Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துன்னிஸாவு வசனம் ௧௧

Qur'an Surah An-Nisa Verse 11

ஸூரத்துன்னிஸாவு [௪]: ௧௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يُوْصِيْكُمُ اللّٰهُ فِيْٓ اَوْلَادِكُمْ لِلذَّكَرِ مِثْلُ حَظِّ الْاُنْثَيَيْنِ ۚ فَاِنْ كُنَّ نِسَاۤءً فَوْقَ اثْنَتَيْنِ فَلَهُنَّ ثُلُثَا مَا تَرَكَ ۚ وَاِنْ كَانَتْ وَاحِدَةً فَلَهَا النِّصْفُ ۗ وَلِاَبَوَيْهِ لِكُلِّ وَاحِدٍ مِّنْهُمَا السُّدُسُ مِمَّا تَرَكَ اِنْ كَانَ لَهٗ وَلَدٌ ۚ فَاِنْ لَّمْ يَكُنْ لَّهٗ وَلَدٌ وَّوَرِثَهٗٓ اَبَوٰهُ فَلِاُمِّهِ الثُّلُثُ ۚ فَاِنْ كَانَ لَهٗٓ اِخْوَةٌ فَلِاُمِّهِ السُّدُسُ مِنْۢ بَعْدِ وَصِيَّةٍ يُّوْصِيْ بِهَآ اَوْ دَيْنٍ ۗ اٰبَاۤؤُكُمْ وَاَبْنَاۤؤُكُمْۚ لَا تَدْرُوْنَ اَيُّهُمْ اَقْرَبُ لَكُمْ نَفْعًا ۗ فَرِيْضَةً مِّنَ اللّٰهِ ۗ اِنَّ اللّٰهَ كَانَ عَلِيْمًا حَكِيْمًا (النساء : ٤)

yūṣīkumu
يُوصِيكُمُ
Instructs you
உங்களுக்கு உபதேசிக்கிறான்
l-lahu
ٱللَّهُ
Allah
அல்லாஹ்
fī awlādikum
فِىٓ أَوْلَٰدِكُمْۖ
concerning your children
பிள்ளைகளில் /உங்கள்
lildhakari
لِلذَّكَرِ
for the male
ஆணுக்கு
mith'lu
مِثْلُ
like
போன்று
ḥaẓẓi l-unthayayni
حَظِّ ٱلْأُنثَيَيْنِۚ
(the) portion (of) two females
பங்கு/இருபெண்கள்
fa-in kunna
فَإِن كُنَّ
But if there are
அவர்கள் இருந்தால்
nisāan
نِسَآءً
(only) women
பெண்களாக
fawqa
فَوْقَ
more (than)
மேல்
ith'natayni
ٱثْنَتَيْنِ
two
இரு பெண்கள்
falahunna
فَلَهُنَّ
then for them
அவர்களுக்கு உண்டு
thuluthā
ثُلُثَا
two thirds
மூன்றில் இரண்டு
mā taraka
مَا تَرَكَۖ
(of) what he left
எது/விட்டுச் சென்றார்
wa-in kānat
وَإِن كَانَتْ
And if (there) is
இருந்தால்
wāḥidatan
وَٰحِدَةً
(only) one
ஒருத்தியாக
falahā
فَلَهَا
then for her
அவளுக்கு
l-niṣ'fu
ٱلنِّصْفُۚ
(is) half
பாதி
wali-abawayhi
وَلِأَبَوَيْهِ
And for his parents
இன்னும் அவருடைய தாய் தந்தைக்கு
likulli wāḥidin
لِكُلِّ وَٰحِدٍ
for each one
ஒவ்வொருவருக்கும்
min'humā
مِّنْهُمَا
of them
அவ்விருவரிலிருந்து
l-sudusu
ٱلسُّدُسُ
a sixth
ஆறில் ஒன்று
mimmā
مِمَّا
of what
எதிலிருந்து
taraka
تَرَكَ
(is) left
விட்டுச் சென்றார்
in kāna
إِن كَانَ
if is
இருந்தால்
lahu
لَهُۥ
for him
அவருக்கு
waladun
وَلَدٌۚ
a child
பிள்ளை
fa-in lam yakun
فَإِن لَّمْ يَكُن
But if not is
இல்லையெனில்
lahu
لَّهُۥ
for him
அவருக்கு
waladun
وَلَدٌ
any child
பிள்ளை
wawarithahu
وَوَرِثَهُۥٓ
and inherit[ed] him
இன்னும் அவருக்கு வாரிசானார்
abawāhu
أَبَوَاهُ
his parents
அவருடைய தாய் தந்தை
fali-ummihi
فَلِأُمِّهِ
then for his mother
அவருடைய தாய்க்கு
l-thuluthu
ٱلثُّلُثُۚ
(is) one third
மூன்றில் ஒன்று
fa-in kāna
فَإِن كَانَ
And if are
இருந்தால்
lahu
لَهُۥٓ
for him
அவருக்கு
ikh'watun
إِخْوَةٌ
brothers and sisters
சகோதரர்கள்
fali-ummihi
فَلِأُمِّهِ
then for his mother
அவருடைய தாய்க்கு
l-sudusu
ٱلسُّدُسُۚ
(is) the sixth
ஆறில் ஒன்று
min baʿdi
مِنۢ بَعْدِ
from after
பின்னர்
waṣiyyatin
وَصِيَّةٍ
any will
மரண சாசனம்
yūṣī
يُوصِى
he has made
மரண சாசனம் கூறுகிறார்
bihā
بِهَآ
[of which]
அதை
aw daynin
أَوْ دَيْنٍۗ
or any debt
அல்லது கடன்
ābāukum
ءَابَآؤُكُمْ
Your parents
உங்கள் தந்தைகள்
wa-abnāukum
وَأَبْنَآؤُكُمْ
and your children
பிள்ளைகள்/உங்கள்
lā tadrūna
لَا تَدْرُونَ
not you know
அறியமாட்டீர்கள்
ayyuhum
أَيُّهُمْ
which of them
அவர்களில் யார்
aqrabu
أَقْرَبُ
(is) nearer
நெருங்கியவர்
lakum
لَكُمْ
to you
உங்களுக்கு
nafʿan
نَفْعًاۚ
(in) benefit
பலனளிப்பதில்
farīḍatan
فَرِيضَةً
An obligation
சட்டமாகும்
mina
مِّنَ
from
இருந்து
l-lahi
ٱللَّهِۗ
Allah
அல்லாஹ்
inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்
kāna
كَانَ
is
இருக்கிறான்
ʿalīman
عَلِيمًا
All-Knowing
நன்கறிந்தவனாக
ḥakīman
حَكِيمًا
All-Wise
மகா ஞானவானாக

