Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துர் ரஃது வசனம் ௧௬

Qur'an Surah Ar-Ra'd Verse 16

ஸூரத்துர் ரஃது [௧௩]: ௧௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قُلْ مَنْ رَّبُّ السَّمٰوٰتِ وَالْاَرْضِۗ قُلِ اللّٰهُ ۗقُلْ اَفَاتَّخَذْتُمْ مِّنْ دُوْنِهٖٓ اَوْلِيَاۤءَ لَا يَمْلِكُوْنَ لِاَنْفُسِهِمْ نَفْعًا وَّلَا ضَرًّاۗ قُلْ هَلْ يَسْتَوِى الْاَعْمٰى وَالْبَصِيْرُ ەۙ اَمْ هَلْ تَسْتَوِى الظُّلُمٰتُ وَالنُّوْرُ ەۚ اَمْ جَعَلُوْا لِلّٰهِ شُرَكَاۤءَ خَلَقُوْا كَخَلْقِهٖ فَتَشَابَهَ الْخَلْقُ عَلَيْهِمْۗ قُلِ اللّٰهُ خَالِقُ كُلِّ شَيْءٍ وَّهُوَ الْوَاحِدُ الْقَهَّارُ (الرعد : ١٣)

qul
قُلْ
Say
கூறுவீராக
man
مَن
"Who
யார்?
rabbu
رَّبُّ
(is) the Lord
இறைவன்
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
(of) the heavens
வானங்களின்
wal-arḍi
وَٱلْأَرْضِ
and the earth?"
இன்னும் பூமி
quli
قُلِ
Say
கூறுவீராக
l-lahu
ٱللَّهُۚ
"Allah"
அல்லாஹ்
qul
قُلْ
Say
கூறுவீராக
afa-ittakhadhtum
أَفَٱتَّخَذْتُم
"Have you then taken
நீங்கள் எடுத்துக் கொண்டீர்கள்?
min dūnihi
مِّن دُونِهِۦٓ
from besides Him
அவனையன்றி
awliyāa
أَوْلِيَآءَ
protectors
பாதுகாவலர்களை
lā yamlikūna
لَا يَمْلِكُونَ
not they have power
உரிமை பெறமாட்டார்கள்
li-anfusihim
لِأَنفُسِهِمْ
for themselves
தங்களுக்கே
nafʿan
نَفْعًا
(to) benefit
நன்மை செய்வதற்கு
walā ḍarran
وَلَا ضَرًّاۚ
and not (to) harm?"
தீங்கு செய்வதற்கு
qul
قُلْ
Say
கூறுவீராக
hal yastawī
هَلْ يَسْتَوِى
"Is equal
சமமாவார்களா?
l-aʿmā
ٱلْأَعْمَىٰ
the blind
குருடன்
wal-baṣīru
وَٱلْبَصِيرُ
and the seeing?
இன்னும் பார்வையுடையவன்
am
أَمْ
Or
அல்லது
hal tastawī
هَلْ تَسْتَوِى
is equal
சமமாகுமா?
l-ẓulumātu wal-nūru
ٱلظُّلُمَٰتُ وَٱلنُّورُۗ
the darkness[es] and the light?
இருள்கள்/இன்னும் ஒளி
am
أَمْ
Or
அல்லது?
jaʿalū
جَعَلُوا۟
they attribute
ஆக்கினார்கள்
lillahi
لِلَّهِ
to Allah
அல்லாஹ்விற்கு
shurakāa
شُرَكَآءَ
partners
இணைகளை
khalaqū
خَلَقُوا۟
who created
படைத்தார்கள்
kakhalqihi
كَخَلْقِهِۦ
like His creation
அவனுடைய படைப்பைப் போன்று
fatashābaha
فَتَشَٰبَهَ
so that seemed alike
அதனால் குழப்பமடைந்தது
l-khalqu
ٱلْخَلْقُ
the creation
படைப்பது
ʿalayhim
عَلَيْهِمْۚ
to them?"
இவர்கள் மீது
quli
قُلِ
Say
கூறுவீராக
l-lahu
ٱللَّهُ
"Allah
அல்லாஹ்தான்
khāliqu
خَٰلِقُ
(is) the Creator
படைப்பாளன்
kulli shayin
كُلِّ شَىْءٍ
of all things
எல்லாவற்றின்
wahuwa l-wāḥidu
وَهُوَ ٱلْوَٰحِدُ
and He (is) the One
அவன்/ஒருவன்
l-qahāru
ٱلْقَهَّٰرُ
the Irresistible"
அடக்கி ஆளுபவன்

Transliteration:

Wul mar Rabbus samaawaati wal ard; qulillaah; qul afattakhaztum min dooniheee awliyaaa'a laa yamlikoona li anfusihim naf'anw wa laa darraa; qul hal yastawil a'maa wal baseeru am hal tastawiz zulumaatu wannoor; am ja'aloo lillaahi shurakaaa'a khalaqoo kakhalqihee fatashaa bahal khalqu 'alaihim; qulil laahu Khaaliqu kulli shai'inw wa Huwal Waahidul Qahhar (QS. ar-Raʿd:16)

English Sahih International:

Say, "Who is Lord of the heavens and earth?" Say, "Allah." Say, "Have you then taken besides Him allies not possessing [even] for themselves any benefit or any harm?" Say, "Is the blind equivalent to the seeing? Or is darkness equivalent to light? Or have they attributed to Allah partners who created like His creation so that the creation [of each] seemed similar to them?" Say, "Allah is the Creator of all things, and He is the One, the Prevailing." (QS. Ar-Ra'd, Ayah ௧௬)

Abdul Hameed Baqavi:

(நபியே! அவர்களை நோக்கி) "வானங்களையும், பூமியையும் படைத்து நிர்வகிப்பவன் யார்?" என்று நீங்கள் கேளுங்கள். (இதற்கு அவர்கள் பதில் கூறுவதென்ன!) நீங்களே (அவர்களை நோக்கி) "அல்லாஹ்தான்" என்று கூறுங்கள். அவ்வாறிருக்க "அவனை அன்றி (பொய்யான தெய்வங்களை) பாதுகாவலர்களாக நீங்கள் எடுத்துக் கொள்கின்றீர்களா? அவை தங்களுக்கே யாதொரு நன்மையும் தீமையும் செய்ய சக்தியற்றவைகளாய் இருக்கின்றன" என்றும் கூறுங்கள். (பின்னும் அவர்களை நோக்கி) "குருடனும், பார்வை உடையவரும் சமமாவாரா? அல்லது இருளும் பிரகாசமும் சமமாகுமா?" என்று கேளுங்கள். அல்லது "அவர்கள் (இறைவனுக்கு) இணையாக்கிக் கொண்டிருக்கும் தெய்வங்கள் அல்லாஹ் படைத்திருப்பதைப் போல் எதனையும் படைத்திருக் கின்றனவா?" (என்றும் கேளுங்கள்.) அவ்வாறாயின் (இந்த உலகைப்) படைத்தவன் (யாரென்பதில்) அவர்களுக்குள் சந்தேகமே ஏற்பட்டிருக்கலாம். (அவ்வாறும் இல்லையே! ஆகவே, அவர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: (இவ்வுலகிலுள்ள) ஒவ்வொன்றையும் படைப்பவன் அல்லாஹ்தான். அவன் ஒருவனே! (அவனுக்கு இணை துணையில்லை.) அவனே (உலகிலுள்ள அனைத்தையும்) அடக்கி ஆளுகின்றான். (ஸூரத்துர் ரஃது, வசனம் ௧௬)

Jan Trust Foundation

(நபியே! அவர்களிடம்;) “வானங்களுக்கும் பூமிக்கும் இறைவன் யார்?” என்று நீர் கேளும். அவன் அல்லாஹ்தான் என்று நீரே கூறும்| “(அவ்வாறிருக்க) நீங்கள் அவனையன்றி (வேறு தெய்வங்களை) இரட்சகர்களாக எடுத்துக் கொள்கிறீர்களா? அவர்கள் தங்களுக்கே யாதொரு நன்மையும் தீமையும் செய்து கொள்ளச் சக்தியற்றவர்களாய் இருக்கின்றனர்”; மேலும், கூறும்| “குருடனும் பார்வை உடையவனும் சமமாவார்களா? அல்லது இருள்களும், ஒளியும் சமமாகுமா? அல்லது அவர்கள் இணையாக்கிக் கொண்டிருக்கும் (தெய்வங்கள்) அல்லாஹ் படைத்திருப்பதைப் போல் எதையும் படைத்திருக்கின்றனவா? (அப்படியிருந்தால் இது யார்) படைப்பு என்று அவர்களுக்குக் குழப்பம் ஏற்பட்டிருக்கலாம்!” (அவ்வாறில்லையே எனவே நபியே! நீர் உறுதியாகக்) கூறும்| “அல்லாஹ்வே எல்லாப் பொருட்களையும் படைக்கிறவன்; அவன் ஒருவனே; (அனைத்தையும்) அடக்கி ஆள்பவன்” என்று.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) “வானங்கள் இன்னும் பூமியின் இறைவன் யார்?” என்று கூறுவீராக! (அவன்) “அல்லாஹ்”என்று கூறுவீராக! “அவனை அன்றி தங்களுக்கு நன்மை செய்வதற்கும் தீங்கு செய்வதற்கும் உரிமைபெறாத பாதுகாவலர்களை அல்லவா நீங்கள் (தெய்வங்களாக) எடுத்துக் கொண்டீர்கள்?” என்றும் கூறுவீராக! “குருடனும், பார்வையுடையவனும் சமமாவார்களா? அல்லது இருள்களும் ஒளியும் சமமாகுமா?” அல்லது “அவர்கள் அல்லாஹ்விற்கு இணை(தெய்வங்)களை ஆக்கினார்களே அவை அவனுடைய படைப்பைப் போன்று (எதையும்) படைத்து, அதனால் இவர்கள் மீது படைப்பது (யார் என்பது) குழப்பமடைந்ததா? என்று கூறுவீராக! கூறுவீராக! அல்லாஹ்தான் எல்லாவற்றின் படைப்பாளன் அவன்தான் ஒருவன், அடக்கி ஆளுபவன்.