Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துன்னிஸாவு வசனம் ௯௦

Qur'an Surah An-Nisa Verse 90

ஸூரத்துன்னிஸாவு [௪]: ௯௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِلَّا الَّذِيْنَ يَصِلُوْنَ اِلٰى قَوْمٍۢ بَيْنَكُمْ وَبَيْنَهُمْ مِّيْثَاقٌ اَوْ جَاۤءُوْكُمْ حَصِرَتْ صُدُوْرُهُمْ اَنْ يُّقَاتِلُوْكُمْ اَوْ يُقَاتِلُوْا قَوْمَهُمْ ۗ وَلَوْ شَاۤءَ اللّٰهُ لَسَلَّطَهُمْ عَلَيْكُمْ فَلَقَاتَلُوْكُمْ ۚ فَاِنِ اعْتَزَلُوْكُمْ فَلَمْ يُقَاتِلُوْكُمْ وَاَلْقَوْا اِلَيْكُمُ السَّلَمَ ۙ فَمَا جَعَلَ اللّٰهُ لَكُمْ عَلَيْهِمْ سَبِيْلًا (النساء : ٤)

illā
إِلَّا
Except
தவிர
alladhīna
ٱلَّذِينَ
those who
எவர்கள்
yaṣilūna
يَصِلُونَ
join
சேருகிறார்கள்
ilā qawmin
إِلَىٰ قَوْمٍۭ
[to] a group
சமுதாயத்திடம்
baynakum
بَيْنَكُمْ
between you
உங்களுக்கிடையில்
wabaynahum
وَبَيْنَهُم
and between them
இன்னும் அவர்களுக்கு இடையில்
mīthāqun
مِّيثَٰقٌ
(is) a treaty
உடன்படிக்கை
aw
أَوْ
or
அல்லது
jāūkum
جَآءُوكُمْ
those who come to you
உங்களிடம் வந்தனர்
ḥaṣirat
حَصِرَتْ
restraining
நெருக்கடிக்குள்ளாகின
ṣudūruhum
صُدُورُهُمْ
their hearts
நெஞ்சங்கள் அவர்களுடைய
an
أَن
that
அவர்கள் போரிடுவது
yuqātilūkum aw
يُقَٰتِلُوكُمْ أَوْ
they fight you or
அவர்கள் போரிடுவது உங்களிடம்/அல்லது
yuqātilū
يُقَٰتِلُوا۟
they fight
அவர்கள் போரிடுவது
qawmahum
قَوْمَهُمْۚ
their people
தங்கள் சமுதாயத்திடம்
walaw shāa
وَلَوْ شَآءَ
And if (had) willed
நாடியிருந்தால்
l-lahu
ٱللَّهُ
Allah
அல்லாஹ்
lasallaṭahum ʿalaykum
لَسَلَّطَهُمْ عَلَيْكُمْ
surely He (would have) given them power over you
சாட்டியிருப்பான்/அவர்களை/உங்கள் மீது
falaqātalūkum
فَلَقَٰتَلُوكُمْۚ
and surely they (would have) fought you
போரிட்டிருப்பார்கள் உங்களிடம்
fa-ini
فَإِنِ
So if
அவர்கள் விலகினால்
iʿ'tazalūkum
ٱعْتَزَلُوكُمْ
they withdraw from you
அவர்கள் விலகினால் உங்களை
falam
فَلَمْ
and (do) not
அவர்கள் போரிடவில்லை
yuqātilūkum
يُقَٰتِلُوكُمْ
fight against you
அவர்கள் போரிடவில்லை உங்களிடம்
wa-alqaw
وَأَلْقَوْا۟
and offer
இன்னும் சமர்ப்பித்தார்கள்
ilaykumu
إِلَيْكُمُ
to you
உங்கள் முன்
l-salama
ٱلسَّلَمَ
[the] peace
சமாதானத்தை
famā jaʿala
فَمَا جَعَلَ
then not (has) made
ஆக்கவில்லை
l-lahu
ٱللَّهُ
Allah
அல்லாஹ்
lakum
لَكُمْ
for you
உங்களுக்கு
ʿalayhim
عَلَيْهِمْ
against them
அவர்கள் மீது
sabīlan
سَبِيلًا
a way
ஒரு வழியை

Transliteration:

Illal lazeena yasiloona ilaa qawmim binakum wa bainahum meesaaqun aw jaaa'ookum hasirat sudooruhum ai yuqaatilookum aw yuqaatiloo qawmahum, wa law shaaa'al laahu lasallatahum 'alaikum falaqaatalookum; fa ini' tazalookum falam yuqaatilookum wa alqaw ilaikumus salama famaa ja'alal laahu lakum 'alaihim sabeelaa (QS. an-Nisāʾ:90)

