Skip to content

ஸூரா ஸூரத்துந் நஹ்ல் - Page: 11

An-Nahl

(an-Naḥl)

௧௦௧

وَاِذَا بَدَّلْنَآ اٰيَةً مَّكَانَ اٰيَةٍ ۙوَّاللّٰهُ اَعْلَمُ بِمَا يُنَزِّلُ قَالُوْٓا اِنَّمَآ اَنْتَ مُفْتَرٍۗ بَلْ اَكْثَرُهُمْ لَا يَعْلَمُوْنَ ١٠١

wa-idhā baddalnā
وَإِذَا بَدَّلْنَآ
நாம் மாற்றினால்
āyatan
ءَايَةً
ஒரு வசனத்தை
makāna
مَّكَانَ
இடத்தில்
āyatin
ءَايَةٍۙ
மற்றொரு வசனத்தின்
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
aʿlamu
أَعْلَمُ
மிக அறிந்தவன்
bimā yunazzilu
بِمَا يُنَزِّلُ
தான் இறக்குவதை
qālū
قَالُوٓا۟
கூறுகின்றனர்
innamā anta
إِنَّمَآ أَنتَ
நீரெல்லாம்
muf'tarin bal
مُفْتَرٍۭۚ بَلْ
இட்டுக்கட்டுபவர்/மாறாக
aktharuhum
أَكْثَرُهُمْ
அதிகமானவர்(கள்)/ இவர்களில்
lā yaʿlamūna
لَا يَعْلَمُونَ
அறியமாட்டார்கள்
(நபியே!) நாம் ஒரு வசனத்தை மற்றொரு வசனத்தைக் கொண்டு மாற்றினால் இவர்கள் (உங்களை நோக்கி) "நிச்சயமாக நீங்கள் பொய்யர்" என்று கூறுகின்றனர். எ(ந்ததெந்த நேரத்தில் எந்தெந்தக் கட்டளைகளை எந்தெந்த வசனத்)தை அருள வேண்டுமென்பதை அல்லாஹ் நன்கறிவான்; இவர்களில் பெரும்பாலானவர்கள் (இந்த உண்மையை) அறியமாட்டார்கள். ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௧௦௧)
Tafseer
௧௦௨

قُلْ نَزَّلَهٗ رُوْحُ الْقُدُسِ مِنْ رَّبِّكَ بِالْحَقِّ لِيُثَبِّتَ الَّذِيْنَ اٰمَنُوْا وَهُدًى وَّبُشْرٰى لِلْمُسْلِمِيْنَ ١٠٢

qul
قُلْ
கூறுவீராக
nazzalahu
نَزَّلَهُۥ
இறக்கினார்/இதை
rūḥu l-qudusi
رُوحُ ٱلْقُدُسِ
ரூஹூல் குதுஸ்
min
مِن
இருந்து
rabbika
رَّبِّكَ
உம் இறைவன்
bil-ḥaqi
بِٱلْحَقِّ
உண்மையைக் கொண்டு
liyuthabbita
لِيُثَبِّتَ
உறுதிப்படுத்துவதற்காக
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
āmanū
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டனர்
wahudan
وَهُدًى
இன்னும் நேர்வழியாக
wabush'rā
وَبُشْرَىٰ
இன்னும் நற்செய்தியாக
lil'mus'limīna
لِلْمُسْلِمِينَ
முஸ்லிம்களுக்கு
மெய்யாகவே இதை உங்கள் இறைவனிடமிருந்து "ரூஹுல் குத்ஸ்" (என்னும் ஜிப்ரீல்) தான் இறக்கி வைத்தார் என்று நீங்கள் கூறுங்கள். (இந்தக் குர்ஆன் இறைவனுக்கு) நம்பிக்கைக் கொண்டோரை உறுதிப்படுத்துவதற்காகவும், முற்றிலும் கட்டுப் பட்டவர்களுக்கு நேரான வழியாகவும் நற்செய்தியாகவும் இருக்கிறது. ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௧௦௨)
Tafseer
௧௦௩

