Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துன்னிஸாவு வசனம் ௪௬

Qur'an Surah An-Nisa Verse 46

ஸூரத்துன்னிஸாவு [௪]: ௪௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

مِنَ الَّذِيْنَ هَادُوْا يُحَرِّفُوْنَ الْكَلِمَ عَنْ مَّوَاضِعِهٖ وَيَقُوْلُوْنَ سَمِعْنَا وَعَصَيْنَا وَاسْمَعْ غَيْرَ مُسْمَعٍ وَّرَاعِنَا لَيًّاۢ بِاَلْسِنَتِهِمْ وَطَعْنًا فِى الدِّيْنِۗ وَلَوْ اَنَّهُمْ قَالُوْا سَمِعْنَا وَاَطَعْنَا وَاسْمَعْ وَانْظُرْنَا لَكَانَ خَيْرًا لَّهُمْ وَاَقْوَمَۙ وَلٰكِنْ لَّعَنَهُمُ اللّٰهُ بِكُفْرِهِمْ فَلَا يُؤْمِنُوْنَ اِلَّا قَلِيْلًا (النساء : ٤)

mina
مِّنَ
Of
இருந்து (சிலர்)
alladhīna
ٱلَّذِينَ
those who
எவர்கள்
hādū
هَادُوا۟
are Jews
யூதராகி விட்டார்கள்
yuḥarrifūna
يُحَرِّفُونَ
they distort
புரட்டுகின்றனர்
l-kalima
ٱلْكَلِمَ
the words
வசனங்களை
ʿan
عَن
from
இருந்து
mawāḍiʿihi
مَّوَاضِعِهِۦ
their places
அதன் இடங்கள்
wayaqūlūna
وَيَقُولُونَ
and they say
இன்னும் கூறுகின்றனர்
samiʿ'nā
سَمِعْنَا
"We hear[d]
செவியுற்றோம்
waʿaṣaynā
وَعَصَيْنَا
and we disobey[ed]"
இன்னும் மாறுசெய்தோம்
wa-is'maʿ
وَٱسْمَعْ
and Hear
கேட்பீராக
ghayra mus'maʿin
غَيْرَ مُسْمَعٍ
not to be heard
கேட்கப்படாதவராக
warāʿinā
وَرَٰعِنَا
and Raina"
இன்னும் ராயினா
layyan
لَيًّۢا
twisting
வளைத்து
bi-alsinatihim
بِأَلْسِنَتِهِمْ
[with] their tongues
தங்கள் நாவுகளை
waṭaʿnan
وَطَعْنًا
and defaming
இன்னும் குற்றம் சொல்வதற்காக
fī l-dīni
فِى ٱلدِّينِۚ
[in] the religion
மார்க்கத்தில்
walaw annahum qālū
وَلَوْ أَنَّهُمْ قَالُوا۟
And if [that] they (had) said
நிச்சயமாக அவர்கள் கூறினால்
samiʿ'nā
سَمِعْنَا
"We hear[d]
செவியுற்றோம்
wa-aṭaʿnā
وَأَطَعْنَا
and we obey[ed]"
இன்னும் கீழ்ப்படிந்தோம்
wa-is'maʿ
وَٱسْمَعْ
and Hear
இன்னும் கேட்பீராக
wa-unẓur'nā
وَٱنظُرْنَا
and look (at) us
இன்னும் எங்களை பார்ப்பீராக
lakāna
لَكَانَ
surely it (would) have been
இருந்திருக்கும்
khayran
خَيْرًا
better
நன்றாக
lahum
لَّهُمْ
for them
அவர்களுக்கு
wa-aqwama
وَأَقْوَمَ
and more suitable
இன்னும் மிக நேர்மையாக
walākin
وَلَٰكِن
[And] but
எனினும்
laʿanahumu
لَّعَنَهُمُ
cursed them
அவர்களை சபித்தான்
l-lahu
ٱللَّهُ
Allah
அல்லாஹ்
bikuf'rihim
بِكُفْرِهِمْ
for their disbelief
அவர்களின் நிராகரிப்பின் காரணமாக
falā yu'minūna
فَلَا يُؤْمِنُونَ
so not they believe
ஆகவே நம்பிக்கை கொள்ளமாட்டார்கள்
illā
إِلَّا
except
தவிர
qalīlan
قَلِيلًا
a few
சிலரை

Transliteration:

Minal lazeena haadoo yuharrifoonal Kalima 'am mawaadi'ihee wa yaqooloona sami'naa wa 'asainaa wasma' ghaira musma'inw wa raa'inaa laiyam bi alsinatihim wa ta'nan fiddeen; wa law annahum qaaloo sami'naa wa ata'naa wasma' wanzurnaa lakaana khairal lahum wa aqwama wa laakil la ''anahumul laahu bikufrihim falaa yu'minoona illaa qaleela (QS. an-Nisāʾ:46)

English Sahih International:

