Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஹ்ஃபு வசனம் ௧௯

Qur'an Surah Al-Kahf Verse 19

ஸூரத்துல் கஹ்ஃபு [௧௮]: ௧௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَكَذٰلِكَ بَعَثْنٰهُمْ لِيَتَسَاۤءَلُوْا بَيْنَهُمْۗ قَالَ قَاۤىِٕلٌ مِّنْهُمْ كَمْ لَبِثْتُمْۗ قَالُوْا لَبِثْنَا يَوْمًا اَوْ بَعْضَ يَوْمٍۗ قَالُوْا رَبُّكُمْ اَعْلَمُ بِمَا لَبِثْتُمْۗ فَابْعَثُوْٓا اَحَدَكُمْ بِوَرِقِكُمْ هٰذِهٖٓ اِلَى الْمَدِيْنَةِ فَلْيَنْظُرْ اَيُّهَآ اَزْكٰى طَعَامًا فَلْيَأْتِكُمْ بِرِزْقٍ مِّنْهُ وَلْيَتَلَطَّفْ وَلَا يُشْعِرَنَّ بِكُمْ اَحَدًا (الكهف : ١٨)

wakadhālika
وَكَذَٰلِكَ
And similarly
அவ்வாறே
baʿathnāhum
بَعَثْنَٰهُمْ
We raised them
எழுப்பினோம் / அவர்களை
liyatasāalū
لِيَتَسَآءَلُوا۟
that they might question
அவர்கள் கேட்டுக் கொள்வதற்காக
baynahum
بَيْنَهُمْۚ
among them
தங்களுக்கு மத்தியில்
qāla
قَالَ
Said
கூறினார்
qāilun
قَآئِلٌ
a speaker
கூறுபவர் ஒருவர்
min'hum
مِّنْهُمْ
among them
அவர்களில்
kam
كَمْ
"How long
எத்தனை
labith'tum
لَبِثْتُمْۖ
have you remained?"
தங்கினீர்கள்
qālū
قَالُوا۟
They said
கூறினர்
labith'nā
لَبِثْنَا
"We have remained
தங்கினோம்
yawman
يَوْمًا
a day
ஒரு நாள்
aw
أَوْ
or
அல்லது
baʿḍa yawmin
بَعْضَ يَوْمٍۚ
a part (of) a day"
ஒரு நாளின் சில பகுதி
qālū
قَالُوا۟
They said
கூறினர்
rabbukum
رَبُّكُمْ
"Your Lord
உங்கள் இறைவன்
aʿlamu
أَعْلَمُ
knows best
மிக அறிந்தவன்
bimā labith'tum
بِمَا لَبِثْتُمْ
how long you have remained
நீங்கள் தங்கியதை
fa-ib'ʿathū
فَٱبْعَثُوٓا۟
So send
ஆகவே அனுப்புங்கள்
aḥadakum
أَحَدَكُم
one of you
உங்களில் ஒருவரை
biwariqikum
بِوَرِقِكُمْ
with this silver coin of yours
உங்கள் வெள்ளி நாணயத்தைக் கொண்டு
hādhihi
هَٰذِهِۦٓ
with this silver coin of yours
இந்த
ilā l-madīnati
إِلَى ٱلْمَدِينَةِ
to the city
பட்டணத்திற்கு
falyanẓur
فَلْيَنظُرْ
and let him see
அவர் கவனிக்கட்டும்
ayyuhā
أَيُّهَآ
which is
அதில் யார்?
azkā
أَزْكَىٰ
the purest
மிக சுத்தமானவர்
ṭaʿāman
طَعَامًا
food
உணவால்
falyatikum
فَلْيَأْتِكُم
and let him bring to you
வரட்டும்/உங்களுக்கு
biriz'qin
بِرِزْقٍ
provision
உணவைக் கொண்டு
min'hu
مِّنْهُ
from it
அவரிடமிருந்து
walyatalaṭṭaf
وَلْيَتَلَطَّفْ
and let him be cautious
இன்னும் அவர் மதிநுட்பமாக நடக்கட்டும்
walā yush'ʿiranna
وَلَا يُشْعِرَنَّ
And let not be aware And let not be aware
இன்னும் உணர்த்தி விட வேண்டாம்
bikum
بِكُمْ
about you
உங்களைப் பற்றி
aḥadan
أَحَدًا
anyone"
ஒருவருக்கும்

Transliteration:

Wa kazaalika ba'asnaahum liyatasaaa'aloo bainahum; qaala qaaa'ilum minhum kam labistum qaaloo labisnaa yawman aw ba'da yawm; qaaloo Rabbukum a'almu bimaa labistum fab'asooo ahadakum biwariqikum haazihee ilal madeenati falyanzur ayyuhaaa azkaa ta'aaman falyaatikum birizqim minhu walyatalattaf wa laa yush'iranna bikum ahadaa (QS. al-Kahf:19)

