Skip to content

ஸூரா ஸூரத்து ஹூது - Page: 7

Hud

(Hūd)

௬௧

۞ وَاِلٰى ثَمُوْدَ اَخَاهُمْ صٰلِحًا ۘ قَالَ يٰقَوْمِ اعْبُدُوا اللّٰهَ مَا لَكُمْ مِّنْ اِلٰهٍ غَيْرُهٗ ۗهُوَ اَنْشَاَكُمْ مِّنَ الْاَرْضِ وَاسْتَعْمَرَكُمْ فِيْهَا فَاسْتَغْفِرُوْهُ ثُمَّ تُوْبُوْٓا اِلَيْهِ ۗاِنَّ رَبِّيْ قَرِيْبٌ مُّجِيْبٌ ٦١

wa-ilā thamūda
وَإِلَىٰ ثَمُودَ
இன்னும் இடம்/ஸமூது
akhāhum
أَخَاهُمْ
சகோதரர்/அவர்களுடைய
ṣāliḥan
صَٰلِحًاۚ
ஸாலிஹை
qāla
قَالَ
கூறினார்
yāqawmi
يَٰقَوْمِ
என் மக்களே
uʿ'budū
ٱعْبُدُوا۟
வணங்குங்கள்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
mā lakum
مَا لَكُم
உங்களுக்கில்லை
min
مِّنْ
அறவே
ilāhin
إِلَٰهٍ
வணக்கத்திற்குரியவன்
ghayruhu
غَيْرُهُۥۖ
அவனையன்றி
huwa
هُوَ
அவனே
ansha-akum
أَنشَأَكُم
உருவாக்கினான் உங்களை
mina l-arḍi
مِّنَ ٱلْأَرْضِ
பூமியிலிருந்து
wa-is'taʿmarakum fīhā
وَٱسْتَعْمَرَكُمْ فِيهَا
வசிக்க வைத்தான் உங்களை/அதில்
fa-is'taghfirūhu
فَٱسْتَغْفِرُوهُ
ஆகவே, மன்னிப்புக் கோருங்கள் அவனிடம்
thumma
ثُمَّ
பிறகு
tūbū
تُوبُوٓا۟
திருந்தி திரும்புங்கள்
ilayhi
إِلَيْهِۚ
அவன் பக்கம்
inna
إِنَّ
நிச்சயமாக
rabbī
رَبِّى
என் இறைவன்
qarībun
قَرِيبٌ
மிகச் சமீபமானவன்
mujībun
مُّجِيبٌ
பதிலளிப்பவன்
"ஸமூது" (என்னும் மக்)களிடம் அவர்களுடைய சகோதரர் "ஸாலிஹை" (நம்முடைய தூதராக அனுப்பி வைத்தோம். அவர் அவர்களை நோக்கி) "என்னுடைய மக்களே! அல்லாஹ் ஒருவனையே நீங்கள் வணங்குங்கள்; உங்களுக்கு அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவனே உங்களைப் பூமியிலிருந்து படைத்தான். அதிலேயே அவன் உங்களை வசிக்கவும் செய்தான். ஆதலால், நீங்கள் அவனிடமே மன்னிப்பைக் கோரி அவன் பக்கமே திரும்புங்கள். நிச்சயமாக என்னுடைய இறைவன் (உங்களுக்கு) மிகச் சமீபமானவனாகவும் (பிரார்த்தனைகளை) அங்கீகரிப்பவனாகவும் இருக்கின்றான்" என்று கூறினார். ([௧௧] ஸூரத்து ஹூது: ௬௧)
Tafseer
௬௨

قَالُوْا يٰصٰلِحُ قَدْ كُنْتَ فِيْنَا مَرْجُوًّا قَبْلَ هٰذَآ اَتَنْهٰىنَآ اَنْ نَّعْبُدَ مَا يَعْبُدُ اٰبَاۤؤُنَا وَاِنَّنَا لَفِيْ شَكٍّ مِّمَّا تَدْعُوْنَآ اِلَيْهِ مُرِيْبٍ ٦٢