Among the Jews are those who distort words from their [proper] places [i.e., usages] and say, "We hear and disobey" and "Hear but be not heard" and "Ra’ina," twisting their tongues and defaming the religion. And if they had said [instead], "We hear and obey" and "Wait for us [to understand]," it would have been better for them and more suitable. But Allah has cursed them for their disbelief, so they believe not, except for a few. (QS. An-Nisa, Ayah ௪௬)

Abdul Hameed Baqavi:

யூதர்களில் சிலர் (வேத) வசனங்களைக் கருத்து வேறுபடும்படிப் புரட்டி வருவதுடன் (உங்களை நோக்கி "நபியே! நீங்கள் சொன்னதை) நாம் செவியுற்றோம். எனினும் நாம் (அதற்கு) மாறு செய்வோம்" என்று கூறி (உங்கள்) மார்க்கத்தில் குற்றம் சொல்லவும் கருதி ("நபியே! நாம் சொல்வதை) நீங்கள் கேளுங்கள். (இனி யாதொன்றையும்) நீங்கள் கேட்காதிருங்கள்" என்றும் கூறி "ராயினா" என்று நாவைக் கோணி உளறுகின்றனர். ("ராயினா" என்னும் பதத்திற்கு அரபி மொழியில் "எங்களைக் கவனியுங்கள்" என்பது அர்த்தம். எனினும் யூதர்களுடைய மொழியிலோ "மூடனே!" என்பது அர்த்தமாகும். எனினும் அவர்கள் உங்களை நோக்கி "நபியே! நீங்கள் சொன்னதற்கு) நாம் செவிசாய்த்தோம். (உங்களுக்கு) நாம் வழிப்பட்டோம். (நாம் சொல்வதை) நீங்கள் கேளுங்கள் (என்று கூறி "ராயினா" என்னும் பதத்திற்குப் பதிலாக "உன்ளுர்னா") "எங்களை அன்பாக நோக்குங்கள்" என்றும் கூறியிருந்தால் அது அவர்களுக்கே மிக நன்றாகவும், நேர்மையானதாகவும் இருந்திருக்கும். எனினும், அவர்களுடைய நிராகரிப்பின் காரணமாக அல்லாஹ் அவர்களைச் சபித்துவிட்டான். ஆதலால் அவர்களில் சிலரைத் தவிர (பெரும் பான்மையானவர்கள்) நம்பிக்கையாளர்களாகவே மாட்டார்கள். (ஸூரத்துன்னிஸாவு, வசனம் ௪௬)

Jan Trust Foundation

யூதர்களில் சிலர் வேத வாக்குகளின் (கருத்தை) அதற்குரிய இடத்திலிருந்து புரட்டுகின்றனர்; (இன்னும் உம்மை நோக்கி, “நபியே! நீர் சொன்னதை) நாம் கேட்டோம், அதற்கு மாறாகவே செய்வோம்; இன்னும் (நாம் கூறுவதை) நீர் கேளும்; (நீர் கூறுவது) செவியேறாது போகட்டும்!” என்று கூறி, “ராயினா” என்று தங்கள் நாவுகளைக் கோணிக்கொண்டு (பேசி) சன்மார்க்கத்தைப் பழிக்கின்றனர்; (ஆனால் இதற்குப் பதிலாக) அவர்கள் “நாம் செவியேற்றோம், இன்னும் (உமக்கு) நாங்கள் வழிப்பட்டோம்;” (இன்னும் நாம் சொல்வதை) கேளுங்கள்; எங்களை அன்போடு கவனியுங்கள் (உன்ளுர்னா) என்று கூறியிருப்பார்களானால், அது அவர்களுக்கு நன்மையாகவும், மிக்க நேர்மையாகவும் இருந்திருக்கும்-ஆனால் அவர்களுடைய குஃப்ரின் (நிராகரிப்பின்) காரணமாக, அல்லாஹ் அவர்களைச் சபித்து விட்டான்; ஆகையால், குறைவாகவே தவிர அவர்கள் ஈமான்கொள்ள மாட்டார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

யூதர்களில் (சிலர்) வசனங்களை அதன் இடங்களிலிருந்து புரட்டுகின்றனர். "(நபியே!) செவியுற்றோம். (எனினும்) (அதற்கு) மாறு செய்தோம். (நீர்) கேட்கப்படாதவராக கேட்பீராக. இன்னும் தங்கள் நாவுகளை வளைத்தும் மார்க்கத்தில் குற்றம் சொல்வதற்காகவும் (உன்ளுர்னா என்று கூறாமல்) ராயினா என்று கூறுகின்றனர். செவியுற்றோம், கீழ்ப்படிந்தோம் என்றும் ‘இஸ்மஃ', (கேட்பீராக) ‘உன்ளுர்னா' (எங்களைப் பார்ப்பீராக) என்றும் நிச்சயமாக அவர்கள் கூறி இருந்தால் (அது) அவர்களுக்கு மிக நன்றாகவும், மிக நேர்மையானதாகவும் இருந்திருக்கும். எனினும், அவர்களுடைய நிராகரிப்பின் காரணமாக அல்லாஹ் அவர்களைச் சபித்தான். ஆகவே, சிலரைத் தவிர (மற்றவர்கள்) நம்பிக்கைகொள்ள மாட்டார்கள்.