English Sahih International:

Except for those who take refuge with a people between yourselves and whom is a treaty or those who come to you, their hearts strained at [the prospect of] fighting you or fighting their own people. And if Allah had willed, He could have given them power over you, and they would have fought you. So if they remove themselves from you and do not fight you and offer you peace, then Allah has not made for you a cause [for fighting] against them. (QS. An-Nisa, Ayah ௯௦)

Abdul Hameed Baqavi:

(ஆயினும்) உங்களுடன் (சமாதான) உடன்படிக்கை செய்து கொண்டவர்களிடம் சென்று விட்டவர்களையும், உங்களை எதிர்த்து போர்புரிய மனம் ஒப்பாது (உங்கள் எதிரிகளை விட்டுப் பிரிந்து) உங்களிடம் வந்தவர்களையும், தங்கள் இனத்தாரை எதிர்த்துச் சண்டை செய்(ய மனம் ஒப்பாது உங்களிடமிருந்து பிரிந்) தவர்களையும் (வெட்டாதீர்கள்; சிறை பிடிக்காதீர்கள். ஏனென்றால்,) அல்லாஹ் நாடினால் உங்களை அவர்கள் வெற்றி கொண்டு (அவர்கள்) உங்களை வெட்டும்படிச் செய்திருப்பான். ஆகவே, (இத்தகையவர்கள்) உங்களுடன் போர்புரியாது விலகியிருந்து சமாதானத்தைக் கோரினால் (அதனை ஏற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில்,) இத்தகையவர்கள் மீது (போர்புரிய) அல்லாஹ் உங்களுக்கு யாதொரு வழியும் வைக்கவில்லை. (ஸூரத்துன்னிஸாவு, வசனம் ௯௦)

Jan Trust Foundation

ஆனால் எவர்களுக்கும் உங்களுக்குமிடையே (சமாதான) உடன்படிக்கை ஏற்பட்டுள்ளதோ, அத்தகைய கூட்டத்தாரிடையே சென்று சேர்ந்து கொண்டவர்களையும், அல்லது உங்களுடன் போர் புரிவதையோ, அல்லது தங்களுடைய கூட்டத்தினருடன் போர் புரிவதையோ, மனம் ஒப்பாது உங்களிடம் வந்துவிட்டவர்களையும் (சிறைப்பிடிக்காதீர்கள், கொல்லாதீர்கள்); ஏனெனில் அல்லாஹ் நாடியிருந்தால் அவர்களை உங்கள் மீது சாட்டியிருப்பான்; அப்பொழுது அவர்கள் உங்களை எதிர்த்தே போர் புரிந்திருப்பார்கள்; எனவே அவர்கள் உங்களை விட்டு விலகி உங்களுடன் போர் புரியாமல் உங்களிடம் சமாதானம் செய்து கொள்ள விரும்பினால் (அதை ஒப்புக்கொள்ளுங்கள்; ஏனென்றால்) அவர்களுக்கு எதிராக(ப் போர் செய்ய) யாதொரு வழியையும் அல்லாஹ் உங்களுக்கு உண்டாக்கவில்லை.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

உங்களுக்கிடையிலும் அவர்களுக்கிடையிலும் (சமாதான) உடன்படிக்கை உள்ள சமுதாயத்திடம் சேர்ந்தவர்கள்; அல்லது உங்களிடம் போர்புரிய அல்லது தங்கள் சமுதாயத்திடம் போர்புரிய தங்கள் உள்ளங்கள் நெருக்கடிக்குள்ளான நிலையில் உங்களிடம் வந்தவர்களைத் தவிர. (அவர்களைக் கொல்லாதீர்கள்; சிறைப் பிடிக்காதீர்கள். ஏனென்றால்,) அல்லாஹ் நாடியிருந்தால் உங்கள் மீது அவர்களைச் சாட்டியிருப்பான், உங்களிடம் அவர்கள் போரிட்டிருப்பார்கள். ஆகவே, (இவர்கள்) உங்களை விட்டு விலகி உங்களிடம் போரிடாமல் உங்கள் முன் சமாதானத்தை சமர்ப்பித்தால் (ஏற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில்,) இவர்கள் மீது (போரிட) அல்லாஹ் உங்களுக்கு ஒரு வழியையும் (ஒரு காரணத்தையும்) ஆக்கவில்லை.