وَلَقَدْ نَعْلَمُ اَنَّهُمْ يَقُوْلُوْنَ اِنَّمَا يُعَلِّمُهٗ بَشَرٌۗ لِسَانُ الَّذِيْ يُلْحِدُوْنَ اِلَيْهِ اَعْجَمِيٌّ وَّهٰذَا لِسَانٌ عَرَبِيٌّ مُّبِيْنٌ ١٠٣

walaqad
وَلَقَدْ
திட்டவட்டமாக
naʿlamu
نَعْلَمُ
அறிவோம்
annahum
أَنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
yaqūlūna
يَقُولُونَ
கூறுவர்
innamā yuʿallimuhu
إِنَّمَا يُعَلِّمُهُۥ
கற்றுக் கொடுப்பதெல்லாம்/அவருக்கு
basharun
بَشَرٌۗ
மனிதர்தான்
lisānu
لِّسَانُ
மொழி
alladhī
ٱلَّذِى
எவருடைய
yul'ḥidūna
يُلْحِدُونَ
சேர்க்கிறார்கள்
ilayhi
إِلَيْهِ
அவர் பக்கம்
aʿjamiyyun
أَعْجَمِىٌّ
அரபியல்லாதவர்
wahādhā
وَهَٰذَا
இதுவோ
lisānun
لِسَانٌ
மொழி
ʿarabiyyun
عَرَبِىٌّ
அரபி
mubīnun
مُّبِينٌ
தெளிவானது
(நபியே! "இவ்வேத வசனங்களை ரோமிலிருந்து வந்திருக்கும்) ஒரு (கிறிஸ்தவ) மனிதன்தான் நிச்சயமாக உங்களுக்குக் கற்றுக் கொடுக்கிறான்; (இறைவன் கற்றுக்கொடுக்க வில்லை)" என்று அவர்கள் கூறுவதை நிச்சயமாக நாம் அறிவோம். எவன் (உங்களுக்குக்) கற்றுக் கொடுப்பதாக அவர்கள் கூறுகிறார்களோ அ(ந்தக் கிறிஸ்த)வன் (அரபி மொழியை ஒரு சிறிதும் அறியாத) அஜமி. இவ்வேதமோ மிக (நாகரிகமான) தெளிவான அரபி மொழியில் இருக்கிறது. (ஆகவே, அவர்கள் கூறுவது சரியன்று.) ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௧௦௩)
Tafseer
௧௦௪

اِنَّ الَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ بِاٰيٰتِ اللّٰهِۙ لَا يَهْدِيْهِمُ اللّٰهُ وَلَهُمْ عَذَابٌ اَلِيْمٌ ١٠٤

inna
إِنَّ
நிச்சயமாக
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
lā yu'minūna
لَا يُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
biāyāti
بِـَٔايَٰتِ
வசனங்களை
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வுடைய
lā yahdīhimu
لَا يَهْدِيهِمُ
நேர்வழி செலுத்த மாட்டான்/அவர்களை
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
walahum
وَلَهُمْ
இன்னும் அவர்களுக்கு
ʿadhābun
عَذَابٌ
வேதனை
alīmun
أَلِيمٌ
துன்புறுத்தக் கூடியது
நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வினுடைய வசனங்களை (மனமுரண்டாக) நம்பிக்கை கொள்ளவில்லையோ அவர்களை அல்லாஹ் நேரான வழியில் செலுத்தமாட்டான். அன்றி, அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனைதான் உண்டு. ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௧௦௪)
Tafseer
௧௦௫

اِنَّمَا يَفْتَرِى الْكَذِبَ الَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ بِاٰيٰتِ اللّٰهِۚ وَاُولٰۤىِٕكَ هُمُ الْكٰذِبُوْنَ ١٠٥

innamā yaftarī
إِنَّمَا يَفْتَرِى
இட்டுக்கட்டுவ தெல்லாம்
l-kadhiba
ٱلْكَذِبَ
பொய்யை
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
lā yu'minūna
لَا يُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
biāyāti
بِـَٔايَٰتِ
வசனங்களை
l-lahi
ٱللَّهِۖ
அல்லாஹ்வின்
wa-ulāika humu
وَأُو۟لَٰٓئِكَ هُمُ
இவர்கள்தான்
l-kādhibūna
ٱلْكَٰذِبُونَ
பொய்யர்கள்
(இது) பொய் என்று கற்பனை செய்பவர்களெல்லாம் அல்லாஹ்வுடைய வசனங்களை நம்பாதவர்கள்தாம். (உண்மையில்) இவர்கள்தாம் பொய்யர்கள். (நபியே! நீங்கள் பொய்யரல்ல.) ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௧௦௫)
Tafseer
௧௦௬