qālū
قَالُوا۟
கூறினர்
yāṣāliḥu
يَٰصَٰلِحُ
ஸாலிஹே
qad kunta
قَدْ كُنتَ
திட்டமாகநீர்இருந்தீர்
fīnā
فِينَا
எங்களில்
marjuwwan
مَرْجُوًّا
ஆதரவுக்குரியவராக
qabla
قَبْلَ
முன்பு
hādhā atanhānā
هَٰذَآۖ أَتَنْهَىٰنَآ
இது/நீர் தடுக்கிறீரா?/எங்களை
an naʿbuda
أَن نَّعْبُدَ
நாங்கள் வணங்குவதை விட்டு
mā yaʿbudu
مَا يَعْبُدُ
எதை வணங்குவார்
ābāunā
ءَابَآؤُنَا
மூதாதைகள்/எங்கள்
wa-innanā
وَإِنَّنَا
நிச்சயமாக நாங்கள்
lafī shakkin
لَفِى شَكٍّ
சந்தேகத்தில்
mimmā
مِّمَّا
இருந்து/எவை
tadʿūnā
تَدْعُونَآ
அழைக்கிறீர் எங்களை
ilayhi
إِلَيْهِ
எதன் பக்கம்
murībin
مُرِيبٍ
மிக ஆழமான சந்தேகம்
அதற்கவர்கள் (ஸாலிஹ் நபியை நோக்கி) "ஸாலிஹே! இதற்கு முன்னரெல்லாம், நீங்கள் எங்களுடைய நம்பிக்கைக்குப் பாத்திரமுடையவராக இருந்தீர்கள். எங்கள் மூதாதைகள் வணங்கிக் கொண்டிருந்த தெய்வங்களை நாங்கள் வணங்கக்கூடாதென்று நீங்கள் எங்களைத் தடை செய்கிறீர்களா? நீங்கள் எங்களை எதனளவில் அழைக்கிறீர்களோ அதனைப் பற்றி நிச்சயமாக நாங்கள் பெரும் சந்தேகத்தில் இருக்கிறோம்" என்று கூறினர். ([௧௧] ஸூரத்து ஹூது: ௬௨)
Tafseer
௬௩

قَالَ يٰقَوْمِ اَرَءَيْتُمْ اِنْ كُنْتُ عَلٰى بَيِّنَةٍ مِّنْ رَّبِّيْۗ وَاٰتٰىنِيْ مِنْهُ رَحْمَةً فَمَنْ يَّنْصُرُنِيْ مِنَ اللّٰهِ اِنْ عَصَيْتُهٗ ۗفَمَا تَزِيْدُوْنَنِيْ غَيْرَ تَخْسِيْرٍ ٦٣

qāla
قَالَ
கூறினார்
yāqawmi
يَٰقَوْمِ
என் மக்களே
ara-aytum
أَرَءَيْتُمْ
அறிவியுங்கள்
in kuntu
إِن كُنتُ
நான் இருந்தால்
ʿalā bayyinatin
عَلَىٰ بَيِّنَةٍ
ஒரு தெளிவான அத்தாட்சியில்
min
مِّن
இருந்து
rabbī
رَّبِّى
என் இறைவன்
waātānī
وَءَاتَىٰنِى
இன்னும் தந்தான்/எனக்கு
min'hu
مِنْهُ
தன்னிடமிருந்து
raḥmatan
رَحْمَةً
அருளை
faman
فَمَن
யார்?
yanṣurunī
يَنصُرُنِى
உதவுவார்/எனக்கு
mina l-lahi
مِنَ ٱللَّهِ
அல்லாஹ்விடத்தில்
in ʿaṣaytuhu
إِنْ عَصَيْتُهُۥۖ
நான் மாறு செய்தால்/அவனுக்கு
famā tazīdūnanī
فَمَا تَزِيدُونَنِى
அதிகமாக்க மாட்டீர்கள்/எனக்கு
ghayra takhsīrin
غَيْرَ تَخْسِيرٍ
அன்றி/நஷ்டம் ஏற்படுத்துவது
அதற்கவர் "என்னுடைய மக்களே! நான் என் இறைவனின் நேரான வழியில் இருந்துகொண்டும், அவன் என்மீது (மகத்தான) அருள் புரிந்துகொண்டும் இருக்கும் நிலைமையில் நான் அவனுக்கு மாறு செய்தால் (அவன் என்னைத் தண்டிக்க மாட்டானா? அந்நேரத்தில்) அல்லாஹ்விடத்தில் எனக்கு உதவி செய்பவர் யார்? என்பதை நீங்கள் கவனித்தீர்களா? நீங்களோ எனக்கு நஷ்டத்தை யன்றி (யாதொன்றையும்) அதிகமாக்கி விடமாட்டீர்கள்" என்று கூறினார். ([௧௧] ஸூரத்து ஹூது: ௬௩)
Tafseer
௬௪

