Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து இப்ராஹீம் வசனம் ௯

Qur'an Surah Ibrahim Verse 9

ஸூரத்து இப்ராஹீம் [௧௪]: ௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَلَمْ يَأْتِكُمْ نَبَؤُا الَّذِيْنَ مِنْ قَبْلِكُمْ قَوْمِ نُوْحٍ وَّعَادٍ وَّثَمُوْدَ ەۗ وَالَّذِيْنَ مِنْۢ بَعْدِهِمْ ۗ لَا يَعْلَمُهُمْ اِلَّا اللّٰهُ ۗجَاۤءَتْهُمْ رُسُلُهُمْ بِالْبَيِّنٰتِ فَرَدُّوْٓا اَيْدِيَهُمْ فِيْٓ اَفْوَاهِهِمْ وَقَالُوْٓا اِنَّا كَفَرْنَا بِمَآ اُرْسِلْتُمْ بِهٖ وَاِنَّا لَفِيْ شَكٍّ مِّمَّا تَدْعُوْنَنَآ اِلَيْهِ مُرِيْبٍ (ابراهيم : ١٤)

alam yatikum
أَلَمْ يَأْتِكُمْ
Has not come to you
உங்களுக்கு வரவில்லையா?
naba-u
نَبَؤُا۟
(the) news
சரித்திரம்
alladhīna
ٱلَّذِينَ
(of) those who
எவர்கள்
min qablikum
مِن قَبْلِكُمْ
(were) before you (were) before you
உங்களுக்கு முன்னர்
qawmi
قَوْمِ
the people
மக்கள்
nūḥin
نُوحٍ
of Nuh
நூஹூடைய
waʿādin
وَعَادٍ
and Aad
இன்னும் ஆது
wathamūda
وَثَمُودَۛ
and Thamud
ஸமூது
wa-alladhīna
وَٱلَّذِينَ
and those who
இன்னும் எவர்கள்
min baʿdihim
مِنۢ بَعْدِهِمْۛ
(were) after them? (were) after them?
அவர்களுக்குப் பின்னர்
lā yaʿlamuhum
لَا يَعْلَمُهُمْ
None knows them
அறியமாட்டார்/அவர்களை
illā
إِلَّا
except
தவிர
l-lahu
ٱللَّهُۚ
Allah
அல்லாஹ்
jāathum
جَآءَتْهُمْ
Came to them
வந்தா(ர்க)ள்/அவர்களிடம்
rusuluhum
رُسُلُهُم
their Messengers
தூதர்கள்/ அவர்களுடைய
bil-bayināti
بِٱلْبَيِّنَٰتِ
with clear proofs
தெளிவான சான்றுகளைக் கொண்டு
faraddū
فَرَدُّوٓا۟
but they returned
திருப்பினர்
aydiyahum
أَيْدِيَهُمْ
their hands
கைகளை/தங்கள்
fī afwāhihim
فِىٓ أَفْوَٰهِهِمْ
in their mouths
வாய்களின் பக்கமே/தங்கள்
waqālū
وَقَالُوٓا۟
and they said
இன்னும் கூறினர்
innā
إِنَّا
"indeed, we
நிச்சயமாக நாங்கள்
kafarnā
كَفَرْنَا
[we] disbelieve
நிராகரித்தோம்
bimā
بِمَآ
in what
எதைக் கொண்டு
ur'sil'tum
أُرْسِلْتُم
you have been sent
நீங்கள் அனுப்பப்பட்டீர்களோ
bihi
بِهِۦ
with [it]
அதைக் கொண்டு
wa-innā
وَإِنَّا
and indeed, we
இன்னும் நிச்சயமாக நாங்கள்
lafī shakkin
لَفِى شَكٍّ
(are) surely in doubt
சந்தேகத்தில்
mimmā tadʿūnanā
مِّمَّا تَدْعُونَنَآ
about what you invite us
எதில்/அழைக்கிறீர்கள்/எங்களை
ilayhi
إِلَيْهِ
to it
அதன் பக்கம்
murībin
مُرِيبٍ
suspicious"
ஆழமான சந்தேகம்

Transliteration:

Alam yaatikum naba'ul lazeena min qablikum qawmi Noohinw wa 'Aadinw wa Samood, wallazeena mim ba'dihim; laa ya'lamuhum illallaah; jaaa'at hum Rusuluhum bilbaiyinaati faraddooo aydiyahum feee afwaahihim wa qaalooo innaa kafarnaa bimaaa ursiltum bihee wa innaa lafee shakkim mimmaa tad'oonanaaa ilaihi mureeb (QS. ʾIbrāhīm:9)

English Sahih International:

Has there not reached you the news of those before you – the people of Noah and Aad and Thamud and those after them? No one knows them [i.e., their number] but Allah. Their messengers brought them clear proofs, but they returned their hands to their mouths and said, "Indeed, we disbelieve in that with which you have been sent, and indeed we are, about that to which you invite us, in disquieting doubt." (QS. Ibrahim, Ayah ௯)

Abdul Hameed Baqavi:

உங்களுக்கு முன்னர் சென்றுபோன நூஹ், ஆது, ஸமூது போன்ற மக்களுடைய சரித்திரமும் அவர்களுக்குப் பின்னர் வந்தவர்களுடைய சரித்திரமும் உங்களுக்குக் கிடைக்கவில்லையா? அவர்களின் விபரங்களை அல்லாஹ்வைத் தவிர மற்றெவராலும் அறிந்துகொள்ள முடியாது. அந்த மக்களிடம் அனுப்பப்பட்ட (நம்முடைய) தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளுடன் அவர்களிடம் வந்(து நேரான வழிக்கு "வாருங்கள் வாருங்கள்" என்று தங்கள் இரு கைகளையும் விரித்து அழைத்)த சமயத்தில், அவர்களுடைய கைகளை அவர்களுடைய வாயின் பக்கமே தட்டிவிட்டு (அவர்களை நோக்கி,) "நிச்சயமாக நாங்கள் (இறைவனின் கட்டளை என்று) நீங்கள் கொண்டு வந்திருப்பதை நிராகரிக்கிறோம். அன்றி, நீங்கள் எங்களை எதன் பக்கம் அழைக்கின்றீர்களோ அதைப்பற்றி நிச்சயமாக நாங்கள் பெரும் சந்தேகத்தில் இருக்கிறோம்" என்று கூறினார்கள். (ஸூரத்து இப்ராஹீம், வசனம் ௯)

Jan Trust Foundation

உங்களுக்கு முன் சென்று போன நூஹ், ஆது, ஸமூது போன்ற சமூகத்தாரின் செய்தியும், அவர்களுக்குப் பின் வந்தவர்களுடைய செய்தியும் உங்களுக்கு வரவில்லையா? அவர்களை அல்லாஹ்வைத் தவிர (வேறு) எவரும் அறியார்; அவர்களிடத்தில் (அல்லாஹ் அனுப்பிய) அவர்களுடைய (இறை) தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள்; தங்கள் கைகளை தங்கள் வாய்களின் பக்கம் கொண்டு சென்று, “நீங்கள் எதைக் கொண்டு அனுப்பப்பட்டிருக்கின்றீர்களோ அ(த் தூ)தை நிச்சயமாக நாங்கள் நிராகரிக்கின்றோம்; அன்றியும், நீங்கள் எங்களை எதன்பால் அழைக்கிறீர்களோ, அதைப் பற்றியும் நாங்கள் பெரும் சந்தேகத்தில் இருக்கிறோம்” என்று கூறினார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

உங்களுக்கு முன்னர் இருந்த நூஹ்வுடைய மக்கள், ஆது, ஸமூது இன்னும் அவர்களுக்குப் பின்னர் வாழ்ந்தவர்களுடைய சரித்திரம் உமக்கு வரவில்லையா? அவர்களை அல்லாஹ்வைத் தவிர எவரும் அறியமாட்டார். அவர்களிடம் அவர்களுடைய தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தார்கள். தங்கள் கைகளை தங்கள் வாய்களின் பக்கமே திருப்பினர். மேலும் (தூதர்களை நோக்கி,) “நிச்சயமாக நீங்கள் எதைக் கொண்டு அனுப்பப்பட்டீர்களோ அதை நாங்கள் நிராகரித்தோம். நீங்கள் எங்களை எதன் பக்கம் அழைக்கிறீர்களோ அதில் நிச்சயமாக நாங்கள் ஆழமான சந்தேகத்தில் இருக்கிறோம்”என்று கூறினார்கள்.