Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௧௭௯

Qur'an Surah Ali 'Imran Verse 179

ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௧௭௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

مَا كَانَ اللّٰهُ لِيَذَرَ الْمُؤْمِنِيْنَ عَلٰى مَآ اَنْتُمْ عَلَيْهِ حَتّٰى يَمِيْزَ الْخَبِيْثَ مِنَ الطَّيِّبِ ۗ وَمَا كَانَ اللّٰهُ لِيُطْلِعَكُمْ عَلَى الْغَيْبِ وَلٰكِنَّ اللّٰهَ يَجْتَبِيْ مِنْ رُّسُلِهٖ مَنْ يَّشَاۤءُ ۖ فَاٰمِنُوْا بِاللّٰهِ وَرُسُلِهٖ ۚ وَاِنْ تُؤْمِنُوْا وَتَتَّقُوْا فَلَكُمْ اَجْرٌ عَظِيْمٌ (آل عمران : ٣)

mā kāna
مَّا كَانَ
Not is
இல்லை
l-lahu
ٱللَّهُ
Allah
அல்லாஹ்
liyadhara
لِيَذَرَ
to leave
விட்டுவிடுபவனாக
l-mu'minīna
ٱلْمُؤْمِنِينَ
the believers
நம்பிக்கையாளர்களை
ʿalā
عَلَىٰ
on
மீது
mā antum
مَآ أَنتُمْ
what you (are)
எது/நீங்கள்
ʿalayhi
عَلَيْهِ
in [it]
அதன் மீது
ḥattā
حَتَّىٰ
until
இறுதியாக
yamīza
يَمِيزَ
He separates
பிரிப்பான்
l-khabītha
ٱلْخَبِيثَ
the evil
தீயவர்(களை)
mina
مِنَ
from
இருந்து
l-ṭayibi
ٱلطَّيِّبِۗ
the good
நல்லவர்(கள்)
wamā kāna
وَمَا كَانَ
And not is
இன்னும் இல்லை
l-lahu
ٱللَّهُ
Allah
அல்லாஹ்
liyuṭ'liʿakum
لِيُطْلِعَكُمْ
to inform you
அறிவிப்பவனாக/உங்களுக்கு
ʿalā l-ghaybi
عَلَى ٱلْغَيْبِ
about the unseen
மறைவானவற்றை
walākinna
وَلَٰكِنَّ
[and] but
எனினும்
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்
yajtabī
يَجْتَبِى
chooses
தேர்ந்தெடுக்கிறான்
min rusulihi
مِن رُّسُلِهِۦ
from His Messengers
தன் தூதர்களில்
man yashāu
مَن يَشَآءُۖ
whom He wills
எவரை/நாடுகிறான்
faāminū
فَـَٔامِنُوا۟
so believe
ஆகவே நம்பிக்கை கொள்ளுங்கள்
bil-lahi
بِٱللَّهِ
in Allah
அல்லாஹ்வை
warusulihi
وَرُسُلِهِۦۚ
and His Messengers
இன்னும் அவனுடைய தூதர்களை
wa-in tu'minū
وَإِن تُؤْمِنُوا۟
and if you believe
நீங்கள் நம்பிக்கை கொண்டால்
watattaqū
وَتَتَّقُوا۟
and fear (Allah)
இன்னும் அஞ்சினால்
falakum
فَلَكُمْ
then for you
உங்களுக்கு
ajrun
أَجْرٌ
(is a) reward
கூலி
ʿaẓīmun
عَظِيمٌ
great
மகத்தானது

Transliteration:

Maa kaanal laahu liyazaral mu'mineena 'alaa maaa antum 'alaihi hattaa yameezal khabeesa minat taiyib; wa maa kaanal laahu liyutli'akum 'alal ghaibi wa laakinnal laaha yajtabee mir Rusulihii mai yashaaa'u fa aaminoo billaahi wa Rusulih; wa in tu 'minoo wa tattaqoo falakum ajrun 'azeem (QS. ʾĀl ʿImrān:179)

English Sahih International:

Allah would not leave the believers in that [state] you are in [presently] until He separates the evil from the good. Nor would Allah reveal to you the unseen. But [instead], Allah chooses of His messengers whom He wills, so believe in Allah and His messengers. And if you believe and fear Him, then for you is a great reward. (QS. Ali 'Imran, Ayah ௧௭௯)

Abdul Hameed Baqavi:

(நயவஞ்சகர்களே!) நீங்கள் இருக்கும் இந்த நிலைமையில் நல்லவர்கள் இன்னாரென்றும் தீயவர்கள் இன்னாரென்றும் பிரித்தறிவிக்கும் வரையில் (உங்களுடன் கலந்திருக்க) அல்லாஹ் (நம்பிக்கையாளர்களை) விட்டுவைக்க மாட்டான். அன்றி மறைவான வற்றையும் அல்லாஹ் உங்களுக்கு அறிவிக்க மாட்டான். எனினும் தன் தூதர்களில் தான் விரும்பியவர்களை (இதனை அறிவிக்க) அல்லாஹ் தேர்ந்தெடுத்துக் கொள்வான். ஆகவே, அல்லாஹ்வையும் அவனுடைய தூதர்களையும் நம்பிக்கை கொள்ளுங்கள். நீங்கள் (உண்மையாகவே அல்லாஹ்வை) நம்பிக்கை கொண்டு (அவனுக்குப்) பயந்து (நடந்து) கொண்டால் உங்களுக்கு மகத்தான (நற்)கூலி உண்டு. (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௧௭௯)

Jan Trust Foundation

(காஃபிர்களே!) தீயவர்களை நல்லவர்களைவிட்டும் பிரித்தறிவிக்கும் வரையில் முஃமின்களை நீங்கள் இருக்கும் நிலையில் அல்லாஹ் விட்டு வைக்க (நாட)வில்லை; இன்னும், அல்லாஹ் உங்களுக்கு மறைவானவற்றை அறிவித்து வைப்பவனாகவும் இல்லை; ஏனெனில் (இவ்வாறு அறிவிப்பதற்கு) அல்லாஹ் தான் நாடியவரைத் தன் தூதர்களிலிருந்து தேர்ந்தெடுக்கிறான். ஆகவே அல்லாஹ்வின் மீதும், அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொள்ளுங்கள்; நீங்கள் நம்பிக்கை கொண்டு பயபக்தியுடன் நடப்பீர்களாயின் உங்களுக்கு மகத்தான நற்கூலியுண்டு.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நயவஞ்சகர்களே!) இறுதியாக நல்லவர்களிலிருந்து, தீயவர்களை பிரிப்பான். நீங்கள் இருப்பதில் நம்பிக்கையாளர்களை அல்லாஹ் விட்டு விடுபவனாக இல்லை. மறைவானவற்றை அல்லாஹ் உங்களுக்கு அறிவிப்பவனாகவும் இல்லை. எனினும் தன் தூதர்களில் தான் நாடியவரை அல்லாஹ் தேர்ந்தெடுக்கிறான். ஆகவே, அல்லாஹ்வையும் அவனுடைய தூதர்களையும் நம்பிக்கை கொள்ளுங்கள். நீங்கள் நம்பிக்கை கொண்டால், அல்லாஹ்வை அஞ்சினால் உங்களுக்கு மகத்தான கூலி உண்டு.