وَيٰقَوْمِ هٰذِهٖ نَاقَةُ اللّٰهِ لَكُمْ اٰيَةً فَذَرُوْهَا تَأْكُلْ فِيْٓ اَرْضِ اللّٰهِ وَلَا تَمَسُّوْهَا بِسُوْۤءٍ فَيَأْخُذَكُمْ عَذَابٌ قَرِيْبٌ ٦٤

wayāqawmi
وَيَٰقَوْمِ
என் மக்களே
hādhihi
هَٰذِهِۦ
இது
nāqatu
نَاقَةُ
பெண் ஒட்டகம்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
lakum
لَكُمْ
உங்களுக்கு
āyatan
ءَايَةً
அத்தாட்சியான
fadharūhā
فَذَرُوهَا
ஆகவே, விட்டு விடுங்கள்/அதை
takul
تَأْكُلْ
அது சாப்பி(டட்)டும்
fī arḍi
فِىٓ أَرْضِ
பூமியில்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
walā tamassūhā
وَلَا تَمَسُّوهَا
அதற்கு செய்யாதீர்கள்
bisūin
بِسُوٓءٍ
ஒரு கெடுதியையும்
fayakhudhakum
فَيَأْخُذَكُمْ
பிடிக்கும்/உங்களை
ʿadhābun
عَذَابٌ
ஒரு வேதனை
qarībun
قَرِيبٌ
அதிசீக்கிரமானது
அன்றி, "என்னுடைய மக்களே! இது அல்லாஹ்வினுடைய ஒரு பெண் ஒட்டகமாகும். உங்களுக்கு இது ஓர் அத்தாட்சியாகவே அளிக்கப்பட்டுள்ளது. ஆகவே, அல்லாஹ்வினுடைய பூமியில் (அது விரும்பிய இடத்தில்) மேய அதனை விட்டுவிடுங்கள்; அதற்கு யாதொரு கெடுதலும் செய்ய(க் கருதி) அதனைத் தொடாதீர்கள். அவ்வாறு செய்தால் அதிசீக்கிரத்தில் வேதனை உங்களைப் பிடித்துக்கொள்ளும்" (என்று சொன்னார்.) ([௧௧] ஸூரத்து ஹூது: ௬௪)
Tafseer
௬௫

فَعَقَرُوْهَا فَقَالَ تَمَتَّعُوْا فِيْ دَارِكُمْ ثَلٰثَةَ اَيَّامٍ ۗذٰلِكَ وَعْدٌ غَيْرُ مَكْذُوْبٍ ٦٥

faʿaqarūhā
فَعَقَرُوهَا
வெட்டினார்கள் அதை
faqāla
فَقَالَ
ஆகவே, கூறினார்
tamattaʿū
تَمَتَّعُوا۟
சுகமாக இருங்கள்
فِى
இல்லத்தில்
dārikum
دَارِكُمْ
உங்கள்
thalāthata
ثَلَٰثَةَ
மூன்று
ayyāmin
أَيَّامٍۖ
நாள்கள்
dhālika
ذَٰلِكَ
இது
waʿdun
وَعْدٌ
ஒரு வாக்கு
ghayru makdhūbin
غَيْرُ مَكْذُوبٍ
னஜிலஸீறீ©பீலிறீஜிறிலஸி
எனினும், அவர்கள் (அவருடைய கட்டளைக்கு மாறுசெய்து) அதனை வெட்டி விட்டார்கள். ஆகவே, அவர் (அவர்களை நோக்கி, "இனி) மூன்று நாள்கள் வரையில் உங்கள் வீடுகளில் (இருந்து கொண்டு) நீங்கள் சுகமடையலாம். (அதற்குப் பின்னர் அல்லாஹ்வுடைய வேதனை உங்களை வந்தடையும்) இது தவறாத வாக்காகும்" என்று கூறினார். ([௧௧] ஸூரத்து ஹூது: ௬௫)
Tafseer
௬௬

