Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௧௫௩

Qur'an Surah Ali 'Imran Verse 153

ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௧௫௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

۞ اِذْ تُصْعِدُوْنَ وَلَا تَلْوٗنَ عَلٰٓى اَحَدٍ وَّالرَّسُوْلُ يَدْعُوْكُمْ فِيْٓ اُخْرٰىكُمْ فَاَثَابَكُمْ غَمًّا ۢبِغَمٍّ لِّكَيْلَا تَحْزَنُوْا عَلٰى مَا فَاتَكُمْ وَلَا مَآ اَصَابَكُمْ ۗ وَاللّٰهُ خَبِيْرٌ ۢبِمَا تَعْمَلُوْنَ (آل عمران : ٣)

idh tuṣ'ʿidūna
إِذْ تُصْعِدُونَ
When you were running uphill
சமயம்/வேகமாக ஓடுகிறீர்கள்
walā talwūna
وَلَا تَلْوُۥنَ
and not casting a glance
நீங்கள் எதிர்பார்க்க மாட்டீர்கள்
ʿalā aḥadin
عَلَىٰٓ أَحَدٍ
on anyone
ஒருவரையும்
wal-rasūlu
وَٱلرَّسُولُ
while the Messenger
தூதர்
yadʿūkum
يَدْعُوكُمْ
was calling you
உங்களை அழைக்கிறார்
fī ukh'rākum
فِىٓ أُخْرَىٰكُمْ
[in] (from) behind you
உங்களுக்குஇறுதியில்
fa-athābakum
فَأَثَٰبَكُمْ
So (He) repaid you
உங்களுக்கு கூலியாக்கினான்
ghamman
غَمًّۢا
(with) distress
துயரத்தை
bighammin
بِغَمٍّ
on distress
துயரத்தின்காரணமாக
likaylā taḥzanū
لِّكَيْلَا تَحْزَنُوا۟
so that not you grieve
நீங்கள் துக்கப்படாமல் இருப்பதற்காகவே
ʿalā mā
عَلَىٰ مَا
over what
மீது/எது
fātakum
فَاتَكُمْ
escaped you
உங்களுக்கு தவறியது
walā mā aṣābakum
وَلَا مَآ أَصَٰبَكُمْۗ
and not what (had) befallen you
இன்னும் உங்களுக்கு ஏற்பட்டது
wal-lahu
وَٱللَّهُ
And Allah
அல்லாஹ்
khabīrun
خَبِيرٌۢ
(is) All-Aware
ஆழ்ந்தறிந்தவன்
bimā taʿmalūna
بِمَا تَعْمَلُونَ
of what you do
நீங்கள் செய்பவற்றை

Transliteration:

Iz tus'idoona wa laa talwoona 'alaaa ahadinw war Rasoolu yad'ookum feee ukhraakum fa asaabakum ghammam bighammil likailaa tahzanoo 'alaa maa faatakum wa laa maaa asaabakum; wallaahu khabeerum bimaa ta'maloon (QS. ʾĀl ʿImrān:153)

English Sahih International:

[Remember] when you [fled and] climbed [the mountain] without looking aside at anyone while the Messenger was calling you from behind. So Allah repaid you with distress upon distress so you would not grieve for that which had escaped you [of victory and spoils of war] or [for] that which had befallen you [of injury and death]. And Allah is [fully] Aware of what you do. (QS. Ali 'Imran, Ayah ௧௫௩)

Abdul Hameed Baqavi:

(உஹுத் போரில் அல்லாஹ்வுடைய) தூதர் உங்களுக்கு பின்னால் இருந்தவாறு "(என்னிடம் வாருங்கள்!) வாருங்கள்" என்று உங்களை(க் கூவி) அழைத்துக் கொண்டிருந்த சமயத்தில் நீங்கள் ஒருவரையுமே திரும்பிப்பாராது வெருண்டோடிக் கொண்டிருந்ததையும் சிந்தித்துப் பாருங்கள். (நம் தூதருக்கும் நீங்கள் உண்டுபண்ணிய) இத்துயரத்தின் காரணமாக உங்களுக்கும் (தோல்வியின்) துயரத்தையே பிரதிபலனாகக் கொடுத்தான். ஏனென்றால், உங்களிடமிருந்து (யாதொரு பொருள்) தவறிவிட்டதைப் பற்றியும், உங்களுக்கு ஏற்பட்ட (நஷ்டத்)தைப் பற்றியும் நீங்கள் துயரத்தில் ஆழ்ந்துவிடாமல் இருப்பதற்(குரிய சகிப்புத் தன்மையை உங்களுக்கு உண்டுபண்ணுவதற்)காகவே (இத்தகைய கஷ்டத்தை உங்களுக்குக் கொடுத்தான்.) நீங்கள் செய்பவற்றையெல்லாம் அல்லாஹ் நன்கறிந்தே இருக்கின்றான். (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௧௫௩)

Jan Trust Foundation

(நினைவு கூறுங்கள்! உஹது களத்தில்) உங்கள் பின்னால் இருந்து இறைதூதர் உங்களை அழைத்துக் கொண்டிருக்க, நீங்கள் எவரையும் திரும்பிப் பார்க்காமல் மேட்டின்மேல் ஏறிக் கொள்ள ஓடிக் கொண்டிருந்தீர்கள்; ஆகவே (இவ்வாறு இறை தூதருக்கு நீங்கள் கொடுத்த துக்கத்தின்) பலனாக இறைவன் துக்கத்தின்மேல் துக்கத்தை உங்களுக்குக் கொடுத்தான்; ஏனெனில் உங்களுக்குக் கிடைக்க வேண்டியது தவறி விட்டாலோ, உங்களுக்குச் சோதனைகள் ஏற்பட்டாலோ நீங்கள் (சோர்வும்) கவலையும் அடையாது (பொறுமையுடன் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்); இன்னும், அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கு அறிபவனாக இருக்கின்றான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(உஹுத் போரில் அல்லாஹ்வுடைய) தூதர் உங்களுக்கு இறுதியில் இருந்தவாறு உங்களை அழைக்க நீங்கள் ஒருவரையும் எதிர்பார்க்காமல் வேகமாக ஓடிய சமயத்தை நினைவு கூறுங்கள். (தூதருக்கு நீங்கள் கொடுத்த) துயரத்தின் காரணமாக உங்களுக்கு(ம் தோல்வியின்) துயரத்தையே (அல்லாஹ்) கூலியாக்கினான். (காரணம், வெற்றியில்) உங்களுக்கு தவறியதின் மீதும், உங்களுக்கு ஏற்பட்ட (நஷ்டத்)தின் மீதும் நீங்கள் துக்கப்படாமல் இருப்பதற்காகவே ஆகும். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் ஆழ்ந்தறிந்தவன்.