Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௧௯௨

Qur'an Surah Al-Baqarah Verse 192

ஸூரத்துல் பகரா [௨]: ௧௯௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَاِنِ انْتَهَوْا فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ (البقرة : ٢)

fa-ini intahaw
فَإِنِ ٱنتَهَوْا۟
Then if they cease
அவர்கள் விலகிக் கொண்டால்
fa-inna
فَإِنَّ
then indeed
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்
ghafūrun
غَفُورٌ
(is) Oft-Forgiving
மகா மன்னிப்பாளன்
raḥīmun
رَّحِيمٌ
Most Merciful
மகா கருணையாளன்

Transliteration:

Fa ini-ntahaw fa innal laaha Ghafoorur Raheem (QS. al-Baq̈arah:192)

English Sahih International:

And if they cease, then indeed, Allah is Forgiving and Merciful. (QS. Al-Baqarah, Ayah ௧௯௨)

Abdul Hameed Baqavi:

(இதன்) பின்னும் அவர்கள் (உங்களை எதிர்த்து போர் புரியாது) விலகிக்கொண்டால் (நீங்கள் அவர்களை வெட்டாதீர்கள்.) நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையவனாகவும் இருக்கின்றான். (ஸூரத்துல் பகரா, வசனம் ௧௯௨)

Jan Trust Foundation

எனினும், அவர்கள் (அவ்வாறு செய்வதில் நின்றும்) ஒதுங்கி விடுவார்களாயின் (நீங்கள் அவர்களைக் கொல்லாதீர்கள்); நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்போனாகவும், கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் விலகிக் கொண்டால் (விட்டுவிடுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன் ஆவான்.