فَلَمَّا جَاۤءَ اَمْرُنَا نَجَّيْنَا صٰلِحًا وَّالَّذِيْنَ اٰمَنُوْا مَعَهٗ بِرَحْمَةٍ مِّنَّا وَمِنْ خِزْيِ يَوْمِىِٕذٍ ۗاِنَّ رَبَّكَ هُوَ الْقَوِيُّ الْعَزِيْزُ ٦٦

falammā
فَلَمَّا
போது
jāa
جَآءَ
வந்தது
amrunā
أَمْرُنَا
நம் கட்டளை
najjaynā
نَجَّيْنَا
பாதுகாத்தோம்
ṣāliḥan
صَٰلِحًا
ஸாலிஹை
wa-alladhīna
وَٱلَّذِينَ
இன்னும் எவர்கள்
āmanū
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டார்கள்
maʿahu
مَعَهُۥ
அவருடன்
biraḥmatin minnā
بِرَحْمَةٍ مِّنَّا
நமது அருளைக் கொண்டு
wamin
وَمِنْ
இன்னும் இருந்து
khiz'yi
خِزْىِ
இழிவு
yawmi-idhin
يَوْمِئِذٍۗ
அந்நாளின்
inna
إِنَّ
நிச்சயமாக
rabbaka huwa
رَبَّكَ هُوَ
உம் இறைவன்தான்
l-qawiyu
ٱلْقَوِىُّ
பலமிக்கவன்
l-ʿazīzu
ٱلْعَزِيزُ
மிகைத்தவன்
(வேதனையைப் பற்றிய) நம்முடைய கட்டளை(யின்படி வேதனை) வந்தபொழுது ஸாலிஹையும், அவருடன் நம்பிக்கைக் கொண்டவர்களையும் (வேதனையிலிருந்தும்) அந்நாளின் இழிவில் இருந்தும் நம்முடைய அருளைக் கொண்டு நாம் பாதுகாத்துக் கொண்டோம். (நபியே!) நிச்சயமாக உங்களுடைய இறைவன் பலமிக்கவனும் (அனைத்தையும்) மிகைத்தவனாகவும் இருக்கிறான். ([௧௧] ஸூரத்து ஹூது: ௬௬)
Tafseer
௬௭

وَاَخَذَ الَّذِيْنَ ظَلَمُوا الصَّيْحَةُ فَاَصْبَحُوْا فِيْ دِيَارِهِمْ جٰثِمِيْنَۙ ٦٧

wa-akhadha
وَأَخَذَ
இன்னும் பிடித்தது
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
ẓalamū
ظَلَمُوا۟
அநீதியிழைத்தனர்
l-ṣayḥatu
ٱلصَّيْحَةُ
இடி முழக்கம்
fa-aṣbaḥū
فَأَصْبَحُوا۟
ஆகவே, காலையில் ஆகிவிட்டனர்
fī diyārihim
فِى دِيَٰرِهِمْ
தங்கள் இல்லங்களில்
jāthimīna
جَٰثِمِينَ
இறந்தவர்களாக
ஆகவே, வரம்பு மீறியவர்களை இடி முழக்கம் பிடித்துக் கொண்டது. அவர்கள் தங்கள் வீடுகளில் இருந்தவாறே இறந்து விட்டனர். ([௧௧] ஸூரத்து ஹூது: ௬௭)
Tafseer
௬௮

كَاَنْ لَّمْ يَغْنَوْا فِيْهَا ۗ اَلَآ اِنَّ ثَمُوْدَا۠ كَفَرُوْا رَبَّهُمْ ۗ اَلَا بُعْدًا لِّثَمُوْدَ ࣖ ٦٨

ka-an lam yaghnaw
كَأَن لَّمْ يَغْنَوْا۟
போன்று அவர்கள் வசிக்கவில்லை
fīhā alā
فِيهَآۗ أَلَآ
அவற்றில்/அறிந்து கொள்ளுங்கள்
inna
إِنَّ
நிச்சயமாக
thamūdā
ثَمُودَا۟
ஸமூது
kafarū
كَفَرُوا۟
நிராகரித்தனர்
rabbahum
رَبَّهُمْۗ
தங்கள் இறைவனை
alā
أَلَا
அறிந்து கொள்ளுங்கள்
buʿ'dan
بُعْدًا
சாபம் உண்டாகட்டும்
lithamūda
لِّثَمُودَ
ஸமூதுக்கு
(அதற்கு முன்னர்) அங்கு அவர்கள் ஒரு காலத்திலும் வசித்திருக்காததைப் போல் (யாதொரு அடையாளமுமின்றி அழிந்து விட்டனர். நிச்சயமாக "ஸமூது" மக்கள் தங்கள் இறைவனை நிராகரித்து விட்டார்கள்; அந்த "ஸமூது" மக்கள் மீது சாபம் ஏற்பட்டு விட்டது, (என்பதை) அறிந்து கொள்ளுங்கள். ([௧௧] ஸூரத்து ஹூது: ௬௮)
Tafseer
௬௯

