Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நஹ்ல் வசனம் ௧௧௧

Qur'an Surah An-Nahl Verse 111

ஸூரத்துந் நஹ்ல் [௧௬]: ௧௧௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

۞ يَوْمَ تَأْتِيْ كُلُّ نَفْسٍ تُجَادِلُ عَنْ نَّفْسِهَا وَتُوَفّٰى كُلُّ نَفْسٍ مَّا عَمِلَتْ وَهُمْ لَا يُظْلَمُوْنَ (النحل : ١٦)

yawma
يَوْمَ
(On) the Day
நாளில்
tatī
تَأْتِى
(when) will come
வரும்
kullu
كُلُّ
every
ஒவ்வொரு
nafsin
نَفْسٍ
soul
ஆன்மா
tujādilu
تُجَٰدِلُ
pleading
தர்க்கித்ததாக
ʿan nafsihā
عَن نَّفْسِهَا
for itself
தன்னைப் பற்றி
watuwaffā
وَتُوَفَّىٰ
and will be paid in full
இன்னும் முழு கூலி கொடுக்கப்படும்
kullu nafsin
كُلُّ نَفْسٍ
every soul
ஒவ்வொரு/ஆன்மா
mā ʿamilat
مَّا عَمِلَتْ
what it did
எதற்கு/செய்தது
wahum lā yuẓ'lamūna
وَهُمْ لَا يُظْلَمُونَ
and they (will) not be wronged
இன்னும் அவர்கள் அநீதியிழைக்கப்பட மாட்டார்கள்

Transliteration:

Yawma taatee kullu nafsin tujaadilu 'an nafsihaa wa tuwaffaa kullu nafsim maa 'amilat wa hum laa yuzlamoon (QS. an-Naḥl:111)

English Sahih International:

On the Day when every soul will come disputing [i.e., pleading] for itself, and every soul will be fully compensated for what it did, and they will not be wronged [i.e., treated unjustly]. (QS. An-Nahl, Ayah ௧௧௧)

Abdul Hameed Baqavi:

ஒவ்வொரு ஆத்மாவும் (எவரையும் கவனியாது) தன்னைப் பற்றி (மட்டும்) பேசுவதற்காக வரும் (நாளை நபியே! நீங்கள் அவர்களுக்கு ஞாபகமூட்டுங்கள். அந்)நாளில் ஒவ்வொரு ஆத்மாவுக்கும் அதன் செயலுக்குரிய கூலி முழுமையாகக் கொடுக்கப்படும். (அதனைக் கூட்டியோ குறைத்தோ எவ்வகையிலும்) அவர்கள் அநியாயம் செய்யப்படமாட்டார்கள். (ஸூரத்துந் நஹ்ல், வசனம் ௧௧௧)

Jan Trust Foundation

ஒவ்வோர் ஆத்மாவும் தனக்காக வாதாட முற்படும் அந்நாளில், ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அது செய்(து வந்)ததற்குரிய கூலி முழுமையாகக் கொடுக்கப்படும் - அவர்கள் அநியாயம் செய்யப்படவும் மாட்டார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஒவ்வொரு ஆன்மாவும் தன்னைப் பற்றி தர்க்கித்ததாகவே அது வருகிற நாளில் (அல்லாஹ் அந்த தியாகிகளை மன்னிப்பான்). (அந்நாளில்) ஒவ்வொரு ஆன்மாவும் தான் செய்தவற்றுக்கு முழு கூலி கொடுக்கப்படும். அவர்கள் அநீதியிழைக்கப்பட மாட்டார்கள்.