Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௧௨௩

Qur'an Surah Al-Baqarah Verse 123

ஸூரத்துல் பகரா [௨]: ௧௨௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاتَّقُوْا يَوْمًا لَّا تَجْزِيْ نَفْسٌ عَنْ نَّفْسٍ شَيْـًٔا وَّلَا يُقْبَلُ مِنْهَا عَدْلٌ وَّلَا تَنْفَعُهَا شَفَاعَةٌ وَّلَا هُمْ يُنْصَرُوْنَ (البقرة : ٢)

wa-ittaqū
وَٱتَّقُوا۟
And fear
இன்னும் அஞ்சுங்கள்
yawman
يَوْمًا
a day
ஒரு நாளை
lā tajzī
لَّا تَجْزِى
not will avail
பலனளிக்காது
nafsun
نَفْسٌ
a soul
ஓர் ஆன்மா
ʿan nafsin
عَن نَّفْسٍ
(of) (another) soul
ஓர் ஆன்மாவிற்கு
shayan walā
شَيْـًٔا وَلَا
anything and not
எதையும்
yuq'balu
يُقْبَلُ
will be accepted
இன்னும் ஏற்கப்படாது
min'hā
مِنْهَا
from it
அதனிடமிருந்து
ʿadlun
عَدْلٌ
any compensation
பரிகாரம்
walā tanfaʿuhā
وَلَا تَنفَعُهَا
and not will benefit it
இன்னும் அதற்குப் பலனளிக்காது
shafāʿatun
شَفَٰعَةٌ
any intercession
பரிந்துரை
walā hum yunṣarūna
وَلَا هُمْ يُنصَرُونَ
and not they will be helped
இன்னும் அவர்கள் உதவி செய்யப்பட மாட்டார்கள்

Transliteration:

Wattaqoo yawmal laa tajzee nafsun 'an nafsin shai 'anw wa laa yuqbalu minhaa 'adlunw wa laa tanfa'uhaa shafaa 'atunw wa laa hum yunsaroon (QS. al-Baq̈arah:123)

English Sahih International:

And fear a Day when no soul will suffice for another soul at all, and no compensation will be accepted from it, nor will any intercession benefit it, nor will they be aided. (QS. Al-Baqarah, Ayah ௧௨௩)

Abdul Hameed Baqavi:

அன்றி, ஒரு நாளைப் பற்றியும் பயந்து கொள்ளுங்கள். அந்நாளில் ஓர் ஆத்மா மற்றொரு ஆத்மாவுக்கு எவ்வித பயனுமளிக்காது. அதனிடமிருந்து யாதொரு பரிகாரமும் ஏற்கப்பட மாட்டாது; எவ்வித பரிந்துரையும் அதற்குப் பயன் தராது. அன்றி, அவர்கள் (யாராலும் எவ்வித) உதவியும் செய்யப்பட மாட்டார்கள். (ஸூரத்துல் பகரா, வசனம் ௧௨௩)

Jan Trust Foundation

இன்னும், (வரப் போகும்) அந்நாளிலிருந்து, உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்; அன்று ஓர் ஆத்மா பிறிதோர் ஆத்மாவுக்கு உதவி செய்ய இயலாது; அதனிடமிருந்து (அதன் பாவங்களுக்குப் பரிகாரமாக) எந்த நஷ்ட ஈடும் ஒப்புக்கொள்ளப்பட மாட்டாது; எந்த சிபாரிசும் அதற்கு பலனளிக்காது; இவர்கள்(எவர் மூலமாகவும் எந்த) உதவியும் செய்யப்பட மாட்டார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இன்னும், ஒரு நாளை அஞ்சுங்கள்; (அந்நாளில்) ஓர் ஆன்மா மற்றோர் ஆன்மாவிற்கு எதையும் பலனளிக்காது; அதனிடமிருந்து பரிகாரம் ஏற்கப்படாது; பரிந்துரை அதற்குப் பலனளிக்காது; அவர்கள் உதவி செய்யப்பட மாட்டார்கள்.