றனர்
khāsirīna
خَٰسِرِينَ
நஷ்டவாளிகளாகவே
இத்தகையவர்களின் கதியோ, இவர்களுக்கு முன் சென்றுபோன (பாவிகளான) மனித, ஜின்களிலுள்ள கூட்டத்தார் களைப் போல் (இவர்களும் அழிந்து) இவர்களின் மீதும் (அல்லாஹ் வுடைய வேதனை வந்திறங்கியே தீருமென்ற) வாக்குறுதி உண்மையாகிவிட்டது. நிச்சயமாக இத்தகையவர்கள் நஷ்டமடைந்து விட்டார்கள். ([௪௬] ஸூரத்துல் அஹ்காஃப்: ௧௮)
Tafseer
௧௯

وَلِكُلٍّ دَرَجٰتٌ مِّمَّا عَمِلُوْاۚ وَلِيُوَفِّيَهُمْ اَعْمَالَهُمْ وَهُمْ لَا يُظْلَمُوْنَ ١٩

walikullin
وَلِكُلٍّ
எல்லோருக்கும்
darajātun
دَرَجَٰتٌ
தகுதிகள் உண்டு
mimmā ʿamilū
مِّمَّا عَمِلُوا۟ۖ
அவர்கள் செய்தவற்றின் அடிப்படையில்
waliyuwaffiyahum
وَلِيُوَفِّيَهُمْ
இன்னும் இறுதியாக அவன் அவர்களுக்கு முழு கூலி கொடுப்பான்
aʿmālahum
أَعْمَٰلَهُمْ
அவர்களுடைய செயல்களுக்கு
wahum
وَهُمْ
இன்னும் அவர்கள்
lā yuẓ'lamūna
لَا يُظْلَمُونَ
அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்
இவர்களில் ஒவ்வொருவருக்கும் (நன்மையோ தீமையோ) அவர்கள் செயலுக்குத் தக்க பதவிகள் இருக்கின்றன. ஆகவே, அவர்கள் தங்கள் செயலுக்குரிய கூலியை முழுமையாகவே கொடுக்கப்படுவார்கள். (நன்மையைக் குறைத்தோ, பாவத்தை அதிகரித்தோ) இவர்களில் ஒருவருக்கும் (ஒரு சிறிதும்) அநியாயம் செய்யப்படமாட்டாது. ([௪௬] ஸூரத்துல் அஹ்காஃப்: ௧௯)
Tafseer
௨௦

وَيَوْمَ يُعْرَضُ الَّذِيْنَ كَفَرُوْا عَلَى النَّارِۗ اَذْهَبْتُمْ طَيِّبٰتِكُمْ فِيْ حَيَاتِكُمُ الدُّنْيَا وَاسْتَمْتَعْتُمْ بِهَاۚ فَالْيَوْمَ تُجْزَوْنَ عَذَابَ الْهُوْنِ بِمَا كُنْتُمْ تَسْتَكْبِرُوْنَ فِى الْاَرْضِ بِغَيْرِ الْحَقِّ وَبِمَا كُنْتُمْ تَفْسُقُوْنَ ࣖ ٢٠

wayawma yuʿ'raḍu
وَيَوْمَ يُعْرَضُ
சமர்ப்பிக்கப்படுகின்ற நாளில்
alladhīna kafarū
ٱلَّذِينَ كَفَرُوا۟
நிராகரிப்பாளர்கள்
ʿalā l-nāri
عَلَى ٱلنَّارِ
நரகத்தின் முன்
adhhabtum
أَذْهَبْتُمْ
நீங்கள் போக்கிக் கொண்டீர்கள்
ṭayyibātikum
طَيِّبَٰتِكُمْ
உங்கள் நன்மைகளை
fī ḥayātikumu
فِى حَيَاتِكُمُ
உங்கள் வாழ்க்கையிலே
l-dun'yā
ٱلدُّنْيَا
உலக
wa-is'tamtaʿtum
وَٱسْتَمْتَعْتُم
இன்னும் இன்பம் அடைந்தீர்கள்
bihā
بِهَا
அவற்றின் மூலம்
fal-yawma
فَٱلْيَوْمَ
ஆகவே இன்றைய தினம்
tuj'zawna
تُجْزَوْنَ
கூலியாக கொடுக்கப்படுவீர்கள்
ʿadhāba
عَذَابَ
தண்டனையை
l-hūni
ٱلْهُونِ
கேவலமான
bimā kuntum
بِمَا كُنتُمْ
நீங்கள் இருந்த காரணத்தாலும்
tastakbirūna
تَسْتَكْبِرُونَ
நீங்கள் பெருமையடிப்பவர்களாக
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
பூமியில்
bighayri l-ḥaqi
بِغَيْرِ ٱلْحَقِّ
அநியாயமாக
wabimā kuntum
وَبِمَا كُنتُمْ
நீங்கள் இருந்த காரணத்தாலும்
tafsuqūna
تَفْسُقُونَ
நீங்கள் பாவம் செய்பவர்களாக
நிராகரிப்பவர்களை நரகத்தின் முன்கொண்டு வரப்படும் நாளில் (அவர்களை நோக்கி) "நீங்கள் உலகத்தில் வாழ்ந்திருந்த காலத்தில், நீங்கள் பெற்றிருந்த நல்லவைகளை எல்லாம், (நன்மையான காரியங்களில் உபயோகிக்காது) உங்களுடைய சுகபோகங்களிலேயே உபயோகித்து இன்பமனுபவித்து விட்டீர்கள். ஆகவே, நீங்கள் பூமியில் நியாயமின்றிப் பெருமையடித்துக் கொண்டும், பாவம் செய்துகொண்டும் இருந்ததன் காரணமாக, இழிவு தரும் வேதனையே இன்றைய தினம் உங்களுக்குக் கூலியாகக் கொடுக்கப்படும்" (என்று கூறப்படும்). ([௪௬] ஸூரத்துல் அஹ்காஃப்: ௨௦)
Tafseer