Transliteration:

Yooseekumul laahu feee awlaadikum liz zakari mislu hazzil unsayayn; fa in kunna nisaaa'an fawqas nataini falahunna suhusaa maa taraka wa in kaanat waahidatan falahan nisf; wa li abawaihi likulli waahidim minhumas sudusu mimmma taraka in kaana lahoo walad; fa il lam yakul lahowaladunw wa warisahooo abawaahu fali ummihis sulus; fa in kaana lahoo ikhwatun fali ummihis sudus; mim ba'di wasiyyatiny yoosee bihaaa aw dayn; aabaaa'ukum wa abnaaa'ukum laa tadroona aiyuhum aqrabu lakum naf'aa; fareedatam minallaah; innal laaha kaana 'Aleeman Hakeemaa (QS. an-Nisāʾ:11)

English Sahih International:

Allah instructs you concerning your children [i.e., their portions of inheritance]: for the male, what is equal to the share of two females. But if there are [only] daughters, two or more, for them is two thirds of one's estate. And if there is only one, for her is half. And for one's parents, to each one of them is a sixth of his estate if he left children. But if he had no children and the parents [alone] inherit from him, then for his mother is one third. And if he had brothers [and/or sisters], for his mother is a sixth, after any bequest he [may have] made or debt. Your parents or your children – you know not which of them are nearest to you in benefit. [These shares are] an obligation [imposed] by Allah. Indeed, Allah is ever Knowing and Wise. (QS. An-Nisa, Ayah ௧௧)

Abdul Hameed Baqavi:

உங்கள் சந்ததியில் (ஆணும், பெண்ணும் இருந்தால்) ஒரு ஆணுக்கு இரு பெண்களுக்குரியது போன்ற பாகம் உண்டென்று அல்லாஹ் உங்களுக்கு உபதேசிக்கின்றான். (உங்கள் சந்ததிகளாகிய) அவர்கள் (ஆணன்றிப்) பெண்களாகவே இருந்து அவர்கள் (இருவராகவும் அல்லது) இருவருக்கு அதிகமாகவும் இருந்தால் (எத்தனை பேர்கள் இருந்தபோதிலும்) அவர் (இறந்தவர்) விட்டுச் சென்ற (சொத்)தில் மூன்றில் இரண்டையே (சமமாக) அடைவார்கள். ஒரே பெண்ணாக இருந்தால் அவளுக்கு (இறந்தவர் விட்டுச் சென்ற பொருளில்) பாதி உண்டு. (உங்களில்) இறந்தவருக்கு சந்ததியுமிருந்து (தாய் தந்தையும் இருந்தால்) தாய், தந்தை ஒவ்வொருவருக்கும் (இறந்தவர்) விட்டுச்சென்ற (சொத்)தில் ஆறில் ஒரு பாகமுண்டு. இறந்தவருக்கு வாரிசு இல்லாமலிருந்து தாய், தந்தைகளே, வாரிசுக்காரர்களானால் தாய்க்கு மூன்றில் ஒரு பாகம்தான். (மற்ற இரு பாகமும் தந்தையைச் சாரும். இத்தகைய நிலைமையில் இறந்தவருக்கு பல) சகோதரர்கள் இருந்தால் தாய்க்கு ஆறில் ஒன்றுதான் (மீதமுள்ளது தந்தையைச் சாரும். ஒரு சகோதரன் அல்லது ஒரு சகோதரி மட்டும் இருந்தால் தாய்க்கு மூன்றில் ஒன்று உண்டு. இவை அனைத்தும் வஸீயத் எனும்) மரண சாசனத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னரே (மீதமுள்ள சொத்தில் பங்கு பிரிக்க வேண்டும்.) உங்கள் தந்தைகளோ அல்லது உங்கள் சந்ததிகளோ (இவர்களில்) உங்களுக்குப் பலனளிப்பதில் நெருங்கியவர்கள் யாரென்பதை நீங்கள் அறியமாட்டீர்கள். (ஆகவே இவை) அல்லாஹ்வினால் (உங்கள் மீது) விதிக்கப்பட்டுள்ளன. நிச்சயமாக அல்லாஹ் மிக அறிந்தவனும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். (ஆகையால் அவன் விதித்தபடி பங்கிட்டுக் கொள்ளுங்கள்.) (ஸூரத்துன்னிஸாவு, வசனம் ௧௧)