وَلَقَدْ جَاۤءَتْ رُسُلُنَآ اِبْرٰهِيْمَ بِالْبُشْرٰى قَالُوْا سَلٰمًا ۖقَالَ سَلٰمٌ فَمَا لَبِثَ اَنْ جَاۤءَ بِعِجْلٍ حَنِيْذٍ ٦٩

walaqad
وَلَقَدْ
திட்டவட்டமாக
jāat
جَآءَتْ
வந்தனர்
rusulunā
رُسُلُنَآ
நம் தூதர்கள்
ib'rāhīma
إِبْرَٰهِيمَ
இப்றாஹீமிடம்
bil-bush'rā
بِٱلْبُشْرَىٰ
நற்செய்தியைக் கொண்டு
qālū
قَالُوا۟
கூறினர்
salāman
سَلَٰمًاۖ
ஈடேற்றம் உண்டாகுக
qāla
قَالَ
கூறினார்
salāmun
سَلَٰمٌۖ
ஈடேற்றம் உண்டாகுக
famā labitha
فَمَا لَبِثَ
அவர் தாமதிக்கவில்லை
an jāa
أَن جَآءَ
வருவதற்கு
biʿij'lin
بِعِجْلٍ
ஒரு கன்றுக் குட்டியைக் கொண்டு
ḥanīdhin
حَنِيذٍ
சுடப்பட்டது
நிச்சயமாக (மலக்குகளிலுள்ள) நம்முடைய தூதர்கள் இப்ராஹீமுக்கு நற்செய்தி கொண்டு வந்து "உங்களுக்கு ஈடேற்றம் உண்டாவதாகுக" என்று கூறினர். (இப்ராஹீம் அதற்குப் பிரதியாக "உங்களுக்கும்) ஈடேற்றம் உண்டாவதாகுக!" என்று கூறி சிறிதும் தாமதிக்காது (அறுத்துச்) சுட்டதொரு கன்றுக்குட்டியைக் கொண்டு வந்(து அவர்கள் முன் வைத்)தார்கள். ([௧௧] ஸூரத்து ஹூது: ௬௯)
Tafseer
௭௦

فَلَمَّا رَاٰىٓ اَيْدِيَهُمْ لَا تَصِلُ اِلَيْهِ نَكِرَهُمْ وَاَوْجَسَ مِنْهُمْ خِيْفَةً ۗقَالُوْا لَا تَخَفْ اِنَّآ اُرْسِلْنَآ اِلٰى قَوْمِ لُوْطٍۗ ٧٠

falammā raā
فَلَمَّا رَءَآ
அவர் பார்த்தபோது
aydiyahum
أَيْدِيَهُمْ
அவர்களுடைய கரங்களை
lā taṣilu
لَا تَصِلُ
சேராது
ilayhi
إِلَيْهِ
அதன் பக்கம்
nakirahum
نَكِرَهُمْ
சந்தேகித்தார் அவர்களைப் பற்றி
wa-awjasa
وَأَوْجَسَ
இன்னும் அவர் மறைத்தார்
min'hum
مِنْهُمْ
அவர்களைப் பற்றி
khīfatan
خِيفَةًۚ
பயத்தை
qālū
قَالُوا۟
கூறினார்கள்
lā takhaf
لَا تَخَفْ
பயப்படாதீர்
innā
إِنَّآ
நிச்சயமாக நாங்கள்
ur'sil'nā
أُرْسِلْنَآ
அனுப்பப்பட்டோம்
ilā qawmi
إِلَىٰ قَوْمِ
மக்களின் பக்கம்
lūṭin
لُوطٍ
லூத்துடைய
அவர்களுடைய கைகள் அதனிடம் செல்லாததைக் கண்டதும் அவர்களைப் பற்றி சந்தேகித்தார்; அவர்களைப் பற்றிய பயமும் அவர் மனதில் ஊசலாடியது. (அப்பொழுது) அவர்கள் (இப்ராஹீமை நோக்கி) "நீங்கள் பயப்படாதீர்கள். நிச்சயமாக நாங்கள் "லூத்"துடைய மக்களிடம் (அவர்களை அழித்துவிட) அனுப்பப் பட்டுள்ளோம்" என்று கூறினார்கள். ([௧௧] ஸூரத்து ஹூது: ௭௦)
Tafseer