مَنْ كَفَرَ بِاللّٰهِ مِنْۢ بَعْدِ اِيْمَانِهٖٓ اِلَّا مَنْ اُكْرِهَ وَقَلْبُهٗ مُطْمَىِٕنٌّۢ بِالْاِيْمَانِ وَلٰكِنْ مَّنْ شَرَحَ بِالْكُفْرِ صَدْرًا فَعَلَيْهِمْ غَضَبٌ مِّنَ اللّٰهِ ۗوَلَهُمْ عَذَابٌ عَظِيْمٌ ١٠٦

man
مَن
எவர்
kafara
كَفَرَ
நிராகரித்தார்
bil-lahi
بِٱللَّهِ
அல்லாஹ்வை
min baʿdi
مِنۢ بَعْدِ
பின்னர்
īmānihi
إِيمَٰنِهِۦٓ
அவர் நம்பிக்கை கொண்ட
illā man
إِلَّا مَنْ
தவிர/எவர்
uk'riha
أُكْرِهَ
தான் நிர்பந்திக்கப்பட்டார்
waqalbuhu
وَقَلْبُهُۥ
தனது உள்ளமோ
muṭ'ma-innun
مُطْمَئِنٌّۢ
திருப்தியடைந்தது
bil-īmāni
بِٱلْإِيمَٰنِ
நம்பிக்கையில்
walākin
وَلَٰكِن
எனினும்
man
مَّن
எவர்
sharaḥa
شَرَحَ
திறந்தான், விவரித்தான், விரும்பினான்
bil-kuf'ri
بِٱلْكُفْرِ
நிராகரிப்பை
ṣadran
صَدْرًا
நெஞ்சத்தால்
faʿalayhim
فَعَلَيْهِمْ
அவர்கள் மீது
ghaḍabun
غَضَبٌ
கோபம்
mina l-lahi
مِّنَ ٱللَّهِ
அல்லாஹ்வுடைய
walahum
وَلَهُمْ
இன்னும் அவர்களுக்கு
ʿadhābun
عَذَابٌ
வேதனை
ʿaẓīmun
عَظِيمٌ
கடுமையானது
(ஆகவே,) எவரேனும் நம்பிக்கை கொண்டதன் பின்னர், அவன் அல்லாஹ்வை (நிராகரித்தால் அவனைப் பற்றி கவனிக்கப்படும்.) அவனுடைய உள்ளம் நம்பிக்கையை கொண்டு முற்றிலும் திருப்தியடைந்தே இருக்க, எவருடைய நிர்ப்பந்தத்தின் மீதும் அவன் (இவ்வாறு) நிராகரித்தால் (அவன்மீது யாதொரு குற்றமுமில்லை.) எனினும், அவனுடைய உள்ளத்தில் நிராகரிப்பே நிறைந்திருந்(து இவ்வாறு செய்)தால் அவன் மீது அல்லாஹ்வுடைய கோபம்தான் ஏற்படும். அவனுக்கு கடுமையான வேதனையுமுண்டு. ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௧௦௬)
Tafseer
௧௦௭

ذٰلِكَ بِاَنَّهُمُ اسْتَحَبُّوا الْحَيٰوةَ الدُّنْيَا عَلَى الْاٰخِرَةِۙ وَاَنَّ اللّٰهَ لَا يَهْدِى الْقَوْمَ الْكٰفِرِيْنَ ١٠٧

dhālika
ذَٰلِكَ
அது
bi-annahumu
بِأَنَّهُمُ
காரணம்/நிச்சயமாகஅவர்கள்
is'taḥabbū
ٱسْتَحَبُّوا۟
விரும்பினார்கள்
l-ḥayata
ٱلْحَيَوٰةَ
வாழ்வை
l-dun'yā
ٱلدُّنْيَا
உலகம்
ʿalā l-ākhirati
عَلَى ٱلْءَاخِرَةِ
மறுமையை விட
wa-anna
وَأَنَّ
இன்னும் நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
lā yahdī
لَا يَهْدِى
நேர்வழி செலுத்த மாட்டான்
l-qawma
ٱلْقَوْمَ
மக்களை
l-kāfirīna
ٱلْكَٰفِرِينَ
நிராகரிக்கின்றவர்கள்
ஏனென்றால், நிச்சயமாக இவர்கள் மறுமையைவிட இவ்வுலக வாழ்க்கையின் மீதுதான் நேசம் கொண்டார்கள். நிச்சயமாக, நிராகரிக்கும் இத்தகைய மக்களை அல்லாஹ் நேரான வழியில் செலுத்தமாட்டான். ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௧௦௭)
Tafseer
௧௦௮