Jan Trust Foundation

உங்கள் மக்களில் ஓர் ஆணுக்கு இரண்டு பெண்களுக்குக் கிடைக்கும் பங்குபோன்றது கிடைக்கும் என்று அல்லாஹ் உங்களுக்கு உபதேசிக்கின்றான்; பெண்கள் மட்டும் இருந்து அவர்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டிருந்தால் அவர்களுக்கு இறந்து போனவர்விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு பாகம் கிடைக்கும். ஆனால் ஒரே பெண்ணாக இருந்தால் அவள் பங்கு பாதியாகும்; இறந்தவருக்கு குழந்தை இருக்குமானால் இறந்தவர் விட்டுச் சென்றதில் ஆறில் ஒரு பாகம் (அவரது) பெற்றோர் ஒவ்வொருவருக்கும் உண்டு. ஆனால் இறந்தவருக்கு குழந்தை இல்லாதிருந்து பெற்றோர் மாத்திரமே வாரிசாக இருந்தால் அவர் தாய்க்கு மூன்றில் ஒரு பாகம் (மீதி தந்தைக்கு உரியதாகும்); இறந்தவருக்கு சகோதரர்கள் இருந்தால் அவர் தாய்க்கு ஆறில் ஒரு பாகம் தான் (மீதி தந்தைக்கு சேரும்). இவ்வாறு பிரித்துக் கொடுப்பது அவர் செய்துள்ள மரண சாஸனத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னர்தான்; உங்கள் பெற்றோர்களும், குழந்தைகளும் - இவர்களில் யார் நன்மை பயப்பதில் உங்களுக்கு நெருக்கமாக இருப்பவர்கள் என்று நீங்கள் அறிய மாட்டீர்கள்; ஆகையினால் (இந்த பாகப்பிரிவினை) அல்லாஹ்விடமிருந்து வந்த கட்டளையாகும்; நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவனாகவும் மிக்க ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

உங்கள் பிள்ளைகளில் (சொத்து பங்கிடுதல் குறித்து) அல்லாஹ் உங்களுக்கு உபதேசிக்கிறான். ஆணுக்கு இரு பெண்களின் பங்கு போன்று (பாகம்) உண்டு. (ஆண் பிள்ளைகள் இன்றி) இரண்டிற்கும் மேலான பெண்களாக இருந்தால் (தாய் தந்தை) விட்டுச் சென்ற(சொத்)தில் மூன்றில் இரண்டு (பங்குகள்) அவர்களுக்கு உண்டு. (பிள்ளை) ஒருத்தியாக இருந்தால் அவளுக்கு (சொத்தில்) பாதி (பங்கு)உண்டு. (இறந்த) அவருக்கு பிள்ளை இருந்தால் அவருடைய தாய், தந்தைக்கு (இறந்தவர்) விட்டுச் சென்ற (சொத்)தில் ஆறில் ஒன்று உண்டு. (இறந்த) அவருக்கு பிள்ளை இல்லாமல் அவருக்கு அவருடைய தாய், தந்தை வாரிசானால் அவருடைய தாய்க்கு மூன்றில் ஒன்று உண்டு. (இறந்த) அவருக்கு சகோதரர்கள் இருந்தால் அவருடைய தாய்க்கு ஆறில் ஒன்று உண்டு. (ஒரு சகோதரன் அல்லது ஒரு சகோதரி மட்டும் இருந்தால் தாய்க்கு மூன்றில் ஒன்று உண்டு.) (இவை அனைத்தும் வஸீயத் எனும்) அவர் கூறும் மரண சாசனம், அல்லது கடனுக்குப் பின்னர் (கொடுக்கப்படும்). உங்கள் தந்தைகள் இன்னும் உங்கள் ஆண் பிள்ளைகளில் யார் உங்களுக்குப் பலனளிப்பதில் மிக நெருங்கியவர் என்பதை அறியமாட்டீர்கள். (இவை) அல்லாஹ்வின் சட்டமாக(வும் நிர்ணயிக்கப்பட்ட பங்காகவும் ஆக்கப்பட்டுள்ளன). நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவனாக, மகா ஞானவானாக இருக்கிறான்.