English Sahih International:

And similarly, We awakened them that they might question one another. Said a speaker from among them, "How long have you remained [here]?" They said, "We have remained a day or part of a day." They said, "Your Lord is most knowing of how long you remained. So send one of you with this silver coin of yours to the city and let him look to which is the best of food and bring you provision from it and let him be cautious. And let no one be aware of you. (QS. Al-Kahf, Ayah ௧௯)

Abdul Hameed Baqavi:

அவர்கள் (அதில் எவ்வளவு காலம் இருந்தனர் என்பதைத்) தங்களுக்குள் கேட்டறிந்து கொள்ளும் பொருட்டு இவ்வாறு (நித்திரை செய்யும்) அவர்களை நாம் எழுப்பினோம். அவர்களில் ஒருவர் (மற்றவர்களை நோக்கி) "நீங்கள் எவ்வளவு நேரம் நித்திரையில் இருந்தீர்கள்?" என்று கேட்டார். அதற்கு அவர்களில் சிலர் "ஒரு நாள் அல்லது ஒரு நாளில் சிறிது பாகம் (இருந்திருப்போம்)" என்று கூறினர். (மற்றவர்கள்) "நீங்கள் நித்திரையிலிருந்த காலத்தை உங்கள் இறைவன்தான் நன்கறிவான்" என்று கூறி "உங்களில் ஒருவரிடம் இந்த (வெள்ளி) நாணயத்தைக் கொடுத்து அவரைப் பட்டினத்திற்கு அனுப்பி வையுங்கள். அவர் (அங்கு சென்று) நல்ல உணவுப் பொருள் எது (எங்கிருக்கின்றது) என்பதைத் தேடிப்பார்த்து அதில் சிறிது வாங்கி வரவும். எனினும், உங்களை(ப் பட்டினத்திலிருப்பவர்களில்) ஒருவரும் அறிந்து கொள்ளாதவாறு மிக்க எச்சரிக்கையாகவே அவர் நடந்து கொள்ளவும். (ஸூரத்துல் கஹ்ஃபு, வசனம் ௧௯)

Jan Trust Foundation

இன்னும் அவர்களிடையே ஒருவரையொருவர் கேட்டுக் கொள்வதற்காக நாம் அவர்களை இவ்வாறு எழுப்பினோம்; அவர்களிலிருந்து சொல்பவர் (ஒருவர்) “நீங்கள் எவ்வளவு நேரம் (நித்திரையில்) இருந்தீர்கள்?” எனக் கேட்டார்; “ஒரு நாள் அல்லது ஒரு நாளின் சிறிது பாகம் தங்கியிருந்தோம்” எனக் கூறினார்கள்; (மற்றவர்கள்) “நீங்கள் (நித்திரையில்) இருந்த காலத்தை உங்கள் இறைவன்தான் நன்கு அறிந்தவன்; ஆகவே, உங்களில் ஒருவரை இந்த வெள்ளிக் காசுடன் பட்டணத்திற்கு அனுப்புங்கள்; அவர்கள் சுத்தமான ஆகாரம் எது என்பதை நன்கு கவனித்து, அதிலிருந்து ஆகாரத்தை உங்களுக்காகக் கொண்டு வரட்டும்; மேலும் அவர் எச்சரிக்கையாக இருக்கட்டும்; உங்களைப் பற்றி எவருக்கும் அவர் அறிவித்து விட வேண்டாம் (என்றனர்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் தங்களுக்கு மத்தியில் கேட்டுக் கொள்வதற்காக, (நீண்ட காலமாகியும் எவ்வித மாற்றமும் அவர்களில் ஏற்படாதவாறு அவர்களை பாதுகாத்த) அவ்வாறே அவர்களை (தூக்கத்திலிருந்து) எழுப்பினோம். “எத்தனை(க் காலம்) தங்கினீர்கள் என்று அவர்களில் ஒருவர் கூறினார். (மற்றவர்கள்) கூறினர் “ஒரு நாள் அல்லது ஒரு நாளின் சில பகுதி தங்கினோம்”“உங்கள் இறைவன் நீங்கள் தங்கியதை மிக அறிந்தவன். ஆகவே, உங்களில் ஒருவரை இந்த உங்கள் வெள்ளி நாணயத்தைக் கொண்டு பட்டணத்திற்கு அனுப்புங்கள், அவர் அதில் மிக சுத்தமான (-ஹலாலான) உணவுடையவர் யார் என்று கவனித்து அவரிடமிருந்து உங்களுக்கு ஓர் உணவைக் கொண்டு வரட்டும், அவர் மதிநுட்பமாக நடக்கட்டும், உங்களைப் பற்றி (எவர் ஒருவருக்கும்) உணர்த்திவிட வேண்டாம்”எனக் கூறினர்.