اُولٰۤىِٕكَ الَّذِيْنَ طَبَعَ اللّٰهُ عَلٰى قُلُوْبِهِمْ وَسَمْعِهِمْ وَاَبْصَارِهِمْۗ وَاُولٰۤىِٕكَ هُمُ الْغٰفِلُوْنَ ١٠٨

ulāika
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
ṭabaʿa
طَبَعَ
முத்திரையிட்டான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
ʿalā qulūbihim
عَلَىٰ قُلُوبِهِمْ
அவர்களின் உள்ளங்கள் மீது
wasamʿihim
وَسَمْعِهِمْ
இன்னும் செவிகள்/ அவர்களின்
wa-abṣārihim
وَأَبْصَٰرِهِمْۖ
இன்னும் பார்வைகள் அவர்களின்
wa-ulāika humu
وَأُو۟لَٰٓئِكَ هُمُ
அவர்கள்தான்
l-ghāfilūna
ٱلْغَٰفِلُونَ
உணராதவர்கள், கவனமற்றவர்கள்
இத்தகையவர்களின் இதயங்களின் மீதும், காதுகள் மீதும், கண்கள் மீதும் அல்லாஹ் முத்திரையிட்டுவிட்டான். இவர்கள்தாம் (தங்கள் தீய முடிவை) உணர்ந்து கொள்ளாதவர்கள். ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௧௦௮)
Tafseer
௧௦௯

لَا جَرَمَ اَنَّهُمْ فِى الْاٰخِرَةِ هُمُ الْخٰسِرُوْنَ ١٠٩

lā jarama
لَا جَرَمَ
சந்தேகமின்றி
annahum
أَنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
fī l-ākhirati
فِى ٱلْءَاخِرَةِ
மறுமையில்
humu l-khāsirūna
هُمُ ٱلْخَٰسِرُونَ
நஷ்டவாளிகள்தான்
மறுமையில் முற்றிலும் நஷ்டமடைபவர்கள் இவர்கள்தாம் என்பதில் யாதொரு ஐயமுமில்லை. ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௧௦௯)
Tafseer
௧௧௦

ثُمَّ اِنَّ رَبَّكَ لِلَّذِيْنَ هَاجَرُوْا مِنْۢ بَعْدِ مَا فُتِنُوْا ثُمَّ جَاهَدُوْا وَصَبَرُوْاۚ اِنَّ رَبَّكَ مِنْۢ بَعْدِهَا لَغَفُوْرٌ رَّحِيْمٌ ࣖ ١١٠

thumma
ثُمَّ
பிறகு
inna
إِنَّ
நிச்சயமாக
rabbaka
رَبَّكَ
உம் இறைவன்
lilladhīna
لِلَّذِينَ
எவர்களுக்கு
hājarū
هَاجَرُوا۟
நாடு துறந்தார்கள்
min baʿdi mā futinū
مِنۢ بَعْدِ مَا فُتِنُوا۟
அவர்கள் துன்புறுத்தப்பட்ட பின்பு
thumma
ثُمَّ
பிறகு
jāhadū
جَٰهَدُوا۟
போர் புரிந்தனர்
waṣabarū
وَصَبَرُوٓا۟
இன்னும் சகித்தனர்
inna
إِنَّ
நிச்சயமாக
rabbaka
رَبَّكَ
உம் இறைவன்
min
مِنۢ
பின்பு
baʿdihā
بَعْدِهَا
பின்பு இவற்றுக்கு
laghafūrun
لَغَفُورٌ
மகா மன்னிப்பாளன்
raḥīmun
رَّحِيمٌ
மிகக் கருணையாளன்
(நபியே!) எவர்கள் (எதிரிகளால்) துன்புறுத்தப்பட்டு, பின்னர் (தங்கள் இல்லத்திலிருந்து) வெளிப்பட்டு, போரும் புரிந்து (பல கஷ்டங்களையும்) சகித்துக்கொண்டு உறுதியாக இருந்தார்களோ அவர்களுக்(கு அருள் புரிவதற்)காகவே நிச்சயமாக உங்களுடைய இறைவன் இருக்கிறான். நிச்சயமாக உங்களுடைய இறைவன் இதற்குப் பின்னரும் (அவர்களை) மன்னிப்பவனும் (அவர்கள் மீது) கிருபையுடையவனுமாக இருக்கின்றான். ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௧௧௦)
Tafseer